Sunday 25 August 2013

இசை விரும்பிகள் X -வீழ்ந்த இசை



(இந்தப் பதிவில் நான் இளையராஜாவின்  இசையின்  மீது சில கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்திருப்பதால் அவரின் தீவிர  ரசிகர்கள் இதைத் தவிர்ப்பது நலம்.படித்துவிட்டு விவாதம் புரிய விரும்பினால் அதை வரவேற்கும் அதே வேளையில்  அவை  அநாகரீகமாக இருக்கும் பட்சத்தில் அவை பிரசுரிக்கப்படாது என்றுணர்க.)
                  
                 வீழ்ந்த இசை 
     

      இசை பெரியதா?அல்லது அதை கொடுக்கும் இசைஞன் பெரியவனா?.இந்தக் கேள்வியை   மேலோட்டமாகப் பார்த்தால் இது  catch-22 போன்று  தோன்றும்.  இசை இல்லாவிட்டால் இசைஞன் இல்லை. இசைக்க இசைஞன் இல்லாவிட்டால் இசை இருக்காது. ஆனால்  கொஞ்சம் இந்தக் கேள்வியை ஆழமாக ஊடுருவினால் உண்மையில் இது அப்படிப்பட்டதல்ல  என்று நமக்குப்   புலப்படும் . தான் இசைக்கும் இசையினாலேயே ஒரு இசைஞன் அறியப்படுகிறான். மதிப்பிடப்படுகிறான்.  அவனுடைய பிரதான முகமாகவும் அவனை இயக்கும் அதீத சக்தியாகவும் இருக்கும்  இசை என்னும் அற்புதமே அவனைத் தாண்டிப் பேசப்படுகிறது. அந்த இசையே அவன் காலம் முடிவு பெற்ற பின்னும் நிலைத்து நிற்கிறது. தான் இசைக்கும் இசையை விட தான் உயர்ந்தவன் என்று அவன் நினைப்பது  அவனுடைய தெளிவற்ற  இசை மதிப்பீடுகளையும் தன் ஆளுமையின் மீதுள்ள கர்வத்தையும் அறிவிக்கிறது. இசை நதியைப் போன்றது. இசைஞனோ அதில் பயணம் செய்யும் படகு போன்றவன். படகு இல்லாவிட்டாலும் நதி இருக்கும் என்ற உண்மையை அவன் மாற்ற  முயன்றால்  அவன்  நதியில் விழுந்து கரைந்து போகும்  மழைத்துளி போல  காணாமல் போய்விடுகிறான். ஏனென்றால் இசையை அவன் புதிதாக படைக்கவில்லை. கண்டுகொள்கிறான்.  இசை எப்போதுமே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. மனிதன் இங்கு  தோன்றும் முன்பே இசை இங்கே  இருந்தது.
 
    அப்சலூடிஸம்   (Absolutism) என்று ஆங்கிலத்தில் ஒரு வார்த்தைப் பதம் இருக்கிறது. சர்வாதிகாரத்தின் மறுபெயராக அது பயன்படுத்தப்படுகிறது. நல்ல விதமாக ஆட்சி செய்து கொண்டு வருபவர்கள்  ஒரு காலகட்டத்தில் தான் செய்வதெல்லாம் நல்லதே என்று நினைத்துக் கொண்டு அராஜக வழியில் செல்வார்கள்.  அது  அவர்களுக்குத்  தோன்றும் ஒரு வித மாயத் தோற்றம் என்று அவர்கள் உணர்வதில்லை. எண்பதுகளின் மத்தியில்  இளையராஜாவும் இப்படிப்பட்ட ஒரு மாயச் சுழலில் மாட்டிக்கொண்டு விட்டதாகவே தோன்றுகிறது.   ஆரம்பத்தில் தன்னை நிரூபிக்கவும் தன் இசைதாகத்தின் இனிமையான முகமாகவும் சிறப்பான இன்னிசையை தாரளமாக வழங்கியவர் தமிழ்த்திரையிசையின் கடிவாளம் தன் கைகளுக்கு  வந்ததும் தான் கொடுப்பதெல்லாம் சிறப்பானவையே என்று தன்னையே ஏமாற்றிக்கொண்டு தன்  மனம் போன போக்கில் இசையின் தரத்தை விட தனக்கே  முதலிடம் கொடுத்து  நேர்த்தியான பாதையில் சென்றுகொண்டிருந்த நமது திரையிசையை  தன் விருப்பத்துக்கேற்றாற்போல் வடிவமைத்தார்.வைரமுத்துவுடனான உறவை முறித்துக்கொண்ட பின்னர் அவர் நல்ல கவிதைகள் மீதும் ஈடுபாடு காட்டாமல் பேச்சு வழக்கில் இருக்கும்  வார்த்தைகளை அளவில்லாமல் ராகங்களில்  இணைத்து அவற்றை  பாடல்களாக்கினார். முதலில் அவர் பாடல்களிலிருந்து  நல்கவிதை நகன்று  நின்றது . கொச்சை சொற்களும் இச்சை ஓசைகளும் அதனிடத்தை நிரப்பின.தமிழ்த்திரையிசையில் களைகள் ஒய்யாரமாக வளர்ந்து நிமிர்ந்தன .நற்பயிர்களுக்கு நீரூற்றிய இளையராஜா களைகளுக்கும் வஞ்சனை இல்லாது உரமேற்றினார். பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்ட  இளையராஜாவின் இவ்வாறான  தரமில்லாத  பாடல்களையும் நேர்த்தியான இசை என்று சொல்வதில் இருக்கும்  தந்திரம்  என்னவென்பதை நாம் அடையாளம் காணவேண்டும். என்னெவென்றால் இசை, ராகம் என பகட்டாக வெளியே தெரியக்கூடிய இரண்டு விஷயங்களைப்  பற்றியே பல பத்திகள் எழுதிவிட்டால் அல்லது பேசிவிட்டால் இளையராஜாவின் பாடல்களில் உள்ள  கவிதை வெற்றிடத்தை மூடி மறைத்துவிடக்கூடிய சௌகரியம் கிடைத்து விடுகிறது.கவிதையை எழுதுபவர் இளையராஜா இல்லாததால் இவர்கள் பாடல் வரிகளைப் பற்றிப் பேசுவதை சாமர்த்தியமாக தவிர்த்துவிடும் யுக்தியை கைக்கொள்கிறார்கள். எனது பார்வையில்  80களின் இறுதியிலும் 90 களிலும் வந்த முக்கால்வாசி இளையராஜாவின் பாடல்கள் நல்கவிதையை துறந்துவிட்ட நாலாந்தர வகையைச் சேர்ந்தவை.அவைகளில் சில  பாடல்களில்  நல்ல மெலடி, ராகத்தீற்றல்கள், இனிமையான இசை ஏனைய பிற இசை கலந்த சங்கதிகள்  இருந்தாலும், தரமில்லாத  வார்த்தைகள் திடீரென வாய்க்குள்  கடிபடும்  ஒரு சொத்தைக்  கடலை போல எல்லா சுவைகளையும் கெடுத்துவிடுகின்றன.


    இதைச்  சொல்லும்போது இதைப் படிக்கும் பலருக்கு இதில் உடன்பாடு உண்டாவதில் சிக்கல்கள் இருப்பதை நானறிவேன். இளையராஜாவை இசையின் அவதாரமாகப் பார்க்கும் பல கண்கள் இந்த வாக்கியத்தை சட்டெனெ கடந்து செல்ல விருப்பம் கொள்ளும்  அல்லது காண மறுக்கும்.அவரை இசையின் பிரதிநிதியாக நினைப்பவர்கள் அவரைப்பற்றிய எந்தவிதமான எதிர்மறை விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்வது கிடையாது என்பதும் தெரிந்ததே .எல்லாவற்றிற்கும் இரண்டு பக்ககங்கள் உண்டு என்ற விதியை அவர்கள் மறுதலிப்பது அவர்களால் எதிர்வினைகளோடு மோத முடியாத பலமின்மையை பிரதிபலிக்கிறது. விவாதம் என்று வந்தாலும்  பதில் சொல்பவர்களில் பலர் அநாகரீக வார்த்தைகள் கொண்டு தனி மனித தாக்குதலுக்கு வரிசை கட்டி நின்று தங்கள்  வீரத்தைக் காட்டத் தயங்குவதில்லை. அவரின் சாதனைகள் என்று பல சங்கதிகளை அவர்கள் வரிசையாக பட்டியலிட்டாலும்  அவைகளில் பெரும்பான்மை  அவரின் முன்னோடிகளால் வெற்றிகரமாக செய்யப்பட்டவையே.குறிப்பாக  முன்னிசை, இடையிசை,பின்னிசை,மேற்கத்திய கலப்பு,நாட்டுப்புற இசை,மேற்கத்திய செவ்வியல் இசை, இவற்றின் கலப்பான புதுவித மெல்லிசை போன்ற இசையின் பலவிதமான முயற்சிகள் இளையராஜாவுக்கு  முன்பே அரங்கேறிவிட்டன.  தன் பங்கிற்கு இளையராஜாவும் சிறப்பான இசையை அளித்தார். இசையை வேறு பாதையில் நகர்த்திச் சென்றார்.புதுவித ஓசைகளை உண்டாக்கினார். நாட்டுப்புற இசையின் நவீன பரிமாணங்களை வீரியத்துடன் இசைத்தார். உண்மையில் இசையில்  அவருக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார். இவற்றிக்கெல்லாம் உச்சமாக தமிழ்த் திரையிசையின் முகத்தையே முற்றிலும்  மாற்றினார்.இத்தனை  காலடிகளை  அனாசயமாக எடுத்து வைத்து தமிழிசையின்  நம்பிக்கை நட்சத்திரமாக உள்வாங்கப்பட்டவர் திடீரென அதே தமிழ்த் திரையிசையின் வீழ்ச்சிக்கு வித்திடும் வகையில் சாலைகளை மாற்றி அமைத்தார்.80 முதல் 92 வரை அவரே ராஜாங்கம் நடத்திக்கொண்டிருந்ததால் அவரால் தான் நினைத்தை எளிதாக செய்யமுடிந்தது. அவருடைய இசையறிவு வேறு பல உயரங்களுக்கு தமிழிசையை எடுத்துச் சென்றிருக்கலாம் தொடர்ந்து அவர் தன் இசையின் தரத்தை வணிக காரணிகளுக்காக விட்டுக் கொடுக்காமலிருந்திருந்தால். இன்றைக்கு தமிழ் திரையிசை வெகுவாக தரமிழந்து காணப்படுவதின் முதல் வித்து இளையராஜாவின் காலத்தில்தான் போடப்பட்டது.

      ஒருமுறை என் கல்லூரி நண்பனொருவன் இசை பற்றிய விவாதத்தில்  "தமிழ் இசையை கெடுத்ததே இளையராஜாதான்" என்று வெகு காட்டமாக குற்றம் சுமத்தினான்.வீடுகளின் வெளியே கேட்டுக்கொண்டிருந்த சாவுக்கொட்டு என்று சொல்லப்படும் இசையை வீடுகளின் உள்ளேயும் ஒலிக்க வைத்தவர் இவர் என்று அவன் சொன்னது  எனக்கு நினைவிருக்கிறது.   அப்போது  இளையராஜா பற்றிய நாட்டம் அதிகம் இல்லாத காரணத்தினால் அதைப் பற்றி நான் மேற்கொண்டு  தெரிந்து கொள்ள விரும்பவில்லை.கொஞ்சம் இதை ஆராய்ந்தோமானால் இதில் உண்மை இருப்பதையும், இசையில்  வடிக்க முடியாத சில ஓசைகளை இளையராஜா இசையாக  மாற்றி இருப்பதையும்   உணரலாம்.சாவுக்கொட்டு, படுக்கையறை முனங்கல்கள், விரக தாப  முக்கல்கள் இவைகளை நம் வீட்டு வரவேற்பறைக்கு அழைத்து வந்து  தாய்,  தந்தை  மற்ற உறவுகள் என்று ஒரு குடும்பமாக  ரசிக்கும் நம்  அழகான  இசை ரசனையை கேலி செய்யும்   வகையில் மனிதனின் அடிமட்ட வக்கிர  இச்சைக்கு இளையராஜா தன் பல  பாடல்களை  தீனியாக்கினார். இதுவும் வாழ்கையின் ஒரு அங்கம் தானே என்று சப்பைக்கட்டு கட்டினாலும்  இவ்வாறான தரமில்லாத இசையை  இவரின் முன்னோடிகள் முயற்சி செய்யாததின் பின்னே இருக்கும் நாகரிக இசை உணர்ச்சியும், சமூக அக்கறையும் இவரிடம் இருந்து விலகிப் போனது  ஏன்  என்ற கேள்வி எழாமல் இல்லை.




      இளமை ஊஞ்சலாடுகிறது படத்தின் தண்ணி கருத்துருச்சு பாடல்தான்  முதன் முதலாக இவரின் இசையில் வந்த ஆபாச பாடல்களின் ஆரம்பப்  புள்ளியாக இருக்கக்கூடும்.அந்தப் பாடல் வானொலியில் ஒலிக்க துவங்கும் போதே நான் சட்டென வேறு அலைவரிசைக்கு வானொலியின்  குமிழை  திருப்பிவிடுவேன். பூட்டாத   பூட்டுகள் என்ற படத்தில் வரும் ஆண்டிப்பட்டி மாரியப்பன் பொண்டாட்டி (  என்ன ஒரு "சங்கத்தமிழ் !") என்கிற பாடல் அடுத்த ஆபாசம்.இந்தப் பாடலை   ஜானகி எப்படிப் பாடினார் என்பதை விட இதை தமிழின் மிகச் சிறந்த இயக்குனர்களில்  ஒருவரனான மகேந்திரன் எப்படி அனுமதித்தார் என்பதை புரிந்துகொள்வதில் வியப்பே மிஞ்சுகிறது.பாட இயலாத சொற்களைக்  கொண்டு  பாடல்கள் புனைவதில்  இளையராஜா ஒரு புதிய இசை சகாப்தத்தையே ஆரம்பித்து வைத்தார்.

   பொதுவாக சரியாக பாடத்தெரியாமல் நளினமில்லாத குரலில்  கர்ணகடூரமாக பாட முயற்சிப்பவர்களை கழுதையோடு ஒப்பிட்டு நாம் கிண்டல் செய்வதுண்டு.இந்தக் கேலிப் பேச்சையும்  கவனத்தில் கொண்டு அந்த  மலிவான ஓசையையும்  வலிந்து  தன் பாடல்களில் திணித்து  கழுதைகள் கத்தும் சத்தத்தை இசையாக வடித்து  அடுத்த சாதனையாக தன் இசையில் அதை  கொண்டு வந்து இசை ரசிகர்களை  திக்குமுக்காட வைத்தார் இளையராஜா.(ஆடுகள்,மாடுகள்,நாய்கள்  சத்தம் போல இதுவும் ஒரு இசைதானே என்று நாம் சமாதானமடையலாம்.  நல்லவேளையாக கழுதைகளோடு நிறுத்திக்கொண்டார்.) 16 வயதினிலே படத்திலேயே இந்த மாதிரியான விபரீத விளையாட்டுகளில் தீவிரம் காட்ட துவங்கிவிட்டார் இளையராஜா. ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என்ற ஒரு நல்ல பாடல் ஆரம்பத்தில் நமக்கு தரும் சுகமான உணர்வு பாடலின் இறுதியில் வக்கிரமாக நம்மிடமிருந்து  பிடுங்கப்பட்டு ஒரு கழுதையின் காணமே கடைசியாக காதுகளில் தங்குகிறது.சிறுவர்கள் இதை கேட்டு விட்டு குலுங்கிக்  குலுங்கி சிரித்தார்கள். இதுவே  இதனால் அவர் சாதித்தது. இவ்வாறான நாலாந்தர கலை ரசனை கொண்டவர்களை திருப்தி செய்ய இளையராஜா தேவையில்லை என்பது என் கருத்து.

     அடுத்தபடியாக அவர் பாடல்களில் உள்ள கவிதைகளின்  தரத்தைப் பற்றி சற்று ஆராயலாம்.  வைரமுத்துவின் பிரிவிற்கு பின்னே இவர் பாடல்களில் கவிதை கெட்டது என்பது ஒரு புறம் இருக்க அதற்கு  முன்பிருந்தே இவரின் பாடல்களில் கொச்சைச் சொற்கள் சுதந்திரமாக உலா வந்தன. எளியவர்களின்  பேச்சை இவர் கையாண்டார் என்று சொல்லி நகர்ந்து விட்டு அதற்கடுத்து அடுக்கடுக்காய் வந்து விழுந்த கவிதைக் குப்பைகளை வசதியாக மறந்தும் விடலாம்.ஆனால் இது நம் இசையின் சீரழிவிற்கு அடிகோலியதை உணர்வது அவசியம். "என்ன பாட்டு பாட" என்று பாட இயலாமையையே ஒரு பாடலாக பாடியவர், பிறகு தடம்புரண்டு தறிகெட்டு ஓடும் கவிதைக் குதிரைகளை அவிழ்த்துவிட்டார்.ஓரம்போ என்ற பாடல் தமிழ் வானொலிகளில் தடை செய்யப்பட்டதன் காரணமே அதன் வார்த்தைகள்தான்.பெண்களை இழிவாக கிண்டல் செய்வதெற்கேதுவான  பாடலாக  அது இருந்தது. இதுவே பரவாயில்லை என்னும் அளவுக்கு அதன்பின்னர் இளையராஜா பல கானங்களை களமிறக்கினார். (இளையராஜாவின் சாதனைகளில் இதற்கு  இடம் இருக்கிறதா  என்று தெரியவில்லை.) பெண்களை பகடி  செய்யும் பல பாடல்கள் ஆரம்பத்திலிருந்தே நம் தமிழ்த் திரையில் கணக்கிலடங்காமல் இருக்கின்றன.  ஆனால் அந்தப் பாடல்களின் வரிகள் கேட்பவரை முகம் சுளிக்க வைக்காத நல்லிசையாக இருந்தது. இழிவான வக்கிரத்தை தொடாமல் அவ்வகைப் பாடல்கள் நேர்த்தியாக ரசிக்கத்தக்க விதத்தில் இனிமையும் தரமான கவிதை வரிகளுமாக நம் நினைவுகளில் இடம் பிடித்திருக்கின்றன.

உதாரணத்திற்கு கீழ் உள்ள பாடல்களை பாருங்கள்:
என்ன கோபம் சொல்லு பாமா? (குழந்தையும் தெய்வமும்)
நடையா  இது நடையா?(அன்னை இல்லம்)
பொம்பள ஒருத்தி இருந்தாளாம்  (அதே கண்கள்)
பறவைகள் பலவிதம் (இருவர் உள்ளம்)
சிங்காரச் சோலையே உல்லாச வேளையே (பாக்யலக்ஷ்மி)

இப்போது இளையராஜாவிடமிருந்து வந்த   இதே வகைப்  பாடல்கள்.
வாடி எ கப்பங்கிழங்கே (அலைகள் ஓய்வதில்லை)
மைனா மைனா மாம புடிச்ச மைனா (பகல் நிலவு)
கட்டவண்டி கட்டவண்டி (சகலகலாவல்லவன்)
தளுக்கி தளுக்கி (கிழக்கு வாசல்)
ஓரம்போ ஓரம்போ (பொண்ணு ஊருக்கு புதுசு)

ஒரே தராசில் வைத்துப் பார்க்கவேண்டிய அவசியமே இல்லாதபடி பதினைந்து வருட இடைவெளியில் தமிழிசையின் தரம் தடாலடியாக கீழ்  நோக்கிப் பாய்வதைப்  பார்க்கலாம். வெகு கொச்சையான வார்த்தைகளும் விடலைகளின் இச்சையை சீண்டிப்பார்க்கும் இசையுமாக இவரின் பாடல்கள் உருவம் மாறத்தொடங்கின. "தண்ணி கருத்துருச்சு"என்று துவங்கிய இளையராஜாவின் "இசைப் புரட்சி" அவ்வப்போது பலவித மாற்றங்களோடும்  வித்தியாசமான ஒலிகளோடும்  படுக்கையறை ஓசைகளோடும்  "நிலா காயுது" என்று ஆபாசத்தின் உச்சத்தை தொட்டது. எந்த இசை அமைப்பாளருக்கும் தோன்றாத ஒரு சிந்தனை  இவருக்கு மட்டும் 1982 இல் எப்படி உதித்தது என்பது இதுவரை விடை காண இயலாத கேள்வி.

     தமிழ்த்திரை பாரதிராஜா, மகேந்திரன், ராபர்ட் ராஜசேகரன், பாரதி வாசு, சக்தி, ருத்ரையா போன்ற  பலரின் கைகளில் மெருகேற்றப்பட்டு,ஒரு புதிய சினிமா இங்கே  உருவாகிக்கொண்டிருந்த வேளையில் ஏ வி எம் தயாரிப்பில் வந்த இரண்டு படங்கள் தமிழ் சினிமாவின் பாதையை மீண்டும் சாக்கடைகள் இருக்கும் திசைக்கு இட்டுச்சென்றன. இரண்டுமே இரண்டு  மிகப் பெரிய ஆளுமைகள் நடித்த படங்கள். ஒன்று 80 இல் வந்த முரட்டுக்காளை. இந்தப் படத்தை வணிக நோக்கத்துக்காக  ஒன்று கூடிய  ஒரு வறட்டுத் திறமைகளின் சங்கமம் என்று ஒதுக்கிவிடலாம். இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி தமிழ்த்திரையின் போக்கை பதம் பார்த்தது. பாதங்களில் அடிபட்ட தமிழ் சினிமா நொண்டிக்கொண்டிருந்த சமயத்தில்  இதை தொடர்ந்து  வந்த மற்றொரு படம் ஒரு மாற்று சினிமாவுக்கான அத்தனை முயற்சிகளையும் முற்றிலுமாக முடமாக்கிப் போட்டது   அந்த படம் 82 இல் வந்த சகலகலாவல்லவன்.




      உண்மையில் இது 63 இல் வந்த பெரிய இடத்துப் பெண் என்ற படத்தின் தழுவல். ஆனால் இரண்டிற்கும் மலை-மடு, கோபுரம்-குப்பை வித்தியாசங்களை காணலாம். வியப்பான வகையில்  சகலகலாவல்லவன்  பல  பழைய வர்த்தக சாதனைகளை உடைத்து  மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால் இன்றைக்கு   நாம் இதை  நமது நினைவுகளிலிருந்து அகற்றிவிடுமளவுக்கு வெற்றிக்கான எந்த தகுதியும் இல்லாத,எந்தத் தரமும் இல்லாத  பல  ஆபாச குப்பைகளின் ஒட்டு மொத்தக் குறியீடாகவே  இந்தப் படம் தமிழ் சினிமா வரலாற்றில்  பதிவாகியிருக்கிறது. புதிய எல்லைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவின் போக்கையே தலைகீழாக புரட்டிப்போட்ட படம் என்று இதை சினிமா விமர்சகர்கள் இன்று அடிக்கோடிட்டு குற்றவிரல்களை நீட்டுகிறார்கள். இந்தப் படத்தில் நடித்த பெரிய நடிகரே இதை பார்ப்பதை தவிர்க்கவும் என்று இப்போது அறிவுரை சொல்லும் "கண்ணியமான காவியப்" படம் இது. ஆனால் விமர்சகர்கள் படத்தை மட்டுமே கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள்.  இந்த கீழ்த்தரமான படத்திற்கு அதே "தகுதியில்" இசை அமைத்து பாடல்களையும் வெற்றி பெறச் செய்து, படத்தின் பெரிய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் இளையராஜா.  அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூட யாரும் விமர்சிப்பது கிடையாது. தமிழ்த் திரையை மோசம் செய்த படம் இது என்பதில் மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது அதேபோல்  தமிழ்த் திரையிசையை வீழ்ச்சிக்கு இட்டுச் சென்ற பாடல்களும்  இதே படத்தில்தான் உள்ளன.

 படத்தின் பாடல்கள் இவைகள்;
அம்மன் கோவில் கிழக்காலே- பட எழுத்தின் மீது வரும் பாடல். படத்திற்கு  சற்றும் தொடர்பில்லாத ஆனால் கொஞ்சம் சகித்துக்கொள்ளக் கூடிய பாடல்.

இளமை இதோ இதோ- இந்தப் படத்தின் ஒரே சாதனை இந்தப்  பாடலே. இன்று வரை புத்தாண்டு என்பதை இந்தப் பாடலே பல தமிழ் எப் எம், டிவி சேனல்களில் தெரியப்படுத்துகிறது. சொல்லப்போனால் மிக அருமையாக இசைக்கப்பட்ட பாடல்.

கட்டவண்டி- ஆபாசக்  கூத்தாட்டம். இதற்கு மேலே வேறு எதுவும் சொல்லத் தேவையில்லை.

நேத்து ராத்திரி யம்மா- அடுத்த ஆபாசம். எனக்குப் பிடித்த பாடல் என்று யாரும் பெருமையாக  வெளியில் சொல்ல முடியாத குப்பை. ஆனால் அடுத்து வரும் பாடலுக்குமுன் இது சற்று பரவாயில்லை ரகம்.

நிலா காயுது- ஆபாசத்தின் உச்சம்.இதில் எந்த விதமான ராகங்கள்   கையாளப்பட்டிருந்தாலும், என்ன விதமான இசை பரிசோதனைகள் செய்யப்பட்டிருந்தாலும்  அதனால் எந்தச்  சிறப்பும் கிடையாது.  இதைப் போல ஒரு ஆபாசப் பாடல்  தமிழ்த் திரையில் இதுவரை  வரவில்லை. வரவும் முடியாது.  A Perfect Porn Music. இளையராஜாவின் ஆபாச பாடல் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் சாக்கடைப் பாடல். ஜானகி என்ற நல்ல பாடகியை முக்கல் ராணியாக்கி பலரின் அபிமானத்திலிருந்து அவரை அகற்றிய  முதன்மைப்  பாடல். பாடலின் இரண்டாவது சரணத்திற்கு முன் வரும் இடையிசையை இளையராஜா எவ்வாறு உள்வாங்கி எப்படி நோட்ஸ் எழுதி இருப்பார்  எண்ணிப்பார்க்கும் போது அருவறுப்பே நமக்கு மிஞ்சுகிறது. உடலுறவின் ஓசையை இந்தப் பாடல்போல வேறு எந்தப் பாடலும் நமக்கு உணர்த்தி இருக்க முடியாது.வீட்டுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக இச்சையை தீர்த்துக்கொள்ளும் அசிங்கத்தின் அடையாளம் இந்தப் பாடல். இதற்குப் பிறகே நான் இளையராஜாவை விட்டு விலக  ஆரம்பித்தேன். அவர் பாடல்கள் மீதிருந்த நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. இதைப் பற்றி சமீபத்தில் இணையத்தில் ஒரு பதிவர் 30 வருடங்களுக்கு முன் நம் தமிழ் சமூகம் எப்படி இந்தப்  பாடலை ஏற்றுக்கொண்டது என்று வியப்புடன் கேள்வி கேட்டிருந்தார். உண்மைதான். . இளையராஜாவின் இசைதாகத்தால் நம் தமிழிசைக்கு கிடைத்த "கொடையாகிய" இவ்விதமான படுக்கையறைப் பாடல்கள் இன்னொரு பரிமானத்திற்கு தமிழ்த் திரையிசையை இழுத்துச் சென்றன. அனுமதிக்கப்படக்கூடாத அசிங்கங்களை ஆராவாரமாக வரவேற்ற நாம் இதன் பின் புற்றீசல் போல புறப்பட்ட பல ஆபாசப் பாடல்களை குறை சொல்வதில் நியாயம் இல்லை. இயக்குனர்களின் விருப்பத்தின் வெளிப்பாடாக இவை வந்தன என்று ஏற்றுக்கொள்ள இயலாத நியாயம் சொன்னாலும் ஒரு இசைஞருக்கு இருக்கவேண்டிய சமூகம் சார்ந்த பொறுப்பு, அக்கறை இவ்வகையான ஆபாசங்களை தடுத்து நிறுத்தியிருக்கவேண்டும். துரதிஷ்டவசமாக அது நடைபெறவில்லை.

 

        ஒரு முறை என் நண்பர்களின் சிபாரிசின் பேரில் ceronne என்னும் பிரெஞ்ச் இசைஞனின் love in C minor என்ற ஆல்பத்தை கசட்டில் பதிவு செய்தேன். அதுவரை எனக்கு ceronne பற்றி எதுவும் தெரியாது. கசட்டை வாங்கிய போது  கடைக்காரர் "வீட்டில் மற்றவர்கள் இருக்கும்போது இதை கேட்டுவிடாதீர்கள். ஹெட் போன் இருந்தால் அதில் கேளுங்கள்." என்றார். திடுக்கிட்டு ஏன் என்றேன்."இல்லை. இதில் சில ஓசைகள் ஒருமாதிரியாக  இருக்கும் ." என்று விளக்கம் சொன்னார். வீட்டில் யாரும் இல்லாத ஒரு நேரத்தில் பாடலை கேட்டபோதுதான் ஏன் என் நண்பர்கள் இதை சிபாரிசு செய்தார்கள் என்பதை புரிந்துகொண்டேன். பின்னொரு நாளில் என் நண்பன் ஒருவனுக்கு இதை கொடுத்ததும் கேட்டு விட்டு அவன் சொன்னது: "இதை விட நிலா காயுது பாட்டு அருமையா இருக்கும்". அந்த கசட் கடைக்காராருக்கு இருந்த சபை நாகரீகம், வர்த்தக லாபங்களை மீறிய சமூக அக்கறை எப்படி நிலா காயுது பாடலை உருவாக்கியவருக்கு  இல்லாமல் போனது என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி.

     ஆண்-பெண் உறவு குறித்து  பாடல்களே இயற்றப்படக்கூடாதா அல்லது நம்மிடம் அதை குறிக்கும் பாடல்கள் இல்லவே  இல்லையா?இதற்கு இளையராஜாவை மட்டும்  குற்றம் சொல்வது ஏன் என்ற கேள்வி எழ முகந்தாரமிருக்கிறது. உண்மை என்னவெனில் ஆம். ஆண் -பெண் உறவு குறித்து பாடல்கள் வராமலிருக்க வாய்ப்பேயில்லை.அது மறுக்க முடியாத வாழ்கையின் பாடம் . இளையராஜாவுக்கு முன்பே இப்படிப்பட்ட கருத்துகள் கொண்ட பல பாடல்களை நம் பழைய இசைஞர்கள் அமைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு

அத்தான் என்னத்தான்-பாவ மன்னிப்பு- எம் எஸ் வி-டி கே ஆர்.
வாராயோ தோழி வாராயோ- பாசமலர்- எம் எஸ் வி-டி கே ஆர்.
இரவினில் ஆட்டம்-நவராத்திரி- கே  வி மகாதேவன்
மடி மீது தலை வைத்து- அன்னை இல்லம்-கே  வி மகாதேவன்
ஒருநாள் யாரோ- மேஜர் சந்திரகாந்த்- வி குமார்
காதோடுதான் நான் பாடுவேன் -வெள்ளி விழா-வி குமார்

போன்ற பாடல்களில்  வரிகளுக்குப் பின்னே  சட்டென்று  அடையாளம்  காண முடியாத உறவு குறித்த பாவங்கள் (tone),வார்த்தைகள்  கவிதை நயத்துடன் இணைந்து வாழ்கையின் ஒரு தவிர்க்க முடியாத அம்சத்தை நம் காதுகள் கூசாத அளவுக்கு அழகாக வெளிப்படுத்துகின்றன. ஏன் இளையராஜாவே கூட  பகலில் ஒரு இரவு படத்தில் இளமை என்னும் பூங்காற்று என்ற பாடலை மிகவும் அருமையாக இசைத்திருந்தார். ஆனால் இந்த  அதிரடி மாற்றம் அவரிடம் வந்தது அவர் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமையாக மாறிய பின்னர்தான். தன் இசைத் திறமையின் மீது அசாத்திய நம்பிக்கை கொண்டிருந்தவர் ரசிகர்களின்  இசை வேட்கையை கீழ்த்தரமாக எண்ணிவிட்டாரோ என்று நினைக்கத் தோன்றுவது நியாயமே. என்னைப் பொறுத்தவரை பழைய பாடல்களில் ஆபாசம் என்று நான் குறிப்பது பணமா பாசமா படத்தில் வரும் எலந்த  பழம் (இசை கே வி மகாதேவன்) நான் ஏழு வயசில எளனி வித்தவ (நம்நாடு, இசை- எம் எஸ் வி ) என்ற பாடலைகளையே.ஆனால் அவைகள் ஒரு trend-setter வகையை சேர்ந்ததில்லை. அவ்வையான பாடல்களை அவர்கள் தொடர்ந்து அமைக்கவுமில்லை.

         திருடன் என்ற படத்தில் வரும் கோட்டை மதில் மேலே  வெள்ளைப்பூனை பாடலைக் கேளுங்கள் . "பெட்டைப் பூனை அழைத்தது  வெள்ளைப்பூனை அணைத்தது" என்பதற்குப்  பின் "ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்" என்று எம் எஸ் வி நாகரீகமாக நகர்ந்துவிடுகிறார். அதே சமயம்  இதயக் கோவில் படத்தில் வரும் ஊரோரமா ஆத்துப்பக்கம் பாடலைப் பாருங்கள்.தென்னத்தோப்பில் இருக்கும் ஒரு குருவிக்கூட்டில் வந்து சேரும்  இரண்டு குருவிகள் பற்றி இளையராஜா பாடுகிறார்.ஆண் குருவி வெளியே பெண் குருவி உள்ளே என்ற அறிமுகத்திற்குப்பின்  "கூட்டுக்குள்ளே குருவி ரெண்டுமே   ஒண்ணா சேர்ந்தது" என்று அவர் குரல் குனிகிறது . பிறகு ஒரு அபாரமான ஹம்மிங் கொடுக்கிறார்.  "ஜும் ஜும் ஜக ஜும் ஜும்".அதாவது அந்த நிகழ்வை  குறிப்பாக உணர்த்துகிறார் . குருவிகளை இதுபோல வேறு யாரும் நினைத்துப்பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. கேட்கும் போதே காமரசம் ஊறும், தோண்டியெடுத்த தமிழில்லாத  ஓசையைகொண்டு   நம்மை வியக்க வைக்கிறார். இதையெல்லாம் எப்படி அவர்  யோசித்திருப்பார் என்று எண்ணும்போதே தலைசுற்றுகிறது. (இந்தப் பாடல் இந்த ராகம், இதில் மேற்கத்திய செவ்வியல் இசையை நாட்டுப்புற இசையோடு அப்படி கலந்தார் இப்படிப்  பிணைத்தார் என்று எழுதவும்  சிலர் இருக்கிறார்கள்.)

    ஏதோ ஒன்றிரண்டு மோசமான  நலிந்த பாடல்களை  வைத்துக்கொண்டு  ஒரு இசைஞரின் இசைமேதமையை விமர்சிப்பது சரியா? என்று சிலர் கேட்கலாம்.  இது  அப்படி ஒன்றிரண்டுதானே  என்று கண்களை  மூடிக்கொண்டு கடந்து போய்விடக்கூடிய சுலபமான விஷயம் அல்ல.எளிதில் உணர்ச்சிவசப் படக்கூடிய நம் சமூகத்தில் நமது சினிமா   பாடல்கள் வெறுமனே பாடல்களாக மட்டுமே உள்வாங்கப்படுவதில்லை என்பதை நாம்  நன்றாக அறிவோம்.ஒரு அரசியல் களத்தையே தீர்மானிக்கும் வலிமை கொண்டவை நமது பாடல்கள்.பல பாடல்களின் முதல் வரிகளே நமக்கு வீரத்தையும், தத்துவத்தையும்,பொதுவுடைமை கருத்துக்களையும் ,அன்பையும்,காதலையும்,நட்பையும் போதிக்கின்றன. எனவே  அடுத்து  இளையராஜாவின் பாடல்களின் சில முதல் வரிகளைப் பார்ப்போம்.  அவைகளில் இருக்கும் கவித்துவத்தை கொண்டாட வேண்டாமா? வாருங்கள்.

வருது வருது விலகு விலகு  (அடுத்த வரியை கேட்டால்தான்   என்ன   சொல்ல வருகிறார் என்பது  நமக்குப்  புரிபடுகிறது. அப்போதும் சரியாக புரிந்தபாடில்லை)

ஆத்தாடி பாவாட  காத்தாட (கேட்கும் போதே கூசுகிறது)

ஆஹா வந்திருச்சு (Ditto)

பொத்துகிட்டு ஊத்துதடி (இரண்டிற்கும்  எந்தத்   தொடர்பும் இல்லை.)

ஆத்து மேட்டில  ஒரு பாட்டு கேக்குது ( என்ன சொல்வதென்றே தெரியவில்லை )

சின்ன ராசாவே சிட்டெரும்பு என்ன கடிக்குது (சிட்டெரும்பு  ஒரு metaphor?)

ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா (காதலியைத்தான் அப்படிக்கூப்பிடுகிறார். இதுவல்லவோ தமிழ்ப் பண்பாடு ?)

கை வலிக்குது கை வலிக்குது மாமா (மருந்தை குடிக்கும்போது குரங்கை நினைக்கக் கூடாது)

அரிசி  குத்தும் அக்கா மகளே (இதில் குத்தும்போது என்று சொல்லிவிட்டு இசையை நிறுத்தி பிறகு அரிசி குத்தும் போது வலிக்கவில்லையா என்று தொடர்வார். என்ன காவியச் சிந்தனை?)

