tag:blogger.com,1999:blog-6152821251507668795.post683879441934010941..comments2023-10-01T08:38:50.427-07:00Comments on வார்த்தை விருப்பம்: இசை விரும்பிகள் -XV - திறக்காத ஜன்னல்கள். காரிகன்http://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-6152821251507668795.post-71595609234709577282015-09-11T08:45:54.992-07:002015-09-11T08:45:54.992-07:00சங்கர் கணேஷ் . இளையராஜாவை விட சிறந்த இசையமைப்பாளர்...சங்கர் கணேஷ் . இளையராஜாவை விட சிறந்த இசையமைப்பாளர் என்று ஒத்து கொள்கிறோம்.gurunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-32090520597167116592015-06-08T23:50:33.891-07:002015-06-08T23:50:33.891-07:00நண்பர் காரிகன் அவர்களுக்கு
திரு சங்கர் கணேஷ் அவர்க...நண்பர் காரிகன் அவர்களுக்கு<br />திரு சங்கர் கணேஷ் அவர்கள் பற்றிய மிக பெரிய நினைவுகள் அருமை<br />ஒரு சிறு திருத்தும் சொல்லலாம் என்று இந்த கருத்தை பதிவிடுகிறேன் <br /><br />நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு பாடலை <br />பாடியவர்கள் எம் எல் ஸ்ரீகாந்த் வாணி ஜெயராம்<br />பாடல் இடம் பெற்ற திரைப்படம் - நினைப்பது நிறைவேறும்<br />இசை அமைப்பாளர் -எம் எல் ஸ்ரீகாந்த் <br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-37472431354020758062014-09-05T17:34:29.608-07:002014-09-05T17:34:29.608-07:00ஜிரா சார்,
தகவலுக்கு நன்றி. நான் இதை வி குமாரின் ...ஜிரா சார்,<br /><br />தகவலுக்கு நன்றி. நான் இதை வி குமாரின் இசை என்று நினைத்திருந்தேன்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-14565687801420682032014-09-05T09:14:56.800-07:002014-09-05T09:14:56.800-07:00ஏதோ ஒரு நதியில் இறங்குவதைப் போலே பாடல் மெல்லிசை மன...ஏதோ ஒரு நதியில் இறங்குவதைப் போலே பாடல் மெல்லிசை மன்னர் இசையில் வெளிவந்தது. கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல் என்ன தவம் செய்தேன் என்ற படத்தில் இடம் பெற்றது. 1977ல் வெளிவந்த படத்தை இயக்கியவர் கே.பஞ்சு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-86479196627770563042014-05-04T05:17:50.365-07:002014-05-04T05:17:50.365-07:00//வழக்கம் போல இளையராஜா பற்றி எதுவும் ஆலாபனை செய்யா...//வழக்கம் போல இளையராஜா பற்றி எதுவும் ஆலாபனை செய்யாமல் இருந்ததற்கு இன்னொரு நன்றி.//<br /><br />என்ன செய்ய? நீங்கள் தனி ஆவர்த்தனம் வாசிக்கும்போது நானும் பதிலுக்கு வாசிக்க வேண்டியுள்ளது. ரிம்போச்சேnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-47355815854682419892014-05-04T05:07:07.827-07:002014-05-04T05:07:07.827-07:00//இளையராஜாவின் மேற்கத்திய செவ்வியல் பிரதியெடுப்பு ...//இளையராஜாவின் மேற்கத்திய செவ்வியல் பிரதியெடுப்பு ஒரு புத்திசாலித்தனமான உருவல் (திருட்டு?). அவர் மேற்கத்திய மேதைகளின் அபாரங்களிலிருந்து இங்கே அங்கே சில இழைகளை தேடிப்பிடித்து அவற்றை தன் (பெரும்பாலும்) இடையிசையில் சட்டென வீசிவிட்டுப் போவார். கேட்க மிக புதுமையாக இருக்கும். அவைகளை எங்கேயிருந்து பிடித்தார் என்று நாம் சிம்பனி சிம்பனியாக ஆராய வேண்டும். இருந்தும் மொசார்ட் பாக் பீத்தோவன் என கேட்டால் இதை எந்த ரசிகனும் வேறு ஆதாரங்களின்றி ஒத்துக்கொள்வான். கேட்டால் இசை என்னுள் பீறிடுகிறது என்பார். //<br /><br />காரிகன்,<br /><br />நீங்கள் சொன்னதை ஆதாரத்துடன் நிறுவ வேண்டும். இல்லையேல் நீங்கள் செய்வது அவதூறு பரப்புவது. <br /><br />//இவரது நாட்டுபுற இசை எல்லாமே உண்மையிலேயே இவரது படைப்புதானா என்பதும் கேள்விக்குரியதே. ஏனென்றால் அன்னக்கிளி படத்தின் போதே ஒரு நாட்டுப்புற இசைக் கலைஞர் அன்னக்கிளி உன்ன தேடுதே பாடலை இளையராஜா திருடிவிட்டதாக குற்றம் சாட்டியதை இங்கே நினைவு கொள்ளவேண்டும். ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாடல் தேனி பக்கம்புகழ் பெற்ற ஒரு கோவில் திருவிழா பாடல். பலவிதமான நாட்டுப்புற கானங்களை இவர் எடுத்து கையாண்டிருக்கலாம் அதில் தவறில்லை. நாட்டுப்புற இசைக்கு மிகப் பெரிய அங்கீகாரம் இதனால் கிடைத்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.