tag:blogger.com,1999:blog-6152821251507668795.post5935603969310063016..comments2023-10-01T08:38:50.427-07:00Comments on வார்த்தை விருப்பம்: காரிகன்http://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6152821251507668795.post-83069614410480732592013-05-28T11:43:45.024-07:002013-05-28T11:43:45.024-07:00 // தமிழில் நாட்டுப்புற இசையை வெகு ஜன மக்களிடம் கொ... // தமிழில் நாட்டுப்புற இசையை வெகு ஜன மக்களிடம் கொண்டு சேர்த்தவர்களில் ஜி ராமநாதனும் கே வி மகாதேவனும் மிக முக்கியமானவர்கள். இவர்கள் ஆரம்பித்த இந்த பாதையில்தான் பிற்பாடு பல இசைஅமைப்பாளர்கள் தங்கள் வண்டிகளை ஒட்டினார்கள். இதை அறியாமல் நாட்டுபுற நாயகன் என்று வேறு சிலரை அழைப்பது வேடிக்கையான அபத்தம் //<br /><br /> <br /> புரிகிறது ..யாரைச் சொல்கிறீர்கள் என புரிகிறது . நாட்டுப் புற இசை எப்படி இருக்கும் என்பதை நேரடியாக நாங்கள் கண்டவரில்லை . வயல் வெளிகளில் களை பறிப்பு ,நாற்று நடவு , நீரிறைப்பு , நீர் பாய்ச்சல் ,கதிரறுப்பு ,மேய்ச்சல் போன்ற காரியங்களில் அலுப்பு தெரியாமல் இருக்க பாடப்பட்ட பாடல்கள் நாட்டுப் புற இசையாக உருவெடுத்திருக்க முடியும் என்று படித்து தெரிந்ததுதான் . அதை நங்கள் சரியாக உணரும் வண்ணம் இசைஞானி அழகாக அருமையாக அற்புதமாக கையாண்டிருப்பார் . நாட்டுப் புற இசை அனுபவத்தை ரசிக்கும்படியும் கொடுக்க முடியும் என்பதை பல திரைப் பாடல்களில் கொடுத்திருப்பார் . முன்னவர்கள் கொடுக்கவில்லை என்று நாங்கள் சொல்லவில்லை . அவர்களை விட அதிக அளவு , அவர்களை விட வேறுபட்ட ரசனைகளில் ,அவர்களை விட அதிக அளவு திரைப்படங்களில் , வெவ்வேறு கோணங்களில் ,வெவ்வேறு தரங்களில் , வெவ்வேறு அழகியல் உணர்வுகளில் வெளிப்படுத்தி இருக்கிறார் இந்த நாத கலா ஜோதி இளையராஜா அவர்கள் என்பதை நீங்கள் மறுத்தால் சும்மா வீம்புக்கு எழுதுகிறீர்கள் என்றுதான் நாங்கள் எடுத்துக் கொள்வோம் . <br /><br /> // எத்தனை இசை அமைப்பாளர்கள் இப்போது நாம் ரசிக்கும் இந்த எளிமையான பாடல்கள் அமைய பாதை அமைத்துக்கொடுத்தார்கள் என்பதை கிஞ்சித்தும் எண்ணாமல் இசை என்றால் இவர்தான் அல்லது அவர்தான் என்று நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு வந்தவர்களை சுட்டிக்காட்டுவது ஒரு மாபெரும் மோசடி.//<br /><br /><br /> நாங்கள் (இளையராஜா ரசிகர்கள் ) யாரும் மோசடி செய்வதற்காக பேச வரவில்லை . முன்னவர் வகுத்த பாதை வழி கண்டு பயணித்து தமிழர்களை புதிய பாதையில் கூட்டிச் சென்றவர் இளையராஜா . தமிழனை தமிழ் பாட்டு கேட்க வைத்தவர் . இசையின் புதிய பரிமாணங்களை புரிய வைத்தார் . நாற்பது வருடங்களுக்கு பிறகு வந்தாலும் புதுமையான இசை கொடுத்தவரை சுட்டி காட்டுவதில் தவறில்லை என்றே எங்களுக்கு படுகிறது . <br /><br /><br /> <br /><br /> <br /><br /><br /> சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-29938889469045823822013-04-26T23:39:42.108-07:002013-04-26T23:39:42.108-07:00சார்லஸ் அவர்களுக்கு,
உங்கள் வருகைக்கு நன்றி. இ...சார்லஸ் அவர்களுக்கு,<br /> உங்கள் வருகைக்கு நன்றி. இசையை கற்றுக்கொண்டே பின்னரே அதை நாம் அதைப் பற்றி பேசவேண்டும் என்று சொல்வது இங்கே வெகு சிலரையே அடையாளம் காட்டும்.இசையை கற்றுக்கொள்வது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அதனால் நல்ல இசையை ரசிப்போம். இதில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ரசிப்பே இசையின் முதன்மையான நோக்கம் என்பது எனது தாழ்மையான கருத்து. இங்கே நான் அரைவேக்காட்டுத்தனம் என்று சொன்னது கண்களையும் காதுகளையும் மூடிக்கொண்டு உண்மையை உணர மறுக்கும் சிலரையே. நீங்கள் எழுதுவதைப் பார்க்கும் போது நீங்கள் அந்த சிலரில் ஒருவராக இருக்க முடியாது என்று தெரிகிறது. நீங்களோ நானோ அல்லது திரு அமுதவனோ கடலில் யார் வேண்டுமானாலும் நீந்தலாம். தாரளமாக வாருங்கள். காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-81623962557927346932013-04-26T00:51:54.390-07:002013-04-26T00:51:54.390-07:00 நல்ல பதிவுதான் . பாராட்டப்பட வேண்டிய ஒன்று . ஆனால... நல்ல பதிவுதான் . பாராட்டப்பட வேண்டிய ஒன்று . ஆனால் நீங்களும் அமுதவன் அவர்களும் மறைமுகமாக என்னை அல்ல என்னைப் போன்றவர்களை விமர்சித்து இருக்கிறீர்கள் . பரவாயில்லை . நாங்கள் அதற்கெல்லாம் அசர மாட்டோம் . <br /> <br /> இசை என்பது கடல் . இசை கற்று கரை தேர்ந்தவர்கள் யாருமே கிடையாது . இசை முழுமையாக கற்றுக் கொள்ளாமலேயே நீங்கள்,நான், அமுதவன் சார் எல்லோரும் அதிகமாக பேசிக் கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகம் இப்போது எழுகிறது . ஆனால் ரசிக்கத் தெரிந்தவர்கள் என்பது புரிகிறது . <br /><br /> இசை என்பது ஒரு கடவுள் அனுபவம் போலத்தான் ! புரிந்தவர்கள் புரியாதவருக்கு இறுதி வரை புரிய வைக்க முடியாது . ஆக என் புரிதலை தவறு என்றோ வெறும் அரை வேக்காட்டுத்தனம் என்றோ நீங்கள் கூறி விட முடியாது . நானும் இசை என்னும் வெள்ளத்தில் நீந்துபவன்தான் . எழுதுங்கள் . நானும் உங்களோடு நீந்துகிறேன் . உங்கள் இசை ஆராய்ச்சி வளரட்டும் , வாழ்த்துக்கள் . <br />சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-69165582866110042622013-04-12T06:12:36.283-07:002013-04-12T06:12:36.283-07:00அமுதவன் அவர்களுக்கு,
நீங்கள் என்னுடைய இந்த பதிவ...அமுதவன் அவர்களுக்கு,<br /> நீங்கள் என்னுடைய இந்த பதிவுகளை தொடர்ந்து படித்து வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி. உங்களின் கருத்துக்கள் எனக்கு உற்சாக டானிக் போல இனிக்கின்றன . என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் திரையிசையின் துவக்கக்கால பாடல்கள் மற்றும் இசை அமைப்பாளர்கள் பற்றிய செய்திகளை சேகரிப்பதை விட அப்படி திரட்டிய அத்தனை விஷயங்களையும் ஒன்று சேர முரண்படாமல் எழுதுவது சிக்கலானது என்பதை இந்த பதிவை எழுதும் போது புரிந்துகொண்டேன். முடிந்தவரை நடுநிலையோடு எழுதி இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. விஷய ஞானம் என்னை விட அதிகம் உள்ள நீங்கள் பாராட்டி இருப்பது இதை உறுதிசெய்கிறது. உங்களின் இசை குறித்த புதிய நூல் பற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. வெகு விரைவில் அதை வெளியிட என் வாழ்த்துக்கள். காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-18913820889316046932013-04-12T01:38:43.403-07:002013-04-12T01:38:43.403-07:00பலமான வண்டியை சரியான சாலையில் இறக்கி இருக்கிறீர்கள...பலமான வண்டியை சரியான சாலையில் இறக்கி இருக்கிறீர்கள். மிகவும் சிரமப்பட்டு பல்வேறு தகவல்களைத் திரட்டி ஆரம்பத்தில் இருந்தே ஆரம்பித்திருக்கிறீர்கள். இதன் சிரமம் எனக்குப் புரியும். ஏனெனில் தமிழ்த்திரை இசை ஆரம்பம் முதல் இன்றுவரை என்பதற்கான ஒரு நீண்ட பயணத்தின் வரலாற்றுக்குறிப்புக்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டு பல படங்களின், பல இசையமைப்பாளர்களின், பல பாடல்களின் குறிப்புக்களைச் சேகரித்துவைத்து எழுதவும் துவங்கிவிட்டேன். அனேகமாக இதுஒரு நூலாக வெளிவரக்கூடும். நீங்கள் இங்கே இணையத்தில் சரியான அலசல்களுடன் உங்கள் பயணத்தை ஆரம்பித்திருக்கிறீர்கள். வேறுசிலர் இதே சப்ஜெக்டுகளைக் கையாண்டிருந்தாலும் உங்கள் கட்டுரைகள் அவற்றிலிருந்து பெருமளவு வேறுபட்டிருக்கிறது.<br />நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டு இன்றளவும் தொடர்ந்துகொண்டிருக்கும் ஒரு இசையனுபவத்தை உணராமல் இன்றுதான் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்று முட்டாள்தனமாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள் மத்தியில் நீங்கள் பேசவேண்டியவராக இருக்கிறீர்கள். பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.<br />இதில் சிலபேருடைய பெயர்களை நேரடியாகச் சொல்வதைத் தவிர்த்திருக்கிறீர்கள். நல்லது.<br /><br />ஒன்று சொல்லத்தோன்றுகிறது. <br /><br />நீங்களும் சரி நானும் சரி இன்றைய திரை இசையைப் பேசும்போது இளையராஜாவை அல்ல, அவருடைய ரசிகர்களைத்தான் குறைசொல்கிறோம் என்கிற சிறிய விஷயத்தை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்துகொள்வார்களேயானால் பெருமளவு அபிப்ராய பேதங்கள் குறைந்துபோவதற்கு வாய்ப்புண்டு. <br />தங்கள் எழுத்தின் இரண்டாவது பாகமும் சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.com