மானே தேனே கட்டிப்புடி (கொஞ்சம் மானே தேனே போட்டுக்க என்று கமலஹாசன் சொல்வது நினைவுக்கு வருகிறது)

சும்மா நிக்காதீங்க (மிகவும் தாராளமான மனசு கொண்டவர் போலும் )

நா பூவெடுத்து வக்கணும் பின்னால (தெளிவான சிந்தனை)
இது ரோசாப்பூவு  கொஞ்சம்  லேசா நீவு (பூவு-நீவு என்ன ஒரு மகத்துவமான எதுகை மோனை?)

நிலா அது வானத்து மேலே பலானது ஓடத்து மேலே (நிலவை பெண்களுக்கு ஒப்பீடு செய்வதில் இது ஒரு "மாதிரியான" வகை )

பூஜைக் கேத்த பூவிது நேத்துதானே பூத்தது ( இதுவும் ஆன்மீகமே)

    எனக்கு சட்டென்று ஞாபகத்துக்கு வந்த சில பாடல்களின் முதல் வரிகளையே இங்கே குறிப்பிட்டுள்ளேன்.கொஞ்சம் நிதானமாக ஆராய்ந்தால்  "சங்கத்தமிழ் சொற்களோடு" கூடிய இன்னும் பல கணக்கிலடங்காத  பாடல் வரிகள் கிடைக்கும். ஒரு மேதமை கொண்ட இசைஞர் எப்படி நல்ல தமிழை புறக்கணிப்பார் என்று விளங்கவில்லை. பாடல் என்பது இசை மட்டுமல்ல.  நல்ல கவிதையும், உருகும் குரலும், இன்பமயமான இசையும் சேர்ந்த ஒரு கூட்டு முயற்சி. ஒரு பாடல் எல்லா விதத்திலும் சிறப்பாக இருப்பதாலேயே சாகாவரம் பெறுகிறது. நல்ல தமிழையும் கவிதையையும் துரத்தியடித்துவிட்டு சமூக அக்கறையின்றி எழுதும்  சிலரின் கிறுக்கல்களை இசைகொண்டு மூடிவிட்டால் அது எப்படி சிறப்பானதாகிவிடும்? பாடப்படுவதாலேதானே ஒருவரின் இசை இங்கே நினைக்கப்படுகிறது? மக்களின் பயன்பாட்டில் உள்ள கொச்சை பேச்சுக்களை   பாடலாய் மாற்றி  பொதுவில் வைத்தால் இசையின் தரம் குப்புற விழும் என்பதை கணிக்க ஆராய்ச்சியாளர்கள் தேவையில்லை. அதுவே இங்கு  நிகழ்ந்தது. தமிழ்த்திரையிசை கவிழ்ந்தது. பேசுவது எல்லாமே பாட்டாகிப்போனது  நம்முடைய மலிவான இசை ரசனையின்  குறியீடு.

    ஆனால் ஆச்சர்யமான நிகழ்வு என்னவென்றால் இளையராஜா இப்படியான நாலாந்தர பாடல்களை ஒரு பக்கம் அமைத்துக்கொண்டே மறுபுறம் சில நல்லிசையையும் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே வந்தார். ஒரே சமயத்தில் இரு வேறு முரண்பாடான சாலைகளில் அவரால் வெற்றிகரமாக பயணம் செய்யமுடிந்தது. உதாரணத்திற்கு மூன்றாம் பிறை பாடல்கள். கண்ணே கலைமானே, பூங்காற்று புதிதானது என்று மனதை மீட்டும் இசைக்கோர்வைகள்.கொஞ்சம் இந்தப் பக்கம் பார்த்தால்  விரகதாப கீதமான  பொன்மேனி உருகுதே என்ற ஆபாசக்கூத்து. இதுதான் இளையராஜாவின் புரிந்து கொள்ள முடியாத இரட்டை  முகம்.  இதற்கு மத்தியில் பாராட்டத்தக்க வகையில் நல்லிசையை கைவிடாத அவரின் முயற்சிகள் தொடர்ந்துகொண்டேதான் இருந்தன. இருந்தாலும் அவரின் ஆரம்பகால இன்னிசையை மறுபடி மீட்டெடுக்க அவரால் முடியவில்லை என்பது கண்கூடு. அவருடைய இன்னிசை ஒரு முடிவுக்கு வந்துவிட்டிருந்தது.

    தரமில்லாத பாடல்களை அள்ளி வழங்கிய இளையராஜாவின் பிற்கால -அதாவது 83க்குப்பிறகு வந்த-பாடல்கள் மக்களிடம் வரவேற்ப்பை பெறவில்லையா,மக்கள்  அவைகளை  கேட்கவில்லையாஅல்லது அவைகள் வெற்றி பெறவில்லையா  என்று வினவினால்  ஆம் அவர் அதற்குப்பிறகே அதிகமாக வெற்றிபெற்றார். அவருடைய சிம்மாசனம் இன்னும் பலமானது. வைரமுத்துவின் பிரிவுக்குப்பின் ஓய்ந்தது கவிஞர்தானே ஒழிய இசைஞர் அல்ல.சொல்லப்போனால் அதன்பின்னரே  இளையராஜா முன்பைவிட அதிகமான படங்களுக்கு இசை அமைத்தார். தமிழ்த்திரையில் அவர் ஒரு நங்கூரம் போல நிலைகொண்டிருந்தார்.அவரை வீழ்த்த வேறு ஒருவராலும்  முடியவில்லை. அவரின் வேகம் அதிகரித்துச்சென்றதே தவிர குறைந்தபாடில்லை. இது மக்கள் அவர் இசையை ஏற்றுக்கொண்டதன் அடையாளம் என்று சிலர் கருத்துகொள்கிறார்கள்.   இந்தக் கூற்று எவ்வளவு தூரம் உண்மை என்பதைப் பார்ப்போம்.

    எம் எஸ் வி தான் இசையமைத்த காலம் வரை  தனது இசையின் வண்ணத்தை மாற்றிக் கொள்ளாமல் நல்கவிதை கொண்ட  இசையை அளித்தபடி இருந்தார்.ஆனால் அவரது  இசை ஒரு சார்பான  (அதாவது பழைய தலைமுறை நடிகர்களுக்கான) இசை என  இளைய தலைமுறையினரால் உள்வாங்கப்பட்டதால் அவர் இந்த இசை ஓட்டத்தில் பின்வாங்கிப்போக நேர்ந்தது. சங்கர்-கணேஷ் இரட்டையர்கள் இந்த காலகட்டத்தில் நிறைய படங்களுக்கு இசை அமைத்து வந்தாலும் தமிழ் படத்தில் பாடல்கள் அவசியம் என்ற சம்பிரதாயத்தை காப்பாற்றுவதற்க்காகவே அவர்கள் இசை பயன்பட்டதே அன்றி இளையராஜாவின் மாற்றாக அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதே காலத்தில்  மற்ற சில இசைஞர்களும் அவ்வப்போது நல்லவிதமாக  இசையமைத்தார்கள். சிவாஜிராவ் என்பவர் காற்றுக்கென்ன வேலி படத்தில் மிக அருமையான பாடல்கள் கொடுத்திருந்தார். அதே போலே புதியவன் (நரசிம்மன்)  ஏழாவது மனிதன்(எல் வைத்தியநாதன்) படத்தின் பாடல்கள் சிறப்பாக இருந்தன.ஆனால்  தொடர்ந்து மக்களிடம் வரவேற்பு இல்லாததால் அவர்களால்  வெற்றிகளைத்  தொடர  முடியவில்லை. இறுதியாக   அவர்கள் பொது சிந்தனையிலிருந்து   காணாமல் போனார்கள்.அவர்களுக்குரிய அங்கீகாரத்தை  நாம் தரத் தவறிவிட்டோம் என்பதே உண்மை. சந்திரபோஸ், ராஜ்குமார்,மனோஜ்கியான்,தேவேந்திரன்,ஹம்சலேகா,தேவா போன்றவர்கள் இடையிடையே சில படங்களுக்கு இசை அமைத்தாலும் அவை இளையராஜாவின் ஆலமர இசையின் கீழே முளைத்த சிறு செடிகள் போல தோற்றமளித்தன. மேலும் இளையராஜாவின் பாதிப்பை விட்டு அவர்களால் வெளியே வர இயலவில்லை.( இதில் மனோஜ் கியான் சற்று வேறுபட்ட இசையை அளித்தார்.) ஒருபக்கம் இவ்வாறு சில புதியவர்கள் தட்டுத்தடுமாறி ஊர்ந்துகொண்டிருந்தவேளையில் இன்னொருபக்கம் இளையராஜாவோ   எல்லாவிதமான பரிவாரங்களோடும் ஒரு juggernaut ride போய்க்கொண்டிருந்தார். அவரின் காலடியில் மற்ற எல்லா இசைகளும் அடிபட்டு நசிங்கிப் போயின.

     இளையராஜாவின் மற்றொரு பலம் அவரது இசை அமைக்கும் வேகம். தான் இசை அமைக்கும் எல்லா பாடல்களுக்கும் எளிதாகவும் விரைவாகவும் இசைக் குறிப்புகள்  எழுதி அவற்றை தன் உதவியாளர்களிடம் கொடுத்துவிட்டு மூன்று அல்லது நான்கு  நிமிடத்தில் ஒரு பாடலை அவரால்  பதிவு செய்யமுடிந்தது. இந்த வேகம் மற்றவர்களுக்கு சாத்தியப்படவில்லை என்று தோன்றுகிறது. ஒரே நாளில் ஒரு படத்தின் பாடல்கள்கள் முழுவதையும் பதிவு செய்யக்கூடிய விரைவு  அவரிடமிருந்தது. ஒருவகையில் இளையராஜாவின் பிரசாத் ஸ்டுடியோ ஒரு பாடல் தொழிற்ச்சாலையாகவே மாறிவிட்டதைப் போன்று சீரான இடைவெளியில் காலணிகள் உருவாவதைப் போல அங்கே   பாடல்கள் உருவாகிக்கொண்டே இருந்தன. தன் பாடல்களைக்கூட  கேட்க அவருக்கு நேரம் இல்லாத வேகத்தில் அவர் இயங்கிக்கொண்டிருந்தார். ஒரு லிட்டருக்கு அதிகபட்ச மைலேஜ் கொடுக்கும் மோட்டார்வண்டியை யார்தான் விரும்பமாட்டார்கள் ?  கிராமத்து படமா கூப்பிடு இளையராஜாவை என்று தயாரிப்பளர்களும் இயக்குனர்களும் அவரை நோக்கியே படையெடுத்தனர். அவரின் இசை தரம் என்பதை விட அவரின் வேகம் இதை சாதித்தது என்பதே பொருத்தமானதாக இருக்கும். 87 இல் இளையராஜா இசை அமைத்த படங்கள் 30தை  தாண்டி இருக்கிறது. 92இல் இந்த எண்ணிக்கை 52 என்றானது. இந்த வேகத்தில் படம் செய்யும் எந்தஒரு இசை அமைப்பாளரும் தரத்தை அளவுகோலாக வைத்து இசையை முன்னெடுத்துச் செல்வார்களா என்பதை படிப்பவர்களின் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன். இப்படி ஒரே ஒரு மனிதனின் காட்சியை(One Man Show) காண வேண்டிய நிர்ப்பந்தத்தில் தமிழ் இசை ரசிகர்கள் தள்ளப்பட்டிருந்தார்கள்.அவர்களுக்கு வேறு போக்கிடமும் இல்லை. 70 களிலாவது எம் எஸ் வி போரடித்தால் தமிழன் ஹிந்தி இசையை நாடும் வாய்ப்பு இருந்தது. 90 களிலோ அந்த கதவும் அடைபட்டுப் போனது. ஒருவர் மட்டுமே பங்கேற்றும் போட்டிகளில் வெற்றி பெறுவது யார் என்பது பெட்டிங் அவசியப்படாமல்  எளிதில் யாராலும் கணிக்கப்படக்கூடியது. விளைவாக தமிழ் ரசிகர்கள் இளையராஜாவையே இசைக்காக சார்ந்திருந்தனர். பிரஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட ஒரு முக்கியமான "no bread ? Then eat cakes" என்ற வாக்கியத்தில் இருந்த அடுத்த வாய்ப்பு கூட இல்லாத ஒரு சராசரி தமிழ் ரசிகன் இளையராஜாவை நம்பியிருந்தது ஒரு நிர்பந்தச் சூழ்நிலையிலேதான் அன்றி வேறொன்றுமில்லை. இது அடிப்பவனிடமே அடைக்கலம் தேடும் ஒரு Stockholm Syndrome வகையைச் சார்ந்தது. இதன் பாதிப்பில் அவரின் பல பாடல்கள் வெற்றி பெற்றன எனபது தெளிவு . வணிக வெற்றியைகொண்டு ஒரு  பாடலின் தரத்தையும் சிறப்பையும் தீர்மானிப்பது ஒரு நேர்மையான அணுகுமுறையாக இருக்கமுடியாது. "வெற்றி பெற்ற மனிதெரெல்லாம் புத்திசாலியில்லை".

      மொத்தமிருக்கும் நூறில் ஏறக்குறைய ஐம்பது படங்களில் இளையராஜாவின்  இசையிருக்கும்  பட்சத்தில் மக்கள் அவர் பாடல்களை மட்டுமே கேட்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமிருப்பதை எந்த ஒரு சாமானியனும் கணித அறிவின்றி புரிந்துகொள்வான். 85 லிருந்து  92 வரை தமிழ்நாட்டில் இளையராஜாவின்  இசை மட்டுமே  ஒலித்தது  என்று பொதுவாக  சொல்லப்படுவதின்  பின்னிருக்கும் காரணிகள் இவை. சீனாவில் சிகப்பு வண்ணம்  மட்டுமே பிரதானமாக காணப்படும் தோற்றம்  போன்றதுதான்  இது.  இதில் பெருமான்மையனானவை இன்று மக்களின் நினைவிலிருந்து அகன்று போய்விட்ட பாடல்களே. மேலும் இளையராஜா மேற்கத்திய செவ்வியல் பாதிப்பில் நோட்ஸ் எழுதியது மட்டுமில்லாது தன் இசையில் எவ்விதமான மாற்றத்தையும் அனுமதித்ததில்லை என்று கேள்விப்படிருக்கிறேன். அவர் இசையை தன்னுடைய  முகமாகவே பார்த்தார்.அதில் எந்த மாற்றங்களுக்கும் அவர் உடன்படவில்லை. இதுவே அவர் பாடல்கள் இந்த காலகட்டத்தில் ஒரே மாதிரியாக ஒலிக்கத் துவங்கியதன் காரணமாக இருக்கலாம். பல்லவி,இடையிசை, சரணம் என்று கர்நாடக ராகத்தில்  வார்த்தெடுத்த முத்துக்கள் போல பல பாடல்களை வித்தியாசமாக கொடுத்த காலம் கரைந்து  போய்விட, ஒரே தாளக்கட்டு,சுலபத்தில் கணித்துவிடக்கூடிய  இடையிசை, வெகு சாதாரணமான வார்த்தைகள் என இளையராஜாவின் வறண்டு போய்விட்ட இசை அவருடைய அடுத்த மற்றும் இறுதி அத்தியாயத்தை ஆரம்பித்தது.  இதுவே அவருடைய பிற்கால இசையின் முகவரியானது. இன்று இளையராஜாவை கொண்டாடும் பலருக்கு அவர் 80 களுக்கு முன்னாள் அமைத்த இசையோவியங்களைப் பற்றி அக்கறையில்லை.ராஜாதி ராஜா, சின்னத்தம்பி, கேளடி கண்மணி, பூவரசன், பொன்னுமணி,வீரா,வண்ணத் தமிழ்ப் பாட்டு, அஞ்சலி,குணா, தளபதி,தேவர் மகன்,காதலுக்கு மரியாதை,நாடோடித் தென்றல், விருமாண்டி, நீதானே என் பொன் வசந்தம் என்று அவருடைய அந்திம காலப் பாடல்களே  பெரும்பாலும் பாராட்டப்படுகின்றன. இளையராஜாவின் சிகப்பு ரோஜாக்கள்,அவள் அப்படித்தான், குரு, நினைவெல்லாம் நித்யா,பயணங்கள் முடிவதில்லை, தென்றலே என்னைத் தொடு, அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், சலங்கை ஒலி  போன்ற படங்களின் பாடல்களோடு அவரின் 90 களை ஒப்பிட்டால் அவரிடம் ஏற்பட்டிருந்த  ஒரு மிகப் பெரிய இசைச் சரிவை நாம் காணலாம். பிரேக் அழுத்தியும் சற்று தூரம் ஓடும் ரயில் போலத்தான்  இது. அவரின் இசை 90 களில் பழைய வேகமில்லாமல் வறண்டு போய் மக்களுக்கு அலுப்பைத்  தந்தது.  எந்த ஒரு சிறப்பான கலைஞனும் கடைசியில் மக்களின் மறுதலிப்புக்கு உட்படும் மாற்ற முடியாத உலக விதி  மற்றொரு முறை நிகழ்ந்தது.

     இளையராஜாவின் இன்னிசை ஏன் சலிப்பு தட்டியது என்பது புரிந்து கொள்ள முடியாத புதிரோ அல்லது அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சோ அல்ல. மாறிக்கொண்டே வந்த இளையராஜாவின் இசை எண்பதுகளின் இறுதியில் ஒரு சுழலில் மாட்டிக்கொண்டுவிட்ட படகு போல  ஒரே வட்டத்தில் சுற்றிச் சுற்றி வரத் துவங்கியது இதற்கு  ஒரு  முக்கியமான காரணம். இந்தச் சுழலில் அவர்  மாட்டிக்கொண்டது எப்படி என்று பார்ப்போம்.



     87 இல் எங்க ஊரு பாட்டுக்காரன் என்ற படம் தமிழ் சினிமாவில் சரிந்து வந்த கிராமத்து படங்களின் முதுகெலும்பை மறுபடி நிமிர்த்தியது. இதில்தான் இளையராஜா ஆஷா போன்ஸ்லே என்ற மிகப் புகழ் பெற்ற ஹிந்திப் பாடகியை  சென்பகமே என்று தமிழ் பாட வைத்திருந்தார்.ஆஷாவின் தேன் மதுரக் குரலில் அப்பாடல்  மிகச்  சிறப்பாக வார்க்கப்பட்டு கேட்பவர்களை இனம் தெரியாத இன்பத்துக்கு இட்டுச் சென்றது. நீண்ட நாட்கள் கழித்து நான் மிகவும் ரசித்துக் கேட்ட இளையராஜாவின் பாடல்  இது .சொல்லப் போனால் வளையோசை(சத்யா) பாடலை லதாவுக்குப் பதில் ஆஷா பாடியிருந்தால் அந்தப் பாடல் இதைவிட அபாரமாக இருந்திருக்கும் என்பது என்  தனிப்பட்ட கருத்து.(லதா மங்கேஸ்கரின் குரலில் இழையோடும் கிழத்தன்மை அவர் பாடிய தமிழ்ப் பாடல்களை கெடுத்துவிட்டதாகவே நான் எண்ணுகிறேன்.) 89 இல் வந்த மற்றொரு கிராமத்து படம் இளையராஜாவின் வெற்றிகளிலேயே மிக முக்கியமானது. கரகாட்டக்காரன் என்ற  அந்தப் படம் கொடுத்த வெற்றி உண்மையில் இளையராஜாவை ஒரே புள்ளியில் ஆணியடித்து நிறுத்தி வேறுதிசையில் செல்லவிடாமல் முடக்கிவிட்டது.


   
    இளையராஜாவின் இசையை உன்னிப்பாக கவனிப்பவர்கள் கரகாட்டக்காரன் அவரின் வீழ்ச்சிக்கு வித்திட்டதை உணர்வார்கள்.ஆனால் அவர் ரசிகர்களோ அதை ஏற்க மாட்டார்கள். அவருடைய இசை பரிமாணங்கள் இந்தப் படத்தோடு ஏறக்குறைய முடிவு பெற்றன. படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் பாடல்கள் பெரிதும் உதவின என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. மாங்குயிலே பூங்குயிலே, ஊருவிட்டு ஊருவந்து,குடகு மலை காற்று, முந்தி முந்தி, பாட்டாலே புத்தி சொன்னார் போன்ற பாடல்கள் தமிழகம் எங்கும் தொடர்ச்சியாக ஒலித்தன. இந்தப் பாடல்கள் அடைந்த அசுர வெற்றி அவர் தலைக்கேறியத்தை அவரின் நேர்காணல்கள் மூலம் நாம் அறியலாம். இளையராஜாவின் இசையை மட்டுமே இங்கே நான் விமர்சிப்பதால் அவர்  கூறிய பல "பணிவான "கருத்துக்களை குறிப்பிடுவது சரியல்ல என்று உணர்கிறேன். இருந்தும் 90களின் துவக்கத்தில் அவர் ஒரு நேர்காணலில் "நான்  அமைப்பதுதான் இசை. அதை நீங்கள் கேட்டுத்தானாக வேண்டும். வேறு வழியில்லை உங்களுக்கு" என்ற ரீதியில் கூறி இருக்கும் கருத்தை  நினைவு கொள்ளவேண்டும்.  இசை தன்னிடமிருந்துதான் உற்பத்தி ஆவதைப்போல இளையராஜா  கருதுவது ஒன்றும் நமக்குப்  புதிதல்ல. 80 இல் வந்த நிழல்கள் படத்தின்  மடை திறந்து பாடலில் "புதிய ராகம் படைப்பதாலே நானும் இறைவனே" என்று நல்கவிதையாக  சுய புராணம் பாடியவர் பின்னர் "ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா," "ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லே", என்று பள்ளிச் சிறுவர்கள் போல தன்னைப் புகழ்ந்துகொண்டார். இப்படி இசைமேதமையுள்ள  ஒருவர் மலிவான சுயபாராட்டுதலுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டது தமிழிசைக்கு எந்தவிதமான நன்மையையும் செய்யவில்லை. அவரின் தற்புகழ்ச்சியை கண்டு மிரண்டுபோன அவரது ரசிகர்களே ஒரு கட்டத்திற்கு மேல் வீண் விவாதங்களுக்குள் செல்ல விரும்பாமல்   "கர்வம் கொள்ள அவருக்கு எல்லா தகுதியும் இருக்கிறது "என்று சொல்லி அதைப் பற்றி பேசுவதை தவிர்த்து விட்டு நகர்ந்து  வேறு வேலைகளைப் பார்க்கப் போய்விட்டார்கள்.

     80களின் இறுதியைத் தொடர்ந்து  இளையராஜாவின் இசை எளிதாக யூகிக்ககூடிய சதுரங்க விளையாட்டு போன்று உப்பு சப்பில்லாமல் சுவைகெட்டுப்  போனது. கே பாலச்சந்தர்,(சிந்து பைரவி,புதுப் புது அர்த்தங்கள்,உன்னால் முடியும் தம்பி)பாலு மகேந்திரா (ரெட்டைவால் குருவி,மறுபடியும்) மணிரத்னம் (மவுன ராகம்,நாயகன்,அக்னிநட்சத்திரம், இதயத்தை திருடாதே, அஞ்சலி, தளபதி) பாசில் ( வருஷம் 16,அரங்கேற்ற வேளை,காதலுக்கு மரியாதை, )கமலஹாசன் (சத்யா,வெற்றிவிழா,மைக்கல் மதன காமராஜன்,குணா,) போன்ற வி ஐ பி களுக்கு அவர்  அதிகமாக சிரத்தை எடுத்துக்கொண்டும் மற்றவர்களுக்கு அந்த அளவுக்கு அலட்டிக்கொள்ளாமலும் இசை அமைத்தார். பொதுவாக ஒரு பாடலுக்கு "அவ்வளவுதான் இது போதும்" என்ற அளவில்  ஒரே ஒரு மெட்டை மட்டுமே அவர் அனுமதித்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. இந்த காலகட்டத்தில் வந்த முக்கால்வாசி பாடல்கள் ஒரே விதமான தாளக்கட்டுடன் வெகு சராசரியான வார்த்தைகளுடன் (மானே தேனே ராசா ரோசா எசப்பாட்டு குயிலு மயிலு இன்ன பிற எளிதில் அகப்படும்  கவிதை வரிகளுடன் ?)   ஏற்கனவே கேட்ட அலுப்பைத்  தந்தன. இளையராஜாவின் இசையோடு  பிறந்த ஒரு தலைமுறை கடந்துபோய் அடுத்து வந்துவிட்ட புதிய  தலைமுறை ரசிகர்களுக்கு ஏற்ப இசையில் வரவேண்டிய மாற்றத்தை அனுமதிக்காமல் ஆயிரம் முறைகள் பயணம் செய்த பாதையிலேயே தொடர்ந்து சென்றுகொண்டிருந்தார் இளையராஜா. அவர் பாடல்களின் பல்லவி மட்டுமே தனித்தன்மை கொண்டதாக இருந்தது. அவரது இடையிசையை மற்றும் சரணங்களை மட்டும் கேட்டால் சட்டென்று இது இந்தப்  பாடல்தான் என்று எளிதில் அனுமானிக்க இயலாத வகையில் எல்லாமே இயந்திரம் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் போல ஒரே மாதிரியாகவே ஒலித்தன.பல்லவிக்கு சிரத்தை எடுத்துக்கொண்டு சரணங்களை கவனிக்காமல் விட்டுவிட்டதால்  அவருடைய பல பாடல்கள் இப்போது பொதுநினைவுகளிலிருந்து தூரமாகிப் போய்விட்டன. அவருடைய die-hard விசிறிகள் மட்டுமே இவ்வகையானப் பாடல்களை வலிந்து நினைவு கொள்கிறார்கள்.

     உதாரணத்திற்கு 90ஆம் ஆண்டு வந்த இளையராஜாவின் படங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.காவலுக்கு கெட்டிக்காரன்,பணக்காரன்,மனசுக்கேத்த மாப்பிள்ளை,என்னுயிர்த் தோழன்,அரங்கேற்ற வேளை,பாட்டுக்கு நான் அடிமை,கவிதை பாடும் அலைகள்,பொண்டாட்டி தேவை,உன்னை சொல்லி குற்றமில்லை,மருது பாண்டி,பகலிலே பவுர்ணமி,பெரியவீட்டு பணக்காரன்,அதிசய பிறவி, மவ்னம் சம்மதம்,ஊரு விட்டு ஊரு வந்து, சிறையில் பூத சின்னமலர்,கேளடி கண்மணி,மை டியர் மார்த்தாண்டன்,தாலாட்டு பாடவா,பாலைவனப் பறவைகள்,மல்லு வேட்டி மைனர்,மைக்கல் மதன காமராஜன்,புதுப் பாட்டு,சிறையில் சில ராகங்கள், ராஜா கைய வச்சா, நீ சிரித்தால் தீபாவளி,நடிகன், உறுதி மொழி, எதிர் காற்று.எத்தனை பேர் இவற்றில் ஒருசில படங்களைத் தவிர மற்றவற்றில் இருக்கும் பாடல்களை சிறப்பானவை என்று கூறமுடியும்? நமது ஞாபகங்களில்  அவைகள் இருக்குமா என்பது கூட  உறுதியாகத் தெரியவில்லை. அவ்வப்போது சிலிர்த்துக்கொண்டு எழுந்து சில வெற்றிகரமான பாடல்களை கொடுத்ததோடு அவர் மனம் நிறைவு கொண்டுவிட்டது என்று நாம் கணித்துக்கொள்ளலாம். ஆனாலும் அவைகள் அவருடைய ஆரம்பகால பாடல்களின் தரத்தை விட பல படிகள் கீழேதான் இருந்தன. 90களில் என் நண்பர் ஒருவர் "என் இனிய பொன் நிலாவே கொடுத்த ராஜாவை தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைக்கவில்லையே" என்று ஆதங்கத்துடன் சொன்னதை இப்போது நினைவு கூர்கிறேன். உண்மையே.

    இன்றைய இன்டர்நெட் யுகத்தில் நம் தமிழ்ப் பாடல்கள் முழுதும் மாறிப்போய் அன்னியமாக ஒலித்தாலும், உலகத்தில் மாறிவரும் இசையை நம் இசைஞர்களும் உடனுக்குடன் அளித்துவருகிறார்கள். நமக்கு (அதாவது பழைய இசைபோல இல்லை என்று வேதனைப்படும் இசை விரும்பிகளுக்கு) இவ்வாறான ஹிப் பாப், ராப், கானா இசை வகைகள் அவ்வளவாக பிடிக்காவிட்டாலும் இன்றைய இளைய தலைமுறையினர் இதையே விரும்பிக்கேட்பது மறுக்க முடியாத  உண்மை. ஆனால் இளையராஜா கோலோச்சிய காலத்தில் இப்படிப்பட்ட உலக இசை நம் தமிழுக்கு வந்துசேரவில்லை. அதை அவர் அனுமதிக்கவுமில்லை. இதன் பின்னணியில் இருப்பது அவரின் சமகாலத்து மேற்கத்திய இசை வெறுப்பு என்பதை நாம் அறியலாம். ஷில்லாங் நகரம் முழுவதும் ஒருவரின் பிறந்த நாளை இசைவிருந்தாக  கொண்டாடும் பாப் டைலன் என்ற அமெரிக்க நாட்டுப்புற (folk) இசைஞனையும், அமெரிக்க கறுப்பின மக்களின் வலியையும், வேதனையையும், போராட்டங்களையும்,வெற்றிகளையும் பாடல்களாக வடித்து ரகே (reggae) என்கிற ஒரு புதிய இசை இனத்தை பிரபலமாக்கிய   பாப் மார்லியையும் இளையராஜா குப்பை என்று அலட்சியமாக ஒதுக்கியது அவருக்கு சமகாலத்து மேற்கத்திய இசையை அறிந்து கொள்ள விரும்பாத ஆணவத்தை காட்டுகிறது.அவற்றை அவர் புரிந்துகொள்ளாமலும் அதன் பாதிப்பை இங்கே அனுமதிக்காமலும் ஒரு சர்வாதிகார இசையாட்சி செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கே பிரபலமாக இருந்த பாப், ராக், ஹெவி மெட்டல், சிந்த்-பாப், ரகே போன்ற பலவகையான இசை வடிவங்கள் தமிழ்க்  கரையோரம் ஒதுங்கவேயில்லை. அவற்றின் தீற்றல்கள் கூட நம்மை அணுகவில்லை. மாறிவிட்ட இசை ரசனையை இளையராஜா இனம்காண தவறிவிட்டார் என்பதே உண்மை. ஆரம்பத்தில் அபாரமான மேற்கத்திய கலப்பில் இனிமையான பல தேன் சுவைகொண்ட பாடல்களை கொடுத்தவர் 80களின் மத்திக்குப்பின் எரிச்சலூட்டும் கிடார்,சமையலறை பாத்திரங்களை உருட்டிவிட்டதுபோன்ற ட்ரம் இசை  போன்ற கிளிஷே  ஒலிகளை வைத்துக்கொண்டு நம்மை பெரிதும் சோதித்தார்.உதாரணம் பம் பம் பம் ஆ"ரம்பம்",ஒரு மைனா மைனா குருவி,சைலென்ஸ், இரண்டும் ஒன்றோடு  மற்றும் அஞ்சலி படப்பாடல்கள். இதுவே அவர் அறிந்த மேற்கத்திய இசையாகிப்போனது ஒரு பரிதாபமான நிகழ்வு. ஒரு மாற்றமாக திடீரென அவ்வப்போது  ராஜ ராஜ சோழன் நான்,மன்றம் வந்த தென்றலுக்கு போன்ற இனிமையான இன்பங்களை  உருவாக்கத் தவறவில்லை. "Every hero becomes a bore in the end.". When this could happen to M.S.V. , Can Ilayarajaa be far behind?

    நம் தமிழ்த்திரையிசையில் காலம்காலமாக நாம்  அனுபவித்த எல்லாவிதமான மனித உணர்சிகளுக்கும் பொருந்தும் பல காலத்தைவென்ற பாடல்கள் இன்னும் அலுப்புத்தட்டாமல் இசைச்சிற்பங்களாக  நம்மிடம் இருக்கின்றன. வீரம், பொதுவுடைமை,தத்துவம்,தமிழ்மொழியின் சிறப்பு, சராசரி மனிதனின் ஆற்றாமை போன்ற பல உணர்சிகளை நம் இசைஞர்கள் அழியா ஓவியங்களாக படைத்திருக்கிறார்கள். அவைகளுக்கிணையான இன்னொரு நவீன பட்டியலை நாம் இனி எந்தகாலத்திலும் தயாரிக்க முடியாது என்பது திண்ணம்.

அச்சம் என்பது மடமையடா,
 தூங்காதே தம்பி தூங்காதே,
மூன்றெழுத்தில்என்மூச்சிருக்கும்,
உன்னையறிந்தால்,
திருடாதே,
சின்னப்பயலே சேதி கேளடா,
சட்டி சுட்டதடா,
ஆறு மனமே ஆறு,
படைத்தானே,
வீதிவரை உறவு,
போனால் போகட்டும் போடா,
மனிதன் என்பவன்,
மயக்கமா கலக்கமா,
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்,
ஒன்று எங்கள் ஜாதியே,
ஒரு தாய் மக்கள்,
தரை மேல் பிறக்கவைத்தான்,
அதோ அந்த பறவை போல,
கொடுத்தெல்லாம் கொடுத்தான்,
நான் ஆணையிட்டால்,
கல்லெல்லாம் மாணிக்க,
சிரிப்பு வருது,
புத்தியுள்ள மனிதெரெல்லாம்,
பசுமை நிறைந்த நினைவுகளே,
தேவனே என்னைப் பாருங்கள்,
இரவு வரும் பகலும் வரும்,
சங்கே முழங்கு,
மதுரையில் பறந்த மீன் கொடியை,
தமிழுக்கும் அமுதென்று பேர்,

   இத்தனை வேறுபட்ட பலவித  மனித உணர்ச்சிகளுக்கேதுவான பாடல்கள் இளையராஜாவின் இசையில் நாம் காண முடிவதில்லை .அவரின்  இசையை  பொதுவாக அம்மா, காதல், காமம், திருவிழா பாடல்கள் என்று வகைப்படுத்திவிடலாம் .இவற்றில் பெருமான்மையானவை காதல் பாடல்களே.   இவற்றைத் தாண்டி அவர் இசை அமைத்த வேறு வகைப் பாடல்கள் வெகு சொற்பமே.தத்துவப் பாடல்கள் என்று எடுத்துக்கொண்டால் தேடிப் பிடித்துத்தான் பட்டியலிடவேண்டும்.ஊரத் தெரிஞ்சுகிட்டேன், எல்லாருமே திருடங்கதான், கூவுங்கள் சேவல்களே,உம்மதமா எம்மதமா, உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி,கனவு காணும் வாழ்க்கையெல்லாம்,(இது அப்படியே உப்கார் என்ற ஹிந்திப் படத்தில் வரும் ஒரு சோகப்பாடலின் அப்பட்டமான பிரதி.  ராஜாவின் ரசிகர்கள் இதற்கு இளையராஜாவும் கல்யாண்ஜி-ஆனந்த்ஜியும் தங்கள் பாடல்களை மாற்றிக்கொண்டார்கள் என்று காரணம் சொல்கிறார்கள். உப்ஹாருக்கு பதிலாக இளையராஜாவின் இளைய நிலா பொழிகிறதே பாடலை கல்யாண்ஜி-ஆனந்த்ஜி தங்கள் கலாகர்  படத்தில் பயன்படுதிக்கொண்டதாக ஒரு பதிவில் படித்தேன். மற்றொருவரோ இது இயக்குனர் பாலு மகேந்திராவின் விருப்பத்தின் பேரில் அப்படியே கையாளப்பட்டது என்று கருதுகிறார்).அப்படியே ஒன்றிரண்டு பாடல்களை  அடையாளம் காட்டினாலும் அவற்றின் கவிதை தரத்தை நாம் பாராட்டிவிட முடியாது. முதலில் நல்கவிதை நலிந்தது. பின்னர் இசையின் ஓசைகள் காதுகள் கூசும் அளவுக்கு மாறின. அதன் பின் சலிப்புதட்டும் தாளம், பரவசப்படுத்தாத இசைகோர்ப்புகள் என இசையின் தரம் கீழிறங்கியது.

      இளையராஜாவை விட்டு எனது கவனம் திசை திரும்பியபின் பல வருடங்கள் கழித்து நான் அவர் இசையில் வந்த முத்து மணிமாலை (சின்ன கவுண்டர்)என்ற அற்புதமான பாடலை கேட்க நேர்ந்தது. சந்தேகமில்லாமல் அது ஒரு மிகச் சிறப்பான பாடல்.பாடலின் வரிகளில் சிறிது அவர் கவனம் செலுத்தியிருந்தால்  அந்தப் பாடல் இதை விட அலாதியான இன்பத்தை கொடுத்திருக்கும் என்று கருதுகிறேன். இதைப்  போலவே இளையராஜா பல அற்புதமான பாடல்களை அற்பத்தனமான கவிதைகளால் சிதைத்துவிட்டார் என்பதே என் ஆதங்கம். எல்லா சொற்களையும் தனது இசையால் போர்த்திவிட்டு பாடலாக்கிவிடலாம் என்று அவர் எண்ணியது இப்போது நாம் அனுபவிக்கும் தரமில்லாத கேடுகெட்ட பாடல்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்தது.அவர் பாடிய இந்தப் பாடலில் தனது ஏக்கங்களை அவர் பதிவு செய்திருப்பதாகவே உணர்கிறேன்.சிலர் இதை அவரின் தற்புகழ்ச்சியாகப் பார்த்தாலும்  அவருடைய சுய விமர்சனமாகவே இப்பாடல் தோன்றுகிறது.