//<br /><br />இதுவும் அவதூறுதான். <br /><br />நாட்டுப்புறப் பாடல்கள் காலம் காலமாகப் பாடப்படுபவை. அவற்றுக்கு யாரும் காப்பிரைட் வைத்திருக்கவில்லை. மேலும் ராஜா வெறுமே காப்பி அடிப்பது மட்டும் செய்திருந்தால் 20 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் முதன்மையான இசையமைப்பாளராக வலம் வந்திருக்க முடியாது. அந்த மெட்டுகள் மீது அவரின் கற்பனைகளை வைத்து மாடங்கள் கட்டியதாலே அவர் ராசாவானார். <br /><br />அது சரி, மற்ற இசையமைப்பாளர்கள் நாட்டுப்புற இசையை உருவவில்லை என்று உறுதியாகச் சொல்கிறீர்கள்?ரிம்போச்சேnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-89230616428583420312014-05-04T04:57:48.721-07:002014-05-04T04:57:48.721-07:00//தமிழ்த் திரையில் எம் எஸ் வி, இளையராஜா, ரஹ்மான் ம...//தமிழ்த் திரையில் எம் எஸ் வி, இளையராஜா, ரஹ்மான் மூவரையும் சந்தைப்படுத்துகிறார்களோ என்ற எண்ணம் எனக்குண்டு. இது ஒரு மோசமான அணுகுமுறை. தனிப்பட்டவித்தில் எனக்கு எம் எஸ் வி யின் இசையின் மீது அலாதியான பிடிப்பு இருந்தாலும், அவர் மட்டுமே சிறந்தவர் இல்லை என்ற நிதர்சனத்தையும் உணர்ந்தே இருக்கிறேன். இது சில ராஜா விசில்களிடம் கிஞ்சித்தும் கிடையாது. (அபூர்வமாக சில ராஜா ரசிகர்கள் உண்மைகளை உரைப்பதுண்டு.)//<br /><br />நீங்கள் விரும்பாவிட்டாலும் தமிழ்த் திரையிசையில் முதன்மையானவர் இளையராஜா என்பது என் கருத்து. இம்மூவரிடமும் திறமை இருந்தது. தொடர்ந்து வெற்றிப்பாடல்களாகக் கொடுத்ததால்தான் சந்தையில் நிற்க முடிந்தது. 70களில் இந்தித் திரையிசை முன்னால் MSV வெல்ல முடியவில்லை. 90களில் மேற்கத்திய இசை ஊடுறுவத் தொடங்கிய பின் அதையே ரஹ்மானும் தரவே இளையராஜா அலை ஓய்ந்தது. 2005-06க்குப் பிறகு தமிழில் ரஹ்மானின் அலை ஓய்ந்து விட்டது. சிற்சில exceptions விண்ணைத் தாண்டி வருவாயா போல. இது தான் ராஜாவுக்கும் நடந்தது, 2000களில் விருமாண்டியும், பிதாமகன் போல. இது தான் 80களில் MSV அய்யாவுக்கும் நடந்தது. சிகரத்தை அடைந்த ஒவ்வொருவரும் பிடிக்காவிட்டாலும் ஒரு கட்டத்தில் கீழிறங்க வேண்டியதுதான். <br /><br />ரிம்போச்சேnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-56110548322057844962014-05-04T04:26:56.812-07:002014-05-04T04:26:56.812-07:00அதெல்லாம் சரிங்க காரிகன்,
இளையராஜா ரசிகர்கள் தளத்...அதெல்லாம் சரிங்க காரிகன்,<br /><br />இளையராஜா ரசிகர்கள் தளத்திற்கு சென்று ஒரண்டை இழுத்தீர்கள். அவர்கள் உங்களுக்குக் களம் அமைத்துத் தந்தபோது ஓடி வந்து விட்டீர்களே. என்ன காரணம்?ரிம்போச்சேnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-72507450981405623652014-05-03T18:20:01.434-07:002014-05-03T18:20:01.434-07:00//ஒரு பாடலின் வெற்றிக்கு இசை அமைப்பாளர் மட்டுமே சொ...//ஒரு பாடலின் வெற்றிக்கு இசை அமைப்பாளர் மட்டுமே சொந்தம் கொண்டாடுவது ஒழுங்கீனம் .படத்தின் இயக்குனருக்கும் இதில் சம பங்கு உள்ளது .//<br /><br />ஆனா, காட்சிக்குத் தக்கபடி பாடல் போட்டால் ஏச்சு மாத்திரம் இசையமைப்பாளருக்கே.<br /><br />வாழ்க நீதி, வாழ்க நேர்மை. <br /><br />சேகர் அய்யா, இது உங்களுக்கு இல்ல. ரிம்போச்சேnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-79809255385016021152014-04-23T05:50:17.034-07:002014-04-23T05:50:17.034-07:00சாம்,
இளையராஜாவின் செவ்வியல் பற்றி குறிப்பிட்டிரு...சாம்,<br /><br />இளையராஜாவின் செவ்வியல் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். சரியான கணிப்பு. மற்றவர்கள் போல் பிரபலமான பாடல்களை தேடித் போகாமல் இவர் மேற்கத்திய செவ்வியல் இசை சகாப்தங்களின் உழைப்பை சற்று "தொட்டுக்"கொண்டவர்.(போனி எம் மின் சன்னி ஒரு விதிவிலக்கு.)இளையராஜாவின் மேற்கத்திய செவ்வியல் பிரதியெடுப்பு ஒரு புத்திசாலித்தனமான உருவல் (திருட்டு?). அவர் மேற்கத்திய மேதைகளின் அபாரங்களிலிருந்து இங்கே அங்கே சில இழைகளை தேடிப்பிடித்து அவற்றை தன் (பெரும்பாலும்) இடையிசையில் சட்டென வீசிவிட்டுப் போவார். கேட்க மிக புதுமையாக இருக்கும். அவைகளை எங்கேயிருந்து பிடித்தார் என்று நாம் சிம்பனி சிம்பனியாக ஆராய வேண்டும். இருந்தும் மொசார்ட் பாக் பீத்தோவன் என கேட்டால் இதை எந்த ரசிகனும் வேறு ஆதாரங்களின்றி ஒத்துக்கொள்வான். கேட்டால் இசை என்னுள் பீறிடுகிறது என்பார். (இவரும் சில ஆங்கிலப் பாடல்களை வெட்கமில்லாமல் காப்பி அடித்தவர்தான்.)<br /><br />50 களில் பிரபலமாக இருந்த The Fourம் Lads என்ற கனடாவைச் சேர்ந்த இசைக் குழுவின் Istanbul Not Constantinople. (வெளிவந்த ஆண்டு 1953. ) என்ற பாடலை தழுவி அமைத்ததே "சங்கத்தில் பாடாத கவிதை". தைப் பொங்கல் படத்தில் இது இடம் பெற்றது என்று நினைக்கிறேன். (இது முதலில் மலையாளத்தில் இவரது இசையிலேயே வந்த பாடல்.) பிறகு simon dupree குழுவினரின் kites பாடலையே அக்கரைச் சீமை என்ற பாடலாக்கினார். (இன்னும் என்னென்ன இருக்கிறது என்று தெரியவில்லை.) மற்றபடி அவரது மைதானம் மேற்கத்திய செவ்வியல்தான். ஏனென்றால் அங்கேதான் பலர் செல்வதில்லை.<br /><br />இவரது நாட்டுபுற இசை எல்லாமே உண்மையிலேயே இவரது படைப்புதானா என்பதும் கேள்விக்குரியதே. ஏனென்றால் அன்னக்கிளி படத்தின் போதே ஒரு நாட்டுப்புற இசைக் கலைஞர் அன்னக்கிளி உன்ன தேடுதே பாடலை இளையராஜா திருடிவிட்டதாக குற்றம் சாட்டியதை இங்கே நினைவு கொள்ளவேண்டும். ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாடல் தேனி பக்கம்புகழ் பெற்ற ஒரு கோவில் திருவிழா பாடல். பலவிதமான நாட்டுப்புற கானங்களை இவர் எடுத்து கையாண்டிருக்கலாம் அதில் தவறில்லை. நாட்டுப்புற இசைக்கு மிகப் பெரிய அங்கீகாரம் இதனால் கிடைத்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.<br /><br />(இதையெல்லாம் நான் இங்கு எழுதுவதற்கு காரணம் இந்த மும்மூர்த்திகளின் திறமையை தவறாக குறிப்பிடவோ அல்லது மட்டம் தட்டவோ அல்ல ! இவர்களின் சங்கீத திறமை அளப்பரியது என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை ! ஆனால் இவர்களின் பெரும் பொக்கிச பெட்டிகளிடையே மற்ற இசையமைப்பாளர்களின் அற்புத ஆபரணங்களும் புதையுண்டிருக்கின்றன என்பதை புரிந்துகொள்ளவேண்டிதான் !)<br /><br />அற்புதமான வாக்கியம். பாராட்டுக்கள். நான் சொல்வதும் இதுவேதான்.<br /><br />பால் நிலவு காய்ந்ததே! ஆஹா என்ன ஒரு மென்மையான அதிரடி! உடைந்த காதலை உணர்த்தும் உள்ளதைச் சுடும் கவிதை கொண்டது . நீங்கள் இந்தப் பாடலில் கரைந்து போய் கண்ணீர் விட்டது அந்த மனநிலைக்கு சரியானதே. <br /><br />உங்களின் சிறப்பான பின்னூட்டம், நடுநிலையான கருத்து, அழகான சொற்கள் போன்றவற்றிக்கு என் நன்றி. காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-24494179348227834492014-04-22T19:31:09.208-07:002014-04-22T19:31:09.208-07:00அபாரமான பின்னூட்டம் சாம்,
இது போன்றதொரு பின்னூட்ட...அபாரமான பின்னூட்டம் சாம்,<br /><br />இது போன்றதொரு பின்னூட்டம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நிறைய சொல்லியிருக்கிறீர்கள். அதிலும் உண்மையை அழுத்தமாகச் சொல்லும் உங்கள் சமரசமில்லாத பாணி பாராட்டுக்குரியது. நம் எண்ணங்களும் ரசனைகளும் காலம் செல்லச் செல்ல நிறம் மாறுவது இயற்கை. புதியதை நோக்கி பாதங்கள் நடந்தாலும் நம்மைத் தாலாட்டிய பழைய இன்பங்களை மனதில் சுமந்து செல்வதும் தேவைப்படுகிறது.<br /><br />தமிழ்த் திரையில் எம் எஸ் வி, இளையராஜா, ரஹ்மான் மூவரையும் சந்தைப்படுத்துகிறார்களோ என்ற எண்ணம் எனக்குண்டு. இது ஒரு மோசமான அணுகுமுறை. தனிப்பட்டவித்தில் எனக்கு எம் எஸ் வி யின் இசையின் மீது அலாதியான பிடிப்பு இருந்தாலும், அவர் மட்டுமே சிறந்தவர் இல்லை என்ற நிதர்சனத்தையும் உணர்ந்தே இருக்கிறேன். இது சில ராஜா விசில்களிடம் கிஞ்சித்தும் கிடையாது. (அபூர்வமாக சில ராஜா ரசிகர்கள் உண்மைகளை உரைப்பதுண்டு.)<br /><br />நீங்கள் சொன்ன சோளம் வெதைக்கயிலே, அம்மன் கோவில் கெழக்கால போன்றவற்றுடன் இன்னும் நிறையவே சேர்த்துக்கொள்ளலாம். இரண்டு முறை மறு சுழற்சி செய்தார் என்கிறீர்கள். அப்படியல்ல. ஏகப்பட்ட முறைகள் இளையராஜா தன் பாடல்களையே மீண்டும் மீண்டும் சுட்டுப்போட்டார். அதனால்தான் கரகாட்டக்காரன் காலத்திற்குப் பிறகு அவரது பெரும்பான்மையான பாடல்கள் ஒரே தொனியில் சலிப்பூட்டும் சங்கடங்களாக இருந்தன. மேலும் அவர் பாடல்களில் பல்லவி மட்டுமே சற்று வித்யாசப்படும். சரணங்கள், இடையிசை எல்லாமே ஒரு deja vu எண்ணத்தை கொடுக்கும். சரணங்களோ பாடப்படுவதை விட பேசப்படும் அவஸ்தையும் இதில் நிறைய உண்டு. சரணத்திலிருந்து இது இந்தப் பாடல்தான் என்று சட்டென்று அடையாளம் காண்பதில் சிரமங்களும் சிக்கல்களும் போனஸாக நிச்சயம்.