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம் தான்

காளயர்கள் காதல் கன்னியரை
கவர்ந்திட பாடல் கேட்டார்கள்
ஏழைகளும் ஏவல் அடிமைகளாய்
இருப்பதை பாடச் சொன்னார்கள்
கதவோரம் கேட்டிடும்
கட்டில் பாடலின்
மெட்டு போடசொன்னார்கள்
தெருவோரம் சேர்ந்திட
திருவாசகம் தேவாரம் கேட்டார்கள்
நான் படும் பாடுகள் அந்த ஏடுகள்
அதில் எழுதினாலும் முடிந்திடாது
பூஜையில் குத்து விளக்கை ஏற்ற வைத்து
அதுதான் நல்லதென்றார்கள்
படத்தில் முதல் பாடலை பாட வைத்து
அது நல்ல ராசி என்றார்கள்
எத்தனையோ பாடுகளை அதை பாடல்களாய்
நான் விற்றேன் இதுவரையில்
அத்தனையும் நல்லவையா அவை
கெட்டவையா என அரியேன் உண்மையிலே
எனக்குதான் தலைவர்கள் என் ரசிகர்கள்
அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்

 கண்டிப்பாக இளையராஜா விருந்து படைக்கத்  தவறவில்லை.ஆரம்பத்தில் அவர் இசையில் வாத்திய ஓசைகள் பாடல் வரிகளின் கழுத்தை நெறிப்பதாக விமர்சனம் எழுந்தது. இருந்தும் தனக்கெதிரான பலதரப்பட்ட குற்றச்சாட்டுகளை புறம் தள்ளிவிட்டு நல்லிசையை தொடர்கதையாக்கினார். விருந்து படைத்துக்கொண்டு வந்தவர் பாதை மாறியது ஒரு சோகத் திருப்பம். பல  சமயங்களில் அவரின் இசை தாறுமாறாக சமைக்கப்பட்டது போன்று எதோ  அப்போதைய பசிக்கு கிடைத்த ஒப்பேற்றப்பட்ட உணவு போல நம்மை சிறிது நேரத்திற்கு வேறு எதையும் பற்றி சிந்திக்கவிடாமல் கொஞ்ச நேரத்திற்கு திருப்தி அளித்தது. கோரப்பசி உள்ளவன் விருந்து உண்ணாமல் வெறும் சிற்றுண்டியோடு தன் பசியை தீர்த்துக்கொள்ளும் விதமாகவே இதை நாம் பார்க்கலாம். 90களில் தமிழ்ரசிகர்களின் இசைப்பசி தீர்க்கப்படாமல் அவர்கள் ஒரு சங்கீத விருந்துக்காகக் காத்திருந்தார்கள். 15 வருடங்களுக்கும்  மேலாக அவர்களை  வழிநடத்திச் சென்ற இசை தற்போது தனது ஆரம்பகால அற்புதங்களை நினைவுச் சின்னங்களாக ஆக்கிவிட்டு நீர்த்துப்போன இசை அனுபவத்தை அளித்தது.   இருண்டு போயிருந்த  இசைவானில் ஏதும் ஒளி தோன்றுகிறதா என்று முகமில்லாத  ஒரு புதிய இசையை அவர்கள்  ஏக்கத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். நிகழாத அற்புதம் என்று பலரால் வர்ணிக்கப்பட்ட அந்த இசை மாற்றம் இறுதியில்  ஒரு ரோஜா மலர்வதைப் போல மலர்ந்தது. ஒரு நவீன நறுமணம் தமிழ்க்  காற்றை நிரப்பியது.


அடுத்து : இசை விரும்பிகள் XI - புயலிசை புகுந்தது.















215 comments:

  1. காரிகன்,

    தொடர்ந்து சிறப்பான பதிவுகளை வழங்கி வந்தீர்கள்,ஆனால் இப்பதிவினை அருமையான பதிவு என சொல்ல முடியாத வகையில் உங்கள் திற்னாய்வு அமைந்துவிட்டது என்பதாக நினைக்கிறேன்.

    இசையின் மொழியியல் கூறுகளில் கொச்சைத்தன்மை,ஆபாசம் என வரையறை செய்வதைப்போல ,பொதுவாக புகுந்தால் "நாம் பெருமையாக பேசும் தமிழ் இலக்கியம்" ஒன்று கூடத்தேறாது :-))

    //ஒரு பாடல் எல்லா விதத்திலும் சிறப்பாக இருப்பதாலேயே சாகாவரம் பெறுகிறது. நல்ல தமிழையும் கவிதையையும் துரத்தியடித்துவிட்டு சமூக அக்கறையின்றி எழுதும் சிலரின் கிறுக்கல்களை இசைகொண்டு மூடிவிட்டால் அது எப்படி சிறப்பானதாகிவிடும்? பாடப்படுவதாலேதானே ஒருவரின் இசை இங்கே நினைக்கப்படுகிறது?//

    இந்த அளவுகோளின் அடிப்படையில் பார்த்தால் , மேற்கத்திய இசை விமர்சர்கள் அனைவரும் பாப், ரகே, மெட்டல், ரிதம் புளுஸ்,ராப்,ராக் அன்ட் ரோல் ஆகியவற்ரையும் இப்படித்தான் கொச்சை மொழி இசைப்பாடல்கள் என்றார்கள்,அதனையும் ஏற்கத்தான் வேண்டும் :-))

    ஏன் எனில் இப்பாடல்களில் சொற்கள் எல்லாம் "ஸ்லாங்" வகை வசதிக்கு ஏற்ப போட்டுக்கொள்வது தான்.

    வாடி ஏன் கப்பங்கிழங்கே என்பது கொச்சையானால், "sugar baby " எனப்பாடிய பாப் டைலான் எல்லாம் ஆபாசத்தின் உச்சமில்லையா?

    சுகர் பேபி என்றால் வயதான பெரிய மனிதர்/புள்ளி/டான் இன் இளம் வயது வைப்பாட்டி, அவளை லவ் செய்வதாக பாடல்.

    நம்ம தமிழ் இலக்கியம் கலிங்கத்து பரணியில ,போருக்கு போயிட்டு வர வீரன் பொண்டாட்டிய கூப்பிடும் அழகை காணுங்கள்,

    "அளக பாரமிசை யசைய மேகலைகள் அவிழ வாபரண மிவையெலாம்

    இளக மாமுலைக ளிணைய றாமல்வரும் இயன லீர்கடைகள் திறமினோ (பாடல்-53)"

    இது போல நெறைய இருக்கு, எனவே ஆபாசம் கொச்சை என்றெல்லாம் வைத்து இசையையும்,மொழியையும் தரம் பிரிக்க இயலாது.

    ஆண்டாள் பாடியது,

    "இரு மலை போல் எதிர்ந்த மல்லர்,
    இருவர் அங்கம் எரி செய்தாய்! உன்
    திரு மலிந்து திகழும் மார்வு
    தேக்க வந்து என் "அல்குல்" ஏறி
    ஒரு முலை வாய் மடுத்து உண்ணாயே!"

    இதுக்கெல்லாம் அர்த்தம் நான் சொல்லுவேன் ,அப்புறம் ஆபாசமாக பேசுவதாக என்னையும் சொல்லிடுவீர் :-))

    1000 ஆண்டுகளுக்கு முன்னரே அப்படிலாம் பாட முடியும்னா 2000ம் ஆண்டில் இன்னும் கொஞ்சம் , தண்ணிக்கருத்திருச்சு தவளை சத்தம் கேட்டிருச்சுனு இழுத்துக்க வேண்டியது தான் :-))

    # //இசையில் வடிக்க முடியாத சில ஓசைகளை இளையராஜா இசையாக மாற்றி இருப்பதையும் உணரலாம்.சாவுக்கொட்டு, //

    வயலின் என்ற கருவியும் மேலைநாட்டில் இழவில் வாசிக்கும் வாத்தியமே ,அதை வச்சு கர்நாடக இசை வாசிக்கலையா?

    கிதார் கருவி ,மேலைநாட்டில் மாடு மேய்ப்பவர்கள் வாசிப்பது, இப்பவும் சிம்பனியில் கிதார் பயன்ப்படுத்துவதில்லை(நவீன சிம்பனி இசையமைப்பாளர்கள் சிலர் பயன்ப்படுத்துவதுண்டு), அதெல்லாம் வச்சு வாசிக்கலையா?


    சாவு இசை,மங்கள இசைனு திரையிசையில் எல்லாம் பார்த்தால் என்ன செய்வது?

    ReplyDelete
  2. வவ்வால்,
    போன பதிவின் போதே உங்களின் நீண்ட கலக்கல் பின்னூட்டத்தை எதிர்நோக்கியிருந்தேன்.ஹாய் சொல்லிவிட்டு பறந்து போய்விட்டீர்கள்.சரி.

    எதோ திறனாய்வு என்றெல்லாம் சொல்லி எனக்கே அதிர்ச்சி கொடுக்கவேண்டாம்.அந்த அளவுக்கு எனக்கு இசை அறிவும் இல்லை. அனுபவமும் இல்லை.எதோ எனக்கு தெரிந்ததை எழுதிக்கொண்டுவருகிறேன்.அவ்வளவே. கொச்சையான சொற்களை பாடல்களில் அனுமதித்தது ராஜாவுக்கு முன்னே நம் தமிழிசையில் உண்டு. பெண்களை வர்ணித்தாலே அது ஆபாசம் என்று நான் கூறுவதுபோல நீங்கள் கருத்துகொள்கிறீர்கள்.அவ்வாறல்ல. காமம்,ஆபாசம் இரண்டுக்குமுள்ள கோட்டை அவர் நீக்கிவிட்டார் என்று நான் கருதுகிறேன். நல்ல கவிதைகளை ஊக்க்கப்படுத்தாமல் யார் எதை எழுதினாலும் அதையும் பாடலக்கியதையே நான் குறிப்பிட்டுள்ளேன்.வட்டாரத் தமிழ் பாடல்களில் வருவதையோ, மக்கள் மொழியை கையாண்டதையோ குற்றப்படுத்தமுடியாது. பாடல்களுக்கென தரம் என்று எதுவும் இல்லை என்று நினைக்கிறீர்களா? பின்னர் இன்றைய காலத்து பாடல்கள் காதுகொடுத்து கேட்கமுடியாதவாறு இருப்பதாக பொதுவாக எல்லோரும் குறை சொல்ல்வது ஏன்?

    "சாவு இசை,மங்கள இசைனு திரையிசையில் எல்லாம் பார்த்தால் என்ன செய்வது?"
    அப்படி யார் பார்த்தார்கள்? அதனால்தானே நம் இசை இப்படி ஆனது? தாலி கட்டுனதும் தாளிக்கவேனும், என்ன கணக்கு பண்ணேன்டா, என்று பெண்கள் ஓப்பனாக ஸ்டேட்மென்ட் கொடுக்கும் இசை புரட்சி அல்லவா நடந்திருக்கிறது? எல்லாவற்றையும் அனுமதித்தால் எல்லோரும் ஹெட் போனில் மட்டுமே பாடல்கள் கேட்கமுடியும்.


    மேற்கத்திய இசை கலாச்சாரத்தில் உள்ள கூறுகளை நாம் நம்மிடம் தேடுவது பொருந்தாத ஒன்று. அவர்கள் பாடல்களில் வெளிப்படையாக f *** வார்த்தையை பிரயோகிப்பார்கள். அதுவும் எல்லா இசை குழுக்களும் அப்படியல்ல. அவ்வாறான இசை குழுக்களின் சி டி க்களில் Parental Advisory: Explicit Lyrics என்ற லேபில் இருக்கும். பாப் டிலன் சுகர் பேபி என்று பாடியதை குறிப்பிட்டுள்ளீர்கள். இன்றைய ஹிப் பாப்,ராப்,பங்க் ராக் பாடகர்கள் அதையெல்லாம் மென்று முழுங்கி துப்பிவிட்டு பாடல் முழுவதுமே எந்தவிதமான குறியீடுகளுமின்றி அப்பட்டமாக பாடுகிறார்கள். அவ்வாறான இசை இங்கேயும் தற்போது வந்துகொண்டிருக்கிறது.

    தமிழ் இலக்கியங்களில் இல்லாத "ஆபாசமா"என்று கேட்டுள்ளீர்கள்.அது தெரிந்ததே. பள்ளிகூடத்திலே கோவலன் கண்ணகி மாதவி என்று படிப்பது இல்லையா? ஆனால் இலக்கியம் இசையைப் போல பொதுவாக ரசிக்கப்படுவதல்ல. அதை அமைதியாகவே படித்துவிடலாம். எதற்காக தமிழ் இலக்கியங்களுக்குள் பயணம் செய்தீர்கள் என்று புரியவில்லை. தொடரும் ....

    ReplyDelete
  3. ரிம்போச்சே26 August 2013 at 05:02

    காரிகன்,

    உங்களோட இன்னோரு பேர் ஜெயதேவ் தாஸா?

    நன்றி, வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. திரு ரிம்,
      வரவுக்கு நன்றி. என்ன சொல்ல வருகிறீர்கள் என்று சரியாகப் புரியவில்லை. யூசுப் கான் ஒரு அரை இன்ச் கம்மி பண்ணுங்க மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து.

      Delete
  4. அபாரம் காரிகன்.
    பொதுவாக இப்படிப்பட்ட பதிவுகள் எழுதுவதில் உள்ள சிரமங்களை நான் அறிவேன். இதில் சொல்லப்பட்டிருக்கும் விவரங்களுக்காக எத்தனை மெனக்கெட வேண்டும், எவ்வளவு சேகரிக்க வேண்டும், எவ்வளவு சரிபார்க்கவேண்டும் என்பதெல்லாம் தாண்டி கட்டுரையை என்ன தொனியில் எழுதவேண்டும்- என்பதெல்லாம் இருக்கிறது. அத்தனையையும் மிகக் கச்சிதமாகச் செய்து ஒரு அரிய கட்டுரையைக் கொண்டுவந்திருக்கிறீர்கள். அரிய கட்டுரை என்பதை அழுத்தமாகவே சொல்கிறேன். இப்படிப்பட்ட ஒரு ஆக்கபூர்வமான கட்டுரை இளையராஜா குறித்து படித்ததாக எனக்கு நினைவில்லை.
    வெறும் இசை ரசிகனாயிருந்து இப்படிப்பட்ட ஒரு பதிவை இட்டிருக்கிறீர்கள் என்றும் சொல்லமுடியவில்லை. இளையராஜாவின் இசையால் கவரப்பட்டு இளையராஜாவின் ரசிகனாயிருந்து அவரது நல்ல பாடல்களையெல்லாம் தேடித் தேடிப் பிடித்து ரசித்து பிறகு எந்த இடத்திலிருந்து அவர் மீது கோபம் கொள்ள ஆரம்பித்தீர்கள் என்ற விவரமும் தெளிவாகவே, விலாவாரியாகவே காணக்கிடைக்கிறது பதிவில்.

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பல விவரங்கள் இளையராஜாவுக்காகப் பித்துப்பிடித்ததுபோல் இணையத்தில் வாதாடும் பல அன்பர்களுக்குத் தெரியுமா என்பதே சந்தேகம்தான். அதனால் நீங்கள் சொல்லும் கருத்துக்களை அவர்கள் ஏற்பார்களா என்பதும் சந்தேகமே. எதுவொன்றிலும் ப்ளஸ், மைனஸ் இரண்டையும் சொல்லும் , விவாதிக்கும், பகுத்தறியும் பார்வை அவர்களிடம் இருக்குமா என்பதும் சந்தேகமே.
    ஆபாச வார்த்தைகள் கட்டுக்கடங்காமல் வரிசையாக பாடல்களில் பவனிவரும் அத்தியாயத்தைத் தொடங்கிவைத்தவரும் தொடர்ந்து அதையே தொடர்கதையாக்கியவரும் அவர்தான். இதை மிகச்சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள்...'ஒரு இசைஞருக்கு இருக்க வேண்டிய சமூகம் சார்ந்த பொறுப்பு, அக்கறை இவ்வகையான ஆபாசங்களைத் தடுத்து நிறுத்தியிருக்கவேண்டும். துரதிர்ஷ்டவசமாக அது நடைபெறவில்லை'.
    இத்தனைக்கும் அந்தக் காலங்களிலெல்லாம் அவர் வைத்ததுதான் சட்டமாக இருந்தது இசையுலகில். ஆகவே இதனையெல்லாம் இவரே ரசித்து விரும்பி செய்தார் என்றுதான் நினைக்கவேண்டியிருக்கிறது.
    'கூட்டுக்குள்ளே குருவி ரெண்டுமே ஒண்ணு சேர்ந்தது.......என்று அவர் குரல் குனிகிறது. பிறகு ஒரு அபாரமான ஹம்மிங் கொடுக்கிறார். ஜூம் ஜூம் ஜக ஜூம் ஜூம்...........அதாவது 'அந்த' நிகழ்வை குறிப்பாக உணர்த்துகிறார். குருவிகளை இதுபோல வேறு யாரும் நினைத்துப் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே'............அடாடா, எங்கிருந்து பிடித்தீர்கள் இம்மாதிரிப் பொக்கிஷங்களை எல்லாம். ஜூம் ஜூம் ஜக ஜூம் ஜூம் என்று இளையராஜா ஹம்மிங் கொடுத்தாரோ இல்லையோ நீங்கள் நினைவு வைத்திருந்து தேடிக் கொடுத்திருக்கிறீர்கள் பாருங்கள் அபாரம்! ஆனால் அந்த இசைமேதைக்கு அப்போதுபோல் வருடத்திற்கு முப்பது படங்கள் நாற்பது படங்களெல்லாம் தொடர்ந்து கிடைக்காமல் போய்விட்டனவே என்று வருத்தமாக இருக்கிறது. கிடைத்திருந்தால் நண்டு, நட்டுவாக்களி, காக்கா, ஆந்தை, பல்லி போன்ற ஜீவராசிகளுக்கெல்லாம் எத்தனை ஹம்மிங் கிடைத்திருக்கும் என்பதை ஏக்கத்துடன் நினைக்கவேண்டியிருக்கிறது.
    'இளையராஜாவுக்கு சரியான போட்டி இல்லை. எம்எஸ்வி போரடித்தால் தமிழன் ஹிந்தி இசையை நாடும் வாய்ப்பு இருந்தது. 90 களில் அந்தக் கதவும் அடைபட்டுப் போனது.'
    இங்கே எப்படி இளையராஜாவுக்குப் போட்டி யாருமில்லை என்று இருந்ததோ அதே போல ஹிந்தியிலும் மகத்தான இசைமேதைகளின் காலம் முடிந்துபோய் இருந்தது அப்போது. நௌஷாத், சி.ராமச்சந்திரா,ரோஷன்,ஓபிநய்யார்,ஷங்கர் ஜெய்கிஷன்,மதன்மோகன் இவர்களின் காலமெல்லாம் முடிந்துபோய் வெறும் லக்ஷ்மிகாந்த் பியாரிலால் கோலோச்சிக்கொண்டிருந்த காலம் அது. லக்ஷ்மிகாந்த் பியாரிலாலுக்கு இளையராஜாவே ஆயிரம் மடங்கு மேல். அதனால்தான் யாரும் 'இந்திப்பக்கம்' போகவில்லை. எஸ்டிபர்மனின் ஆராதனா வெற்றிக்குப் பின்னர் தமிழ் ரசிகர்கள் இந்திப்பக்கம் போகவே செய்தனர். ஆர்டி பர்மன் வேறு தமிழ் ரசிகர்களையும் சேர்த்துத்தான் கோலோச்சினார்.

    ReplyDelete
  5. '90 களில் பழைய வேகமில்லாமல் வறண்டுபோய் மக்களுக்கு அலுப்பைத் தந்தது.'- இதுவும் மிகவும் சரியான படப்பிடிப்பு. அப்போதெல்லாம் இளையராஜாவுடைய பல பாடல்களைப் பார்த்தால் வெறும் பல்லவிக்கு மட்டும்தான் 'இசை' அமைக்கப்பட்டிருக்கும். மற்ற சரணங்களையெல்லாம் வெறுமனே 'பேசுவார்கள்.' அவருடைய பல பாடல்களை இப்போது கேட்டுப்பார்த்தாலும் இதை உணர முடியும்.

    'கர்வம் கொள்ள அவருக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது- என்று சொல்லி அதைப்பற்றிப் பேசுவதைத் தவிர்த்துவிட்டு நகர்ந்து வேறுவேலைகளைப் பார்க்கப் போய்விட்டார்கள்' என்று அவரது ரசிகர்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள் பாருங்கள், இங்கேதான் நீங்கள் சறுக்கிவிட்டீர்கள். அவர்கள் எங்கும் 'வேறுவேலைப் பார்க்கப்' போகவில்லை. இப்போதும் அதையே தான் சொல்லிக்கொண்டு இங்கேயேதான் இருந்துகொண்டிருக்கிறார்கள்.இந்தத் தளத்திற்கும் வருவார்கள், காத்திருங்கள்.

    '15 வருடங்களுக்கும் மேலாக அவர்களை வழிநடத்திச் சென்ற இசை தற்போது தனது ஆரம்பகால அற்புதங்களை நினைவுச் சின்னங்களாக ஆக்கிவிட்டு நீர்த்துப்போன இசை அனுபவத்தை அளித்தது.'
    மீண்டும் ஒரு சரியான படப்பிடிப்பு. அருமையான துலாக்கோல்.

    'தமிழ்த்திரை இசையில் காலம் காலமாக நாம் அனுபவித்த எல்லாவிதமான மனித உணர்ச்சிகளுக்கும் பொருந்தும் பல காலத்தை வென்ற பாடல்கள் இன்னும் அலுப்புத்தட்டாமல் இசைச் சிற்பங்களாக நம்மிடம் இருக்கின்றன..இத்தனை வேறுபட்ட பலவித மனித உணர்ச்சிகளுக்கேதுவான பாடல்கள் இளையராஜாவின் இசையில் நாம் காணமுடிவதில்லை. அவரின் இசையைப் பொதுவாக அம்மா, காதல்,காமம், திருவிழா பாடல்கள் என்று வகைப்படுத்திவிடலாம்'
    மக்களின் பாடல் ரசனைக்கு ஒரு பகுதியை அல்லது சில பகுதிகளைத்தான் இளையராஜா நிறைவு செய்திருக்கிறார் என்பதுதான் உண்மை. 'அவரே எல்லாமும்' என்று பலபேர் நினைத்துக்கொண்டிருக்கும் பேதமைதான் தவறுகளுக்கான காரணமே. அதைத்தான் வேறொரு பின்னூட்டத்தில் 'தமிழ்த்திரை இசை என்பது ஜென்சியில் ஆரம்பித்து ஸ்வர்ணலதாவோடு முடிந்துவிடுவதில்லை' என்று சொல்லியிருந்தேன். பழைய இசை மேதைகள், டிஆர்மகாலிங்கம், சிதம்பரம் ஜெயராமன், திருச்சி லோகநாதன், சீர்காழி, எல்ஆர்ஈஸ்வரி, ஜமுனாராணி என்றெல்லாம் வெவ்வேறு குரல்களை வைத்து செய்த ஜாலங்கள் எல்லாம் எத்தனை..கவிஞர்களை வைத்துப் படைத்துத்தந்த படைப்புக்கள் எத்தனை... எம்எஸ்வி பாடல்களில் செய்த புதுமைகள் எத்தனை என்பதையெல்லாம் சிந்தித்துப் பார்க்கும் புதிய அனுபவத்தை இந்தப் பதிவுகள் படிக்கும் ஒருசில அன்பர்களுக்காவது ஏற்படுத்த முடியும் என்றால் நீங்கள் எழுதியதற்கான பலன் கிடைக்கும் என்றே நம்புகிறேன்.
    உங்கள் இசைப்பயண அலசல் இனிதே தொடர நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வவ்வால்,
    ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் இசையை அணுகுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை நான் பாடல்களின் இசை, ராகம், மெலடி ஆகிவற்றைத் தாண்டி கவிதைகளையும் ரசிப்பவன் என்பதால் நல்ல கவிதைகள் இல்லாத பாடல்களை சிறப்பானவை என்று என்னால் தீர்மானிக்கமுடிவதில்லை. இது என் பலவீனமாகக்கூட இருக்கலாம்.எனவேதான் இத்தனை கோபம் வருகிறது தரமில்லாத பாடல்களை கேட்க நேரிடும் பொழுது. உங்கள் பார்வைக்கு கொச்சயான வார்த்தைகள் பரவாயில்லை என்று தோன்றுகிறது. ஆனால் எனக்கு அது பெரிய அடியாக விழுகிறது.சொல்லப்போனால் இதைவிட காட்டமாகவே இந்தப் பதிவை ஆரம்பத்தில் எழுதியிருந்தேன்.எல்லாம் சில ராஜா ரசிகர்கள் என் மீது தொடுத்த தாக்குதல்களால்தான். பிறகு சிலவற்றை சரி செய்து காரத்தை குறைத்து வெளியிட்டுள்ளேன்.ரகுமானின் வரவுக்கு இளையராஜா சரியான பாதை அமைத்துக்கொடுத்தார் என்பதை என் பக்கம் உள்ள உண்மைகளை வைத்து எழுதி இருக்கிறேன்.நான் சொல்வதை பலர் ஏறகப்போவதில்லை என்பதும் தெரிந்ததே.உங்கள் கருத்துக்கு நன்றி. அடுத்த பதிவில் உங்களை திருப்தி செய்வேன் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  7. அமுதவன் அவர்களே,
    உங்கள் தளத்தில் ஒரு மாதமாக புதிய பதிவுகள் இல்லாமல் இருப்பது ஏனோ? அடிக்கடி அங்கே வந்து திரும்பிச் செல்வதை ஒரு சம்பிரதாயமாகவே செய்துவருகிறேன். உங்களின் கருத்துக்கு நன்றி. இதைவிட அழுத்தமாகவே முதலில் எழுதியிருந்தேன். அதன் பின் இவ்வளவு சூடு ஆகாது என்றுணர்ந்து சில வெட்டுதல்களுக்குப் பிறகு இந்த வடிவம் வந்தது. நம் இசை ஏன் வீழ்ந்தது என்பதை அழுத்திச் சொல்ல இந்த வேகம் கூட இல்லை என்றால் பதிவின் நோக்கமே திரிந்து போய்விடக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் இதனை இப்படியே வெளியிட்டுள்ளேன். நல்ல கவிதையை விரும்பும் இசை ரசிகர்கள் இதை சரியாக புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    ReplyDelete
  8. Kaargan Brother,

    I've read the entire series of "music maniacs". Your hard work is amazing. I like your way of telling the facts.

    The lyrics is based on the situation which is given by directors and the imagination of the lyricist. Sorry brother I couldn't connect the quality of lyrics with the music director.

    When you portrayed about MSV's downfall you just wrote that in one line and appreciated Their (MSV, AM Raja, KVM) talents in lots of articles. In the case of Raja, your writing is inversely proportional to the old musician.

    I don't know what is your problem with Raja.

    I love music(All kinds). I used to listen to old music. After your article I came to know a lot of beautiful old songs. Thank you for your informative article. I never read a complete article about old music as your.

    Sorry if I said anything wrong.

    ReplyDelete
  9. Mr. Enoke,
    Thanks for your comments on my articles. Good to know that you keep reading all of them.
    I don't have any private score to settle with Ilayaraja. Problem is the way his music is being designed here on the internet.That's where I see the bone of contention.

    எம் எஸ் வியின் காலம் ஒய்ந்துபோனதை ஒரு வரியில் விமர்சித்துவிட்டு ராஜா வுக்கு ஒரு பதிவா என்ற கேள்வி வேறுவிதமான இலக்கை நோக்கி பயணம் செய்கிறது. தமிழ்த்திரையிசை வெகுவாக சீரழிந்து போயிருப்பதற்கு பொதுவாக பலர் குற்றம் சாட்டுவது எ ஆர் ரகுமானையே.அது சிலருக்கு வசதியாக இருக்கிறது.என்னைப் பொறுத்தவரை ரகுமான் ஒரு scapegoat. அவராலும் இன்றைய இசை கெட்டுப்போனது உண்மைதான். ஆனால் அவருக்கு முன்பே நம் இசை அந்தப் பாதையில்தான் சென்றுகொண்டிருந்தது.இளையராஜாவை இசை மேதை என்று சொல்வதோடு நான் உடன்படுகிறேன்.அதேவேளையில் அவர் தன் பங்குக்கு இன்றைய சீரழிவிற்கு பாதை அமைத்துக்கொடுத்தார் என்பதையும் சொல்லவேண்டியிருக்கிறது. அதை வெகு சாதாரணமாக ஒரே வரியில் எழுதிவிட்டு கடந்துபோய்விட முடியாது. ஏனென்றால் இங்கே அப்படிப்பட்ட ஒரு கட்டமைப்பு அவரைப் பற்றி உருவாக்கப்பட்டிருக்கிறது.அதை செங்கல் செங்கலாக அகற்ற முடியாது என்பதும் எனக்கு தெரியும். விமர்சனம் மட்டுமே செய்கிறேன். என் நியாயங்களோடு நீங்கள் உடன்படவேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. அவர் அளித்த வைரங்களைப் பற்றி நிறைய பேசியாயிற்று. மீதம் இருக்கும் கற்களைப் பற்றி எழுதவேண்டியது அவசியமாகிறது.அவ்வளவே.ராஜாவின் அன்பர்கள் இதை கண்டிப்பாக செய்யப்போவதில்லை.அதற்கு அவர்களின் அபிமானம் ஒரு முக்கியமான காரணம். எனக்கு அதுமாதிரியான எல்லைகள் இல்லாததால் என் எழுத்து உங்களுக்கு வேறு வண்ணத்தைக் கொடுக்கிறது என்று உணர்கிறேன்.பல அருமையான பழைய பாடல்களை நோக்கி என் பதிவுகள் உங்களை அழைத்துச் சென்றிருப்பதை அறிவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.

    ReplyDelete
  10. இங்கே இந்தப் பதிவின் கண்ணோட்டத்தில் இளையராஜாவை நேரடியாகப் பாதுகாக்க முடியாதவர்கள் பாடல்களின் வரிகளை வைத்து ஒரு இசையமைப்பாளரை விமர்சிப்பது சரியா என்ற கேள்விகளுடனேயே வருவார்கள். எந்த ஒரு பாடலையும் அடையாளப்படுத்துவதே பாடலின் வரிகள்தான். வெறும் வாத்தியக்கருவிகளையே கொண்ட இசையைக்கூட How to name it என்ற வார்த்தைகளைக் கொண்டுதான் அடையாளப்படுத்த வேண்டியிருக்கிறது. மேற்கத்திய சங்கீதங்களுக்கே அது பொருந்தும் எனும்போது தமிழ்ப்பாட்டிற்கு முழுக்க முழுக்க அடையாளமே வார்த்தைகள்தாம். அதுவும் அது ஒரு பாடல் எனும்போது பாடலின் வரிகளுடன் சேர்ந்துதான் அடையாளப்படுத்தப்படுகிறது. ச ச சஸ ரீ சப ம க என்றெல்லாம் எந்தப் பாடலையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. 'வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா என்ற பாட்டில் .......' என்றுதான் பேசுகிறோம்.

    அந்தப் பாடல் வரிகளுக்கான முக்கியத்துவத்தைக் குறைப்பது என்றுதான் ஆரம்பித்தார் இளையராஜா. கண்ணதாசனும் அந்த சமயம் பார்த்து மறைந்துவிட்டதால் துணிந்தே களத்தில் இறங்கினார். வைரமுத்துவைப் பொருட்படுத்துவது இவருக்கு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. சர்வசாதாரணமாக வைரமுத்துவை ஓரம் கட்டிவைத்தார்( அதற்கான விலையை இவர் கொடுக்கவேண்டியிருந்தது என்பது வேறு விஷயம்). மக்களிடம் அதுவும் அடித்தட்டு மக்களிடம், இன்னமும் சொல்லப்போனால் கிராமத்து அடித்தட்டு மக்களிடம் புழங்கும் வார்த்தைகளைப் போட்டு பாட்டுப்பண்ணினோமென்றால் அது சர்வசாதாரணமாக ஹிட்டடிக்கும் என்ற ஃபார்முலாப்படி பாடல்கள் உருவாக்கினார். அவர் எதிர்பார்த்தபடியே கிராமத்தில் மட்டுமல்லாது அது நகர மக்களையும் வெகு சீக்கிரமாகச் சென்று சேர்ந்தது. பல பாடல்களுக்கான பல்லவி இவர் எழுதியதுதான் என்பதையும் இங்கே சேர்த்தே புரிந்துகொள்ளவேண்டும். எந்த மாதிரியான பல்லவிகள் இவர் எழுதியவை என்பதை சுலபமாகவே ஊகித்துக்கொள்ளலாம்......ஆகவே உங்கள் கண்ணோட்டம் மிகமிகச் சரியானதே.
    நான் சில பின்னூட்டங்களில் குறிப்பிட்டிருப்பதுபோல என்னுடைய மகள் திருமண வேலைகள் இருந்ததால் இணையத்தில் கவனம் செலுத்தமுடியவில்லை.(ஜெயதேவ்தாஸ் பதிவில் பார்த்திருப்பீர்களே) தவிர, விகடன் பிரசுரத்துக்காக சுஜாதா பற்றிய புத்தகம் 'என்றென்றும் சுஜாதா' எழுதிமுடித்து அதன் கடைசிக்கட்ட பணிகளில் ஈடுபட்டிருந்தேன். இதோ இன்றைக்கு புத்தகம் வெளிவந்துவிட்டது.

    அதனால் கடந்த ஒரு மாதமாக இணையத்தில் எதுவும் எழுதவில்லை. வாலி பற்றிய பதிவு ஒன்று எழுதி முடிக்கப்படாமல் இருக்கிறது. அதனை இரு பகுதிகளாக வெளியிடவேண்டும். இரண்டொரு நாளில் முதல் பகுதியை வெளியிடுகிறேன்.

    தங்கள் எதிர்பார்ப்பிற்கும் அன்பிற்கும் நன்றி.

    ReplyDelete
  11. வேட்டைக்காரன்27 August 2013 at 11:34

    காரிகன் ஐயா,

    இந்த இடுகையின் பின்னூட்டத்துக்கு மட்டுறுத்தல் வைத்திருக்கிறீர்கள்.

    நான் ஏதேனும் கருத்து சொன்னால் வெளியிடுவீர்களா? இல்லை 'நான் பிடுங்குவதெல்லாம் தேவையில்லாத ஆணிகள் 'என்ற முன் முடிவுக்கு வந்துவிட்டீர்களா?



    ReplyDelete
  12. திரு காரிகன்,
    ஏறக்குறைய உங்கள் கருத்தோடு ஒத்துபோகும் படி புகாரி என்பவர் எழுதிய கட்டுரை இது. இதை படித்ததும் அவருக்கு உங்கள் பக்கத்தை அறிமுகம் செய்தேன். நீங்களும் அவர் எழுதியதை கண்டிப்பாக படிக்கவேண்டும். இதோ;

    http://anbudanbuhari.blogspot.ca/2013/02/ilayaraja-toronto-16-feb-2013-part-3.html

    நல்ல கட்டுரை எழுதியிருக்கிறீர்கள்.அருமை. பாடல்கள் என்றாலே அதன் வரிகள்தானே?இல்லாவிட்டால் கண்ணதாசனையும் பட்டுகோட்டையாரையும் நாம் ஏன் நினைவு வைத்திருக்கவேண்டும்?

    ReplyDelete
  13. ரிம்போச்சே27 August 2013 at 20:33

    // பாடல்கள் என்றாலே அதன் வரிகள்தானே?இல்லாவிட்டால் கண்ணதாசனையும் பட்டுகோட்டையாரையும் நாம் ஏன் நினைவு வைத்திருக்கவேண்டும்?//

    அப்போ பட்டுக்கோட்டையும், கண்ணதாசனும் இல்லைனா எம் எஸ் வி, கே வீ மகாதேவன் போன்றோரெல்லாம் இசையமைப்பில் எதையும் சாதிக்கவில்லையென்று சொல்கிறீர்களா விஷால்?

    ReplyDelete
  14. இந்தப் பதிவை படித்த பிறகு சில வாசகங்கள் மனதில் ஓடியது .

    " காமாலைக் காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் .
    ஊனக் கண்ணில் பார்த்தால் எதுவும் குற்றம்தான் .
    ஆடத் தெரியாதவளுக்கு தெருவெலாம் கோணல்.
    சூரியனைப் பார்த்து நாய் குரைக்கிறது . "

    இசை வல்லுனர்களும் இசை விற்ப்பனர்களும் இசை மேதாவிகளும் இசை ஆர்வலர்களும் இசை ஆராய்ச்சியாளர்களும் இசை தேடுனர்களும் பாராட்டி ஏற்றுக் கொண்ட, இசை வெள்ளத்தில் பாய்ந்து மாய்ந்து மதி மயங்கி கிடக்கும் ரசிக கலா கண்மணிகளும் ஏற்றுக் கொண்டு கொண்டாடிய இசை ஞானியை நீங்கள் அலட்சியமாக தூக்கி எறிந்து பேசுகிறீர்கள் .

    ஒன்று புரிகிறது . விரசம் விரும்புவீர்கள் போலிருக்கிறது . விரசம் அதிகம் நிறைந்த பாடல்களை சுட்டிக் காட்டி இருக்கிறீர்கள் . உங்கள் அரிப்பு புரிகிறது . ஆதி காலத்தில் இருந்தே கலை வடிவில் விரசம் மறைமுகமாக புகுத்தப்பட்டது என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே . அது சினிமா பாடல்களிலும் இலை மறை காயாக அல்லாமல் ஸ்பஷ்டமாக (அப்பாடா பழைய எழுத்தாளர்களின் 'தமிழை ' புகுத்தியாச்சு ) காட்டப்பட்டிருக்கும் . இளையராஜா மட்டும் எப்படி விலக முடியும் . விரச பாடல்கள் மக்களின் அரிப்புக்கு போடப்படும் தீனி ! பாடலாசிரியர் பிரபலம் அடைய, இயக்குனர் சினிமா உலகில் நீடிக்க, தயாரிப்பாளர் சொத்து மதிப்பு உயர வைக்கப்படும் உண்டியல்!
    காசு ..பணம்.. துட்டு... மணி .. இது ஒன்றே குறிக்கோள் என நினைக்கும் மனிதனின் வர்த்தகத்தில் இசை அமைப்பாளரும் துணை போகத்தான் வேண்டும் .

    எம். எஸ். வி பாடல்களில் விரசம் இல்லாமலா இருந்தது !?

    " இதழே இதழே தேன் வேண்டும்
    இடையே இடையே கனி வேண்டும்"

    இதயக்கனி என்ற படத்தில் வரும் பாட்டு . முக்கல் முனகல் உறவு சப்தங்கள் இந்த பாடலிலும் உண்டு . இது விரசம் இல்லையா!?
    'ஆங் ...மெல்ல மெல்ல தொடுங்கள்' என்று ஒரு பெண்ணின் கொஞ்சும் குரல் வேறு ! சகிக்காது . (உங்கள் பார்வைப்படி )

    பாடலுக்கான காட்சி அமைப்பு என்ன என்பது முக்கியம் . அது ஒரு முதலிரவு காட்சி . அதில் அப்படிப்பட்ட பாடலைதான் முன் வைக்க முடியும் . "குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் " என்ற பாட்டை போடா முடியுமா !? அது போலதான் நிலா காயுது பாட்டும் !

    " அத்தான் ..என்னத்தான் ... அவர் என்னைத்தான் .. "

    என்னைத்தான் ...என்று ஏன் இழுக்க வேண்டும் . ஏதேதோ எண்ணங்கள் ஏற்படுகிறதா இல்லையா ..(ஆனால் அதற்கு நீங்கள் தனி விளக்கம் கொடுப்பீர்கள் . தப்பு தப்பே இல்லை ...நாம் செய்யும்போது !)

    கே.வி எம்.ன் "எலந்தப் பயம் " பாட்டில் " எத்தனையோ பேருகிட்ட எலந்த பயம் பாத்தீயே ..என்கிட்டே உள்ளது போல் இம்மாம் சைஸு பாத்தீயா " என்ற ஒரு வரியை எந்த கணக்கில் எடுத்துக் கொள்வது !? விரசம் உள்ளதா.. இல்லையா ? ஆனால் பாட்டு சூப்பர் டுப்பர் ஹிட் .ஏன்? ஏன்?

    " மடல் வாழை தொடை இருக்க
    மச்சம் ஒன்று அதில் இருக்க"

    'நிலவு ஒரு பெண்ணாகி ' என்ற பாடலில் வரும் வார்த்தைகள் . அசிங்கமாக கற்பனை செய்தால் செய்ததுதான் ...இதில் விரசம் இல்லையா !?

    "மன்மத லீலை ..வென்றார் உண்டோ " என்ற பாகவதரின் பாடல் மிகவும் சர்ச்சைக்குரிய பாடலாக பேசப்பட்டது . ஆனால் ஹிட் !

    '"ஹலோ மை டியர் ராங் நம்பர் " என்ற பாடலில் விரசம் உண்டு . உறவு சப்தம் உண்டு . இசை எம். எஸ். வி !

    "எத்தனை சுகம் கொட்டிக் கிடக்குது " சிவகாமியின் சபதம் பட பாடல் . இதில் காட்சி அமைப்பே படு கண்றாவி என்றால் பாட்டு அதை விட கண்றாவி ! பாடல் முழுக்க உறவு சப்தமே! இசை எம். எஸ் .வி தான்!

    இந்த மாதிரி பழைய பாடல்களில் கூட விரசம் சரசம் எல்லாம் உரசும். தேடி பார்த்து இன்னும் நிறைய சொல்லலாம் . ஆக ..இளையராஜா மீது மட்டும் நீங்கள் குற்றச் சாட்டை வைக்காதீர்கள் . விரச உணர்வு தெரிந்தோ தெரியாமலோ மனிதன் தேடி கொண்டேதான்
    அலைகிறான் . படைப்பாளி அதற்கு தீனி போடுகிறான் . படைப்பவன் இறைவன் என்றால் இசை அமைப்பாளர்கள் எல்லோரும் இறைவன்தான் . இளையராஜா சொல்லி கொண்டால் அதை கர்வம் என்பீர்கள் . ஒன்று சொல்கிறேன்.

    "திறமை உள்ளோருக்கு அழகு
    அவர்களின் ஞானச் செருக்கு "












    ReplyDelete
  15. விஷால் அவர்களே,
    உங்களின் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி. நண்பர் புகாரியின் வலைப்பூ சென்று அவர் எழுதியிருந்ததைப் படித்தேன்.இளையராஜாவின் தலைக்கனம் நமக்கெல்லாம் ஒன்றும் புதிதல்ல.கவிதைகளைவிட தன் இசையே மேல் என்று அவர் ஆரம்பித்த இசைப் புரட்சி இன்று அவரின் நல்ல பாடல்களைக் கூட அவரே புறக்கணிக்கும் அளவுக்கு சென்றுவிட்டது. அவருக்கு ராசா ரோசா பூவு நீவு கவிஞர்களே போதும்.

    ReplyDelete
  16. வாருங்கள் புதிய காற்றே,

    "இசை வல்லுனர்களும் இசை விற்ப்பனர்களும் இசை மேதாவிகளும் இசை ஆர்வலர்களும் இசை ஆராய்ச்சியாளர்களும் இசை தேடுனர்களும்...."

    ஆஹா என்ன என்ன வார்த்தைகள்? ஒரு படத்தில் எஸ் எஸ் சந்திரன் பூ, புஷ்பம், மலர் என்று தனித் தனியாக கணக்கு காட்டுவதுபோல இருக்கிறது. எதற்கு இத்தனை adrenaline rush என்று தெரியவில்லை. நான் பொதுவாக இ.ராஜாவின் மீது வைக்கும் குற்றச்சாட்டை மேம்போக்காக வைத்து நீங்கள் உங்கள் பின்னூட்டத்தை எழுதியிருப்பதாகத் தெரிகிறது. பதிவை முழுவதும் படித்தால் நீங்கள் குறிப்பிட்டுள்ள பழைய பாடல்களைக் குறித்தும் நான் எழுதியிருப்பதை காணலாம். விரசம் இலை மறைவு காய் மறைவாக இருப்பதை ஆபாசம் என்று விளிப்பது சரியான அணுகுமுறை அல்ல. நீங்கள் கொடுத்திருக்கும் எம் எஸ் வி பாடல்கள் ஆபாசம் என்று யாரும் சொல்லமாட்டார்கள். அப்படியே இருந்தாலும் அவைகளை தொடர்ச்சியாக அவர் செய்யவுமில்லை. அவ்வகையான ட்ரெண்டில் அவர் மாட்டிக்கொள்ளவும் இல்லை.எஸ் ஜானகியை கட்டில் ராணியாக்கியது யார் என்பது தமிழ் ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும்.நீங்கள் குட்டையை குழப்பவேண்டாம்.

    இளமை என்னும் பூங்காற்று என்று அற்புதம் பாடிய இ.ராஜா நிலா காயுது என்று ஆபாசம் பாடியதைத்தான் நான் சுட்டிக்காடியுள்ளேன்.இந்த மாற்றம் எப்படி அவருக்கு சாத்தியமானது என்பதே என் கேள்வி. நீங்கள் அவர் செய்தார் இவர் செய்தார் ராஜா மட்டுமா செய்தார்? என்று open justification செய்கிறீர்கள். அது சரி. வேறென்ன செய்யமுடியும்?

    நான் இ.ராஜாவை பல காரணங்களுக்காக குற்றம் சொல்லியிருக்கிறேன். அதையெல்லாம் பற்றி மறுப்பு சொல்ல தமிழில் வார்த்தைகள் கிடைக்கவில்லையோ? விரசத்தை மட்டும் தூக்கிக்கொண்டு வந்துவிட்டீர்கள். நல்லது.

    "திறமை உள்ளோருக்கு அழகு
    அவர்களின் ஞானச் செருக்கு "

    அடடா! இதை சொல்லாமல் விட்டால் எப்படி? இதைத்தானே எதிர்பார்த்தேன்? "அவருக்கு கர்வம் கொள்ள எல்லா தகுதியும் இருக்கிறது" இதுதானே? சென்று வாருங்கள். பூசை முடிந்தது.

    ReplyDelete
  17. "திறமை உள்ளோருக்கு அழகு
    அவர்களின் ஞானச் செருக்கு "

    இளையராஜா :"இப்புடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளம் பண்ணிட்டீங்களேடா. அதுசரி.. இன்னுமா இந்த ஊரு நம்மள நம்பிகிட்டு இருக்கு?"

    ReplyDelete
  18. காரிகன்
    \\சென்று வாருங்கள். பூசை முடிந்தது.\\
    பிரமாதம் காரிகன்.

    ReplyDelete
  19. ரிம்போச்சே28 August 2013 at 23:44

    //அப்போது அங்கே பிரபலமாக இருந்த பாப், ராக், ஹெவி மெட்டல், சிந்த்-பாப், ரகே போன்ற பலவகையான இசை வடிவங்கள் தமிழ்க் கரையோரம் ஒதுங்கவேயில்லை. அவற்றின் தீற்றல்கள் கூட நம்மை அணுகவில்லை. மாறிவிட்ட இசை ரசனையை இளையராஜா இனம்காண தவறிவிட்டார் என்பதே உண்மை. //

    உங்களின் ஏக்கத்தைப் போக்கித் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக 'சிற்பி' எனும் இசையமைப்பாளர் 'உள்ளத்தை அள்ளித் தா' என்ற படத்தில் பாடல்கள் புனைந்திருந்தாரே. அது உங்களுக்குப் பிடித்திருந்ததா?

    ReplyDelete
  20. வேட்டைக்காரன்29 August 2013 at 01:54

    //"தண்ணி கருத்துருச்சு"என்று துவங்கிய இளையராஜாவின் "இசைப் புரட்சி" அவ்வப்போது பலவித மாற்றங்களோடும் வித்தியாசமான ஒலிகளோடும் படுக்கையறை ஓசைகளோடும் "நிலா காயுது" என்று ஆபாசத்தின் உச்சத்தை தொட்டது. எந்த இசை அமைப்பாளருக்கும் தோன்றாத ஒரு சிந்தனை இவருக்கு மட்டும் 1982 இல் எப்படி உதித்தது என்பது இதுவரை விடை காண இயலாத கேள்வி.//

    இயக்குனர் SP முத்துராமன், AVM சகோதரர்கள், பாடகர்கள் மலேசியா வாசுதேவன், S. ஜானகி, பாடலாசிரியர் வாலி, கதை எழுதிய பஞ்சு இவர்கள் யாருக்குமே பிடிக்காத இந்தப் பாட்டை இளையராஜா வற்புறுத்தி படத்தில் சேர்த்து விட்டாரோ?

    ReplyDelete
  21. ரிம்போச்சே29 August 2013 at 01:59

    //இதைச் சொல்லும்போது இதைப் படிக்கும் பலருக்கு இதில் உடன்பாடு உண்டாவதில் சிக்கல்கள் இருப்பதை நானறிவேன். இளையராஜாவை இசையின் அவதாரமாகப் பார்க்கும் பல கண்கள் இந்த வாக்கியத்தை சட்டெனெ கடந்து செல்ல விருப்பம் கொள்ளும் அல்லது காண மறுக்கும்.//

    காரிகன் ஐயா,

    மசாலா திரைப்படங்களின் ரசனை 70-களின் இறுதியிலும், 80-களின் தொடக்கத்திலும் மேலும் சரியத் தொடங்கியது. அதைச் செய்யத் தொடங்கிய கூட்டுக் களவாணிகளில் இசையமைப்பாளரும் ஒருவர். ஆனால் நீங்கள் வசதியாக மற்றவர்களை தவிர்த்துவிட்டு இளையராஜாவை மட்டும் வசைபாடுகிறீர்கள்.

    ReplyDelete
  22. "உங்களின் ஏக்கத்தைப் போக்கித் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக 'சிற்பி' எனும் இசையமைப்பாளர் 'உள்ளத்தை அள்ளித் தா' என்ற படத்தில் பாடல்கள் புனைந்திருந்தாரே. அது உங்களுக்குப் பிடித்திருந்ததா?"- ரிம்போச்சே.

    திரு ரிம்,
    நான் கூட இளையராஜாவை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேனே தவிர அவரை இப்படியெல்லாம் அவர் கால்தூசிக்குக்கூட தகுதியில்லாத அரைவேக்காட்டு ஆட்களோடு ஒப்பீடு செய்து அவரை அவமானம் செய்யவில்லை என்று நினைக்கிறேன். சிற்பி என்று ஒரு ஆள் இருந்தார்.அது தெரியும்.அவ்வளவே. தயவு செய்து இளையராஜாவை கேவலப்படுத்தாதீர்கள்.
    "மசாலா திரைப்படங்களின் ரசனை 70-களின் இறுதியிலும், 80-களின் தொடக்கத்திலும் மேலும் சரியத் தொடங்கியது. அதைச் செய்யத் தொடங்கிய கூட்டுக் களவாணிகளில் இசையமைப்பாளரும் ஒருவர். ஆனால் நீங்கள் வசதியாக மற்றவர்களை தவிர்த்துவிட்டு இளையராஜாவை மட்டும் வசைபாடுகிறீர்கள்."- மீண்டும் ரிம்போச்சே .

    என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? நான் இந்தப் பதிவில் படங்களை விமர்சனம் செய்யவில்லை.அதை செய்யவும் மாட்டேன்.சகலகலாவல்லவன் படத்தை விமர்சித்தது அது எவ்வாறு எல்லாவிதத்திலும் நம் தமிழ் சினிமாவை புதைகுழியில் தள்ளிவிட்டது என்பதை அழுத்தமாக சொல்வதற்காகவே. படத்தைப் போலவே அதன் இசையும் ஒரு குப்பை என்பதை உணர்த்தவே அந்த பாரா எழுதப்பட்டது. மேலும் இளையராஜா 80 களின் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத அம்சமாக மாறியிருந்தார்.அவரைப் போல வேறு யாரும் தனி ஆலாபனை செய்துகொண்டிருக்கவில்லை. எனவேதான் அவரை குறித்து விமர்சனம் செய்யவேண்டியது அவசியமாகிறது.

    ReplyDelete
  23. காரிகன்
    \\இளையராஜா 80 களின் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத அம்சமாக மாறியிருந்தார்.அவரைப் போல வேறு யாரும் தனி ஆலாபனை செய்துகொண்டிருக்கவில்லை. எனவேதான் அவரை குறித்து விமர்சனம் செய்யவேண்டியது அவசியமாகிறது.\\

    அதுமட்டுமில்லை. இளையராஜாவுக்கென்று 'தனி மார்க்கெட்' அமைந்தபிறகு எந்த ஒரு தயாரிப்பாளரும் அல்லது இயக்குநரும் தமக்கு இன்னமாதிரியான பாடல் வேண்டும் என்றுதான் கேட்கமுடியுமே தவிர பக்கத்தில் உட்கார்ந்து இன்னது வேண்டும் அது இப்படி இருக்கவேண்டும் என்றெல்லாம் சொல்லமுடியாது. தேர்வு செய்யும் உரிமையோ, 'இது வேண்டாம்' என்று நிராகரிக்கும் உரிமையோ யாருக்கும் இல்லை. யாராவது ஒருவர் ஒரு ஹிட் கொடுத்துவிட்டால் அவர் என்ன சொல்கிறாரோ அதனை அப்படியே பக்தியுடன் ஏற்று அடிபணிந்து கிடப்பதுதான் திரையுலகத்தின் எழுதப்பட்ட விதி. அந்த விதி அந்த நாட்களில் ராஜாவுக்கு இருந்தது.
    இவர் என்ன போட்டுத்தருகிறாரோ அதுதான் பாட்டு. அதை வைத்துக்கொண்டு அவர்களாக அட்ஜஸ்ட் செய்துகொண்டு படத்தை எடுத்து வெளியிட வேண்டியதுதான். அந்தக் காலங்களில் இது அப்படியே 'ஒர்க் அவுட்' ஆனதால் தமிழ்த்திரையுலகம் 'கைகட்டி வாய்பொத்தி' இளையராஜாவுக்குப் பின்னால் பவ்வியமாக நடைபோட்டுக்கொண்டிருந்தது.
    இவருடைய இம்மாதிரியான செய்கைகள் பிடிக்காததனால்தான் கேபி, மணிரத்தினம், பாரதிராஜா போன்ற மிகப்பெரிய இயக்குநர்களும், கமல் போன்ற நடிகர்களும் இளையராஜாவிடம் பணிபுரிவதிலிருந்து விலகினார்கள் என்பதையும் நாம் இந்த இடத்தில் சேர்த்தே புரிந்துகொள்ள வேண்டும். (இவர்களில் சிலர் இளையராஜாவைக் கழற்றி விட்டதற்கு வேறு காரணங்களும் இருக்கின்றன என்றபோதிலும் இளையராஜாவின் இத்தகைய போக்கிற்கு ஒத்துப்போகவும் முடியாமல், எதிர்திசையில் போகவும் வழியில்லாமல் புழுங்கிக்கொண்டிருந்து வாய்ப்பு வந்ததும் ஒரேயடியாகப் புறக்கணித்தார்கள் என்பதுதான் உண்மை.)
    பாட்டு வேண்டும் என்று கேட்டுவிட்டு அதற்கான பணத்தையும் தந்துவிட்டு இவர்கள் பாட்டுக்கு வெளியூர் சென்று படப்பிடிப்புக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டுக் காத்திருப்பார்கள். ராஜா இசையமைத்து அனுப்பிவைக்கும் ஸ்பூல் அன்றைக்கு இரவோ அடுத்தநாள் காலையிலோ வந்து சேரும். என்னவிதமான பாட்டு, யார் பாடியிருப்பது, என்ன டியூன் என்பதெல்லாம் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும்கூட போட்டுப்பார்த்தால்தான் தெரியும். இப்படித்தான் இருந்தது அந்நாட்களின் பெரும்பாலான இசையமைப்புகள்..... அதனால் ஒரு நண்பர் சொல்லியிருப்பதுபோல் மலேசியா வாசுதேவனுக்கெல்லாம் 'கருத்துச்சொல்லும் உரிமை'யெல்லாம் எந்த நாட்களிலும் இருந்ததில்லை. எஸ்பிஎம், ஏவிஎம், பஞ்சு, பாரதிராஜா, கேபி,போன்றவர்கள் ஆரம்பநாட்களில் (குறிப்பாக தேவராஜ் மோகனெல்லாம்) தாங்கள் நினைத்தபடியெல்லாம் ராஜாவிடம் வேலை வாங்கிக்கொண்டிருந்த நாட்களெல்லாம் உண்டு. பின்னாட்களில்கூட மணிரத்தினம், கேபி போன்ற ஒரு சிலர் மட்டுமே ராஜாவுக்கு டிக்டேட் செய்து தங்களுக்கு வேண்டியதுபோல் இசையமைக்க வைத்தனர். அதிலும்கூட 'சுப்பீரியாரிடி காம்ப்ளெக்ஸ்' விவகாரங்கள் நிறைய உண்டு. எனவே அன்றைய தினங்களின் பாடல்கள் போக்கைத் தீர்மானித்தவரும், டிரெண்டை நிர்ணயித்தவரும் இளையராஜா மட்டும்தான். அதன் பெருமை அவலம் இரண்டுமே அவரை மட்டுமே சேரும்.
    வேண்டுமானால் எங்க ராஜா என்னமாதிரியான இடத்தில் இருந்திருக்கார் பார்த்தீர்களா என்று வேண்டுமானால் அவரது அன்பர்கள் சிலாகித்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
  24. அமுதவன் அவர்களே,
    திரையிசையோடு நெருக்கமான உறவு கொண்டுள்ள நீங்கள் சொல்லும் சில தகவல்கள் என் பதிவின் நோக்கத்தை அதிகமாக உறுதி படுத்துகிறது. எல்லாவற்றிக்கும் நன்றி. இளையராஜா ஆடிய ஆட்டம் என்ன என்பதை நான் சிலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மையே என்று நிரூபணம் ஆகும்போது நான் பொய் சொல்லாத திருப்தி உண்டாகிறது.

    "வேண்டுமானால் எங்க ராஜா என்னமாதிரியான இடத்தில் இருந்திருக்கார் பார்த்தீர்களா என்று அவரது அன்பர்கள் சிலாகித்துக்கொள்ளலாம்."

    இதை அவர்கள் நியாயமான வெளிச்சத்தில் புரிந்துகொள்வார்களா என்பது சந்தேகமே. என்ன நிகழ்ந்தது என்பதை வரிகளில் வடித்தால் அதை சரியாக உணர்ந்துகொள்ளாமல் தங்களின் ரசனையை வைத்தே தங்கள் கருத்துக்களை முன்வைக்கிறார்கள். ராஜாவின் காலம் 96 ரோடு முடிந்துவிட்டது என்பதை அவர்கள் ஏற்க மறுப்பதே இதற்கு சான்று.

    ReplyDelete
  25. ரிம்போச்சே29 August 2013 at 08:58

    //நான் கூட இளையராஜாவை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேனே தவிர அவரை இப்படியெல்லாம் அவர் கால்தூசிக்குக்கூட தகுதியில்லாத அரைவேக்காட்டு ஆட்களோடு ஒப்பீடு செய்து அவரை அவமானம் செய்யவில்லை என்று நினைக்கிறேன். சிற்பி என்று ஒரு ஆள் இருந்தார்.அது தெரியும்.அவ்வளவே. தயவு செய்து இளையராஜாவை கேவலப்படுத்தாதீர்கள்.//

    ராஜாவின் மீது உங்களுக்கு இவ்வளவு அபிமானம் உள்ளதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

    திரும்பவும் விளையாட்டை துவக்கிவிட்டீர்களே காரிகன் ஐயா!

    ** பாப், ராக், ஹெவி மெட்டல், சிந்த்-பாப், ரகே போன்ற பலவகையான இசை வடிவங்கள் தமிழ்க் கரையோரம் ஒதுங்கவேயில்லை.**

    என்று கேட்டது நீங்கள்தானே ஐயா? வேறு எங்ஙனம் ராஜா இவ்வடிவ இசையை தமிழில் கொடுத்திருக்க முடியும்?

    ReplyDelete
  26. ரிம்போச்சே29 August 2013 at 09:21

    // கமல் போன்ற நடிகர்களும் இளையராஜாவிடம் பணிபுரிவதிலிருந்து விலகினார்கள் என்பதையும் நாம் இந்த இடத்தில் சேர்த்தே புரிந்துகொள்ள வேண்டும்.//

    அதே கமல்தான் பின்னர் ஹேராம் படத்தில் L.சுப்ரமணியன் இசையமைத்த பாடல்களைப் படமாக்கிய பின் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திரும்பவும் இளையராஜாவிடம் வந்தார். எடுத்த படத்தின் வாயசைப்பு/நடனம்/தாளம் பிசகாமல் வேறு ட்யூன்களில் பாடல் போட்டுக் கொடுத்தார். விருமாண்டி படத்துக்கும் அருமையான பாடல்களைப் போட்டுக் கொடுத்தார்.

    ஏன் பாலு மகேந்திரா மட்டும் தன்னுடைய படங்களுக்கு தொடர்ச்சியாக ராஜாவையே நாடினார்? இப்போது எடுக்கும் தலைமுறைகள் படத்துக்கும் அவரையே இசையமைக்குமாறு வேண்டுகிறார்?

    பாரதிராசாவுக்கும், கேபிக்கும் இருந்த சுதந்திரம் யாவருக்கும் இருந்த்தே. நீங்கள் ஊற்றிக் கழுவும் ச.க.வ-னை எடுத்த AVM-மே, சம்சாரம் அது மின்சாரம், சங்கர் குரு, தாய் மேல் ஆணை, பாட்டி சொல்லைத் தட்டாதே, மாநகரக் காவல் என்று சந்திரபோஸை வைத்து படமெடுத்தார்களே?

    பாரதிராஜா ஹம்சலேகா, தேவேந்திரனை ஆகியோரை வளர்த்தார், கேபி மரகதமணியை வளர்த்தார், மணி ரஹ்மானை தூக்கி விட்டார், அன்பாலயா பிரபாகரனும், சிவசக்தி பாண்டியனும் தேவாவை வளர்த்தார்கள். இன்னொரு கேபி தானே இசையமைத்தார். இன்னொரு தசாவதானி ட்டீ.ஆர் என்றைக்கும் இளையராஜாவைச் சார்ந்திருந்ததில்லை.

    திரும்பவும் ராஜாவின் பாடல்களைப் பற்றிப் பேசாமல் அவர் இப்படி/அப்படி என்று பொரணிதான் பேசிக்கொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
  27. ரிம்போச்சே, நீங்கள் சொல்ல வருவது என்ன என்பது உங்களுக்காவது புரிகிறதா?

    ReplyDelete
  28. Thank you for your reply...

    ReplyDelete
  29. இளையராஜாவை பற்றிய வித்யாசமான பதிவு. ராஜாவை இந்த அளவுக்கு கிழித்து துவைத்து காயப்போட்ட கட்டுரையை நான் எங்குமே இதுவரை படித்ததில்லை. ராஜா தன் அகங்காரத்தால் தனக்கு தானே இழிவை தேடிக்கொண்டுவிட்டார். நீங்கள் சொன்னபடி ஒரு சர்வாதிகார தன்மையோடுதான் அவர் இருந்தார் ரகுமான் வரும்வரையில். அதன் பிறகே அவரது ஆட்டம் குறைந்தது.

    ReplyDelete
  30. நல்ல பதிவு. ஒரே ஒரு குறை. அந்த cerrone போஸ்டரை கொஞ்சம் பெரிசா வெளியிட்டிருக்கலாம்.ஹீ ஹீ ஹீ...

    ReplyDelete
  31. திரு கார்த்திகேயன்,
    வருகைக்கு நன்றி. நான் இளையராஜாவை கிழித்து துவைத்ததுபோன்ற எண்ணங்கள் உங்களுக்கு வருவது உங்களின் தனிப்பட்ட சிந்தனையின் வெளிப்பாடு. நான் அவ்வாறு எண்ணவில்லை. இன்னும் சொல்ல நிறையவே இருக்கின்றன. அவைகளை கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடலாம் என்றிருக்கிறேன். இவ்வாறான எண்ணம் வருவதற்கு காரணம் வேறு யாரும் இளையராஜா இப்படி பற்றி கடுமையாக விமர்சனம் செய்ததில்லை என்பதால் இருக்கலாம். மீண்டும் நன்றி.

    ReplyDelete
  32. அமுதவன் அவர்கள் இளையராஜா இசை அமைத்த ஒரு சந்தர்ப்பத்தில் அவருடன் இருந்ததாக ஒரு பின்னூட்டத்தில் சொல்லி இருந்தார் . ஏதோ ஒரு காரணத்திற்காக அவரிடம் மூக்கறு பட்டிருக்கலாம் . அதன் காரணமாகவே அவரை பற்றி தனிப்பட்ட அவரின் நடத்தை ,ஆளுமை ,குணங்களை பற்றி கடுமையாக விமர்சிக்கிறார் என நினைக்கிறேன் .

    இசையைப் பற்றி சிலாகிப்பதை விட்டு விட்டு தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது என்பது அநாகரீகம் . அவர் போலவே காரிகனும் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கிறார் . இளையராஜாவின் கர்வம்,திமிர் பற்றி விமர்சிக்க நீங்கள் யார்?

    யாருக்கு கர்வம் இல்லை . கண்ணதாசன், பாலசந்தர், பாரதிராஜா , வைரமுத்து இவர்களில் யாருக்கு கர்வம் இல்லை ?
    எல்லோருமே அவரவர் துறைகளில் கர்வத்தோடு வாழ்ந்தவர்கள்தான்!
    இவர்களோடு வர்த்தக ரீதியில் இளையராஜா ஒத்துப் போகவில்லை என்பதற்காக இசையில் எங்கிருந்து கர்வம் வந்து விடும் ?
    காரிகன் மன பிறழ்வு அடைத்தவர் போல ஏதோதோ உளறுகிறார் . கோடிக்கணக்கான ரசிகர்கள் ரசித்த பாடல்கள் எல்லாம் இவர் பார்வையில் வீழ்ந்த இசையாக தெரிகிறது . இசைக்கு வீழ்ச்சி இல்லை காரிகன் ! கலைஞன் வீழலாம் . இசை காலமெல்லாம் வாழக் கூடியது !

    // " இதயக் கோவில் படத்தில் வரும் ஊரோரமா ஆத்துப்பக்கம் பாடலைப் பாருங்கள்.தென்னத்தோப்பில் இருக்கும் ஒரு குருவிக்கூட்டில் வந்து சேரும் இரண்டு குருவிகள் பற்றி இளையராஜா பாடுகிறார்.ஆண் குருவி வெளியே பெண் குருவி உள்ளே என்ற அறிமுகத்திற்குப்பின் "கூட்டுக்குள்ளே குருவி ரெண்டுமே ஒண்ணா சேர்ந்தது" என்று அவர் குரல் குனிகிறது . பிறகு ஒரு அபாரமான ஹம்மிங் கொடுக்கிறார். "ஜும் ஜும் ஜக ஜும் ஜும்".அதாவது அந்த நிகழ்வை குறிப்பாக உணர்த்துகிறார் . குருவிகளை இதுபோல வேறு யாரும் நினைத்துப்பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. கேட்கும் போதே காமரசம் ஊறும் //
    குருவிகள் சேர்க்கை பற்றி இளையராஜா சொல்லி குருவிகளை அசிங்கப்படுத்தி விட்டாராம் . காரிகன் முழங்குகிறார் . அமுதவனும் பீ..பீ ஊதுகிறார் . இவருக்கு அதை கேட்டு காம ரசம் ஊருகிறதாம் ! நம்ம யாருக்காவது ஊறியிருக்கா ? குருவி லேகியம் சாப்பிடும் வயதில் இருப்பார்களோ என்னமோ ..இப்படி சாக்கடைதனமான எண்ணம் ! அந்த பாடலை இந்த எண்ணத்தில் பார்வையிட்டு அழகான இசையை மறக்கடிக்க முயல்கிறார் .
    விரசம் என்று காரிகன் தந்த பாடல்கள் எல்லாமே படு ஹிட் ஆன பாடல்கள் . இவருக்கு மட்டும் மிளகு ரசம் ...சாரி ...காம ரசம் ஊறும் .
    பழைய எம். ஜி .ஆர் காதல் பாடல்களில் இல்லாத காமமா?

    // இளையராஜா பல அற்புதமான பாடல்களை அற்பத்தனமான கவிதைகளால் சிதைத்துவிட்டார் என்பதே என் ஆதங்கம். எல்லா சொற்களையும் தனது இசையால் போர்த்திவிட்டு பாடலாக்கிவிடலாம் என்று அவர் எண்ணியது இப்போது நாம் அனுபவிக்கும் தரமில்லாத கேடுகெட்ட பாடல்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்தது.//

    ஆமா.. மா! இப்ப இருக்கிற இசை அமைப்பாளர்கள் இளையராஜா பார்த்து கெட்டு போனாங்க . சமீபத்தில் ஒரு இசை அமைப்பாளர் "ங்கொய்யாலே " என்ற வார்த்தை வைத்து பாட்டு போட்டிருக்கிறார் . ஏறக்குறைய கேட்ட வார்த்தைதான் என்றாலும் கெட்ட வார்த்தைதான் ! அவரைத்தான் அடுத்து தூக்கி வைத்து 'புயல் என புறப்பட்டார் புது முகம் ' என்று கொண்டாட போறீங்க! அடுத்த உங்க நடுநிலை பதிவை பார்க்கத்தானே போறோம்.
    // 'தமிழ்த்திரை இசையில் காலம் காலமாக நாம் அனுபவித்த எல்லாவிதமான மனித உணர்ச்சிகளுக்கும் பொருந்தும் பல காலத்தை வென்ற பாடல்கள் இன்னும் அலுப்புத்தட்டாமல் இசைச் சிற்பங்களாக நம்மிடம் இருக்கின்றன..இத்தனை வேறுபட்ட பலவித மனித உணர்ச்சிகளுக்கேதுவான பாடல்கள் இளையராஜாவின் இசையில் நாம் காணமுடிவதில்லை. அவரின் இசையைப் பொதுவாக அம்மா, காதல்,காமம், திருவிழா பாடல்கள் என்று வகைப்படுத்திவிடலாம்'//

    ஐயா காரிகன் எத்தனையோ விதமான உணர்ச்சிகளை தன் இசையில் வடித்திருக்கிறார் அழகுபட! வெறும் நாலு வகைக்குள் அடக்கி விடலாம் என்று உண்மை மறைக்கிறீர்கள் ...உங்களுக்கு மனப் பிறழ்வு என்று நான் சந்தேகப்பட்டது சரிதான் போலும் !
    ஒப்பாரி, தாலாட்டு, நாடோடி பாடல் , தெருக்கூத்து,மேற்க்கத்திய இசை ,பக்தி,சோகம், வீரம் , கர்நாடகம் , கரகாட்டம் ,கேலி, நையாண்டி என்று எந்த சூழல் இருந்தாலும் அதற்கு எல்லாம் அற்புதமாய் பாடல்களை பதிய வைத்தவர் இளையராஜா . ஸ்வரங்களும் ராகங்களும் பொது. ஆனால் அதை கையாள்பவர்கள் ஏற்படுத்தும் பிரமிப்பு மிக முக்கியம் . பாமரனுக்கும் புரியும்படியும் கேட்கும்படியும் இசையை கொடுத்தவர் இளையராஜா. அப்படிப்பட்டவர் பற்றி சரியாக கணித்து எழுத முற்சாய்வு கொள்கையோடு பதிவு எழுதும் உங்களுக்கு அருகதை இல்லை ; இசை பற்றிய சரியான ஞானமும் இல்லை.

    ReplyDelete
  33. கார்த்திகேயன் சார் உங்கள் பின்னூட்டத்திலேயே அகங்காரம் தெரிகிறது . அடுத்தவர் வீழ்ச்சி பற்றி அகங்காரத்தோடுதான் பேசுகிறீகள் . அவருக்கும் கொஞ்சம் இருந்து விட்டு போகட்டுமே! அழிய வேண்டியவராய் இருந்தால் இரண்டு படங்களோடு இருந்த இடம் தெரியாமல் போயிருப்பார் . காரிகன் அப்படி என்ன கிழித்து காயப் போட்டுவிட்டார் . எம். எஸ். வி பற்றியோ ரகுமான் பற்றியோ கிழித்து காயப்போட விசயமா இல்லை !?. ஆனால் உண்மையான இளையராஜா ரசிகன் அந்த இழிவான செயல் செய்ய மாட்டான் . என்ன சர்வாதிகாரம் கண்டீர்கள்? வைரமுத்துவுக்கு தலை வணங்காவிட்டால் சர்வாதிகாரமா !? பாரதிராஜா பாலசந்தர் மணிரத்தினம் படங்களுக்கு வாசிக்காமல் போனால் சர்வாதிகாரமா!? இளையராஜா தவிர்த்து அவர்கள் பயன்படுத்திய இசை அமைப்பாளர்கள் யாரும் அவர் அளவிற்கு சூப்பர் ஹிட் கொடுக்கவில்லை என்பது தெரியுமா?

    ReplyDelete
  34. திருவாளர் சால்ஸ்,
    உங்களைப் பற்றி அநாகரீகமாக பதில் சொல்லியிருந்த திரு கார்த்திகேயனின் பின்னூட்டத்தை நீக்கியாகிவிட்டது. உங்களுக்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறேன். உங்களின் மூர்கத்தனமான ...முட்டாள்தனமான என்றும் வைத்துக்கொள்ளலாம் .. பதில் எரிமலையின் சீற்றம் போல படு உக்கிரமாக கொதிக்கிறது. இளையராஜாவின் விரகதாப இசை பற்றி ஏற்கனவே உங்களுக்கு பதில் கூறியாகிவிட்டது. மீண்டும் ஒரே புள்ளியில் நிலைகொண்டிருக்கும் உங்களின் மதியீனத்திற்கு நான் காரணமல்ல.

    "இசைக்கு வீழ்ச்சி இல்லை காரிகன் ! கலைஞன் வீழலாம் . இசை காலமெல்லாம் வாழக் கூடியது !"

    நீங்கள் எழுதியிருப்பதில் இது ஒன்றே நியாயமான வாக்கியம் என்று தெரிகிறது. இதுவும் நான் இந்தப் பதிவின் துவக்கத்தில் சொல்லியிருக்கும் "இசை நதியைப் போன்றது. இசைஞனோ அதில் பயணம் செய்யும் படகு போன்றவன். படகு இல்லாவிட்டாலும் நதி இருக்கும்" என்ற கருத்துதான். நான் சொன்னதை எனக்கே நினைவூட்டுகிறீர்கள். வேடிக்கைதான்.