<br /><br />தொடரும் ......<br />காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-36188433785087867422014-04-22T13:49:58.528-07:002014-04-22T13:49:58.528-07:00முதலில் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன் ! விடலை ப...முதலில் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன் ! விடலை பருவத்தில் இளையராஜாவின் இசைக்கு வெறியனாக இருந்தவன் நான். எந்த அளவுக்கு என்றால்... ரோஜா படம் வந்த புதிதில் இளையராஜாவுக்கு மாற்றாக ரஹ்மானை பேசியதால் ரோஜா பாடல்களையே பலகாலம் தவிர்த்திருக்கிறேன் ! விடலை பருவத்தின் அன்றைய எனது புரிதலை நினைத்தால் இன்று சிரிப்பு வருகிறது !!<br /><br />எம்.எஸ்.வி, ராஜா, ரஹ்மான் மூவருக்கும் முன்னும் பின்னும், ஏன் அவரவர்களின் காலத்திலேயே இன்னும் பல இசையமைப்பாளர்கள் சிறந்த பாடல்களை கொடுத்திருக்கிறார்கள், கொடுத்துகொண்டும் இருக்கிறார்கள் ! ஆனாலும் இவர்கள் மூவரை சுற்றியே தமிழ் சினிமா இசைத்தட்டு சுழல்வதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று இவர்களின் சந்தைபடுத்தும் மேலாண்மை ! பொருள் நன்றாக இருந்தால் மட்டும் போதாது, அதை சந்தைபடுத்தும் திறமையும் வேண்டும் ! எம்.எஸ்.வி, கண்ணதாசன் வாலி தொடங்கி எம்.ஜி.ஆர், சிவாஜி, பாடகர் டி.எம்.எஸ் என தன் செல்வாக்கைதிடபடுத்தி கொண்டார் என்றால் ராஜா கோலிவுட்டில் தயாரிப்பு, காப்பிரைட் என பலவகைகளில் தன் இருப்பை பலமாக்கிகொண்டார் ! இளையவர் ரஹ்மானோ சர்வதேச மார்க்கெட்டிங் புரிந்தவர் !<br /><br />" எனக்கு முன்னாடி இங்க இருக்கற பல இசையமைப்பாளர்கள் ஆஸ்கார் அவார்டு வாங்கற இசையை கொடுத்திருக்காங்க... ஆனா அவங்களுக்கெல்லாம் ஏன் கிடைக்கலன்னு நான் நினைச்சதுண்டு... நம்ம இசையை ஆஸ்கார் கமிட்டிவரை கொண்டு போகனும்... நடுவர்களை கேட்க வைக்கனும்.... "<br /><br />எம்.எஸ்.வியும் இளையராஜாவும் உடனிருக்க, ஆஸ்கார் விருது பாராட்டு நிகழ்ச்சியில் ரஹ்மானே கூறிய வார்த்தைகள் இவை !<br /><br />இளையராஜவை பற்றி விமர்சித்தாலே அவரின் ரசிகர்களுக்கு சட்டென கோபம் வரும் காரணங்களில் ஒன்று அவர் யாரின் இசையையும் பிரதியெடுக்காத சுயம்பு என்ற இமேஜ் ! இதற்கு பதிலாய் சங்கீத ஞானம் இல்லாத, கேள்வி அறிவை மட்டுமே பிரதானமாய் கொண்ட என் மரமண்டைக்கு தெரிந்த மூன்று பதில்கள் :<br /><br />ராஜா அவரின் பிரபல பாடல்களில் பலவற்றை குறைந்தபட்சம் இரண்டு முறையாவது மறுசுழற்சி பண்ணியிருக்கிறார். ஒரு உதாரணம் அவரே பாடிய " சோளம் விதைக்கயில " பாடல். அதன் பிரதியே " அம்மன் கோயில் கிழக்காலே, அம்மனூரு மேற்காலே " பாடல்.<br /><br />அவரின் கிராமிய பாடல்கள் பலவற்றின் டியூன்கள் பாமரமக்கள் காலங்காலமாய் பாடியது. அவர் சினிமாவுக்காக சுவீகரித்துகொண்டார் !<br /><br />மேற்கத்திய வெகுஜன பாடகர்களின் டியூனின் காப்பி என்றால், பாப் மர்லேயின் " பப்பலோ சோல்ஜர் " பாடலே தேவாவின் " அகிலா அகிலா " என என்னை போன்ற சாமானியர்களால் சட்டென கூறிவிடமுடியும் ஆனால் ராஜா தொட்டது மெற்கத்திய சிம்பொனி இசை கோர்வைகளை ! நண்பர் காரிகன் போன்றவர்கள் முயன்றால் இதனை ஆதாரத்துடன் கூற முடியும்.<br /><br />இதில் ரஹ்மானும் விதிவிலக்கல்ல ! அவரின் " உசிலம்பட்டி பெண்குட்டி " பாடலின் அச்சு அசலாய் ஒரு பிரெஞ்சு பாடல் உண்டு. இதை பற்றி அந்த சமயத்தில் அவரிடம் கேட்கபட்ட போது<br /><br />" எனது கீ போர்டில் கிடைத்த அதே லூப் அந்த இசையமைப்பாளருக்கும் கிடத்திருக்கும் " என பதில் கூறினார். " லூப் " கிடைக்கலாம். வாத்தியங்களின் சேர்ப்புமா ? என்ற என் சந்தேகம் சரிதானா என்பதை இங்குள்ள சங்கிதம் தெரிந்தவர்கள் விளக்க வேண்டுகிறேன்.<br /><br />இதையெல்லாம் நான் இங்கு எழுதுவதற்கு காரணம் இந்த மும்மூர்த்திகளின் திறமையை தவறாக குறிப்பிடவோ அல்லது மட்டம் தட்டவோ அல்ல ! இவர்களின் சங்கீத திறமை அளப்பரியது என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை ! ஆனால் இவர்களின் பெரும் பொக்கிச பெட்டிகளிடையே மற்ற இசையமைப்பாளர்களின் அற்புத ஆபரணங்களும் புதையுண்டிருக்கின்றன என்பதை புரிந்துகொள்ளவேண்டிதான் !<br /><br />தனிப்பட்ட முறையில் இளையராஜாவின் இசையை தாண்டி அவரின் குரலாலும் வசீகரிக்கபட்டவன் நான். " ஒரு ஜீவன் அழைத்தது ", " மெட்டி ஒலி காற்றோடு ", " அந்த முகம் தந்த சுகம் ", போன்ற வசிய பாடல்களை அவரால் மட்டுமே தர முடிந்தது. " நேத்து ராத்திரி யம்மா " " நிலா காயுது " போன்ற பாடல்களிலும் ஒரு ஏகாந்ததை புகுத்த ராஜாவால் மட்டுமே முடியும். ஆனால் அதற்காக அவரை விமர்சனத்துக்கு அப்பால் வைக்க முடியாது என்பதே நிதர்சனம் ! " மெட்டி ஒலி காற்றோடு " என் நெஞ்சை தாலாட்டிய முதல் காதலின் போது இளையராஜாவை கொண்டாடிய நான், அந்த காதல் முறிந்தபோது கேட்டழுத " பால் நிலவு காய்ந்ததே " பாடலை தந்த சங்கர் கணேஷை சிறுமை படுத்தினால், நூறாண்டு தொட்ட தமிழ் சினிமா இசையையே சிறுமைபடுத்துவதாகும் !<br /><br />நன்றி<br />saamaaniyanhttp://saamaaniyan.blogspot.frnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-64558403433500006712014-04-22T05:30:21.068-07:002014-04-22T05:30:21.068-07:00வாங்க குரு,
இப்போதுதான் உங்கள் ஆன்மீக கடலில் மூழ்...வாங்க குரு,<br /><br />இப்போதுதான் உங்கள் ஆன்மீக கடலில் மூழ்கிவிட்டு வந்தேன். பார்த்தால் உங்கள் பின்னூட்டம். பாராட்டுக்கு நன்றி.<br /><br />நீங்கள் மட்டுமல்ல. பலரும் SG யின் இசையை இப்படித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். <br /><br />(ஒரு அருமையான இசை ஜோடிக்கு நீங்கள் அர்ப்பணித்திருக்கும் பிரமாதமான கெளரவம் இந்த பதிவு.)<br /><br />(மிகச் சரியான) வார்த்தைத் தேர்வு என்னை மிரள வைக்கிறது. அருமையாக சொல்லிய உங்களுக்கு என் அன்பு கலந்த நன்றி.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-55743362694051597362014-04-22T02:49:31.951-07:002014-04-22T02:49:31.951-07:00என்னது? 'பூவினும் மெல்லிய பூங்கொடி' சங்கர்...என்னது? 'பூவினும் மெல்லிய பூங்கொடி' சங்கர் கணேஷ் இசையமைத்ததா? நான் எம்.எஸ்.வி.என்று நினைத்திருந்தேன். அற்புதமான துள்ளல் பாடல் ஆயிற்றே! 'நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்' - ஆஹா, நினைத்தாலே எத்தனை இனிமையாக இருக்கிறது! ஒரு அருமையான இசை ஜோடிக்கு நீங்கள் அர்ப்பணித்திருக்கும் பிரமாதமான கெளரவம் இந்த பதிவு. வாழ்த்துக்கள், காரிகன்!Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-3815540948495792752014-04-21T05:23:02.831-07:002014-04-21T05:23:02.831-07:00சேகர்,
உங்கள் கருத்து மறுக்க முடியாத உண்மையை சொ...சேகர்,<br /> உங்கள் கருத்து மறுக்க முடியாத உண்மையை சொல்கிறது. இந்த சிந்தனை எனக்கும் ஏற்பட்டது. ஆனால் ஒரு பத்தியில் இதை விளக்கமுடியாது என்று நினைக்கிறேன். ஒரு தனி பதிவே இதற்கு அவசியப்படும். 70களின் இறுதியில் நமது இசை பாணி மாறியது எப்படி என்று கூடிய விரைவில் -ராஜா மணிகளுக்கு பிடிக்காத - ஒரு பதிவு எழுத உத்தேசித்துள்ளேன். இதற்கு ஒரு நல்ல தலைப்பைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.உங்கள் வருகைக்கு நன்றி. அற்புதமான கருத்துக்கு அடுத்த நன்றி.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-63899808969404502662014-04-20T11:24:17.024-07:002014-04-20T11:24:17.024-07:00இளையராஜா வந்தவுடன் தான் இசை பாணி மாறியது என்று சொல...இளையராஜா வந்தவுடன் தான் இசை பாணி மாறியது என்று சொல்வது விவேகமானது அல்ல . காக்காய் உக்காரப் பனம்பழம் விழுந்த கதை அது . <br /><br />இளையரஜவுடைய ஆரம்பக் காலம் மாறுபட்டக் கோணங்களில் படம் இயக்கப் பல இயக்குனர்கள் நுழைந்த காலம் அதனால் தான் இசையில் பாணி மாற்றப் பட்டது. முழுப் பலனையும் இளையராஜவுக்கே தருவது தவறான முடிவு . <br /><br />ஒரு பாடலின் வெற்றிக்கு இசை அமைப்பாளர் மட்டுமே சொந்தம் கொண்டாடுவது ஒழுங்கீனம் .படத்தின் இயக்குனருக்கும் இதில் சம பங்கு உள்ளது .sekarhttps://www.blogger.com/profile/03947330357530723903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-2423624118712330822014-04-20T08:34:37.584-07:002014-04-20T08:34:37.584-07:00வாருங்கள் பிலிப்,