    "காரிகன் மன பிறழ்வு அடைத்தவர் போல ஏதோதோ உளறுகிறார் . கோடிக்கணக்கான ரசிகர்கள் ரசித்த பாடல்கள் எல்லாம் இவர் பார்வையில் வீழ்ந்த இசையாக தெரிகிறது . "

    ஆஹா ! சிறப்பான கருத்து. ஆனால் சால்ஸ் அவர்களே, வீழ்ந்த இசை என்பது ஒரு குறியீடு.அதை புரிந்துகொள்ளாமல் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் ரேஞ்சுக்கு களத்தில் வீராப்புடன் குதிக்கிறீர்கள். கொஞ்சம் metaphor பற்றி அறிந்துகொண்டு பிறகு டைப் செய்யுங்கள். அடுத்து பலர் ரசித்த பாடல்கள் என்று வழக்கமான பல்லவி. வெற்றி பெற்ற பாடல்கள் என்பது வேறு தரமான சிறப்பான பாடல்கள் என்பது வேறு. நான் இளையராஜாவின் இழிவான பாடல்களை வெற்றிபெறவில்லை என்று எங்குமே சொல்லவில்லை. அவைகள் வணிகரீதியாக மாபெரும் வெற்றி பெற்றதே நம் இசையின் வீழ்ச்சி என்றே குறிப்பிட்டுள்ளேன். ஒய் திஸ் கொலவெறி, வாளமீனுக்கும்,மன்மதராசா,கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா, ருக்குமணி,என் மண்ட உச்சியில, நாக்க முக்க இன்ன பிற பாடல்களும் பெருவாரான ஆர்ப்பாட்ட வெற்றிபெற்றவையே. ஆனால் அவைகளை கிளாசிக் என்று மார்தட்டிப் பாராட்ட முடியுமா உங்களால்? இதேபோலவே இளையராஜாவின் பல பாடல்கள் இதே கண்றாவியான கருமாந்திர வகையைச் சார்ந்தவை. ஆனால் அதை நீங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். காரணம் தெரிந்ததே.

    "ஒப்பாரி, தாலாட்டு, நாடோடி பாடல் , தெருக்கூத்து,மேற்க்கத்திய இசை ,பக்தி,சோகம், வீரம் , கர்நாடகம் , கரகாட்டம் ,கேலி, நையாண்டி என்று எந்த சூழல் இருந்தாலும் அதற்கு எல்லாம் அற்புதமாய் பாடல்களை பதிய வைத்தவர் இளையராஜா ."

    அடுத்த நகைச்சுவை. இவ்விதமான இசையின் வேறுபட்ட பல கூறுகளை இளையராஜா மட்டுமே செய்தார் என்று நீங்கள் முட்டாள்தனமாக நம்புகிறீர்களா? இதை பொதுவாக எல்லா இசைஞர்களும் செய்திருக்கிறார்களே? என் தாய் எனக்கு பாலூட்டி சோறூட்டி சீராட்டி வளர்த்தாள் என்று சொல்வதில் என்ன சிறப்பு?எல்லா அம்மாக்களும் இப்படித்தானே தங்கள் குழந்தைகளை வளர்த்துவருகிறார்கள்? மன்னிக்கவும். இதுவும் ஒரு குறியீடான கருத்து. உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  35. திரு காரிகன்,
    என்னுடைய பின்னூட்டத்தை நீங்கள் அனுமதிக்கவில்லை. நான் அநாகரீகமாக எழுதியிருந்தேன் என்று சொல்லியிருக்கிறீர்கள்.சரி.உங்கள் பாலிசி அது. இப்போது நான் திரு சார்லஸ் என்பவருக்கு எழுதுகிறேன்.

    வாருங்கள் சார்லசு,
    என்னை பிடித்துக்கொண்டு ஏதேதோ கன்னாபின்னாவென்று உளறுகிறீர்கள். ராஜா தன் ஆணவத்தால் அழிந்தார் என்பது ஒன்றும் புதிய சங்கதியில்லை.
    அவர் ஆணவமாக பேசியது இல்லையா?
    புதியவர்களை என்றைக்காவது அங்கீகரித்து ஏதாவது சொல்லியிருக்கிறாரா?
    தான் காப்பி அடித்ததை ஒத்துக்கொண்டிருக்கிறாரா?
    தனக்கு இத்தனை புகழ் சேர்த்த தான் இசையமைத்த படங்களைப் பற்றியே எவ்வளவு இளக்காரமாக பேசியிருக்கார் என்று தெரியுமா?(நீங்கள் குப்பை என்றும் சொல்லும் படத்தை நான் பல முறை பார்த்து இசை அமைக்கிறேன் என்றால் என்னுடைய பொறுமையை புரிந்துகொள்ளுங்கள் போன்ற கருத்துக்கள் ) வைரமுத்துவை வெட்டிவிட்டு அதன்பிறகு தமிழ் கவிதையை கேவலமாக அவர் பேசியது உங்களுக்கு தெரியாதா?
    இவரைப் பிரிந்தும் பாரதிராஜா ரகுமானுடன் சேர்ந்து பணியாற்றிய கருத்தம்மா, கிழக்குச் சீமையிலே பாடல்கள் பெரிய ஹிட் ஆகவில்லையா? மணிரத்னம் ரோஜா பம்பாய் அலைபாயுதே போன்ற வெற்றிகளை தரவில்லையா? பாலச்சந்தரின் டூயெட் படப் பாடல்கள் சிறப்பாக இல்லையா? ரகுமானின் வரவிற்றுக்குபின் ராஜா கொடுத்த ஹிட் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர் காலம் காலாவதி ஆகிவிட்டது என்ற உண்மையை சொன்னால் என் மீது ஏன் பாய்கிறீர்கள்? இன்னும்தான் அவர் இசை அமைத்துக்கொண்டிருக்கிறார், ஆனால் அதை எத்தனைப் பேர் கேட்கிறார்கள்? உங்களைப் போன்ற ராஜா விசிறிகளே அவர் இசையை கேட்பதில்லை. பின்ன என்ன வீராப்பு?

    ReplyDelete
  36. காரிகன்,
    80களில் பொதுவாக யாரும் பாடல்வரிகளைக் கேட்டு பாடல்களை ரசித்ததாக எனக்கு நினைவில்லை. அப்போது இளையராஜாவின் இசையே பிரதானமாக இருந்தது. எனவே நீங்கள் குறிப்பிடும் குற்றச்சாட்டுகள் அவசியமில்லை என்று கருதுகிறேன்.

    அரவிந்த்

    ReplyDelete
  37. Mr. Kaarikan,
    I was totally shocked to read your article on India's one of the greatest music minds. I regard Raja as a miracle born to make us feel music. Well, having said that, I also agree with some of your claims.As you rightly pointed out in the late 80s we didn't have much choice in music but Raja. It was all a one-man show, correct. Probably if we had a choice,Raja's graph would be definitely different. No doubt he made some vulgar sounds and songs as you say. Most of the articles I find on Raja are very sugary and overstatements. What I feel is that you look at him from different angle..and you can't be blamed for that.. Keep going..

    ReplyDelete
  38. charles
    \\அமுதவன் அவர்கள் இளையராஜா இசை அமைத்த ஒரு சந்தர்ப்பத்தில் அவருடன் இருந்ததாக ஒரு பின்னூட்டத்தில் சொல்லி இருந்தார் . ஏதோ ஒரு காரணத்திற்காக அவரிடம் மூக்கறு பட்டிருக்கலாம் . அதன் காரணமாகவே அவரை பற்றி தனிப்பட்ட அவரின் நடத்தை ,ஆளுமை ,குணங்களை பற்றி கடுமையாக விமர்சிக்கிறார் என நினைக்கிறேன் .\\
    நீங்கள் என்னவேண்டுமானாலும் நினைக்கலாம் சார்லஸ் ஆனால் அதெல்லாம் உண்மையாயிருக்கவேண்டும் என்று அவசியமில்லை அல்லவா? இளையராஜாவை விமர்சிப்பது என்றாலேயே அவரிடம் எதற்காகவாவது அவமானப்பட்டிருக்கவேண்டும், மூக்கறுபட்டிருக்கவேண்டும், ஏமாற்றப்பட்டிருக்கவேண்டும் என்றெல்லாம் நினைப்பது நேர்மையான சிந்தனையாகத் தெரியவில்லையே.
    அப்படியானால் அவரை ஆஹா ஓஹோவென்று பாராட்டுகிறீர்கள் என்றால் அவரிடம் அன்றிலிருந்து இன்றுவரை மாதச்சம்பளமும் அலவன்ஸ் போன்ற தொகைகளும், பிச்சைப் பரிசுகளும் வாங்கிக்கொண்டுதான் பாராட்டுகிறீர்களா?
    ஒரு படைப்பாளியை அவரின் படைப்புக்களை வைத்து எடைபோடுவதும், ஒரு பெரிய மனிதரை அவர் குணங்களை வைத்து எடைபோடுவதும் காலம் காலமாக இருந்துவரும் பழக்கம்தானே? இது சமூகத்தாலும் மக்களாலும் உலகத்தாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பழக்கம்தானே? நல்ல குணநலன்களோடு இருக்கும் ஒருவரை எல்லா உயிரினங்களும் கைகூப்பித்தொழும் என்பது நீங்கள் அறியாததா? அதேபோல் வெறும் திறமை மட்டும் அபரிமிதமாக இருந்தபோதிலும் நன்னடத்தையும் நல்லகுணங்களும் பணிவும் இல்லாதவர் சொல்லடி படுவதற்கு ஏதுவானவர் என்பதை நீங்கள் மட்டும் மாற்றிவிடமுடியுமா என்ன?
    கம்பர் என்ன அருமையாக கவிதை எழுதியிருக்கிறார் என்று ஒருவர் சிலாகித்தால் அவருக்குக் கம்பர் குச்சிமிட்டாய் வாங்கிக்கொடுத்திருப்பார் என்று புரிந்துகொள்ளும் மூடர்களா நம் சமூகத்தில் இருக்கிறார்கள்!
    அதேபோல் லதா மங்கேஷ்கருக்குக் குரல் உடைந்துவிட்டது என்று சொல்லும்போது அவரிடம் மூக்கறுபட்டு வந்திருப்பார் என்றா பைத்தியக்காரத்தனமாக நினைத்துக்கொள்வது?
    உங்களுடைய சிந்தனை அளவு இதுதான் என்றால் மேற்கொண்டு விவாதிப்பது சிரமம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  39. இசையை பற்றிப் பேசுவதை விட்டு விட்டு இசைக் கலைஞனை பற்றி பேசுவதில் என்ன கெட்டிக்காரத்தனம் இருக்கிறது என தெரியவில்லை . அமுதவன் சாரும் காரிகனும் அதில்தான் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள் என்பது புரிகிறது .

    கண்ணதாசன் மாதிரி எல்லா கேடு கெட்ட காரியங்களிலும் ஈடுபட்டவர் யாரும் கிடையாது என்பார்கள் . ஆனால் அவர் இயற்றிய கவிதைகளும் திரைப் பாடல்களும்தான் காலம்தோறும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறது . இனியும் வாழ போகிறது


    எல்லா மனிதருக்கும் இன்னொரு அசிங்கமான முகம் உண்டு . காரிகனுக்கும் உண்டு . அமுதவனுக்கும் உண்டு . அதைப் பற்றி நாமே விமர்சிப்போமா? இளையராஜா நல்ல மனிதரா இல்லையா என்ற வாதப் போக்கின் வரிசையில் நாம் சென்றால் இந்த இடுகையின் பாதை தவறானது . ஹிட்லரை நல்லவன் என்றும் காந்தியை மோசமானவர் என்றும் சொல்லக் கூடிய மனிதர்கள் எப்போதும் உண்டு .

    வாதம் அதுவல்ல . இசைப் புரட்சியை உண்டாக்கியவர் இளையராஜா என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை . வெறும் பத்து பாடல்கள் விரசம் காட்டி பத்து பாடல்கள் குப்பை கவிதை என காட்டுவதால் அவர் இசை குறைவானதாக ஆகி விடுமா? ஆயிரம் பாடல்கள் அற்புதம் என்பதை மறைப்பது ஏன் ?

    இந்த நூற்றாண்டின் மிக அற்புதமான இசை அமைப்பாளர்களில் இளையராஜாவும் ஒருவர் என எஸ்.பி . பி அவர்கள் பல மேடைகளில் சொல்லி இருக்கிறார் . அவர் ஒரு இசை மேதாவி . அவரை விடவா நீங்கள் எல்லாம் இசை மேதமை உள்ளவர்கள் - இளையராஜா இசை பற்றி குறை சொல்ல!?

    ReplyDelete
  40. திரு அரவிந்த்,
    வருகைக்கு நன்றி. துவக்கத்தில் இளையராஜாவின் இசையில் வந்த பாடல்கள் கவிதையை சுற்றியே இருந்தன. பரம்பரையாக வரும் இந்த வரிகளுக்கு கொடுக்கும் பாரம்பரியத்தை அவர் வந்தவுடனே மாற்றி அமைக்கவில்லை. நீங்கள் சொல்வது போல 80 களில் அவர் வார்த்தைகளுக்கு இருந்த முக்கியத்துவத்தை தனது இசையால் சமன் செய்தார். ஏன் இப்படி செய்தார்என்பது பற்றி எனது அடுத்த பதிவில் விளக்கமாக எழுத இருப்பதால் அதை தவிர்க்கிறேன். பாடலை விட்டு கவிதையை விலக்கி வைக்கும் கலாசாரத்தை ஆரம்பித்தார் இளையராஜா.ஆனால் அதை அவரால் வெற்றிகரமாக தொடர முடியவில்லை. நான் இதையும் விட மேலும் சில காரணங்களைப் பட்டியலிட்டிருக்கிறேன். அவைகளும் அவசியம் இல்லை என்று நினைக்கிறீர்களா?

    ReplyDelete
  41. வாருங்கள் தீபக் குமார்,
    தங்கள் கருத்துக்கு நன்றி. இளையராஜா இந்தியாவின் சிறந்த இசை அமைப்பாளர்களில் ஒருவர் என்ற உங்கள் கருத்து மிகச் சரியானது. சிலர் இவர் மட்டுமே சிறந்தவர் என்று சொல்வதில்தான் சிக்கல் எழுகிறது. ஆரம்பத்தில் அதிர்ச்சி கொடுத்த என் பதிவு போகப்போக உங்களை சில உண்மைகளோடு இணைத்துவிட்டது என்றுணர்கிறேன்.

    "Probably if we had a choice,Raja's graph would be definitely different. No doubt he made some vulgar sounds and songs as you say. Most of the articles I find on Raja are very sugary and overstatements."

    அபாரம். போட்டியில்லாமல் பந்தயத்தில் ஓடிக்கொண்டிருந்தவர் இளையராஜா. இப்போது இருப்பது போன்ற நிறைய இசைஞர்கள் அப்போது இருந்திருக்கும் பட்சத்தில் அவர் காலம் இன்னும் ஐந்து வருடங்களுக்கு முன்பாகவே முடிவுக்குவந்திருக்கும். இத்தனை ஆட்டமும் போட்டிருக்க மாட்டார். I have a doubt if he had overstayed in the music industry with undeserving limelight being constantly focused on him in his days of dusk.

    ReplyDelete
  42. இளையராஜாவை வசை பாட துணிந்த காரிகனை நாகரீகமாக ஒரு போடு போட்ட திரு.வவ்வால் அவர்களை வாழ்த்தி ஆரம்பிக்கிறேன்.

    இளையராஜா கிட்டத்தட்ட 4000 பாடல்களுக்கு மேல் இசையமைத்த இசைக்கலைஞர்.அவரது இசையை இசை என்ற அளவில் எல்லோரும் வியக்கும் வண்ணம் தான் பேசியிருக்கிறார்கள்.அதில் கர்னாடக இசை வித்துவான்களும் அடக்கம்.
    கம்பராமாயணத்தை இழிவு படுத்தி [ அதை ஆபாசம் என்று ] அந்த நாளில் அறிஞர் அண்ணா பேசிய பொது ,அதை மறுத்து பொதுவுடமைவாதி ஜீவா பின்வருமாறு கூறினார்.
    அதாவது ,ஒரு அழகிய பிரமாண்டமான மாளிகை , பல்வகை கலை அம்சங்களுடன் கட்டப்பட்டிருகிறது.அதில் தன்னிகரில்லாத கலை வேலைப்பாடுகள் நிரம்பியிருக்கிறது.அதனை பார்க்கத் தவறிய அண்ணாத்துரை அந்த மாளிகையின் கக்கூசின் நின்று கொண்டு ,அதை பார்த்து மணக்குது ,மணக்குது என்று சொல்வது போல் இருக்கிறது என்றார்.

    அது போலவே காரிகன் ராஜ இசையமைத்த சில பாடல்களை வைத்துக் கொண்டு டான்ஸ் ஆடுகிறார்.இவர் சொல்லும் ஆபாசம் இலக்கியத்தில் இல்லையா ? வழிபடும் கோவிலில் இல்லையா ..?

    சம்பந்த நாயனார் அம்மனை ஆபாசமாக வர்ணி க்கவில்லையா.? அதை பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.
    ஈர்க்கிடை புகா முலை . என்று எத்தனையோ.. ஆபாச வர்ணனைகள்.இதெல்லாம் படித்தவர்கள் என்று சொல்பர்கள் தூக்கி திரியவில்லையா..?
    வேதங்களில் இல்லாத ஆபாசமா ..? உயிரினங்கள் எப்படி தோன்றின எனபதற்கு புராணம் ஒன்று எப்படி சொல்கிரதி தெரியுமா..?
    சிவனும் உமாவும் உடல் உறவில் ஈடு படும்போது விந்து வெளியேறும் நேரத்தில் ஆணுறுப்பை சிவன் வெளியே எடுத்ததால் அது சிந்திய இடமெல்லாம் புள் பூண்டு முளைத்ததாம். இதை பெரியார் புத்தகமாகப் போட்டிருக்கின்றார்.
    இவர் தந்துள்ள பாடல்கள் அனைத்தும் ராஜாவின் இசையால் வெற்றி கொள்ளப்பட்ட பாடல்கள்.அதில் உள்ள வரிகளை கேட்டு , அதை அசட்டை செய்து விட்டு இசையை மட்டும் ரசிகர்கள் ரசித்து மகிழ்ந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

    ஒரு இசைக்கலைஞன் தமிழ் திரைவானை ஆக்கிரமித்தது என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.அது ராஜா ஒருவரின் தனித் திறமையாலேயே கிடைத்தது.அதை எந்தக் இசைக்கலைஞனும் முறியடிக்கவில்லை.எம் ஜி ஆறும் சிவாஜியும் எம்.எஸ்.வீயை படுத்திய பாட்டால் எத்தனை நல்ல மெட்டுக்களை ரசிகர்கள் இழந்தார்கள்.எத்தனை மெட்டு போட்டாலும் சரியில்லை என்று சொன்னால் தான் நன்றாக இசையமைப்பாய் என்று எம்.ஜி.ஆர் சொல்ல , இல்லை அங்கே நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்றும் "அதை பாராட்டியிருந்தால் இன்னும் நன்றாக பாடல் தந்திருப்பேன் " என்று எம்.ஜி ஆரிடம் எம்.எஸ்.வீ சொன்னதாக செய்தி.

    ReplyDelete
  43. பாடல்வரிகள் எல்லாம் ராஜாவின் இசையில் அர்த்தமற்று போய் , இசை என்பதை ரசிகர்கள் ரசிக்க ஆரம்பித்ததும் ராஜாவின் காலத்திலேயே.அதனால் தான் பாடல் வரிகளை யாரும் எழுதி விட்டு போகட்டும் என்று நிலைமை இருந்தது.வைரமுத்து வந்ததையும் போனதையும் யாரும் சட்டை செய்யவில்லை.அது வைரமுத்துவுக்கும் நன்கு தெரியும்.

    இன்று வரை பேரப்பிள்ளை கண்ட பின்னும் ட்ரெண்டில் ராஜா நிர்ப்பது அவரது இசையாலேயே.
    அதுமட்டுமல்ல திரையுலகில் எத்தனையோ கலைஞர்களை வளச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் ராஜா.அத யாரும் பேசுவதில்லை.

    சரி , தனிப்பட்ட குண நலன்களை வைத்து பேசுவதாக இருந்தால் அதிலும் ராஜா ஒன்று குறைந்தவர் அல்ல.எந்த தீய பழக்கமும் இல்லாதவர்.அப்படி இருக்க ஏன் இந்த கொலைவெறி காரிகன்?

    பச்சை குடிகாரனும் ,பொம்பளைப் பொருக்கியாகவும், கட்சி விட்டு கட்சி தாவிய முதுகெலும்பில்லாதவர் என்று வர்ணிக்கப்படும் கண்ணதாசனை இப்போதும் " அவரைவிட்டால் ஆகுமா" பாணியில் தானே எழுதுகிறார்கள்.அதுமட்டுமா ..நெஞ்சுக்கு நீதியும் , திருக்குறளுக்கு விளக்க உரையும் ,கண்ணகிக்கு சிலையும் வைத்த ஒழுக்க சீலன் கருணாநிதி எப்படி புகழ்ப்படுகிறார்?

    குஸ்புவை பார்ட் டைமாக வைத்திருந்த பிரபுவை " எல்லோரும் செய்வது தான் ,அதுக்காக இப்படி பப்ளிக்கா செய்வது "என்று " கண்டித்த " திலகமா , இல்லை அம்மா செல்வியை முழுநேர பொண்டாடியாக வைத்திருந்த புரட்சி தலைவர் எப்படி போற்றப்படுகிறார்.??

    இசைக்கு வருவோம்.

    இதழே ..இதழே தேன் வேண்டும்
    இடையே இடையே கனி வேண்டும்

    என்று பச்சை ஆபாசமாக எம்.எஸ்.வீ இசையமைக்க பாலுவும் ,பெண் நடிகையும் முனகவில்லையா.?

    சிவகாமியின் செல்வன் படத்தில்

    எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது இந்த பாடலில்
    இசையே ஆபாசம் தானே..

    உன்னைத்தான் தம்பி படத்தில் ...
    மணிவிளக்கே மாந்தளிரே மதுரசமே
    கொலுவிருக்க நான் இருக்க
    கோபுர வாசல் ஏன் மறைத்தாய் ....

    இவை போன்ற பாடல்கள் ராஜாவினது பாடல்கள் போல இனிமையாகவும் இல்லை.
    பாடலில் பச்சை ஆபாசம் தெரியவில்லையா ...
    காரிகன் என்ன எளுதினாலு ஆமாம் போடஒருவர் இருக்கிறார்.அவர் தான் வதந்தி எழுத்தர் அமுதவன்.

    ... நீங்கள் என்னவேண்டுமானாலும் நினைக்கலாம் சார்லஸ் ஆனால் அதெல்லாம் உண்மையாயிருக்கவேண்டும் என்று அவசியமில்லை அல்லவா? - அமுதவன்

    இந்த ஆமாம் சாமி அவர் சொல்வது தான் உண்மை என்ற எண்ணம்.

    காரிகன் இசையின் அடிப்படையே தெரியாதவர் நீங்கள் என்பதை மீண்டும் ,மீண்டும் நிரூபித்தமைக்கு நன்றி.

    ஆபாசம் பற்றி லெக்சர் அடித்துள்ளீர்கள் .கடைசியாக் ஒரு செய்தி.

    பிரபலமான ஒரு கவிஞர் எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுத அழைக்கப்படுகிறார்.அவர் ஆபாசம் என்று வர்ணித்து , அப்படிப்பட்ட பாடல் இடம் பெரும் படத்தில் நான் எழுத மாட்டேன் என்று ஒதுங்கிய கவிஞர் கா.மு செரீப் என்ற பழம் பெரும் கவிஞர்.அவர் ஆபாசம் என்று கருதிய பாடல் என்னவென்று நீங்களும் அமுதவனும் சொல்லுங்கள் பாராக்கலாம்.அப்போ நான் சொல்கிறேன்.
    உங்கள் இருவர் பாணியில் ..
    //எம்.எஸ்.வீ ரசிகர்களுக்கே இது தெரியுமோ தெரியவில்லை // அல்லது எம்.எஸ்.வீ ரசிகர்லே அறியாத செய்தி இது //



    ReplyDelete
  44. " இளையராஜாவை விமர்சிப்பது என்றாலேயே அவரிடம் எதற்காகவாவது அவமானப்பட்டிருக்கவேண்டும், மூக்கறுபட்டிருக்கவேண்டும், ஏமாற்றப்பட்டிருக்கவேண்டும் என்றெல்லாம் நினைப்பது நேர்மையான சிந்தனையாகத் தெரியவில்லையே. அப்படியானால் அவரை ஆஹா ஓஹோவென்று பாராட்டுகிறீர்கள் என்றால் அவரிடம் அன்றிலிருந்து இன்றுவரை மாதச்சம்பளமும் அலவன்ஸ் போன்ற தொகைகளும், பிச்சைப் பரிசுகளும் வாங்கிக்கொண்டுதான் பாராட்டுகிறீர்களா? "

    அமுதவன் நெற்றியிலடித்தாற்போல் சரியாகச் சொல்லியிருக்கிறார். திரு சால்ஸ் அவர்களே, உங்கள் எழுத்தில் தற்போது வரண்ட பிடிவாதம், நாகரீகப் பாசாங்கு, குட்டையை குழப்பும் நரித்தனம் போன்ற எல்லா வகையான தந்திரங்களும் அதிகமாக தென்படுகின்றன. மிகுந்த கோபத்தில் இருக்கும் போது பின்னூட்டமிடுவதை தவிர்த்துவிட்டு நீங்கள் இயல்பான நிலைக்கு வந்ததும் உங்கள் கருத்தை எழுத முற்பட்டால் உங்கள் எழுத்தின் சுவையை ரசிக்கமுடியும் என்று தோன்றுகிறது.

    "இசையை பற்றிப் பேசுவதை விட்டு விட்டு இசைக் கலைஞனை பற்றி பேசுவதில் என்ன கெட்டிக்காரத்தனம் இருக்கிறது என தெரியவில்லை . அமுதவன் சாரும் காரிகனும் அதில்தான் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள் என்பது புரிகிறது "

    இது கண்டிப்பாக இல்லை. நீங்களே கற்பனையாக உருவாக்கிக்கொண்ட குற்றாச்சாட்டு. இளையராஜா என்ற தனி மனிதனை விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு அவரைத் தெரியாது.

    "எல்லா மனிதருக்கும் இன்னொரு அசிங்கமான முகம் உண்டு . காரிகனுக்கும் உண்டு . அமுதவனுக்கும் உண்டு . அதைப் பற்றி நாமே விமர்சிப்போமா? இளையராஜா நல்ல மனிதரா இல்லையா என்ற வாதப் போக்கின் வரிசையில் நாம் சென்றால் இந்த இடுகையின் பாதை தவறானது"

    இது கும்பலில் இருந்துகொண்டு கல்லெறியும் மனப்பாங்கு .இளையராஜாவின் அசிங்கமான இசையைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறேன். அவரைப் பற்றியல்ல. இதுவும் உங்களுக்கு புரிந்தபாடில்லை. மேலும் ஹிட்லர்,காந்தி என்று வரலாற்றுப் பக்கம் வேறு பயணிக்கிறீர்கள் . ஏனென்று விளங்கவில்லை. ஆனால் ஒன்று. படிப்பதற்கு ரொம்பவும் நகைச்சுவையாக இருக்கிறது. ஆபிரஹாம் லிங்கன்,அன்னை தெரசா, நெப்போலியன், நெல்சன் மண்டேலா, நேரு என்று இன்னும் சில பெயர்களை சேர்த்துக் கொண்டிருக்கலாமே?

    " வெறும் பத்து பாடல்கள் விரசம் காட்டி பத்து பாடல்கள் குப்பை கவிதை என காட்டுவதால் அவர் இசை குறைவானதாக ஆகி விடுமா? ஆயிரம் பாடல்கள் அற்புதம் என்பதை மறைப்பது ஏன் ? "

    என் கணிப்பின்படி அவர் கொடுத்த அற்புதங்கள் சொற்பமானவை. குப்பைகளே அதிகம்.மேலும் இது நான் இளையராஜாவைப் பற்றி எழுதும் மூன்றாவது பதிவு. முதல் இரண்டு பதிவுகளில் நீங்கள் கூறியபடி அவரின் வைரங்களை மறைக்காமல் குறிப்பிட்டிருக்கிறேன். இந்தப் பதிவில் மட்டுமே அவரை நான் விமர்சனம் செய்திருக்கிறேன். இளையராஜாவை மட்டுமே மையப்படுத்தி எழுதும் பதிவுகள் அல்ல இசை விரும்பிகள் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். எப்படி நம் இசை 70 ஆண்டுகளாக மாறிக்கொண்டுவருகிறது என்பதை என் பார்வையிலிருந்து வார்த்தைகளில் வடிக்க முயற்சிசெய்கிறேன். இதில் இளையராஜா ஒரு பகுதி. அவரைத் தாண்டியும் இசை இருக்கிறது.. நல்லவிதமாக.

    இறுதியாக மேடையில் எஸ் பி பி இளையராஜாவைப் பற்றி இப்படி கூறினார் என்று ஆதாரம் காட்டுவதெல்லாம் எதற்கு? யாரும் யாரையும் மேடைகளில் உயர்வாக பேசுவது நம் பண்பாட்டின் ஒரு கூறு என்பது கூட உங்களுக்கு தெரியவில்லையா? மேலும் எல்லோருமே இங்கே விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள்தான்.

    ReplyDelete
  45. திரு விமல்,
    என்ன இன்னும் களத்தில் குதிக்கவில்லையே என்று நினைத்தேன். Think of the devil and there it is. இது ஒரு ஆங்கில வார்த்தைப் பிரயோகம். இதற்கும் வியாக்கியானம் சொல்ல முயலவேண்டாம்.
    நீங்கள் இரட்டை நாக்கு கொண்டவர் என்பது எனக்கு நன்றாக தெரிந்ததே. திரு சவுந்தர் வலைப்பக்கத்தில் என்னை கண்டபடி ஏசிவிட்டு அதற்கு அவர் நாகரீகமாக கொஞ்சம் தள்ளிநின்று விளையாடுங்கள் என்று சொல்லும்படி செய்தவர்தானே நீங்கள்? அவர் கூட என் மீது இத்தனை காட்டத்தை வெளிப்படுத்தியதில்லை. மேன்மக்கள் மேன்மக்களே.

    சரி. இப்போது வவ்வாலின் ஆசியோடு என்று புதிதாக பத்தவைக்கிறீர்கள். வவ்வால் தன் மனதுக்குப் பட்டதை எவ்விதமான பாசாங்கும் இல்லாமல் உள்குத்து இல்லாமல் சொல்லக்கூடியவர். அவர் என் கருத்தோடு எப்போதுமே இணைந்து போகவேண்டும் என்று விதியில்லை. அவர் கருத்தை சொல்லும் உரிமை அவருக்கு உண்டு. இல்லை என்று தடா போட்டால் நானும் ஒரு சராசரி ராஜா ரசிகசிகாமணி போலாகிவிடுவேன். நாகரீகமாக அவர் என் மீது ஒரு போடு போட்டதற்காக எனக்கு அவர் மீது வஞ்சம் உண்டாகும் என்று உங்களைப் போன்று சிலர் எதிர்பார்க்கிறார்கள். உட்கட்சி பூசல் என்று குதூகலிக்கிறார்கள்.

    உங்கள் கம்பராமாயண, இலக்கிய, காவிய ஆபாசங்களைப் பற்றிய குறிப்புகளுக்கு மிக்க நன்றி. நான் என்ன ஆன்மீக சொற்பொழிவா நடத்திக்கொண்டிருக்கிறேன்? இசையை பற்றி எழுதும் போது அந்த இசை எப்படி கெட்டது என்பதை சொல்வதே என் வேலை.நான் எதற்க்காக இசையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக்கொள்ளவேண்டும்? மேலும் நீங்கள் இங்கே எம் ஜி யார், ஜெயலலிதா, கருணாநிதி என்று தேவையில்லாத அரசியல் பேசுகிறீர்கள். அதையும் நாலாந்தர வகையில் சொல்கிறீர்கள்.இந்தப் போக்கு தொடரும் பட்சத்தில் உங்கள் பின்னூட்டங்கள் கண்டிப்பாக வெளிச்சத்தை காணாது.

    எம் ஜி யார் சரி. சிவாஜி இசை அமைப்பாளர்களை படுத்தி எடுத்தார் என்பது சுத்தப் புளுகு. சிவாஜி நடிப்பதோடு சரி.பிற விஷயங்களில் தலையிடுவதேயில்லை. இது பொதுவாக எல்லோருக்குமே தெரிந்ததுதான்.உங்கள் அறியாமையை கண்டு வியக்கிறேன்.எம் ஜி யார் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக எம் எஸ் வி யை அதிகம் வேலை வாங்கியது உண்மை. அப்போதுதான் நீங்கள் குறிப்பிட்டுள்ள நிகழ்வு நடந்தது. இதை எம் எஸ் வி யே ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார்.உன்னை விட மாட்டேன் என்ற படத்திற்கு எம் ஜி யார் நடிப்பில் இளையராஜா இசை அமைப்பதாக இருந்து பின் அது கைவிடப்பட்டதாக அறிந்திருக்கிறேன். நல்லவேளை. எம் ஜி யாருக்கு இளையராஜா இசை அமைக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் எம் ஜி யார் அவரை என்னென்ன செய்திருப்பார் என்று எண்ணும்போதே தடாலடியாக இருக்கிறது. இ.ராஜாவின் இசை ஞானம் அப்போதே வெளிப்பட்டிருக்கும்.

    திரு சால்ஸ் இதே விரசத்தை சுட்டி இதே பாடல்களை மேற்கோள் காட்டியிருந்தார். அவருக்கு சொன்னதே உங்களுக்கும் பொருந்தும். ராஜாவின் ரசிகர்கள் ஆயிரம் தடவைகள் குதித்தாலும், இங்கே எப்படி ஆபாச இசை வந்து சேர்ந்தது என்றும் அதை யார் கொண்டுவந்து கடைபோட்டு விற்றார்கள் என்பதும் தமிழ்நாட்டில் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். எதையும் திரிக்கவேண்டாம். கடைசியாக உங்களின் பரிசுக்கேள்வி பற்றி எனக்கு அக்கறையில்லை. அடுத்த பதிலையாவது சற்று நிதானமாக விஷமில்லாமல் விஷயத்தோடு எழுதுங்கள்.

    ReplyDelete
  46. ராஜாவைப் பற்றிய அபரிமிதமான கற்பிதங்கள் இணைய வெளியில் ஆட்டம்காண ஆரம்பித்து இருப்பதை இங்குள்ள அபிமானிகள் சிலரின் பின்னூட்டங்கள் வெளிச்சம் போடுகின்றன. அவர்களுக்குப் பேச, விவாதிக்க வேறு விஷயங்கள் இல்லாமல் போகவே எழுதுபவர்களைத் திட்டுவதும், வசைபாடுவதும் கண்ணதாசன் யோக்கியமா கருணாநிதி யோக்கியமா என்றெல்லாம் கேள்விகள் எழுப்புவதுமாக என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள். சிலர் 'நாங்கள் ஒன்றும் முன்னோர்களைக் குறை சொல்லவில்லையே . அப்படிச் சொல்லியிருந்தால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியுமா' என்று போங்காட்டம் ஆடிப்பார்க்கிறார்கள். இன்னும் சிலர் முக்காடு போட்டுக்கொண்டு பம்முகிறார்கள். மொத்தத்தில் அடித்தளம் ஆட்டம் கண்டுவிட்டது அவர்களுக்கும் புரிகிறது.
    இப்போது எழுதுபவர்களில் பாதிப்பேர் வெறும் வெற்றுக்கூச்சல்- பேரணிகளில் போகும்போது போடுவார்களே அதுபோன்ற சாரமற்ற வெற்றுக்கூச்சல்களை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்........ராஜா ஒரு அதிசயம், அவருக்கு இணை யாருமில்லை, அவருக்கு நிகர் யாருமில்லை என்றெல்லாம்......... இளையராஜாவை இசையமைப்பாளரே இல்லை அவர் ஒரு நல்ல கலைஞரே இல்லை என்று இங்கே நானோ காரிகனோ அல்லது வவ்வாலோ(உங்களையும் இங்கே சேர்த்துக்கொள்ளலாம்தானே?) பேசியிருந்து அல்லது எழுதியிருந்து இப்படிப்பட்ட விவாதங்கள் வருகின்றன என்றால் நியாயம்.
    அப்படியில்லை. ராஜாவைப் பற்றிய பாடல்களை அவரது இசையமைப்பின் பாணியை பலவீனங்களை அந்தப் பாடல்களில் காணக்கிடைக்கும் குறைகளை விமர்சித்து இங்கே பதிவுகள் செய்யப்படுகின்றன. ராஜா கொடிகட்டிப் பறந்த காலகட்டமும் மிகமிக நேர்மையுடன் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. அவருக்கு உண்டான கிரெடிட்டைக் கொடுங்கள் அதைத்தாண்டி அவரே இசைக்கடவுள் அவரே தமிழ் இசையைக் கண்டுபிடித்தவர் என்ற அளவுக்குச் சொல்லாதீர்கள் என்றுதான் இங்கே பதிவுகள் அமைந்திருக்கின்றன. அதைக்கூட செய்யக்கூடாது என்று சட்டாம்பிள்ளைகள் இங்கே கச்சை கட்டுவதன் காரணம்தான் புரியவில்லை.
    அவர் பற்றிய அதீதக் கற்பனைகளைத் தகர்க்கும் வாதங்களை மட்டுமே நான் என்னுடைய வலைப்பூவில் மூன்று நான்கு வருடங்களாக எழுதிவருகிறேன். அதனை எழுதுவதனாலேயே என்னை விமர்சிக்க வந்துவிடுகிறார்கள் இவர்கள் என்பது வேடிக்கையாக இருக்கிறது.