மிக அருமையாக எழுதியிருக்கிறீர்க...வாருங்கள் பிலிப்,<br /><br />மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் எழுத்தில் வசீகரம் இருக்கிறது. நீங்கள் மட்டும் ஒரு பிளாக் ஆரம்பித்து இசை பற்றி எதுவும் பதிவுகள் எழுதினால் முதல் ஆளாக பின்னூட்டம் இடுவது நானாகத்தான் இருக்கும். <br /><br />(இளையராஜாவை விட சங்கர் கணேஷ் மேற்கத்திய இசையை நன்றாக அமைத்தார்கள் என்று நீங்கள் சொல்வதோடு எனக்கு உடன்பாடில்லை. Raja is far superior to SG in this realm.)<br /><br />நன்று. இது உங்களுக்குத் தோன்றுவது. அவ்வளவே. உங்களின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அதைச் சொல்லும் உரிமை உங்களுக்கு உண்டு என்பதில் உறுதியாக இருக்கிறேன். SG யின் வீதி இசை இளையராஜாவின் இசையை விட பலமாக இருக்கும். ஆனால் அவர்களால் பெரிய அளவில் பெயர் பெற முடியாததற்கு நீங்கள் கூறியதே சரி என்று படுகிறது.<br /><br />(நாட்டுப்புற இசையை இவர்கள் வேறு பாணியில் அமைத்தார்கள். ஆனால் என்ன ஒன்று ராஜா வுக்குப்பிறகே அவர்கள் இதைச் செய்தார்கள். எனவே இதற்கு அவர்கள் சொந்தம் கொண்டாட முடியாது போயிற்று.)<br /><br />உண்மையே. இந்த விஷயத்தில் இளையராஜா முந்திக்கொண்டுவிட்டார் என்று சொல்லலாம்.அல்லது அவருக்குப் பிறகே இந்த எண்ணம் இங்கே வலுப்பெற்றது என்றும் சொல்லலாம்.உங்களின் பாராட்டுக்கு நன்றி. ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. அதை நாம் புரிந்து கொண்டால் சில வீண் வறட்டு விவாதங்களை தவிர்க்கலாம். மீண்டும் வருக .நன்றி.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-10379284746711134792014-04-20T04:35:48.232-07:002014-04-20T04:35:48.232-07:00திரு காரிகன்,
வாழ்த்துக்கள். 'செய்வதை திருந...திரு காரிகன்,<br /> வாழ்த்துக்கள். 'செய்வதை திருந்தச் செய்' என்பார்கள். இந்தப் பதிவு அதற்கொரு உரைகல்லாக இருக்கிறது. <br /><br />எனக்கு சங்கர் கணேஷ் இசை பிடிக்கும். நீங்கள் குறிப்பிட்டுள்ள பல பாடல்களை நான் ரசித்துக் கேட்டதுண்டு. உங்கள் வார்த்தைகளின் மீது நடந்து சென்று என் பழைய நாட்களை அடைந்ததுபோல இருக்கிறது. அருமையான நடை.<br /><br />இளையராஜாவை விட சங்கர் கணேஷ் மேற்கத்திய இசையை நன்றாக அமைத்தார்கள் என்று நீங்கள் சொல்வதோடு எனக்கு உடன்பாடில்லை. Raja is far superior to SG in this realm. <br /><br />அதற்காக SG யின் இசையை ஒரேடியாக குறை சொல்லிவிடவும் இயலாது. இதை படித்த பிறகு அந்த தளதளன்னு வளந்த பொண்ணு பாடலைக் கேட்டேன். துடியான இசை. பட படக்கும் தாளம் என்று பிய்த்து மேய்ந்திருக்கிறார்கள் SG. <br /><br />நாட்டுப்புற இசையை இவர்கள் வேறு பாணியில் அமைத்தார்கள். ஆனால் என்ன ஒன்று ராஜா வுக்குப்பிறகே அவர்கள் இதைச் செய்தார்கள். எனவே இதற்கு அவர்கள் சொந்தம் கொண்டாட முடியாது போயிற்று.<br /><br />பல நல்ல பாடல்களை கொடுத்த இந்த இருவரையும் மறக்காமல் இருப்பதும் அவர்களைப் பற்றி ஒரு பதிவு எழுதுவதும் எல்லோரும் செய்வதில்லை.எனக்கு ஆச்சர்யம் ப்ளஸ் சந்தோஷம். <br /><br />மிக நல்ல பதிவு. பாராட்டுக்கள். <br /><br />இப்படிக்கு,<br />பிலிப் டேனியல்.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-87459060245604258742014-04-18T20:27:32.874-07:002014-04-18T20:27:32.874-07:00(இளையராஜாவின் இசையை ஏதோ ஒரு மூன்றாம்தர சினிமாவை வி...(இளையராஜாவின் இசையை ஏதோ ஒரு மூன்றாம்தர சினிமாவை விமர்சிப்பது போல எழுதியிருப்பது வருத்தமளிக்கிறது. அந்த இசையை சமகாலத்தில் இருக்கும் சாமானியர்களால் புரிந்து கொள்ள முடியாது. அதை உணர்த்து கொள்ள ஒரு 100 வருடங்கள் போனபின்பு தான் 'பொக்கிஷம்' என்பது கொண்டாடப்படப்போகிறது. )<br /><br /> இது எதோ ஒரு தளத்தில் நீதானே என் பொன்வசந்தம் படப் பாடல்கள் குறித்து ஒரு ராஜா ரசிக சிகாமணி எழுதியிருந்தது. படித்துப் பார்த்தால் எவ்வளவு கேலித்தனமாக இருக்கிறது என்று நீங்களே பாருங்கள். சாமானியர்களுக்குப் புரியாதாம். ஆனால் அதே சமயம் இவர்தான் பாமரர்களின் இசையை கொண்டுவந்தார் என்றும் சாமானியர்களும் ரசிக்கும்படி இசை அமைத்தார் என்றும் கதகளி ஆடுவார்கள் ராஜா மணிகள். இதைதான் நான் இரட்டை நாக்கு என்கிறேன்.