    \\தனிப்பட்ட குண நலன்களை வைத்து பேசுவதாக இருந்தால் அதிலும் ராஜா ஒன்று குறைந்தவர் அல்ல.எந்த தீய பழக்கமும் இல்லாதவர்.அப்படி இருக்க ஏன் இந்த கொலைவெறி\\
    என்று விமல் என்ற நண்பர் கேள்வி எழுப்பியிருக்கிறார். வேண்டாம் நண்பரே நாம் இந்த சப்ஜெக்ட்டுக்குள் நுழையவேண்டாம். ராஜா மீதான உங்கள் நம்பிக்கை அப்படியே இருக்கட்டும். இதனை நாம் கடந்துபோய்விடுவோம். ராஜா மற்றவர்களை மதிக்கும் விஷயமாக வேண்டுமானால் வாதப் பிரதிவாதங்கள் நடத்திக்கொண்டிருக்கலாம்.

    கண்ணதாசனைப் பற்றி இரண்டுபேர் இங்கே பேசியிருக்கிறார்கள். இணையத்தில் இதைவிடவும் மோசமாக கண்ணதாசனைப் பற்றி சிம்மக்கல் என்பவரும் இதே வாதங்களை வைத்துப் பேசிக்கொண்டிருந்தார். (இப்போது அவரைக் காணோம்)

    கண்ணதாசன் திரைப்படத்துறையில் இருந்த ஒரே 'அசிங்கம் பிடித்த மனிதர்' அல்ல; திரைப்படத்துறையில் அல்லது அரசியல்துறையில் இருந்த பிரபலங்கள் செய்த அதே தவறுகளை அவரும் செய்தவர்தான். ஆனால் மற்ற எல்லாரும் - கவனியுங்கள்- அவரைப்போன்றே வாழ்க்கை நடத்திய எல்லாரும் செய்ததைத்தான் அவரும் செய்துகொண்டிருந்தார்.

    ஆனால் அவர்கள் எல்லாரும் தாங்கள் செய்ததை ஆயிரத்து ஐந்நூறு இரும்புத்திரைப் போட்டு மறைத்துக்கொண்டார்கள்.

    இந்த மனிதர் மட்டும் அதனை அவரே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறவராயிருந்தார். அவரே அதனை எழுதிவைத்துவிட்டும் போயிருக்கிறார். சுய பாவங்களையும் தவறுகளையும் ஒப்புக்கொள்ளும் நேர்மை அவரிடம் இருந்ததால்தான் அந்த track ஒருபுறம் இருக்க அதனைத்தாண்டி அவர் கொண்டாடப்படுகிறார். இது கண்ணதாசனுக்கு மட்டுமே பொருந்தும்.

    இதேபோன்று மற்ற 'புனிதர்களின்' செயல்பாடுகள் வெளியே வர ஆரம்பிக்கின்றன என்று வைத்துக்கொள்ளுங்கள் அவர்கள் எத்தனைப் பெரிய மனிதர்களாயிருந்தாலும் பாடு நாறிவிடும்.

    இவர்கள் சொல்லுவதை மட்டும் வைத்துப் பார்த்தால் இளையராஜாவுக்கு முன்பு இசை என்பதே இல்லையென்றும் ராஜா திரைத்துறையை விட்டு ரிடையர் ஆனபிறகும் (இல்லை இன்னமும் முதல் இடத்தில் இருப்பவர் அவர்தான் என்று ஒரு ஐந்து பின்னூட்டம் வரும்) இசை என்பதே இல்லை என்றும் ஆகும். அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை எனும்போது எப்படி இதே வாதங்களை வைத்துக்கொண்டு காலம்தள்ள முடியும் என்று இந்த அன்பர்களெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதே பரிதாபமாகத்தான் இருக்கிறது.
    நீங்கள் தொடர்ந்து வீரநடை போடுங்கள் காரிகன்.

    ReplyDelete
  47. காரிகன் அவர்களே,
    என் பின்னூட்டத்தை அநாகரீகம் என்று சொல்லி தடை போட்டுவிட்டு இப்போது விமல் என்பவர் எழுதியிருக்கும் (எம் ஜி யார் ஜெயலலிலதா கதை, கருணாநிதி கதை குஷ்பூ பிரபு கதை)பின்னூட்டத்தை மட்டும் அனுமதித்தது ஏன்? அவர் ரொம்ப குணாலனாக எழுதியிருக்கிறாரோ? இவ்வளவுக்கும் நான் நாய்கள் குலைப்பதைபோல என்று மட்டுமே குறிப்பிடிருந்தேன். இது நியாயமா?

    ReplyDelete
  48. கார்த்திகேயன் அவர்களே,
    "எங்கப்பா உள்ள இருக்காருன்னு நா சொல்லமாட்டேன்" பாணியில் இருக்கிறது உங்கள் பதில். நீங்கள் சொல்வது சற்று நியாயமே. விமல் இதைவிட "தரமாக" எழுதக் கூடியவர்.பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  49. திரு அமுதவன் அவர்களே,
    சால்ஸ் மற்றும் அவர் நண்பர் விமல் இருவரும் ஒரே கருத்தை விட்டு வெளியே வராமல் அங்கேயே சுற்றிக்கொண்டிருப்பது டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் மாதிரி வேடிக்கையாக இருக்கிறது. இளையராஜாவிடம் வாத்தியங்கள் வாசித்த ஒரு நண்பரை நான் அறிவேன். அவர் மூலம் இவர்கள் சிலாகிக்கும் இசைமேதையைப் பற்றி ஒரு சில விஷயங்கள் கேள்விப்பட்டேன்.அவற்றை ஆதாரங்கள் இல்லாமல் வெளியே சொல்ல முடியாது என்பதால் தவிர்க்கிறேன்.இங்கே யாரும் புத்தன் கிடையாது.இதில் கண்ணதாசன் எம் ஜி யார் என்று சிலரை மட்டும் குறி வைப்பது மோசடித்தனம். ஆரோக்கியமான விவாதத்திற்கு நிறைய கதவுகள் உள்ளன. அதை திறக்க வேண்டியவர்கள் இப்படி குறுக்குவழியில் உள்ளே நுழைகிறார்கள்.பரிதாபம்.


    " ராஜாவைப் பற்றிய பாடல்களை அவரது இசையமைப்பின் பாணியை பலவீனங்களை அந்தப் பாடல்களில் காணக்கிடைக்கும் குறைகளை விமர்சித்து இங்கே பதிவுகள் செய்யப்படுகின்றன. ராஜா கொடிகட்டிப் பறந்த காலகட்டமும் மிகமிக நேர்மையுடன் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. "

    இதையும் நான் பாசாங்குடன் சொல்வதாக சில ராஜா ரசிகசிகாமணிகள் கருதுகிறார்கள். என்னைப் பற்றிய முன்தீர்மானித்தல் அவர்களை வழிநடத்திச் செல்கிறது.

    "நீங்கள் தொடர்ந்து வீரநடை போடுங்கள் காரிகன்."

    உங்கள் கருத்து மற்றும் ஆதரவுக்கு நன்றி.

    ReplyDelete
  50. காய்த்த/காய்க்கும் மரம் கல்லடி படும். வாய் இருக்கும் உடலில் தான் ஆசனவாயும் இருக்கும். காண்போர் கண்னோட்டத்தை பொருத்தே காட்சியும். உங்கள் எழுத்துகள் மூலம் பல விஷயங்கள் அறிந்து/புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி.

    ReplyDelete
  51. ரிம்போச்சே1 September 2013 at 12:02


    http://venuvanamsuka.blogspot.in/2011/04/blog-post.html

    பொதுவாக இளையராஜாவிடம் இசைக்கருவிகள் வாசிப்பவர்கள் தத்தம் வாத்தியத்தில் மேதைகளாக இருந்தால் மட்டுமே அவரிடம் வாசிக்க சாத்தியம் என்பர். இந்த கலைஞர்களில் ஒருவர் உஸ்தாத் பிஸ்மில்லா கானின் மாணவர் பண்டிட் பாலேஷ்.

    திரையிசைக்கு வந்தபின் கே.வி.மஹாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், தேவராஜ் மாஸ்டர், ரவீந்திரன் போன்ற தென்னிந்திய இசையமைப்பாளர்களிலிருந்து ஆர்.டி.பர்மன், எஸ்.டி.பர்மன், நெளஷத் போன்ற வடநாட்டு இசையமைப்பாளர்கள் வரை எல்லோரிடமும் வாசித்திருக்கிறேன். ஆனால் ரொம்ப காலம் இளையராஜா அவர்களிடம் போகவில்லை. அவர் இசை வாசிக்க ரொம்ப கஷ்டமாக இருக்கும். சாதாரணமாக வாசித்துவிட முடியாது. அதனால் அவரை அணுகுவதற்கு தைரியம் வரவில்லை. [சிரிக்கிறார்.]

    இந்தப் பதற்றத்துக்கு என்ன காரணம்? நீங்கள் எத்தனையோ பேரிடம் ஷெனாய் வாசித்திருக்கிறீர்கள். இளையராஜாவிடம் வாசிக்கும்போது மட்டும் ஏன் அத்தனை கஷ்டப்படுகிறீர்கள்?

    பிற இசையமைப்பாளர்களுக்கும் இவருடைய இசையமைப்புக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அவர் பிடிகள், நுணுக்கங்களெல்லாம் சாதாரண ரசிகர்களும் ரசிக்கும் வகையில் எளிமையாகத் தெரிந்தாலும், அவை வாசிப்பதற்குக் கஷ்டமானவை. ஒரு Bar-இல் நான்கு நோட்ஸ் எழுதியிருக்கிறார் என்றால், ஒரு நோட்டுக்கும் இன்னொரு நோட்டுக்கும் இடையே இருக்கும் அசைவுகள் வெவ்வேறாக இருக்கும். அதேபோல ஒரு Bar-க்கும், அடுத்த Bar-க்கும் நோட்களின் அசைவுகள் வெவ்வேறாக இருக்கும். அதைப் புரிந்துகொண்டால்தான் சரியாக வாசிக்கமுடியும்.

    ஷெனாயை ஒரே ஸ்ருதியில் வாசிப்பதென்றால் நிம்மதியாக வாசித்துவிடலாம். ஆனால் இவரோ பெரும்பாலும் ஸ்ருதியை மாற்றி மாற்றி வாசிப்பது போல்தான் அமைத்திருப்பார். சில ஸ்ருதிகளில் வாசிப்பது ரொம்ப கஷ்டம். ஸ்ருதி மாறும்போது ஸ்வரஸ்தானங்களுக்கான fingering-ஐ மாற்றவேண்டி வரும். நேரடிப் பதிவில் கை சட்டென்று மாறி அடுத்த ஸ்ருதிக்குச் சென்று தப்பில்லாமல் வாசிக்கவேண்டும். அதேபோல சில பாடல்களில் பாடலும், பிற கருவிகளும் ஒரு ஸ்ருதியிலும், ஷெனாய் வேறொரு ஸ்ருதியிலும் இருக்கும். இதெல்லாம் பிடிபடும்வரை அவரிடம் வாசிப்பது ரொம்ப கஷ்டம்.

    இளையராஜா அவர்களுக்கு இந்தந்த இசைக்கருவி, இந்தந்த ஸ்ருதியில் இசைக்கவேண்டும் என்ற அடிப்படை லட்சணம் தெரியும். இதோ இந்தப் பாடலை ஷெனாயைக் கொண்டே துவக்குகிறார். மிகச் சரியான ஸ்ருதி இது. பாடலின் துவக்கத்திலிருந்தே வரும் ஷெனாயின் சௌகரியமான ஸ்ருதிக்காகவே முழுப்பாடலையும் அமைத்திருக்கிறார். இதற்கு நேர்மாறாக உற்சாக உச்ச ஸ்ருதியில் இந்தப் பாடலைத் துவக்குகிறார் பாருங்கள். இவர் எதை எப்படி அமைப்பார் என்பதை எங்களால் கணிக்கவே முடியாது.

    பிற இசையமைப்பாளர்களிடம் வாசிக்கிறவர்கள் இவர் இசையை அவ்வளவு எளிதாக வாசித்துவிட முடியாது. அங்கே இசையமைப்பாளர் கொடுத்ததைத்தான் வாசிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர் எழுதியிருப்பதை வாசிக்க முடியவில்லை என்றால் கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்து அந்த ஸ்டைலில் தனக்கென்ன வருகிறதோ அதை வாசித்து விடலாம். ஆனால் இவரிடம் ஒரு நோட்டைக் கூட மாற்றி வாசித்துவிட முடியாது. தனக்கு என்ன தேவையோ அதை வெகு தெளிவாக நோட்ஸில் தந்திருப்பார். அது காட்சிக்கு மிகப் பொருத்தமானதாகவும் இருக்கும். இவரிடம் ஒருவர் வாசித்துவிட்டாரென்றால் உலகத்தில் வேறு எங்கே வேண்டுமானாலும் போய் வாசித்துவிடலாம். அதனால் இவரிடம் வாசிக்கும் ஒவ்வொருவருமே மிகப்பெரிய இசைக்கலைஞர்தான்.

    ReplyDelete
  52. ரிம்போச்சே1 September 2013 at 12:32

    http://venuvanamsuka.blogspot.in/2011/04/blog-post.html

    இப்போது புதிதாகத் திரைத்துறைக்கு வரும் இசையமைப்பாளர்களுக்கு இந்த ராகங்கள் எதுவுமே தெரிவதில்லை, புரிவதுமில்லை. தெரிந்தாலும் அவற்றை வெறும் நோட்ஸ்களாக மட்டுமே பார்க்கிறார்கள். ஜீவ ஸ்வரம், ராக ரூபம் இதெல்லாம் ஒன்றுமே தெரிவதில்லை. ‘ட்ரெண்ட் மாறிப்போச்சு’ என்று சொல்லி இதையெல்லாம் எதுவுமே தெரிந்துகொள்ளாமல் தப்பித்துக் கொள்கிறார்கள். ‘ட்ரெண்ட் மாறிவிட்டது’ என்றெல்லாம் ஒன்றுமில்லை. ராகங்களை வைத்துக்கொண்டே நவீனமாகவும் பாடல்களை உருவாக்கலாம். ராகங்கள் என்பவை நம் ஆதாரமான மெலடிகள்தான். அவற்றை ஒரு குறிப்பிட்ட வகையில், குறிப்பிட்ட ஸ்வரங்களுக்கு, பிரயோகங்களுக்கு அழுத்தம் கொடுத்துப் பாடும்போது உருவாகும் இசை நீண்டகாலம் ஜீவனோடு இருப்பதைக் கண்டுகொண்ட நம் முன்னோர்கள் அவற்றைப் பாரம்பரியமாகப் பாதுகாத்துவந்தார்கள். அதுதான் ராகம். ராகங்கள் என்பவை ஏதோ மேடையில் பாடப்படும் பழமையான மரபிசை விஷயங்கள் அல்ல. ராகங்களை அடிப்படையாகக் கொண்டு குத்துப்பாட்டைக் கூட அமைக்கலாம். திரையிசையையும், மரபிசையையும் பிரித்துப் பார்ப்பதே பல காலமாகத் தங்கள் நாட்டுப்புறப்பாட்டு, கிராமியக்கூத்து என எல்லாவற்றிலும் ராகங்களை ரசித்துப் பாதுகாத்துவந்த நம் மக்களின் ரசனைக்கு நாம் செய்யும் அவமரியாதைதான்.

    கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, இளையராஜா எல்லோருமே ராகங்களின் அடிப்படையில் அந்தந்த காலகட்டத்துக்கேற்ற மாதிரி நவீனமாகத்தானே பாடல்களைத் தந்தார்கள்? இன்னும் அவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறோமே? இன்றும் வரும் பாடல்களை இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து யார் நினைவில் வைத்திருப்பார்கள்? முன்பெல்லாம் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களெல்லாம் இசைப் பரிச்சயம் உள்ளவர்களாக இருந்தார்கள். இன்று அவர்களுக்கும் தெரிவதில்லை. அதனால்தான் பல இசையமைப்பாளர்களும் தப்பித்துக்கொள்கிறார்கள். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா பூராவுமே அப்படித்தான் இருக்கிறது.

    ReplyDelete
  53. காரிகன் அவர்களே

    நீங்களும் அமுதவுனும் எல்லா விசயங்களை திரிப்பதும் , மற்றவர்களை " இவர்களுக்கு இது கூட தெரியவில்லை,என்று மட்டம் தட்டுவதே உங்கள் வழமை.
    அதனால் தான் சில விசயங்களை பேச வேண்டி உள்ளது.

    அது சரி காரிகன் நீங்கள் என்ன இசை விமர்சகரா.?திரு சவுந்தரின் தளத்தில் நீங்கள் தானே ராகங்கள் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லியுள்ளீர்கள்.

    அப்படிப்பட்ட நீங்கள் எப்படி பாடல்களைப் பற்றி விமர்சிக்க முடியும்.ராகங்கள் அடிப்படையில் தான் பாடல்கள் நமது சினிமாவில் இருக்கிறது.
    நீங்கள் ராஜா இசையமைத்த பாடல்களில் 10 பாடல்கள் தான் தேறும் என்று சொல்லும் உரிமை உண்டென்றால் நான் 2000 அல்லது 3000 என்று சொல்கிறேன்.ஒருவரின் ரசனையின் அடிப்படையில் ,அவர் மனம் போன போக்கில் எழுதுவது இசை விமர்சனமா ? இதற்க்கு என்ன அளவு அளவு கோல்.? இசையின் அடிப்படையான சில் ராகங்கள் தெரியாத நீங்கள் எப்படி?

    இந்திய இசையின் ராகங்கள் அடிப்படியில் ராஜா காட்டிய சாதனைகளை inioru .com இல் - சவுந்தரின் கட்டுரைகளில் அறிந்து கொண்டேன்.அங்கே பம்மிய நீங்கள் இங்கே ஏன் குதிக்கிறீர்கள்.?

    நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் இளையராஜாவின் பாடல்களில் முழுமையான் இசை விருந்து கிடைத்தது.அப்படி ஒரு புதிய இசையை மக்கள் கேட்டிருக்கவில்லை.அந்த வல்லமை மிக்க இசையில் வார்த்தைகள் அர்த்தமற்று போயின.பட்டிக்காட்டானையும் ,பட்டணத்தானையும் ஒன்றாக கவர முடிந்ததும் அதனால் தான்.

    சினிமாவில் தத்தகாரத்துக்குத் தான் பாடல்கள் எழுதப் பட்டன.அதை யார் எழுதினால் என்ன என்ற நிலைமை தான் இருந்தது.கண்ணதாசன் ,வாலி என்று இனம் பிரிக்க முடியாத வகையில் பாடல்களும் அமைந்ததும் அதனால் தான்.
    ரிம்போச்சே உங்களுக்கு அழகாக விளக்கியுள்ளார்.நீங்கள் எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டர்கள்.ஏனென்றால் இசை பற்றி எழுதுவதல்ல ராஜாவை வசை பாடுதலே உங்கள் நோக்கம்.அதற்க்கு நீங்கள் பிடித்த கன்னி இந்த ஆபாச சங்கதி.

    // உங்கள் இருவர் பாணியில் ..
    //எம்.எஸ்.வீ ரசிகர்களுக்கே இது தெரியுமோ தெரியவில்லை // அல்லது எம்.எஸ்.வீ ரசிகர்லே அறியாத செய்தி இது //

    என்று நான் எழுதியது ஒரு தவறும் கிடையாது.ஏனென்றால் நீங்கள் இருவரும் திருவிளையாடல் தருமிகள். உங்களுக்கு கேட்கத் தான் தெரியும். அதனால் தான்
    // கடைசியாக உங்களின் பரிசுக்கேள்வி பற்றி எனக்கு அக்கறையில்லை. / // காரிகன்
    என்று அதிமேதாவி போல் புலம்புகிறீர்கள்.ராஜாவை மட்டம் தட்டுவது தான் உங்கள் நோக்கம்.அதனால் தான் எம்.எஸ்.வீ - கே.வீ.எம் களை பிடித்திருக்கிறீர்கள். அவர்களைப் பற்றியும் உங்களுக்கு தெரியாது என்பதை நிரூபிக்கவே.

    // கடைசியாக உங்களின் பரிசுக்கேள்வி பற்றி எனக்கு அக்கறையில்லை.//
    என்று எழுதும் புத்திசாலியுடன் நேரம் செலழிப்பது வீணல்லவா.
    என்ன கருத்து எழுதியும் என்ன பயன்.கிளப் டான்ஸ்.

    ReplyDelete
  54. திரு கிருபாகரன்,
    தங்கள் வருகைக்கு நன்றி. சர்காஸ்டிக் வகையில் உங்கள் எழுத்து இருப்பதாக தோன்றுகிறது.நமக்கு பிடிக்காத விஷயங்களைப் பற்றிப் பேசினால் நமக்கு இயல்பாக ஈடுபாடு வருவதில்லை.அதை மறுப்பதற்கே விரும்புவோம். ஆனால் அதன் மூலம் அப்படி ஒரு சங்கதி இருக்கிறது என்ற சிறிய செய்தியாவது நம்மிடம் வந்து சேர்கிறதே.

    ReplyDelete
  55. திரு விமல்,
    வார்த்தைகளை திரிக்கவேண்டாம். சவுந்தர் அவர்களுக்கு இருக்கும் ராகங்கள் பற்றிய அறிவு வெகு ஆழமானது. எனக்கு அந்த அளவுக்கு ராகங்கள் பரிச்சயமில்லை என்றே சொல்லியிருந்தேன். ராகங்களே தெரியாது என்று நீங்களே முடிவு கட்டிக்கொண்டு என்னை விமர்சிப்பது முட்டாள்தனமானது.எனக்கு என்னென்ன தெரியும் என்று பட்டியல் போடவேண்டுமா என்ன?

    உங்களின் ராஜா அபிமானத்தை நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள் என்று நான் உங்களிடம் கோரிக்கை வைத்தேனா அல்லது நான் எழுதிய எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கட்டளையிட்டேனா? இசை ரசனை இருப்பவர்கள் தாரளமாக இசையை விமர்சிக்கலாம். இதே நான் இ.ராஜாவை வழக்கம் போல வரம்பில்லாமல் புகழ்ந்து எழுதியிருந்தால் நீங்கள் என்னை இப்படி கேள்விகள் கேட்பீர்களா? அவரை புகழ்வதற்கு தகுதிகளே தேவையில்லை என்னும் போது அவரை விமர்சிக்கவும் அதே அளவுகோல் போதுமே.

    இசையை நான் பார்க்கும் விதத்திலிருந்து பதிவுகள் எழுதுகிறேன். உடன்பட வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது. எனக்கு எம் எஸ் வி- டி கே ஆர் ,எ எம் ராஜா, சுதர்சனம், கே வி எம் போன்றவர்களின் பாடல்கள் பிடிக்கும் என்பது என் விருப்பம். அதே போல இ.ராஜாவின் பல பாடல்கள் எனக்கு பிடிக்காது என்பதும் என் தனிப்பட்ட விருப்பம். இதில் நீங்கள் எப்படி தலையிட முடியும் என்று தோன்றவில்லை.என்னுடைய அபிமானங்களையும், விருப்பங்களையும் தீர்மானிக்க நீங்கள் யார்?முடிந்தால் நீங்களும் உங்கள் அபிமானவரைப் பற்றி பக்கம் பக்கமாக பதிவுகள் எழுதுங்களேன். It's a free world.

    ReplyDelete
  56. ரிம்போச்சே
    \\பிற இசையமைப்பாளர்களுக்கும் இவருடைய இசையமைப்புக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அவர் பிடிகள், நுணுக்கங்களெல்லாம் சாதாரண ரசிகர்களும் ரசிக்கும் வகையில் எளிமையாகத் தெரிந்தாலும், அவை வாசிப்பதற்குக் கஷ்டமானவை. ஒரு Bar-இல் நான்கு நோட்ஸ் எழுதியிருக்கிறார் என்றால், ஒரு நோட்டுக்கும் இன்னொரு நோட்டுக்கும் இடையே இருக்கும் அசைவுகள் வெவ்வேறாக இருக்கும். அதேபோல ஒரு Bar-க்கும், அடுத்த Bar-க்கும் நோட்களின் அசைவுகள் வெவ்வேறாக இருக்கும்.\\


    \\‘ட்ரெண்ட் மாறிவிட்டது’ என்றெல்லாம் ஒன்றுமில்லை. ராகங்களை வைத்துக்கொண்டே நவீனமாகவும் பாடல்களை உருவாக்கலாம். ராகங்கள் என்பவை நம் ஆதாரமான மெலடிகள்தான். அவற்றை ஒரு குறிப்பிட்ட வகையில், குறிப்பிட்ட ஸ்வரங்களுக்கு, பிரயோகங்களுக்கு அழுத்தம் கொடுத்துப் பாடும்போது உருவாகும் இசை நீண்டகாலம் ஜீவனோடு இருப்பதைக் கண்டுகொண்ட நம் முன்னோர்கள் அவற்றைப் பாரம்பரியமாகப் பாதுகாத்துவந்தார்கள். அதுதான் ராகம்.\\
    ரிம்போச்சே இரண்டு பின்னூட்டங்களிலும் நீங்களே பதிந்திருக்கும் இந்த பதில்களிலேயே உங்களுக்கான பதிலும் இருக்கிறது. நான் சொல்லவரும் , என்னுடைய பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் சொல்லியிருக்கும் கருத்துக்களுக்கு ஆதரவான நிலைப்பாடும் இருக்கிறது. நான் சொல்ல வருவதும் இதுதான். விஸ்வநாதன் ராம மூர்த்தி காலத்தில் இசைக்கு அல்லது பின்னணி இசைக்கு ஒரு பாரம்பரியமான வடிவம் இருக்கிறதே அதன் பாணியிலேயே இசையமைப்பார்கள். அதனை எளிதாகப் பற்றிக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் அது நீண்ட காலத்துக்கு நீங்கள் பதிலிறுத்திருப்பதுபோல் 'ஜீவனுள்ளதாகவும்' இருக்கும். 'ட்ரெண்ட் மாறிவிட்டது' என்ற பெயரில்(இதுவும் உங்கள் பதிலிலிருந்து எடுத்ததுதான்) இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சேர்த்து ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று சொல்லிக்கொண்டு போவது ரொம்பவும் பழமை. நாம் புதிதாகச் சொல்லுவோம் என்று 1H7,2FXO,3lws,4ptps என்றெல்லாம் சொல்லிக்கொண்டு போனால் ஏதோ வித்தியாசமாய் இருப்பதுபோல்தான் தோன்றும். ஆனால் பாடுகிறவனையும் அதற்கு சம்பந்தப்பட்டவனையும் தவிர ஒரு பயலுக்கும் நினைவில் நிற்காது. வாய்ப்பில்லை. அப்படி குறிப்பிட்ட வடிவத்துக்குள் வராமல் போடப்பட்ட பின்னணி இசையை யாராலும் நினைவு வைத்துக்கொண்டு வாசிக்கமுடியாது. அதுதான் இளையராஜா விஷயத்தில் இன்றைக்கும் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு இசைக்கச்சேரி நடத்த வேண்டுமென்றால் ரிகர்சல் மட்டும் ஆயிரம் நாட்கள் நடைபெற வேண்டியிருக்கிறது. அதற்குப் பிறகும் அது ஒரிஜினல்போல் இருந்ததா என்றால் நிச்சயம் கிடையாது. உடனே 'இளையராஜா ஸ்கோர் எல்லாம் அப்படித்தான். அவ்வளவு சுலபமாக எல்லாம் வாசித்துவிட முடியாது. காரணம் அத்தனை நுணுக்கம். பெரிய மேதைகளைத் தவிர மற்றவர்களால் அவ்வளவு சுலபமாக வாசித்துவிட முடியாது' என்பதுபோல் ஏதாவது உளறிக்கொண்டு திரியவேண்டியதுதான். கேள்வி; சாதாரண ரசிகனையும் சென்றடைய வேண்டிய பாட்டில் எதுக்கு இப்படி அதிமேதாவிகள் மட்டுமே வாசிக்கக்கூடிய நோட்ஸைப் போடவேண்டும்?
    பதில்; அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது. வித்தியாசமாய் இருக்கட்டுமே என்பதற்காக கொஞ்சம் கோக்குமாக்காகப் போட்டுவைத்தார் அவ்வளவுதான்.

    \\சினிமாவில் தத்தகாரத்துக்குத் தான் பாடல்கள் எழுதப் பட்டன.அதை யார் எழுதினால் என்ன என்ற நிலைமை தான் இருந்தது\\
    இப்படியொரு முத்தை உதிர்த்திருப்பவர் விமல் என்பவர்.
    தத்தகாரத்துக்குத்தான் பாடல்கள் எழுதப்பட்டன என்ற செய்தியும் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். பாடல்களும் ஸ்வரத்தின் அடிப்படையில்தான் கோர்க்கப்பட்டனவா என்பதிலேயே எனக்கு இப்போது சந்தேகம் வந்துவிட்டது. 'அதை யார் எழுதினால் என்ன என்ற நிலைமை' இருந்ததாமே. அப்படியென்றால் இந்தச் செய்தியை அன்றைக்கே இளையராஜாவிடம் சென்று சொல்லிவிட்டு திரு விமலே ஒரு ஆயிரம் பாடலை அவருடைய இசையில் எழுதியிருக்கலாமே. இப்போதும் ஒன்றும் நடந்துவிடவில்லை. இளையராஜாதான் இன்னமும் முன்னணி இசையமைப்பாளர் என்றுதான் ரசிகசிகாமணிகள் சொல்லிவருகிறார்கள். நீங்கள் அத்தனைப்பேரும் விமல் தலைமையில் போய் 'பாட்டுன்றது வெறும் தத்தகாரம்தான் அதை யார் எழுதினால் என்னய்யா பேசாமல் எங்கள் எல்லாருக்கும் ஆளுக்கு ஐம்பது பாட்டு கொடு' என்று கேட்டு எழுதிவிட்டு வரலாமே.
    அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவுக்கும் இந்த உண்மையைச் சொல்லி விமலும் மற்றவர்களும் ஒரு நாற்பது ஐம்பது பாட்டு எழுதிட்டுவந்து அப்புறமா அடுத்த வார்த்தையைப் பேசுங்கப்பா.

    ReplyDelete
  57. ரிம்போச்சே

    \\இவரிடம் ஒருவர் வாசித்துவிட்டாரென்றால் உலகத்தில் வேறு எங்கே வேண்டுமானாலும் போய் வாசித்துவிடலாம்.\\
    சென்னையிலோ பெங்களூரிலோ காரிலோ டூவீலரிலோ சென்றிருக்கிறீர்களா? அங்கு ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேசியிருக்கிறீர்களா? அவர்கள் சொல்லுவதும் இதையேதான் 'ஒருத்தன் சென்னையிலும் பெங்களூரிலும் மட்டும் வாகனம் ஓட்டிப் பழகிட்டான் என்றால் இந்தியாவின் எந்த மூலையில் வேணும்னாலும் சுலபமாக ஓட்டிருவான்'. .........காரணம் இந்த நகரங்களும் அத்தனை நேர்த்தியாக, அமெரிக்க நகரங்களுக்கு இணையாக, உருவாக்கப்பட்ட நகரங்கள் என்பது அர்த்தமல்ல. அத்தனை சந்துபொந்துகளும், மேடு பள்ளங்களும் டிராபிக் நெரிசலும் உள்ள நகரங்கள் என்பதுதான். புரிந்துகொண்டால் சரி.

    ReplyDelete
  58. திரு.அமுதவன் ஐயா

    சந்தத்துக்கா, சொந்த்துக்கா என்று எம்.எஸ்.வீ க்விஞரகளை நகைச்சுவையாக கேட்பதாக அறிந்தோம்.சினிமாவில் வந்த பாடல்கள் 90 % சந்தத்துக்கே எழுதபட்டது.இந்த அல்ப விசயமே தெரியாத் நீங்கள் பக்கம் பக்கமாக என்ன சார் எழுதறீங்க.

    உங்க எழுத்தில் ஏதாவது லொஜிக் இருந்ததுண்டா.
    இளையராஜா ஒரு மேதை என்பதை ஒரு அறிவாளியும் , நாங்கள் முட்டாள்கள் என்று நினைப்பவர்களும் ஒத்துக் கொள்வார்கள்.
    ராஜாவின் இசைக்கலவையை மிஞ்ச இந்தியாவில் இதுவரி யாரு பிறக்கவில்லை.ஆனால் நீங்களோ ..

    // அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது. வித்தியாசமாய் இருக்கட்டுமே என்பதற்காக கொஞ்சம் கோக்குமாக்காகப் போட்டுவைத்தார் அவ்வளவுதான்.//

    என்று பெரிய இசை அறிஞர் போல சொல்கிறீர்கள்.நீங்கள் சொல்வது போலவே " கோக்குமாக்காகப் போட்டு" வைக்க கூட தேரியாமல் தான் இன்றுவரை எல்லோரும் "software " இசையை நம்பி தடுமாறுகிறார்கள்.

    அதை ராஜாவே " இசை என்பது ஏமாற்றுவேலை " என்று அழகாக சொன்னார்.அதற்க்கு முன்பு அல்லது பின்பு எவராவது சொல்லியிருக்கிறாரா..?

    வாத்தியக்கார்கள் கஷ்டப்பட்டு வாசிக்கவும் ,இசை ரசிகர்களை ரசிக்கவும் வைக்கும் ஆற்றல் ராஜாவிடம் தான் இருக்கிறது.இதையும் வாத்தியக் கலைஞர்கள், பெரிய மேதைகள் ஒத்துக் கொண்டது தான்.

    அதனால் தான் மெல்லத்திறந்தது கதவு படத்தில் எம்.எஸ்.வீ. பின்னணியை அமைக்கும் படி அவரை வேண்டினார்.அது மட்டுமல்ல அந்தபின்னணி இசையின் ஆற்றலால் தான் பலரும் அதை ராஜாவின் பாடல்கள் என்று நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

    அமுதவன் அவர்களே !
    இசையறிவு ரொம்ப கம்மி என்பது தெரிகிறது.ராஜாவின் இசையை எந்த இசை மேதை கேட்டாலும் ஆச்சரியப்பட வைப்பார்.இவ்விதம் உலகத் தரம் வாய்ந்த ஒரு கலைஞர் தமிழ் சினிமாவில் இல்லை.நடிப்பு, பாடல் , இசை என தமிழக எல்லைக்கு உள்ளே திறமை மிக்கவராக கருதப்படுபவர்கள் வெளியே ஒத்த குரலில் பாராட்டப்படுவதில்லை.ராஜாவைத் தவிர.
    அவரது இசையை பாமரனும் ரசிப்பான் பண்டிதனும் போற்றுவான்.வியப்பான்.

    கூந்தல் கருப்பு
    குங்குமம் சிவப்பு
    என்று கவி நயம் இல்லாமல் எழுதிய "பாட்டுக்களையும் " [ தத்தகாரத்துக்கு ஒப்புவித்த பாட்டை], கற்றவர்கள் கேலிபண்ணவும் , பாமரர்கள் பாடித் திரியவும் செய்தது இசை தான்.

    அதுபோலவே

    ஆலிங்கனங்கள் பரவசம் - இங்கு
    அனுமதி இலவசம்

    என்று " படித்த புத்திசாலித் தனத்தை " காட்டிய , பாமரனுக்கு புரியாத பாடலை எடுத்துச் சென்றதும் இசைதான்.

    இசை மனதை இசைய வைக்கும்.
    அதில் ராஜாதி ராஜா இன்றுவரைக்கும் நம்ம இளையராஜா தான்.பழைய இசையமைப்பாளர்களின் பெருமைகளப் போற்றுவதிலும் ராஜாதி ராஜா நம்ம ராஜாதிராஜாதி ராஜா தான்.

    உன் நெஞ்சைத் தொட்டு சொல்லு என் ராசா -அமுதவனே
    அவர் பாட்டில் நீர் மயங்க வில்லையா ..?
    ஏன் இந்த வேஷம்.?
    கீழ் உள்ள இணையத்தில் உள்ள விசயங்களைப் படியுங்கள்.
    http://venuvanamsuka.blogspot.in/2011/04/blog-post.html

    ReplyDelete
  59. \\ராஜாதி ராஜா இன்றுவரைக்கும் நம்ம இளையராஜா தான்.பழைய இசையமைப்பாளர்களின் பெருமைகளப் போற்றுவதிலும் ராஜாதி ராஜா நம்ம ராஜாதிராஜாதி ராஜா தான்\\

    காரிகன், வழக்கமான பழைய பஜனைகள் மீண்டும் துவங்கிவிட்டன. சலித்துப்போன வாதங்கள் குப்பைபோல கொட்டப்படுகின்றன. இங்கே நமக்கு தற்சமயம் வேலை இல்லை. அடுத்த பதிவில் வருகிறேன். இனி அவர்கள் பாடு; உங்கள் பாடு.

    ReplyDelete
  60. ரிம்போச்சே2 September 2013 at 12:50

    //இது எல்லாம் காரணங்களாம் !//

    இன்னொன்னையும் சேர்த்துக்குங்க.... மேடை நிகழ்ச்சிகளில் ஆர்கெஸ்ட்ரா வாசிப்பவர்கள் 'நெம்ப' சிரமப்படுகிறார்கள். மேடைகளில் வாசிக்க முடியாத இசையெல்லாம் ஒரு இசையா? ச்சே த்தூ!