<br /><br />சால்ஸ்,<br /><br />(இளையராஜாவின் இசையை மகா கேவலமாக விமர்சனம் செய்வதில் உங்களை விட மோசமாக நான் யாரையும் santhithathe இல்லை . )<br /><br />இதைத்தானே நான் சொன்னேன். அவர் இசையை விமர்சனம் செய்கிறேன் அதையும் நேர்மையாக செய்கிறேன். மற்றபடி அவரது குணங்களைப் பற்றி பேசுவது கிடையாது என்று. மேலும் கேவலமானதை வேறென்ன சிறப்பாகவா சொல்லமுடியும்? ஒரு பொருளின் தகுதிகேற்றவாறு அதை விமர்சனம் செய்வது இயல்புதானே. நீங்கள்தான் நகைச்சுவை என்ற பெயரில் செந்தில் மாதிரி மூஞ்சி என்று காலித்தனம் செய்கிறீர்கள். இதுவெல்லாம் மூடர்களின் கலாட்டா.உங்களுக்கு நனறாகவே வருகிறது.<br /><br />நான் என்றும் திரித்துப் பேசுபவனில்லை. என் பின்னூட்டங்கள், மற்றவர்களுக்கு நான் அனுப்பிய பதில்கள் எல்லாவற்றிலும் இளையராஜாவின் உளுத்துப்போன பாடல்களை கடுமையாக சாடியிருக்கிறேன். இதை நான் எப்போது மறுத்திருக்கிறேன்?அதையெல்லாம் இங்கே நீங்கள் வலிந்து பதிவிட்டால் நான் எப்போதும் ஒரே மாதிரி பேசுபவன் என்ற உண்மை மட்டுமே நிற்கும். நீங்கள்தான் மாட்டிக்கொள்வீர்கள். <br /><br />வேறு ஏதாவது யோசித்துக்கொண்டு வாருங்கள். விவாதிக்கலாம்.<br />காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-45920156581698996642014-04-18T11:21:45.998-07:002014-04-18T11:21:45.998-07:00காரிகன்
///என்னைப் பொறுத்தவரை இசையே பிரதானமானது ...காரிகன் <br /><br />///என்னைப் பொறுத்தவரை இசையே பிரதானமானது இசைஞன் அல்ல.///<br /><br />இது அடுத்த இரட்டை நாக்குக்கான உதாரணம். இளையராஜா பற்றிய தனிநபர் வசைபாடல்கள் பழசு நிறைய இருக்குது உங்களின் பின்னூட்டங்களில் ! எடுத்து போடலாமா!? முகமூடி கழட்டிட்டு நேர்மையாக பேசுங்கள் .சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-45380099451445117312014-04-18T11:15:12.404-07:002014-04-18T11:15:12.404-07:00காரிகன்
///இளயராஜாவின் தனிக் காட்டு ராஜாங்கத்தில...காரிகன் <br /><br />///இளயராஜாவின் தனிக் காட்டு ராஜாங்கத்தில் பல இசை அமைப்பாளர்கள் முன்னுக்கு வரமுடியவில்லை என்பது ஒரு கண்ணோட்டம். அதை ஒரு செய்தியாக பாவித்தால் சரியாக இருக்கும். மாறாக ஒரு குற்றச்சாட்டாக அதை ஏன் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தெரியவில்லை. நான் எனது பதிவுகளில் இளையராஜாவின் இசையை மட்டுமே விமர்சிக்கிறேன். அதையும் முடிந்தவரை நேர்மையாகவே செய்கிறேன். பின்னூட்டம் என்று வரும்போது அது என் சொந்த எண்ணங்களுக்கான வழித்தடம். எனவே அங்கே சில சமயங்களில் மற்ற விஷயங்கள் விவாதிக்கப்படும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. மேலும் இளையராஜாவின் தனி மனித குணங்களை அல்ல அவரின் இசை தொடர்பான பேச்சுக்களையே விமர்சிக்கிறேன். அதிலென்ன தவறு இருக்கிறது? ///<br /><br /> இளையராஜா பற்றி வசைபாடவில்லையா? முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்வது கடினம் . உங்கள் பழைய பின்னூட்டங்களையும் மற்றவர் தளத்தில் நீங்கள் பேசிய வசவுகளையும் எடுத்து காப்பி பேஸ்ட் செய்தால் முத்துராம் அசந்து போய் விடுவார் . பாவம் அவருக்கு உங்களின் பாவனைகளும் பாசாங்குகளும் புரியவில்லை. உங்களின் இரட்டை நாக்கு இளையராஜா ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும் . இளையராஜாவின் இசையை மகா கேவலமாக விமர்சனம் செய்வதில் உங்களை விட மோசமாக நான் யாரையும் santhithathe இல்லை . அப்படி இருக்க முத்துராம் அவர்களின் கேள்விக்கான பதிலில் செந்தில் மாதிரி மூஞ்சி வைத்துக் கொண்டு எப்படி இப்படி பேச முடிகிறது !?சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-90464889152496821672014-04-17T23:58:03.270-07:002014-04-17T23:58:03.270-07:00திரு முத்துராம் ஸ்ரீநிவாசன்,