    ReplyDelete
  61. ரிம்போச்சே2 September 2013 at 13:00

    //\\இவரிடம் ஒருவர் வாசித்துவிட்டாரென்றால் உலகத்தில் வேறு எங்கே வேண்டுமானாலும் போய் வாசித்துவிடலாம்.\\
    சென்னையிலோ பெங்களூரிலோ காரிலோ டூவீலரிலோ சென்றிருக்கிறீர்களா? அங்கு ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேசியிருக்கிறீர்களா? அவர்கள் சொல்லுவதும் இதையேதான் 'ஒருத்தன் சென்னையிலும் பெங்களூரிலும் மட்டும் வாகனம் ஓட்டிப் பழகிட்டான் என்றால் இந்தியாவின் எந்த மூலையில் வேணும்னாலும் சுலபமாக ஓட்டிருவான்'.//

    அய்யா குடை பிடிச்சிட்டு போற பெரியவரே...

    அந்தக் கருத்தச் சொன்னவரு பல ஊர்களில ஆட்டோ ஆட்டுன்னு ஆட்டோ ஓட்டுனவருதானுங்கோ!

    ********************


    முதலில் சம்பிரதாயமாகவே ஆரம்பிக்கிறேன். எனக்கு உங்களைப் பற்றி நன்கு தெரியும். ஆனால் சொல்வனம் வாசகர்களுக்காக உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்?

    என் சொந்த ஊர் வட கர்நாடகாவின் ஹூப்ளி. என் குடும்பமே இசைக்குடும்பம். என் அப்பா, பெரியப்பா எல்லோரும் ஷெனாய் இசைக்கலைஞர்கள். என் அப்பா, பெரியப்பாவிடம் ஆரம்பத்தில் கற்றுக்கொண்டேன். பிறகு Dr.D.P.ஹிரேமத் அவர்களிடம் ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டேன். அவரிடம் பத்து வருடங்கள் இசை கற்றுக்கொண்டேன். அவ்வப்போது ஷெனாயும் கற்றுக்கொள்வேன். வாய்ப்பாட்டாகப் பாடியதை ஷெனாயில் வாசிக்கச் சொல்வார். அதற்குப்பின் கோதண்ட் சாலுங்கே மஹாராஜ் என்றொருவரிடம் பத்தியலா கரானா முறையில் ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டேன். அதன்பிறகு தார்வாட் ஆல் இந்தியா ரேடியோவில் வாசித்துக்கொண்டிருந்தேன். ஒருமுறை கதக் நகரில் நடைபெற்ற இசைத்திருவிழாவில் நான் யமன் கல்யாண் ராகத்தை வாசிப்பதைப் பார்த்து, அந்த மேடையிலேயே பண்டிட் புட்டராஜ் கவாய் என்னை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டார். பார்வையற்ற பண்டிட் புட்டராஜ் கவாய் பலர் வாழ்விலும் இசையொளியை ஏற்றிவைத்தவர்; பெரிய இசைப்பள்ளியை வைத்து நடத்தினார். சென்ற வருடம்தான் காலமானார்.

    வட கர்நாடகம் பொதுவாகவே ஹிந்துஸ்தானி இசையின் மிகப்பெரிய மையமாக இருந்தது. இங்கே கர்நாடக சங்கீதம் போல, அங்கே ஹிந்துஸ்தானி. பீம்சென் ஜோஷி, மல்லிகார்ஜுன் மன்ஸுர், பஸவராஜ் ராஜ்குரு, கங்குபாய் ஹங்கல் போன்ற பல மேதைகள், ஜாம்பவான்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர்தான் புட்டராஜ் கவாய். அருகிலேயே மகராஷ்டிரம் இருப்பதால் பம்பாயிலிருந்து பெரிய வித்வான்கள் அங்கே வந்து கச்சேரி செய்வார்கள். இவர்கள் பலருடைய கச்சேரிகளை நான் கேட்டு வளர்ந்தவன் நான்.

    உஸ்தாத் பிஸ்மில்லா கானிடம் எப்போது சென்று சேர்ந்தீர்கள்?

    புட்டராஜ் கவாய் அவர்களிடம் கற்றுக்கொண்ட பிறகு உஸ்தாத் பிஸ்மில்லா கானிடம் ஷெனாய் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசையின் காரணமாக வாராணசிக்குச் (वाराणसी) சென்று அவரைச் சந்தித்தேன். அவரிடம் சென்று உங்களிடம் இசை கற்றுக்கொள்வதற்காக வந்திருக்கிறேன் என்று சொன்னேன். அவர் என்னை வாசிக்கச் சொல்லிக் கேட்டுவிட்டு, “நீங்களே பெரிய வித்வான். உங்களுக்கு நான் சொல்லித் தர என்ன இருக்கிறது?” என்றார். “நான் மட்டுமில்லை. இந்த உலகத்தில் ஷெனாய் வாசிக்கும் எல்லாருக்குமே நீங்கள்தானே குரு?” என்றேன். அவரிடம் ஷெனாய் கற்றுக்கொண்டது என் பாக்கியம். சென்னைக்கு வந்த பிறகு கூட அடிக்கடி வாராணசிக்குச் சென்று அவரைப் பார்த்துவிட்டு வருவேன். அப்போது என் மகனும் என்னோடு வருவார். அவருக்கும் அவர் இசை கற்றுத் தந்திருக்கிறார்.

    நீங்கள் ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டுக் கச்சேரி, ஷெனாய் கச்சேரிகள் செய்திருக்கிறீர்கள் இல்லையா?

    ஆமாம். ஆரம்பத்தில் வட - கர்நாடகாவில் நிறைய கச்சேரிகள் செய்தேன். பிறகு இந்தியா பூராவும் மும்பை, பூனே, டெல்லி, கல்கத்தா, ஆக்ரா, ஜெய்ப்பூர், சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம் என எல்லா பெரிய நகரங்களிலும் கச்சேரி செய்திருக்கிறேன். நிறைய வெளிநாடுகளிலும் செய்திருக்கிறேன். இளையராஜா அவர்கள் வீட்டில் நடக்கும் நவராத்திரி விழாவில் கச்சேரிகள் செய்வேன். வட கர்நாடகாவில் நடக்கும் புட்டராஜ் கவாய் இசைவிழாவிலும் தவறாமல் வாசிப்பேன்.


    ********************

    ReplyDelete
  62. ரிம்போச்சே2 September 2013 at 13:19

    // சாதாரண ரசிகனையும் சென்றடைய வேண்டிய பாட்டில் எதுக்கு இப்படி அதிமேதாவிகள் மட்டுமே வாசிக்கக்கூடிய நோட்ஸைப் போடவேண்டும்?
    பதில்; அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது. வித்தியாசமாய் இருக்கட்டுமே என்பதற்காக கொஞ்சம் கோக்குமாக்காகப் போட்டுவைத்தார் அவ்வளவுதான்.//

    அய்யா கச்சேரில வாசிக்கறவுங்க ஏன் அவ்வளவு சிரமப்பட்டு இளையராஜா பாடல்களை மேடையில வாசிக்கணும். ரசிகர்கள் கேக்கறதுனாலதான? எங்களால முடியாது, வேணும்னா MSV, KVM, SG, CB, ARR, Deva அப்படின்னு மத்தவங்க பாட்ட வாசிச்சிட்டு போக வேண்டியதானே?

    Todd Skinner அப்படிங்கற ஒரு போக்கத்த பய கீழே உள்ளவாறு சொல்லிருக்கான்.

    "If you are not afraid, you have probably chosen too easy a mountain. To be worth the expedition, it had better be intimidating. If you don‟t stand at the base uncertain how to reach the summit, then you have wasted the effort to get there. A mountain well within your ability is not only a misspending of resources, it is a loss of opportunity across a life time of potential achievement.”

    என்ன செய்ய, சிலர் வாழ்க்கைய அப்படித்தான் பாக்கறாங்க.

    ReplyDelete
  63. காரிகன் அவர்களே!

    01. ///..எம் ஜி யார் சரி. சிவாஜி இசை அமைப்பாளர்களை படுத்தி எடுத்தார் என்பது சுத்தப் புளுகு. சிவாஜி நடிப்பதோடு சரி.பிற விஷயங்களில் தலையிடுவதேயில்லை.//
    காரிகன் அவர்களே
    இது ஒரு புளுகு அல்ல.இதை சொன்னவர் கவிஞர் முத்துலிங்கம்.ஒவ்வொரு பாடல்வரிகளையும் வேறு ஒரு இடத்தில் நடந்த எம்.ஜி.ஆறுக்கு டாக்சியில் கொண்டு போய் காட்டப்பட்டதாக சொன்னார்.
    சிவாஜிக்கு பின்னால் இருந்த ஜால்ரா கும்பல் "எம்.எஸ்.வீ MGR க்கு ஒருமாதிரியும் சிவாஜிக்கு ஒருமாதிரியும் இசையமைப்பதாக " கோழ் மூட்டி அதை சிவாஜி தன்னிடம் கூருவதாக்.!சிவாஜியின் ஜால்ரா கும்பலைப் பற்றி சந்திரபாபுவும் பேசியிருக்கின்றார்.சிவாஜி அதிகம் தலையிட்டதில்லை அரை உண்மைதான்.
    உங்கள் இருவருக்கும் தானே எல்லாம் தெரியும்."ராஜா ரசிகல்களுக்கு இது தெரிந்திருக்க நியாயம் இல்லை."இது தானே நீங்கள் அடிக்கடி பயன் படுத்தும் மணிவாசகம்.
    எல்லாம் தெரிந்த உங்களுக்கு இதுவும் தெரியவில்லை என்பது ஆச்சரியமில்லை என்பது இப்போது புரிகிறது,


    02, //... ராஜாவின் ரசிகர்கள் ஆயிரம் தடவைகள் குதித்தாலும், இங்கே எப்படி ஆபாச இசை வந்து சேர்ந்தது என்றும் அதை யார் கொண்டுவந்து கடைபோட்டு விற்றார்கள் என்பதும் தமிழ்நாட்டில் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்.///

    ஆபாச வக்கிரங்கள் நிறைந்தது.இங்கே போற்றப்படுகின்ற சமயம் ,மொழி ,இலக்கியம் ஆபாசம் நிறைந்ததே.கம்பன் ஒரு வம்பன் என்ற மொழி வழக்கு எதனால் வந்த்து.காமச்சூத்திரத்தை உலகுக்கு வழங்கிய கலாச்சார நாடு அல்லவா இந்தியா.


    03. //"தண்ணி கருத்துருச்சு"என்று துவங்கிய இளையராஜாவின் "இசைப் புரட்சி" அவ்வப்போது பலவித மாற்றங்களோடும் வித்தியாசமான ஒலிகளோடும் படுக்கையறை ஓசைகளோடும் "நிலா காயுது" என்று ஆபாசத்தின் உச்சத்தை தொட்டது. எந்த இசை அமைப்பாளருக்கும் தோன்றாத ஒரு சிந்தனை இவருக்கு மட்டும் 1982 இல் எப்படி உதித்தது என்பது இதுவரை விடை காண இயலாத கேள்வி.//

    ஓரளவு ராகங்கள் தெரிந்த என் நபரிடம் கேட்டேன் "நிலாக் காயுது " பாடல் அருமயான மத்யமாவதி ராகத்தில் அமைந்தது.அதை அழகாக விளக்கினார்.ராகம் தெரியாத நீங்கள் எழுதுவது சிறுபிள்ளைத்தனம்.
    "நிலாக் காயுது " பாடல் படுக்கையறைக் காட்சிக்காகப் போடப்பட்ட பாடல்.எம்.எஸ்.வீ. இசைமயமைத்த " இதழே இதழே தென் வேண்டும்" பாடலும் அவ்விதமே.முன்னோர்களைப் பின்பற்றுபவர் தான் எங்கள் ராஜா.


    //என் கணிப்பின்படி அவர் கொடுத்த அற்புதங்கள் சொற்பமானவை. குப்பைகளே அதிகம்.மேலும் இது நான் இளையராஜாவைப் பற்றி எழுதும் மூன்றாவது பதிவு. முதல் இரண்டு பதிவுகளில் நீங்கள் கூறியபடி அவரின் வைரங்களை மறைக்காமல் குறிப்பிட்டிருக்கிறேன். இந்தப் பதிவில் மட்டுமே அவரை நான் விமர்சனம் செய்திருக்கிறேன்.//


    04. // அவரை புகழ்வதற்கு தகுதிகளே தேவையில்லை என்னும் போது அவரை விமர்சிக்கவும் அதே அளவுகோல் போதுமே.//

    03.04. காரிகன்

    இங்கே தான் உங்களதும் அமுதவனதும் தவறும் இருக்கிறது.ராஜாவின் இசையை பலவிதமான கோணங்களில் பல இசைமேதைகள் பேசியாயிற்று.அதற்க்கு முன்பாக ரசிகர்களின் ஏகோபித்த அபிமானத்தையும் அவர் பெற்று விட்டார்.அதனால் தான் அவரது ரசிகர்கள் இன்றும் அவரைக் கொண்டாடுகிறார்கள்.

    நான் சொல்வது R.D.பரமன் ,சலீல் சௌத்ரி , நௌசாத் , அவர்கள் மட்டுமல்ல பாடகர்கள் [தமிழ் நாட்டில் நடக்கும் முகத் துதிகளை சேர்க்க வேண்டாம் ] அவர்கள் மட்டுமா பாலமுரளி கிருஷ்ணா , செம்மங்குடி , சேஷகோபாலன் போன்ற பலர் பேசி விட்டார்கள்.இவர்கள் எல்லாம் சங்கீதம் தெரிந்தவர்கள்.
    அதனால் தான் சொல்கிறேன் அவரது இசையை சரியில்லை என்று சொல்லும் நீங்கள் மற்றும் அமுதவன் தான் "எப்படி அவை சரியில்லை "என விளக்க வேண்டும்.இல்லையா ?

    inioru . com சவுந்தரின் " தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 9 ] : T.சௌந்தர் - கட்டுரையில்
    " .. எனக்கு ஆழமாகத் தெரியாத ராகங்கள் சார்ந்த பல விஷயங்களை துல்லியமாக எழுதி வருகிறீர்கள். "
    எழுதுகிறீர்களே அப்போ எப்படி விமர்சகராக முடிந்தது.இதையே தான் அமுதவனிடமும் கேட்கிறோம்.பின் பக்கம் கால் பட ஓடிவிட்டார்.அவரைப்போல் அல்லாமல் நீங்கள் மனக்கசப்போடு கொஞ்சம் பாடல்கள் கேட்டிருக்கின்றீர்கள்.இன்னும் கேட்க வேண்டுகிறோம்.அது தான் நீங்கள் தெளிய ஒரே வழி.
    நீங்கள் திருந்த இடமுண்டு.அமுதவன் அந்தோ..

    ReplyDelete
  64. ராஜா காட்சிக்கு பொருத்தமான இசையை பாடலைத் தந்தார்.தமிழ் படத்துக்கு அரேபிய இசையை கொண்டு வந்த லூசு அல்ல.

    ReplyDelete
  65. ஆமாமாம். சிம்பனி போடாமலேயே மாஸ்ட்ரோ என்று அழைக்கப்படும் லூசு, தேவாரம் இசையில் மக்கள் பணத்தை சத்தமில்லாமல் அமுக்கிய லூசு, தன் சமூகத்திற்கு எதுவும் செய்யாமல் பார்பன கோவில்களுக்கு கொடை வழங்கிய லூசு, தன்னை நவபார்பணனாக காட்டிக்கொள்ள முயலும் லூசு,ஆட்டம் அடங்கிய பின்னும் வாய்கொழுப்பு அடங்காமல் கோமாளித்தனமாக உளரும் லூசு, மற்றவர்களை இகழ்வாக பேசிவிட்டு தன் மகன் யுவன் என்ற அடுத்த கோமாளியை மட்டும் உச்சி முகரும் லூசு, இதுதான் எங்கள் இளையராஜா என்ற மாபெரும் லூசு.

    ReplyDelete
  66. விமல்,
    இசை பொதுவானது. தமிழ் இசையில் காலம்காலமாக மேற்கத்திய இசை ஊடுருவி அதன் பாதிப்பினால் பல அருமையான பொக்கிஷப்பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளன. இளையராஜாவே மேற்கத்திய செவ்வியல் இசையை பிரதி எடுத்து நமக்கு கொடுத்தவர்தான். அதனால்தான் அவருடைய interlude சிறப்பானதாக இருக்கிறது. என் கேள்வி என்னவென்றால் ஒரு ஐரோப்பிய அல்லது அமெரிக்க இசையை நாம் தமிழ் இசையில் பயன்படுத்திக்கொள்ளும் போது அரேபிய இசை மட்டும் எப்படி அன்னியமானது? இதற்கு என்ன பதில் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் அதை ரகுமான் செய்தார்.ராஜா செய்யாதவற்றையும் செய்யத் தெரியாததையும் சாதிக்காததையும் ரகுமான் செய்ததால் இந்த எண்ணம் உங்களுக்கு வருகிறது. இதுதான் ராஜா ரசிகர்களின் கறுப்புப்பக்கம்.

    நான் ஏன் இளையராஜாவை விமர்சிக்கிறேன் என்பதை நான் விளக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறீர்கள். இது மகா மட்டித்தனம்.உங்களுக்கு சிலரை லூசு என்று அழைக்கக்கூடிய சுதந்திரம் எப்படி வந்தது? அதுவே இது.

    ReplyDelete
  67. Mr. kaarigan,
    I just came across this forum where some self-purists have posted comments about your blogpost. It's quite interesting to note that you have made some inroads into their strongholds. It seems that they writhe in visible pain unable to swallow your truth calling it pathetic, ignorant, immaterial and so on.. You should pay them a visit.

    http://ilayaraja.forumms.net/t8p750-anything-about-ir-found-on-the-net

    ReplyDelete
  68. தகதிமிதா!2 September 2013 at 23:15

    //இளையராஜாவே மேற்கத்திய செவ்வியல் இசையை பிரதி எடுத்து நமக்கு கொடுத்தவர்தான். //

    பிரதியெடுத்திருந்தா அவர் ஒரு conductor. ராஜா ஒரு composer.

    "bem bem maria" அப்படிங்கற gipsy kings-சோட பாடலை ஜும்பலக்கா பாடலில் வெட்டி ஒட்டுவதுதான் ஒலக இசையை உள்ளூருக்கு இஸ்துகினு வருவதோ என்னவோ?

    ReplyDelete
  69. Mr. Anandhakumaar,
    Thanks for the news which I wasn't waiting for. I know them a little. They are a funny bunch of gossip mongers having nothing better to do than to nitpick on the net.They have all the time in the world to post some slanderous remarks. I was there for a brief period hoping in vain to see some logic and sense which are grossly missing. Clowns at the most and sick at the least. If you are short of some funny stuff, they have the perfect treat to enjoy.

    எனக்கு பொழுதுபோகவில்லை என்பதால் பதிவுகள் எழுதுகிறேனாம். நல்லது. அவர்களுக்கு நேரமில்லை இருந்தும் மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதற்கு மட்டும் எப்படியோ நேரம் கிடைத்துவிடுகிறது.விந்தைதான்.

    ReplyDelete
  70. தகதிமிதா!
    வாருங்கள். நீங்கள் சொல்வதேதான். இதைதான் உங்கள் ராசாவும் செய்தார். Boney M இன் sunny பாடலை டார்லிங் டார்லிங் என்று தமிழ்ப்படுத்தினார். ரகுமான் செய்வது காப்பி. சரியே. இ.ராஜா அதை செய்தால்.. அதற்கு என்ன பெயர் என்பதையும் சொல்லிவிடுங்கள்.

    ReplyDelete
  71. காரிகன் அவர்களே

    அறியாமை மிகுந்த ஒரு ராகமே தெரியாத விமர்சகர நீங்கள் என்கிறோம் அதற்க்கான விளக்கத்தையும் சொல்லியுள்ளோம்.
    //நான் ஏன் இளையராஜாவை விமர்சிக்கிறேன் என்பதை நான் விளக்கவேண்டும்// - காரிகன்
    என்று சொல்லும் உங்களை என்ன சொல்வது என்று தெரியவில்லை.
    யோகேஷ் உங்கள் குரலை அழகாக பிரதிபலித் துள்ளார்.இதைதான் அமுதவன் என்ற "விமர்சகரும் "எழுதுகிறார்.

    லூசுப் பயயல்களை லூசு என்று சொன்னதில் ஒரு தவறும் இல்லை.நான் சிற்பி என்பவரை மனதில் நினைத்து எழுதினேன்.ஆனால் நீங்களோ ரகுமானை எனக்கு நினைவூட்டியுள்ளீர்கள்.ஆமால்லெ..அவர்தானே இவற்றுக்குக் குரு நாதர்.
    அதைவிடுங்கள்.எனக்கு நன்றாகத் தெரியும் நீங்களும் அமுதவனும் தாண்டி, தாண்டி ஓடும்
    " விமர்சகர்கள் " என்று.அப்படி ஒடாமல் ஒரு முறையாவது மனசாட்சி படி பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.தப்பி ஓடக் கூடாது என்ப்தர்க்கே நம்பர் போட்டு கேள்வி கேட்டுள்ளேன்.
    அரேபிய இசையை பற்றி புது வியாக்கியானம் கொடுத்துள்ளீர்கள்.
    //. இளையராஜாவே மேற்கத்திய செவ்வியல் இசையை பிரதி எடுத்து நமக்கு கொடுத்தவர்தான்//
    என்கிறீர்கள்.மீண்டும் , மீண்டும் இசை அறியாமை.அவர் பிரதி எடுக்கவில்லை அதை கலந்து கொடுத்தார்.அதற்க்கான அறிவு அவரிடம் உண்டு.
    பிரதி என்ற சொல்லை நான் இங்கே பயன்படுத்தி உள்ளதால் இனி நீங்கள் அங்கே தாவுவீர்கள் என்று தெரியும்
    4,000 -5,000 பாடல்கள் இசையமைத்த ராஜாவின் 10 பாடல்களை தான் சாம்பிள் காட்ட முடியும்.
    முதல் படத்திலிருந்து இரவல் புடவையை உருவி தன்னது என்று போட்டுக் கொள்ளும் " சாதனையாளர்களைப் " பற்றி நம்மாலும் பக்கம் ,பக்கமாக எழுத முடியும்.
    எம்.எஸ்.வீ எவ்வளவு காப்பி , ரகுமான் எவ்வளவு காப்பி ,மற்றவர்கள் எவ்வளவு காப்பி, ராஜா எவ்வளவு காப்பி என்று இணையங்களில் கொட்டிக் கிடக்கிறது.

    நான் கேட்ட கேள்விகளுக்கு ஒரு நல்ல ,சுய அறிவுள்ள மனிதனாக பதில் சொல்லுங்கள்.திசைதிருப்புதல் வேண்டாம்.அதை எத்தனையோ தடவை நீங்கள் செய்து விட்டீர்கள்.நமக்கும் சலிப்பாக இருக்கிறது.அர்த்தமற்ற விவாதமாக இருக்கிறது.

    மீண்டும் சொல்கிறோம்.ராஜாவை இழிவு படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு , ரகுமானின் உண்மையான் விசிறியான நீங்கள் அதை மறைக்கவே எம்.எஸ்.வீ போன்ற பழையவர்களை போற்றுவது போல பாசாங்கு செய்வதும் நமக்குத் தெரியும்.அதனால் தான் எம்.எஸ்.வீ போன்றவர்களின் செய்திகள் உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை.
    ஆனால் ரசிகர்கள் ராஜாவை போற்றுவதை பொறுக்க முடியாத நீங்களும் அமுதவனும் எம்.எஸ்வி யின் சிறப்புக்களை எழுதாமல் ராஜா ரசிகர்களை சாட பொய்களை அவிழ்த்து விடுகின்றீர்கள்.அதை வைத்து ராஜாவை வசை பாடுகின்றீர்கள்.ஆதாரம் கேட்டாலும் கொடுக்க மாட்ட்டேன் என்கிறீர்கள்.
    உங்கள் ப்லோகிர்க்கு " வார்த்தை வெறுப்பு " என்றும் அமுதவனின் " அர்த்தமற்ற பார்வை " என்று பெயரிடலாம் போல் உள்ளது.

    ReplyDelete
  72. தகதிமிதா3 September 2013 at 06:42

    //ney M இன் sunny பாடலை டார்லிங் டார்லிங் என்று தமிழ்ப்படுத்தினார்.//
    அதுவும் காப்பிதான். ஆனால் அதைத்தாண்டி அவர் பலநூறு பாடல்களில் மேற்கத்திய இசையை இந்திய இசையுடன் blend செய்திருக்கிறார். அவரது திறமை காப்பியடிப்பது மட்டுமென்றால் அவர் நீங்களே வெறுக்கும் ஒரு 'சிற்பி'யாகவே இருந்திருப்பார்!

    ReplyDelete
  73. திரு விமல்,
    உங்களோடு நான் இவ்வளவு தூரம் பேசிக்கொண்டிருப்பதே தேவையில்லை என்று உணர்கிறேன். உங்களைபோன்ற ராஜா அடிவருடிகள் என் பதிவை படித்து விட்டு கேள்விகள் கேட்பது அதற்கு நான் பதில் சொல்வது தேவையற்றது. பிடிக்காவிட்டால் படிக்காமல் இருப்பதுநலம்.என் தரத்திற்கு நீங்கள் இன்னும் வளரவில்லை. நீங்களோ அல்லது பல பெயர்களில் வரும் ராஜா விசிறிகளோ புதிதாக எதுவும் சொல்வதாக இருந்தால் நல்லது. வழக்கமான பல்லவி என்றால் மன்னிக்கவும். என்னிடம் உங்கள் பருப்பு வேகாது.

    ReplyDelete
  74. விமல், ரிம்போச்சே வாங்கன்னா .....வணக்கங்கண்ணா ! இப்ப தகதிமிதா வேற நம்மோடு சேர்த்து விட்டார் . அவர் பேரே இளையராஜா இசை மாதிரி இருக்கு . அவருக்கும் வணக்கம் .

    இளையராஜா இசை பற்றி நாம் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் காரிகனும் அமுதவனும் தங்களுக்கு தெரிந்ததை ...சாரி ...தெரியாததை மட்டும் பேசும் 'உலக வாயகர்கள் ' என்பது இப்போது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் .

    இளையராஜா பற்றி அவர் இசை பற்றி எத்தனை இசை மேதைகளின் புகழ்ச்சிகளை நீங்கள் எடுத்துச் சொன்னாலும் காரிகன் வெறும் வார்த்தைச் சித்தர் மாதிரி பிதற்றிக் கொண்டேதான் இருப்பார் . நேரடி பதில் சொல்ல சரக்கு இல்லை என்று அர்த்தம் .

    இளையராஜா இசையில் அவர் கண்ட குறைக்கான
    காரணங்கள்

    1. விரசம் அதிகம் உள்ளது
    2. வைரமுத்துவை விரட்டி விட்டார் .
    3. பல இயக்குனருடன் சமரசம் இல்லை
    4. ஜானகியை பாட வைத்து கட்டில் ராணி ஆக்கினார்
    5. ராஜா கூஜா பூவு நீவு என்று பாடல் எழுதினார்
    6. சாவுக் கொட்டு வாசித்தார் .

    ரூமை பூட்டிக்கிட்டு சிரிக்காதீங்க சார்!

    காரிகன் காமெடி பீசு என்று தெரிகிறதா ?
    காரணம் கேட்டால் சொல்லும் பதில் இப்படி! இசை பற்றி விளக்கிச் சொல்ல தெரியவில்லை . பண்டிட் பாலேஸ் என்ன அற்புதமாக இளையராஜாவின் இசை பற்றி விமர்சிக்கிறார் ! அவர் எங்கே..இவர் எங்கே?

    காரிகனின் பதில் பின்னூட்டம் படித்தால் ஒரு கதை ஞாபகம் வருகிறது .

    பசு மாட்டைப் பற்றி மட்டும் படித்துவிட்டு வந்த மாணவனிடம் தென்னைமரம் பற்றி கட்டுரை எழுதச் சொல்லி கேட்டால் பசு மாடு பற்றி விலாவாரியாக எழுதி வந்தவன் 'அப்படிப்பட்ட பசு மாட்டைதான்
    இந்த தென்னை மரத்தில் கட்டுவார்கள்' என்று முடித்து வைத்தானாம் !

    அணு அணுவாய் இளையராஜா இசையை அள்ளி பருகிய பேரின்ப அனுபவம் தனை எம்.எஸ்.வி ,ரகுமான் அடிவருடிகளிடம் எடுத்து சொன்னால் புரியவா போகிறது !?




    ReplyDelete
  75. யோலூஸ் ..சாரி ..யோகேஷ் ..லூஸ் டாக்கிங் .. ரொம்ப விடுறீங்க

    ReplyDelete
  76. காரிகன்,
    உங்கள் எல்லா பதிவுகளையும் வாசித்தேன். அடேயப்பா என்று வியப்பு ஏற்பட்டது. தமிழ்த்திரைஇசை தொடங்கிய 30 களிலிருந்து இன்றைய காலம் வரை நீங்கள் இசையைப் பற்றி எழுத முயன்றிருப்பது நன்றாக புலனாகிறது. பாபநாசம் சிவன் முதல் ஹேரிஸ் ஜெயராஜ் வரை இசைப் பற்றி எழுதுவது ஒரு மலையைப் புரட்டும் சிரமான பணி .இதற்கு நீண்ட பொறுமை, கடும் உழைப்பு, தகவல்களை சேகரிக்கும் அலுப்பான வேலை, அதை ஒருங்கே சரியாக சொல்லும் விதம் என்று பல சங்கதிகள் உண்டு. பாராட்டுக்கள். துவக்க கால இசையைப் பற்றி கேள்விஞானதைக் கொண்டு எழுதியிருப்பதாகப் பட்டாலும் அதன் பின் சரசர வென வேகம் பிடித்து வியப்பூட்டும் வகையில் உங்கள் பதிவுகளை எடுத்து வந்திருக்கிறீர்கள் என்றே நினைக்க தோன்றுகிறது. அருமை. உங்கள் இசை விரும்பிகள் பதிவுகளைப் போல இணையத்தில் வேறு யாரும் நீண்ட பதிவுகள் இசையைப் பற்றி எழுதினதில்லை. உங்கள் எழுத்து நடை நான் படிக்கும் பல இசை விமர்சனங்களை விட வேறு விதமாக இருப்பது ஒரு புதுமை. குறைஎன்று பார்த்தால் சில தகவல் தவறுகள் இடம்பெற தவறவில்லை என்பதை சொல்லலாம். யார்மீதும் சாயாமல் நேர்மையாக எழுதுவது உங்களின் சிறப்பு. தொடருங்கள். இளையராஜாவிடம் வந்துவிட்டீர்கள் இனி ரகுமான், ஹேரிஸ் என்று முடிந்துவிடும் என்று படுகிறது. மீண்டும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
    இப்படிக்கு
    வேணுகோபாலன்

    ReplyDelete
  77. திரு வேணுகோபாலன்,
    வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி. நான் இந்தப் பதிவுகளை எழுத விரும்பியதன் பின்னணியை அடையாளம் காணும் வெகுசிலரில் நீங்களும் ஒருவர். சிரமான பணி என்றாலும் ஆத்மார்த்தமாகவே செய்கிறேன். நீங்கள் சொல்வதுபோல ஆரம்பகால இசையைப் பற்றி எனக்கு first hand experience இல்லை என்பதால் சில விஷயங்களை சார்ந்தே எழுதவேண்டி இருந்தது. இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம் என்று இப்போது நினைக்கிறேன். நான் சரியான பாதையில்தான் பயணித்துகொண்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். எனக்கு வந்த பாராட்டுகளை விட எதிர்வினைகளே அதிகம். அந்த அளவுக்கு சிலர் இசையைப் பற்றிய குறுகிய சிந்தனை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். என் எழுத்தைப் படிக்காமல் என் மனதை படிக்க முயல்கிறார்கள். வேடிக்கை மனிதர்கள். இப்போது புயலிசை என்று அடுத்த பதிவுக்கு தலைப்பு வைத்ததும் இதோ பார் ரகுமானின் விசிறி இவன் என்று இப்போதே தாக்குதலுக்கு நடைபாதை தயார் செய்கிறார்கள். ரஜினியை விமர்சித்தால் நான் கமல் ஆள், எம் ஜியாரை விமர்சித்தால் நான் சிவாஜி ரசிகன் என்ற சிறுபிள்ளைத்தனமான டெம்ப்ளேட் எண்ணங்கள் இவர்களை இதற்கும் மேலே எப்படி சிந்திக்கத் தூண்டும்? மீண்டும் நன்றி உங்களுக்கு.

    ReplyDelete
  78. சந்தோஸ்4 September 2013 at 02:59

    அருமை. உங்கள் இசை விரும்பிகள் பதிவுகளைப் போல இணையத்தில் வேறு யாரும் நீண்ட பதிவுகள் இசையைப் பற்றி எழுதினதில்லை.
    வேணு கோபால் சார்
    நீங்கள் சுபாஸ் சந்திரபோஸ் காலத்தில் தொலைந்து இப்போது தான் நாடுதிரும்பியுல்லீர்களா?

    நீங்கள் உங்களுக்குத் தெரிந்த பாடல்களைப் பட்டியல் போடுங்கள்.அஹா ,ஓகோ என்று எழுதுங்கள்.அவ்வப்போது இளையராஜாவை நல்லா திட்டி விடுங்கள்.நீண்ட பதிவு கிடைத்துவிடும்.
    உடனே இரண்டு பேர் ஓடி வந்து இதைப்போல யாரும் இசை பற்றி நீண்ட பதிவு எழுதவில்லைஎன்று பரிசுப்பொதி தந்துவிடுவார்கள்.

    ReplyDelete
  79. அப்படியே இளையராஜாவை கண்டமேனிக்கு புகழ்ந்து எழுதுங்கள். உங்களுக்கு இசை மேதாவி என்று பட்டம் இலவசமாக கிடைக்கும்.

    ReplyDelete
  80. சார்லஸ் என்பவர் நகைச்சுவை என்ற பெயரில் எழுதும் பின்னூட்டங்கள் கொடுமையாக இருக்கிறது. அவர் எழுதுவதற்கெல்லாம் அவரேதான் சிரித்துக்கொள்ள வேண்டும். கொஞ்சமாவது சுரணையோடு எழுதுங்கப்பா.. தாங்கல..
    கிருபாகரன்

    ReplyDelete
  81. பிரதீபன்4 September 2013 at 06:40

    காரிகன்
    தங்கள் ஆக்கங்களை சமீபமாக வாசிக்க நேர்ந்த்து.பரவலாக அறியப்படும் சினிமாப்பாடல்களைப் பற்றி ஆய்வோ ,விமர்சனமோ இல்லாமையும் ,மைய்யமாக ஒரு குறிக்கோள் இல்லாமலும் எழுதுவதாக எனக்குப்படுகிறது.தங்கள் எழுத்து நடை இலகுவாக விவாதப் பொருளாகி விடக்கூடிய விதமாகவும் இருக்கிறது.
    உங்கள் அளவுகோல்கள் இளையராஜா என்றதும் சரிந்து மூன்றாம் தரமாகவும் ,நடுநிலை இல்லாமலும் நிலைகுலைந்து விடுகிறது.சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அதை நீங்கள் செய்வதாகவே கருதுகிறேன்.

    இதுவே ராஜாவின் அபிமானிகள் குற்றம் சாடுவதற்கு ஏதுவாக அமைந்து விட்டது என எண்ணுகிறேன்.இசையுலகில் இளையராஜாவுக்கு எல்லாத் தரப்பிலும் கிடைத்த ஆதரவு மற்றவர்களைத் தட்டி விழுத்தும் செயலுக்கு வலுசேர்த்தது போலும்.சில் அபிமானிகள் பொருளற்ற விவாத்தத்தில் ஈடுபட்டு வருவதும் ,சிலர் பொருள் அறிந்தும் பேசுவதைக் காண்கிறேன்.

    சினிமா இசையை பற்றி எழுதுவது என்பது இப்படி ஒரு , வசை பாடல் ,புகழ் பாடல் நிலையில் சிக்கி உள்ளது கேவலமாக இருக்கிறது.எழுத்து நடையோ , பாடுபோருளோ , சொல்லும் முறையோ மாற வேண்டிய அவசியம் உண்ட என நினைக்கின்றேன் எப்படி சொல்வது என்று புரியவில்லை.

    தீதும் நன்றும் பிறர் தர வாரா.

    ReplyDelete
  82. திரு சந்தோஸ்,
    இளையராஜாவை திட்டி எழுதினால் உங்களுக்கு என்ன இசைஞானம் இருந்தாலும் கணக்கில் வராது. அவப்பெயரே உண்டாகும்.எனவே பாதுகாப்புக்காக அவரை புகழ்ந்து எழுதுவதே நலம். எப்படி வசதி ?

    திரு ஷியாம்,
    சரியான கணிப்பு.நன்றி.

    திரு கிருபாகரன்,
    சால்ஸ் வரவர நீங்கள் சொல்வதைபோலத்தான் எழுதிக்கொண்டிருக்கிறார். His sense of humour is completely pathetic and devoid of wit. அவருக்குப் புரிந்தால் சரி.