உங்களின் கருத்துக்க...திரு முத்துராம் ஸ்ரீநிவாசன்,<br /> உங்களின் கருத்துக்களைப் படித்தேன். புரிதலுக்கு நன்றி. <br /><br />உங்களின் தளத்தைப் பார்வையிட்டேன். உங்களின் இசைச் சார்பு என்னைப் பற்றி இவ்வாறு எண்ணம்கொள்ள வைத்திருக்கலாம். மற்றபடி இளையராஜா மீது எனக்கென்ன வன்மம்? இதுவெல்லாம் முதல் முறையாக என் எழுத்தைப் படிக்கும்போது தோன்றும் ஒரு திடீர் முடிவு. சொல்லவேண்டுமென்றால் வீழ்ந்த இசை என்ற பதிவில் நான் அவரது இசையை கடுமையாக விமர்சித்துள்ளேன். முடிந்தால் அதையும் படியுங்கள். <br /><br />இளயராஜாவின் தனிக் காட்டு ராஜாங்கத்தில் பல இசை அமைப்பாளர்கள் முன்னுக்கு வரமுடியவில்லை என்பது ஒரு கண்ணோட்டம். அதை ஒரு செய்தியாக பாவித்தால் சரியாக இருக்கும். மாறாக ஒரு குற்றச்சாட்டாக அதை ஏன் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தெரியவில்லை. நான் எனது பதிவுகளில் இளையராஜாவின் இசையை மட்டுமே விமர்சிக்கிறேன். அதையும் முடிந்தவரை நேர்மையாகவே செய்கிறேன். பின்னூட்டம் என்று வரும்போது அது என் சொந்த எண்ணங்களுக்கான வழித்தடம். எனவே அங்கே சில சமயங்களில் மற்ற விஷயங்கள் விவாதிக்கப்படும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. மேலும் இளையராஜாவின் தனி மனித குணங்களை அல்ல அவரின் இசை தொடர்பான பேச்சுக்களையே விமர்சிக்கிறேன். அதிலென்ன தவறு இருக்கிறது? விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று இங்கே யாரையும் குறிப்பிட முடியாது. <br /><br />இளையராஜா சிறப்பான பாடல்களைக் கொடுத்திருக்கிறார். அதே வேளையில் அவர் மட்டுமே சிறப்பான இசையை அளித்தார் என்றும் அவரது அனைத்துப் பாடல்களும் வைரங்களாக மின்னுவதாகவும் பதிவுகள் பதிவுகளாக சிலர் எழுதித் தள்ளுகிறார்கள். அவரைப் பற்றிய ஒரு மிகப் பெரிய புனைவு இணையத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதை அப்படியில்லை என்று சொல்ல சில இணைக் கோடுகளை நான் வரையும் போது அது உங்களைப் போன்றவர்களுக்கு பாயும் அம்பு போல தெரிகிறது. <br /><br />என்னைப் பொறுத்தவரை இசையே பிரதானமானது இசைஞன் அல்ல. காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-1016859571834770182014-04-17T21:49:50.935-07:002014-04-17T21:49:50.935-07:00காரிகன் உங்களுக்கு இளையராஜாவை எதற்காகவோ பிடிக்க வி...காரிகன் உங்களுக்கு இளையராஜாவை எதற்காகவோ பிடிக்க வில்லை என்பதற்காக அவரின் இசையை வெறுப்பது சரியாக தோன்றவில்லை.அவர் என்ன ஆட்டம் ஆடினால் உங்களுக்கு என்ன? ஒரு படைப்பாளியின் படைப்பை எவ்வளவு வேண்டுமானாலும் கறாராக விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட மனித குணங்களையும், கற்பிதமான விஷயங்களையும் அவர்களின் படைப்புக்கு அளவுகோளாக கொண்டு விமர்சிப்பது தவறான போக்கு என்பது எனது கருத்து.Muthuram Srinivasanhttps://www.blogger.com/profile/01108455801987037415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-24618822188615801252014-04-17T21:38:03.210-07:002014-04-17T21:38:03.210-07:00"இளையராஜாவின் அலையில் சங்கர்-கனேஷின் முத்துக்..."இளையராஜாவின் அலையில் சங்கர்-கனேஷின் முத்துக்கள் அடித்துசெல்லப்பட்டுவிட்டது மிகவும் வருத்தமானது." - அதற்க்கு இளையராஜாவை குறை சொல்வது சரி அல்ல. இந்த கட்டுரை சங்கர்-கணேஷின் சாதனைகளை கூறியதற்கு சமமாக, இளையராஜாவை தூற்றியும் எழுதப்பட்டு உள்ளது.Muthuram Srinivasanhttps://www.blogger.com/profile/01108455801987037415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6152821251507668795.post-42128065663432078562014-04-17T21:30:21.780-07:002014-04-17T21:30:21.780-07:00காரிகன் நீங்கள் சங்கர் - கணேஷின் பெருமைகளையும், அவ...காரிகன் நீங்கள் சங்கர் - கணேஷின் பெருமைகளையும், அவர்களின் இனிமையான இசையை பற்றியும் எழுதுவதில் யாருக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை. சங்கர் - கணேஷ் பற்றிய புதிய சங்கதிகளை அறிந்து கொள்ள எனக்கும் ஆர்வம் தான். ஆயிரம் படங்களுக்கு மேல் அவர்கள் இசை அமைத்து இருப்பது எனக்கு இது வரை தெரியாத செய்தி. இதெல்லாம் சரிதான். <br />ஆனால் உங்கள் பதிவை நீங்களே இன்னொரு முறை வாசித்து பாருங்கள்... இளையராஜாவின் மேல் உங்களுக்கு இருக்கும் வன்மம் உங்களை அறியாமல் வெளிப்பட்டு இருக்கும். அது தேவை இல்லாதது. மற்றபடி சங்கர் - கணேஷின் பல அற்புதமான பாடல்கள் பற்றிய நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.Muthuram Srinivasanhttps://www.blogger.com/profile/01108455801987037415noreply@blogger.com