    திரு பிரதீபன்,
    வருக. எவருடைய எழுதுமே விவாதப் பொருளாகிவிடக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. நான் மட்டும் விதிவிலக்கா என்ன? விமர்சனங்கள் எதிர்வினைகள் எல்லாமே இதில் ஒரு அங்கமே. நான் இளையராஜாவை மூன்றாந்தரமாக விமர்சனம் செய்வதாக நீங்கள் எண்ணுவது உங்கள் ராஜா அபிமானத்தின் மூலம் எனக்கு தரப்படும் செய்தி. உண்மை அல்ல. என் கருப்பொருளையோ எழுத்து நடையையோ மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் எனக்கில்லை.உங்களோடு உடன்படாதற்க்கு மன்னிக்கவும்.என் ஆக்கங்களை படித்தும் இளையராஜாவைப் பற்றி நான் எழுதியிருப்பதையே மையமாக வைத்து நீங்கள் கருத்திடுவது உங்களின் சார்பு நிலையை தெளிவாகவே காட்டுகிறது. என்னைப் பற்றி அதிக அக்கறை எடுத்துக்கொள்வதற்கு நன்றி.வேண்டுமானால் நீங்கள் இசையைப் பற்றி யாரும் விவாதம் செய்யாத அளவுக்கு பதிவுகள் எழுதலாம் என்று தோன்றுகிறது. ஆனால் என்ன பதிவுகளை விட பின்னூட்டமிடுவது வெகு இலகுவானது. சரிதானே?

    தீதும் நன்றும் பிறர் தர வாரா.
    இலக்கிய வாசத்தோடு என்னை இகழ்கிறீர்கள். இதற்கு இத்தனை மெனக்கெட வேண்டுமா? நேரடியாகவே செய்திருக்கலாம்.

    ReplyDelete
  83. திரு காரிகன்,
    நான் சொல்லவந்தது தமிழ் திரையிசைப் பற்றி chronicle இசை விரும்பிகள் பதிவுகளைப் போல வந்ததில்லை என்றே. மற்றபடி உலக இசை பற்றி நான் பேசவில்லை. சரியாக குறிப்பிடாததால் ஒருவர் கேலிபேசுகிறார். மன்னிக்கவும்.

    ReplyDelete
  84. மீண்டும் வருக திரு வேணுகோபாலன் சார்,
    நீங்கள் தெளிவாகவே எழுதியிருந்தாலுமே அவர்கள் இப்படித்தான் கேலி பேசுவார்கள். இதற்கு எதற்கு மன்னிப்பு என்ற பெரிய வார்த்தையெல்லாம்? விடுங்கள்.

    ReplyDelete
  85. திரு காரிகன்,
    பொதுவாக இசையை விமர்சிப்பவர்கள் இரண்டுவிதமான நிலைகளை முன்னிறுத்தி அதன்வழியே தங்கள் கருத்துக்களை தெரிவிப்பார்கள். ஒன்று ஒரு பாடலில் உள்ள ராகங்கள், இசை கோர்ப்பு, அதன் பிணைப்பு அவைகளை எப்படி ஒரு இசை அமைப்பாளர் திறமையாக கையாள்கிறார் என்பது போன்ற இசை நுணுக்கங்களுடன் கூடிய ஆய்வு. இரண்டாவது ஒரு தனி மனித இசை ரசிப்பின் மாயாஜாலங்களை வார்த்தைகளாக விவரிப்பது. ஒரு பாடலை வரிவரியாக எழுதி அந்த இசை அவர்களை என்ன செய்தது என்று உயர்வாக சொல்வது. இரண்டாவதைத்தான் அதிகமான இசை ரசிகர்கள் செய்துவருகிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை அது ஒரு தனி மனிதனுக்கு தோன்றக்கூடிய உணர்ச்சி. அதை பொதுவில் வைப்பது எந்த உண்மையையும் நேர்த்தியாக உணர்த்தாது. உங்களுடைய எழுத்தோ இது இரண்டையும் செய்யாமல் இருப்பது அதாவது இவர் ஆய்வு செய்கிறாரா அல்லது விமர்சிக்கிறாரா என்பது புதிராகவே இருக்கும்படி தோற்றம் கொள்வதால் சிலருக்கு அது விவாதப் பொருளாக காட்சி தருகிறது போலும். இசையை இப்படித்தான் அணுகவேண்டும் என்ற சில விதிகளை நாம் தாண்டிவரவேண்டும் என்று நீங்கள் எண்ணுவதாகவே நான் நினைக்கறேன்.

    ReplyDelete
  86. கிருபாகரனுக்கு நான் கிச்சு கிச்சு மூட்டியும் சிரிப்பு வரவில்லை என்கிறார் . சுரணையோடு எழுதுவது எப்படி என்று அவர் எனக்கு புரிய வைத்தால் நல்லது . காரிகன் சுரணையோடு எழுதுகிறாரா என்பது தெரியுமா ? இளையராஜாவின் பத்து பாடல்கள்தான் அவருக்கு பிடிக்கும் என்பதால் பத்து பாடல்களுக்கு மேல் எதுவும் சரியில்லை என்ற பொய்யை பதிவாக வைக்கலாமா ? நிஜம் அதுவா?
    மதன் மோகன் அவர்களே ! நீங்கள் சொல்லியது .....

    ///பொதுவாக இசையை விமர்சிப்பவர்கள் இரண்டுவிதமான நிலைகளை முன்னிறுத்தி அதன்வழியே தங்கள் கருத்துக்களை தெரிவிப்பார்கள். ஒன்று ஒரு பாடலில் உள்ள ராகங்கள், இசை கோர்ப்பு, அதன் பிணைப்பு அவைகளை எப்படி ஒரு இசை அமைப்பாளர் திறமையாக கையாள்கிறார் என்பது போன்ற இசை நுணுக்கங்களுடன் கூடிய ஆய்வு. இரண்டாவது ஒரு தனி மனித இசை ரசிப்பின் மாயாஜாலங்களை வார்த்தைகளாக விவரிப்பது. ஒரு பாடலை வரிவரியாக எழுதி அந்த இசை அவர்களை என்ன செய்தது என்று உயர்வாக சொல்வது. இரண்டாவதைத்தான் அதிகமான இசை ரசிகர்கள் செய்துவருகிறார்கள்.///

    தனி மனித இசை ரசிப்பு தனி மனிதனுக்குள்ளேயே அழிந்து விடாமல் எல்லா மனிதருக்கும் போய்ச் சேரும்படி ஒரு படைப்பாளி கொடுக்க நேரிடும்போது தன்னால் செய்ய முடியாததை மற்றொரு மனிதர் மூலம் கிடைக்கும் மாயாஜாலங்களாக மனிதன் ஏற்றுக் கொள்கிறான் . அவனே ரசிகன் . அவனை கொச்சைப் படுத்தக் கூடாது .
    காரிகனின் ஜாலங்களை கவனியுங்கள் !

    இளையராஜா கிராமத்து இசையின் உண்மை ரூபத்தை அழகாக கொடுத்தார் என்று சொன்னால் முன்னோர்கள் கொடுத்திருக்கிறார்கள் என்கிறார் .
    இடை இசை , முன்னிசை நயம்படவும் வேறுபட்டதாகவும் வித்தியாசமாகவும் புதுமையாகவும் கொடுத்திருக்கிறார் என்று சொன்னால் இல்லை இல்லை முன்னவர்கள் கொடுத்திருக்கிறார்கள் என்கிறார் .
    திரை இசையில் பல புதுமைகளை செய்திருக்கிறார் என்று வாதாடினால் இல்லை முன்னவரும் புதுமை செய்திருக்கிறார்கள் என்கிறார் .
    ஒவ்வொரு இசைக் கருவி வாசிப்பவருக்கும் நோட்ஸ் எழுதி அதன் சாரம் சிறிதும் மாறாதபடி கொடுப்பார் என்றால் இல்லை முன்னவர்கள் அதை செய்திருக்கிறார்கள் என்கிறார் .

    விரசம் உள்ள பாடல்கள் நிறைய இசை அமைத்துள்ளார் என்று காரிகன் சொல்லும்போது இல்லை இல்லை முன்னவர்களும் அதைச் செய்திருக்கிறார்கள் என்று பதிலுக்கு நாங்க இளையராஜா ரசிகர்கள் சொல்கிறோம் . அது மட்டும் தப்பாம் !!

    என்ன கொடுமை மதன் மோகன் !?

    நீங்கள் நினைப்பது மாதிரி அவர் ஆய்வும் செய்யவில்லை வாய்வும் செய்யவில்லை . இளையராஜாவை நிறைய பாராட்டுகிறார்களே என்ற எரிச்சலில் குறை கண்டு பிடிக்கும் ஒரு சாடிச மனப்பான்மை . அவ்வளவுதான் !


    ReplyDelete
  87. வேட்டைக்காரன்5 September 2013 at 23:06

    3005/56726490/04/000


    //
    ஒருமுறை என் கல்லூரி நண்பனொருவன் இசை பற்றிய விவாதத்தில் "தமிழ் இசையை கெடுத்ததே இளையராஜாதான்" என்று வெகு காட்டமாக குற்றம் சுமத்தினான்.வீடுகளின் வெளியே கேட்டுக்கொண்டிருந்த சாவுக்கொட்டு என்று சொல்லப்படும் இசையை வீடுகளின் உள்ளேயும் ஒலிக்க வைத்தவர் இவர் என்று அவன் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது இளையராஜா பற்றிய நாட்டம் அதிகம் இல்லாத காரணத்தினால் அதைப் பற்றி நான் மேற்கொண்டு தெரிந்து கொள்ள விரும்பவில்லை.கொஞ்சம் இதை ஆராய்ந்தோமானால் இதில் உண்மை இருப்பதையும், இசையில் வடிக்க முடியாத சில ஓசைகளை இளையராஜா இசையாக மாற்றி இருப்பதையும் உணரலாம்.
    //

    //அப்போது அங்கே பிரபலமாக இருந்த பாப், ராக், ஹெவி மெட்டல், சிந்த்-பாப், ரகே போன்ற பலவகையான இசை வடிவங்கள் தமிழ்க் கரையோரம் ஒதுங்கவேயில்லை. //

    பறை தமிழர்களின் இசை. அதை சாவுக்கொட்டு என்று எளிதில் புறந்தள்ளும் நீங்கள் ஒலக இசையை உள்ளூரில் கொண்டுவரவில்லை எனவும் குற்றஞ்சாட்டுகிறீர்கள். விந்தைதான். ஏற்கனவே அழித்ததுபோல் இப்பின்னூட்டத்தையும் அழிக்கமாட்டீர்களே?

    ReplyDelete
  88. திரு மதன் மோகன்,
    கருத்துக்கு நன்றி. இசை ஆய்வெல்லாம் நான் செய்யவில்லை என்பதை பலமுறை சொல்லி இருக்கிறேன். தமிழ்த்திரையிசை அதன் ஆரம்பகாலத்திலிருந்து தற்போதுவரை எவ்வாறு மாறிக்கொண்டு வருகிறது, எப்படி அதன் தரம் எவ்வாறு இன்றைக்கு இருக்கும் அளவுக்கு கீழிறங்கியது என்பதையே பதிவுகளாக எழுதிக்கொண்டு வருகிறேன். இசை ஆய்வல்ல இசை விமர்சனம் என்று வைத்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
  89. நாய் குரைப்பதிலும் இசை உண்டு என்று துணிந்து சொன்னவர் ராஜா.அவர் பயன் படுத்தாத இசையே இல்லை.
    பறை எனபது தமிழரின் பெருமைமிக்க வாத்தியம்.முருக வழி பாடு என்ற பழந்தமிழரின் பண்பாட்டில் பறை என்ற வாத்தியத்திற்கு மிக முக்கியத்துவம் உண்டு.அதை வாசித்தவர்கள் பழங்காலத் தமிழ் அந்தணர்கள் ஆன பறையர்கள். அவர்களின் தலைமைத் துவத்தை நிராகரிக்கவே அவர்களையும் ,அந்த வாத்தியத்தையும் இழிவு செய்தார்கள்.
    இந்தக் கூற்றை பேராசிரியர் மருதமுத்து " புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் யார்?" என்றதனது கட்டுரையில் எழுதி உள்ளார். அந்தக் கட்டுரை இனிஒருவில் மிக சமீபத்தில் வெளியானது.
    காரிகன் அவர்களே தயவு செய்து நமது பண்பாட்டின் விழுமியங்கள் புரியாமல் எழுத வேண்டாம்.

    சுய சரக்கு இல்லாத மரமண்டைகள் தான் நீங்கள் பரிந்துரைக்கும் " உலக " இசை கொண்டு நமது இசையை சீரழித்து வருகின்றனர்.

    ReplyDelete
  90. கழுதையையே பாடவைத்தவர் நாய் குலைப்பதில் இசையை கண்டுகொள்வதில் ஆச்சர்யங்கள் ஒன்றுமில்லை. அவர் இதை மட்டுமா சொன்னார்? நிறையவே சொல்லியிருக்கிறார்.அதையெல்லாம் எழுத ஆரம்பித்தால் பிறகு உங்களுக்கெல்லாம் ரத்தக்கொதிப்பு அதிகரித்துவிடும் அபாயம் இருக்கிறது. ஒரு வாத்தியக்கருவி இசைக்கப்படும் விதத்தாலேயே பெருமை அடைகிறது.அதனால் பறை என்ற இசையை குறை சொல்வதில் அர்த்தமில்லை. எனக்கும் இது தெரியும்.
    கொச்சை வார்த்தைகள் தவறில்லை. விரசம் தவறில்லை. கழுதை கத்தும் ஓசை தவறில்லை. முக்கல் முனங்கல்கள் தவறில்லை. சரியே. பிறகு தற்காலத்து இசை மட்டும் காதுகொடுத்து கேட்கமுடியாத அளவுக்கு கெட்டுப்போயிருக்கிறது என்று ஏன் குற்றம் சொல்லவேண்டும்? அப்படி என்ன தவறு இக்காலத்து இசையில் இருக்கிறது என்பதை பட்டியலிடவும். இளையராஜாவை தாண்டியும் இசை இங்கே இன்னும் இசைக்கப்படுவதால் அதை அவரின் தீவிர ரசிகர்களால் ஜீரணித்துக்கொள்ளமுடியவில்லை என்ற ஒரே அற்பத்தனமான காரணத்தைவிட வேறு எதுவும் இல்லை.

    உலக இசையை காலம் காலமாக எல்லா இசை அமைப்பாளர்களும் இங்கே இறக்குமதி செய்து கொண்டிருந்தவர்கள்தான். இளையராஜா மேற்கத்திய இசையை தொடாமலேயே பாடல்கள் அமைத்தாரா என்ன? இதில் என்ன சிலரை மட்டும் குறிவைப்பது?

    ReplyDelete
  91. காரிகன் அவர்களே
    மேற் காணும் உங்கள் எழுத்தை மட்டும் யாரும் பார்க்க நேர்ந்தால் அறிவு பூர்வமாக எழுதுபவர் போல தெரியும்.

    "சாவு மேளம் "என்ற அறியாமைப் புலம்பலுக்கு பதில் சொன்னோம்.இப்போ " காலகாலமாக " என்ற புலம்பலை எடுக்கிறீர்கள்.போலிப் பெருமைக்கு நீங்கள் புகழும் பழைய இசையமைப்பாளர் ஒருவரின் பாடல் ஆபாசம் என்று அப்படிப்பட்ட ப்டத்தில் நன் எழுத மாட்டேன்.என்றும் சொன்ன கவிஞரின் பேரை சொல்லி ஒரு பரிசு கேள்வி ஒன்றையும் கேட்டோம்.அதை நைசாக கழட்டி விட்டு வேறு இடத்துக்கு தாவி விட்டீர்களே? பரவாய் இல்லை அது உங்கள் பிறவிக் குணம்.

    " இளையராஜா பாடல் எழுதக் கூப்பிட்டார் அந்த இசை ஆபாசமாக இருக்கிறது.அதனால் நான் எழுத மறுத்தேன். பின் வேறொரு கவிஞர் அதை எழுதினார்." என்று சொல்லக் கூடிய ஒரு கவிஞனைக் காட்டுங்கள் பார்க்கலாம்.அவ்வளவு நேர்மை உள்ள கவிஞன் இன்று யாராவது உள்ளானா?
    உங்கள் கவனம் நல்ல பாடல் வரிகளில் என்றால் முதுகெலும்பில்லாத கைஞர்களைத் தான் சாடியிருக்க வேண்டும்.
    ராஜ ,ரோஜா என்று எழுதும் கவிஞர்கள் தானே இப்போதும் உண்டு.

    இளையராஜா விடுகிற மூச்சு கூட இசை தான் என்று ராஜாவுக்கு முதுகு சொரிந்த வைரமுத்து தானே தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு என்று எழுதி விட்டு ஆங்கிலத்தில் கலந்து ஏதேதோ கிறுக்குகிறார்.நீங்க திட்டுவதென்றால் கவிஞர்களைத் தான் திட்ட வேண்டும் ஐய்யா.

    மீண்டும் சொல்கிறோம் ராஜா படத்தின் சூழ்நிலைக்கு பாடல் கொடுத்தார்.அவருக்கு பின்னால் வந்த " இசைத்தண்டிகள் "தான் தமிழ் படத்துக்கு அரேபிய இசையையும் , சகட்டு மேனிக்கு , பொருத்தமில்லாத மேலைநாட்டு இசைகளையும் கொழுவிக் கொண்டு திரிகிறார்கள்.
    ஊரவன் போட்ட பல்லவிகளை உருவி அங்கொன்றும் இங்கொன்றுமாக வெட்டிக்கொத்தி ஒட்டு வேலை செய்வதும் ,பத்தாம் பசலிகள் அதை காவிக் கொண்டு திரிவதுமான கேவலம் நிகழ்கிறது.
    ரகுமான், சிப்பி , யுவன் சங்கர்ராஜா , ஹரிஸ் ஜெயராஜ் இன்னும் பல " பிறர் கையேந்திகள்" பெரிய ஆட்களாக உலா வருகிறார்கள்.இவர்களில் மிகப் பெரிய இசை பிச்சைக்காரன் யார் என்று எல்லூக்கும் தெரியும்.

    காரிகன் நீங்கள் கொஞ்சம் திண்டுக்கல் லியோனியின் பட்டி மற்றம் கேட்டால் நலம் உண்டு.

    // ஒரு வாத்தியக்கருவி இசைக்கப்படும் விதத்தாலேயே பெருமை அடைகிறது.அதனால் பறை என்ற இசையை குறை சொல்வதில் அர்த்தமில்லை. எனக்கும் இது தெரியும். // காரிகன்
    என்னே ஒரு ஞானோதயம்.!!!

    மீண்டும் ..மீண்டும் இசை அறியாமை.
    ///உலக இசையை காலம் காலமாக எல்லா இசை அமைப்பாளர்களும் இங்கே இறக்குமதி செய்து கொண்டிருந்தவர்கள்தான். இளையராஜா மேற்கத்திய இசையை தொடாமலேயே பாடல்கள் அமைத்தாரா என்ன? இதில் என்ன சிலரை மட்டும் குறிவைப்பது?/// - காரிகன்

    மற்றவர்கள் ஆங்கங்கே ஒரு சில பாடல்களில் மட்டும் மற்ற நாட்டு இசையை பயன்படுத்தினார்கள்.அவற்றை தமிழ் புரியும் வண்ணமும் தந்ததால் ஓரளவு மன்னிப்பும் அவர்கள்பெற்றார்கள் .இன்றோ ஆங்கிலப்பாடல்கல் என்று தெரிய வேண்டும் என்றே " இசையமைக்கப்படுகிறது". இது ஒரு பாமரனுக்கும் தெரியும்.
    ஐயா இசை விமர்சகரே உண்மையை உணர ஈக்கோ விடு தில்லைப் போலே.இசை அறியாமையில் இருந்து மீழ முயற்ச்சியுங்கள்.

    ReplyDelete
  92. "மீண்டும் சொல்கிறோம் ராஜா படத்தின் சூழ்நிலைக்கு பாடல் கொடுத்தார்.அவருக்கு பின்னால் வந்த " இசைத்தண்டிகள் "தான் தமிழ் படத்துக்கு அரேபிய இசையையும் , சகட்டு மேனிக்கு , பொருத்தமில்லாத மேலைநாட்டு இசைகளையும் கொழுவிக் கொண்டு திரிகிறார்கள்.
    ஊரவன் போட்ட பல்லவிகளை உருவி அங்கொன்றும் இங்கொன்றுமாக வெட்டிக்கொத்தி ஒட்டு வேலை செய்வதும் ,பத்தாம் பசலிகள் அதை காவிக் கொண்டு திரிவதுமான கேவலம் நிகழ்கிறது.
    ரகுமான், சிப்பி , யுவன் சங்கர்ராஜா , ஹரிஸ் ஜெயராஜ் இன்னும் பல " பிறர் கையேந்திகள்" பெரிய ஆட்களாக உலா வருகிறார்கள்.இவர்களில் மிகப் பெரிய இசை பிச்சைக்காரன் யார் என்று எல்லூக்கும் தெரியும்."

    விமல் என்பவருக்கு,
    எல்லா தெரிஞ்சாப்ல சும்மா உளறக்கூடாது. இளையராஜாவும் மக்கள் வயக்காட்டுல பாடுன பாட்டையும் கோவில் திருவிழா வில பாடின பாட்டையும் தன் அண்ணனோட கம்யுனிஸ்ட் பிரச்சார பாட்டையும் எதோ தன்னோட பாட்டு மாதிரி உருவி போட்டவர்தான். அப்ப அவரையும் இசை பிச்சைக்காரன்னு வச்சுக்கலாமா?

    ReplyDelete
  93. ரிம்போச்சே7 September 2013 at 06:26

    // இளையராஜாவும் மக்கள் வயக்காட்டுல பாடுன பாட்டையும் கோவில் திருவிழா வில பாடின பாட்டையும் தன் அண்ணனோட கம்யுனிஸ்ட் பிரச்சார பாட்டையும் எதோ தன்னோட பாட்டு மாதிரி உருவி போட்டவர்தான். அப்ப அவரையும் இசை பிச்சைக்காரன்னு வச்சுக்கலாமா?//

    அந்தப் பாடல்களில் என்ன ஒரு 4000 ட்யூன்கள் இருக்குமா? அப்படி அதுக்கும் மேல இன்னும் இருந்துச்சுன்னா ஏன்யா எல்லோரும் அத விட்டுபுட்டு ஒலக இசையைத் தேடி ஓடுகிறீர்கள்?

    ReplyDelete
  94. "ஐயா இசை விமர்சகரே உண்மையை உணர ஈக்கோ விடு தில்லைப் போலே.இசை அறியாமையில் இருந்து மீழ முயற்ச்சியுங்கள்."

    திரு விமல் அவர்களே,

    நீங்கள் மிகுந்த கொதிப்பில் இந்த பின்னூட்டத்தை எழுதியிருப்பதை இதில் தென்படும் பல பிழைகளே தெரியப்படுத்துகின்றன. கொஞ்சம் நிலைமை சீரானபின் எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
    உங்களின் பின்னூட்டங்களிலிருந்து தெரிபவை இவை.
    1.எனக்கு இசை அறிவு கிடையாது. ஏன் இசை அரிச்சுவடியே அறியாதவன்.
    2.எனக்கு பழைய இசை அமைப்பாளர்களைப் பற்றி ஒன்றும் தெரியாது.அவர்களை இளையராஜாவை திட்டுவதற்காகவே புகழ்கிறேன்.
    3.நான் ரகுமான் ரசிகன்.
    4.நான் ஏன் பதிவுகள் எழுதவேண்டும்?
    5.இளையராஜாதான் ஒரே உண்மையான சிறந்த இசைஅமைப்பாளர் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

    வலிந்து வலிந்து நீங்கள் என்னை வம்புக்கு இழுப்பது போன்ற பின்னூட்டங்கள் எந்தவிதமான நன்மையையும் தரப்போவதில்லை. உங்களைப் போன்ற ஆட்களுக்காகத்தான் பதிவின் துவக்கத்திலேயே ஒரு எச்சரிக்கை செய்திருந்தேன். திரு சால்ஸ் அவர்களின் பதிவில் காரிகனை இந்த முறை விடப்போவதில்லை என்று நீங்கள் சபதம் செய்தது இதற்காகத்தான் போலிருக்கிறது.

    நான் ஒருமுறை உங்களை இரட்டை நாக்கு கொண்டவர் என்று சொல்லியிருக்கிறேன். அவ்வளவே. அதுவும் என்னைப் பற்றி வேறுஒரு தளத்தில் நீங்கள் கூறிய ஒரு கருத்தை வைத்தே அப்படி சொன்னேன்.நீங்கள் என் பதிவுகளை விமர்சிக்கும் அதே வேளையில் என்னை முடிந்தவரை தாக்குவதை சம்பிரதாயமாகவே செய்துவருகிறீர்கள். என் பிறவி குணத்தை பற்றி அதிகமாக அலட்டிக்கொள்கிறீர்கள். இது விவேகமான அணுகுமுறையாக எனக்குத் தோன்றவில்லை. என்னை திட்டுவது உங்களுக்கு மன ஆறுதலை கொடுக்கும் பட்சதில் எனக்கு அதில் ஆட்சேபனை எதுவும் கிடையாது. ராஜா ரசிகர்கள் இதைக் கூட செய்யாவிட்டால் நன்றாகவா இருக்கும்? இது உங்களுக்குத் தெரிந்த பண்பாடு.

    வைரமுத்து இளையராஜாவை புகழ்ந்ததும், பிறகு ஒரு சார்பாக நிலை எடுத்ததும், எடுப்பதும் தெரிந்ததே. சிலர் அவரை ஜால்ரா கவிஞர் என்று கூட சொல்வதுண்டு. அதைப் பற்றி எனக்கென்ன? ராஜா ரோஜா என்று எழுதும் கவிஞர்களை நான் குறை சொல்லவேண்டும் என்று யோசனை கூறுகிறீர்கள். அருமை. ஆனால் அப்படிப்பட்ட கவிதைகளை விருப்பத்துடன் வரவேற்றவரல்லவா உங்கள் இ.ராஜா?அவரின் சம்மதம் இல்லாமலா இத்தனை கவிகெட்ட சாக்கடைகள் அரங்கேறியிருக்கும்?அது போன்ற கவிதைகளை அரவணைத்து, நெஞ்சு முழுவதும் நிரம்பிய தற்புகழ்ச்சிக்கு அணை போடாமல் இத்தகைய தரங்கெட்ட கவிதைகளை வளர்த்து விட்ட அவரை ஒரு வரி கூட நான் விமர்சனம் செய்யக்கூடாது என்று நீங்கள் ஆணை இடுவது கேலிக்கூத்து. இது நீங்கள் இன்னும் பலபடிகள் ஏறி வரவேண்டும் என்பதை உணர்த்துகிறது. என்னை விமர்சிப்பதும் எப்படி நான் எழுதவேண்டும் என்று பாடம் புகட்ட முயல்வதும் மட்டுமே உங்களின் கருத்தாக இருக்கிறது.நீங்கள் மாறப்போவதில்லை என்று நிரூபணமாகிவிட்டது. நீங்கள் மாறவேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கவும் முடியாது. ஆனால் என்ன? என்னை இகழ்வதால் என் பதிவுகளின் ஒரு எழுத்தைக்கூட உங்களால் மாற்ற முடியாது என்பதை மட்டும் இறுதியாகவும் உறுதியாகவும் சொல்லிக்கொள்கிறேன். வந்தனம்

    ReplyDelete
  95. வேட்டைக்காரன்7 September 2013 at 06:37

    //ஆனால் அப்படிப்பட்ட கவிதைகளை விருப்பத்துடன் வரவேற்றவரல்லவா உங்கள் இ.ராஜா?அது போன்ற கவிதைகளை அரவணைத்து, நெஞ்சு முழுவதும் நிரம்பிய தற்புகழ்ச்சிக்கு அணை போடாமல் இத்தகைய தரங்கெட்ட கவிதைகளை வளர்த்து விட்ட அவரை ஒரு வரி கூட நான் விமர்சனம் செய்யக்கூடாது என்று ஆணை இடுவது நீங்கள் கேலிக்கூத்து.//

    பாடலுக்கு சரியான வரிகளைத் தேர்ந்தெடுப்பதில் படத்தின் இயக்குநரின் பங்கு என்ன? ஏதோ வார்த்தைகளை place-filler ஆக போட்டால் போதும் என நினைத்த மஞ்ச மாக்கான்களா அவர்கள்? இல்லை இந்தப் பாடலுக்கு இந்த வரிகள் போதும் என்று அவர்கள் முடிவெடுத்தார்களா?

    ராஜா காலத்திலாவது அவரோ அல்லது அவர் உதவியாளர்களோ பாடும்போது வார்த்தைகள் இசையுடன் பொருந்தி வருகிறதா என பதிவின் போது கவனித்துத் திருத்தினார்கள். இப்போது ஒரு வடக்கத்தியப் பாடகர் வந்து சொற்களை பிழிந்து போட்ட ஜிலேபி போலப் பாடினாலும் கவலையே இல்லாமல் காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  96. ரிம்போச்சே7 September 2013 at 06:39

    காரிகன் சார்,

    Let us agree to disagree.
    அடுத்த இடுகை எப்போ போடப் போறீங்க?

    ReplyDelete
  97. காரிகன்,

    ஒரு பின்னூட்டம் போட்டுட்டு போனது,வந்துப்பார்த்தா கலைக்கட்டியிருக்கு!

    தொடர்ந்து தொடராமல் போனதற்கு மன்னிக்கவும், இனி தொடர்கிறேன்,

    நான் திறனாய்வு என சொன்னதுக்கு ரொம்ப ஃபீல் செய்தீங்க, பாருங்க அமுதவன் சார் எப்படிலாம் சொல்லி இருக்காங்கன்னு, உண்மையில் விரிவான அலசல், இப்படியான இசை அலசல் கட்டுரைகள் தமிழ் பதிவுலகில் அரிதே, அமுதவன் சார் வேற "கல்யாண சாப்பாட்டுக்கு" அப்புறம் ஃபுல்ஃபோம்ல இருக்காங்க, நான் தான் வழக்கம் போல "பந்திக்கு" லேட்டு ,ஆனாலும் விடுறதாயில்லை, நூறு அடிச்சிடுவோம்.

    நிறைய ரசிக சிகாமணிகள் வேறு வந்திருக்காங்க, இனி கச்சேரி ஆரம்பம் தான்!

    # ஆரம்பத்துல விட்ட இடத்தில் இருந்து கொஞ்சம் ஆரம்பிச்சுக்கிறேன்,

    //பாடல்களுக்கென தரம் என்று எதுவும் இல்லை என்று நினைக்கிறீர்களா? பின்னர் இன்றைய காலத்து பாடல்கள் காதுகொடுத்து கேட்கமுடியாதவாறு இருப்பதாக பொதுவாக எல்லோரும் குறை சொல்ல்வது ஏன்?//

    பாடல்களுக்கென்று தரம் இருக்கு,ஆனால் தரமில்லாதவை என்பதற்கும் ஒரு தரம் இருக்கு ,there is no absolute "Zero" :-))
    குஜாலா போட்ட பாட்டு ,சிச்சுவேஷன் அப்படினு அவற்றை எல்லாம் "இடக்கர் அடக்கல்" ஆக இட்டு செல்லலாம் என்பதே எனது கருத்து.

    அந்த காலம் போல இந்த காலம்ம் இல்லைனு எப்பவும் சொல்வது தானே,

    புதிய பறவை படத்தில் வரும் " உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் பாடலில் "கூட பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை" என வருவதாக நினைவு, கம்ப ராமாயணம் எழுதிய காலத்தில் கூட "புலவர்கள்" சிலர் இது சங்க இலக்க்கியம் போல தரமாயில்லை என சொல்லி இருக்கக்கூடும், இப்படியான கூற்றுக்கள் எல்லாம் "காலத்தின் கட்டாயம்"

    # //அவ்வாறான இசை குழுக்களின் சி டி க்களில் Parental Advisory: Explicit Lyrics என்ற லேபில் இருக்கும்.//

    நம்ம ஊரிலும் இப்படி கொண்டு வரவேண்டும், அக்கால தூர்தர்ஷனில் "ஒலியும் ஒளியும்" நிகழ்ச்சிகளில் குஜாலான பாடல்களை போடவே மாட்டார்கள், சில சமயம் எடிட் செய்து கூட போடுவார்கள். சில சமயம் லேசான குஜால் சாங் போட்டால் கூட விமர்சிப்பார்கள் :-))

    ஹி...ஹி ஆனால் அதே தூர்தர்ஷனில் வெள்ளியன்று இரவு 'உலகப்படங்கள்" போடுவார்கள் " நல்ல காட்சி தரிசனங்கள்" கிட்டுவதுண்டு :-))

    எனவே தூர்தர்ஷனை 'பலான சேனல்" என சொல்லிவிட முடியாதல்லவா?

    # //ஆனால் இலக்கியம் இசையைப் போல பொதுவாக ரசிக்கப்படுவதல்ல. அதை அமைதியாகவே படித்துவிடலாம். //

    அக்காலத்தில் இருந்த ஒரே ஊடகம் இலக்கியம் மட்டுமே, இயல்,இசை,நாடகம் என சொன்னாலும் எல்லாம் ஒரே போல "செய்யுள்/பாடல் வகையே. வேறு எதுவுமே இல்லை, இப்போ போல "செலக்டிவாக" சைவமான மனப்பாட செய்யுள் மட்டுமே படிக்க முடியாது, கம்பராமாயணம் என்றால் முழுக்க பாராயணம் செய்து படிப்பார்கல்,அதுவும் கூட்டம்மாக ஒரு குருகுலம்/திண்ணைப்பள்ளி மாணவர்கள் எல்லாம் :-))

    எனவே நம்ம சங்க தமிழ் இலக்கிய காலங்களில் அவை தான் " பொது இலக்கியம்,அவையே தனி இலக்கியம், தனியறையில் படிக்க ஒன்று , பொதுவாக்க படிக்க ஒன்ரெல்லாம் அப்போதில்லை!

    இக்காலத்தில் பல ஊடகம்,இலக்கியம் இருக்கு என்பதால் நம்ம வசதிக்கு தனியா படிக்கும் போது தான் "குஜால்" என பிரிச்சு வைக்கும் வசதி இருக்கு,அப்போ இல்லை எனவே அப்போ அதனை எல்லாம் ஆபாசாம்/கொச்சை என பார்க்கவில்லை என்றே சொல்லலாம்!

    திரையிசை என்பது படிச்சவன் முதல் படிக்காதவன் வரைக்கும் அனைவருக்கும் சென்றடைய வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டிய சூழலில் " ஒரு பாடலில் பூங்கதவே தாழ் திறவாய் என பாடிவிட்டு இன்னொரு பாடலில் வாடி என் கப்பங்கிழங்கே எனவும் இசைக்க வேண்டியது தான்.

    ஹாரிஸ் இசையில் வந்த அடியே சக்கர வள்ளியே என வரும் பாடல் கொச்சையாக ஆரம்பிக்கும் போல தெரியும் அதில் "நங்காய்" நிலாவின் "தங்காய்' என்றும் வரும், கேட்கிறவங்களுக்கு சர்க்கர வள்ளி கூட புரியுது ஆனால் "நங்காய், தங்காய்' புரியலை ஏதோ தப்பா எழுதிட்டாங்க,, தமிழை கொலைப்பண்ணிட்டதாக்கூட சிலர் நினைக்கக்கூடும், ஆனால் அவை தமிழ் மறந்து போன நல்ல தமிழ் சொற்களே,பாடல் மதன்கார்க்கி.

    நங்கை என்ற சொல்லின் விளிச்சொல் " நங்காய்" ,நங்கையே என அழைப்பதாகும், அதே போல தங்கை என்ற சொல்லின் விளிச்சொல் "தங்காய்".

    எனவே கொச்சையாக தோன்றும் பாடலிலும் "நல் முத்துக்கள்" கிடைக்கலாம், ஹி...ஹி வாடி எங்கப்பங்கிழங்கே பாடலை கேட்டப்பிறகு தான் எனக்கு கப்பங்கிழங்கு என்றால் "மரவள்ளிக்கிழங்கு என்ற அறிதல் ,புரிதல் கூட வந்தது :-))

    தொடர்வேன்....

    ReplyDelete
  98. காரிகன் அவர்களே !

    விமல் அவர்கள் என் பதிவில் சொன்ன ' காரிகனை விடப்போவதில்லை ' என்ற வார்த்தைகளை ஆரோக்கியமாக எடுத்துக் கொள்ளுங்கள் . தர்க்கம் இருவருக்குள்ளும் ஆரோக்கியமானதாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது . அற்புதமான விஷயங்கள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன .

    நீங்கள் அவர் கேட்கும் கேள்விகளை அழகாக தவிர்த்து வேறு பாதைக்கு மாற்றும் எழுத்து நடையில் கில்லாடியாக இருக்கிறீர்கள் . மேலோட்டமான பார்வையில் பார்த்தோ கேட்டோ எந்த
    ஒரு இசை அமைப்பாளரையும் எளிதாக குற்றம் சொல்லி விடலாம்தான்! உங்களுக்கு அது எளிய கலை .

    உற்று நோக்கல், கூர்ந்து ஆராய்தல் , ஆழ்ந்து கேட்டல் , அனுபவித்து உணர்தல் என்பது எந்த இசைக்கும் அவசியம் . ஆங்கில இசைக்கு அடிமையான நீங்கள் மேற்குறிப்பிட்ட விஷயங்களை இளையராஜா இசைக்கு கொடுத்துக் கேட்டிருப்பீர்களா என்பது சந்தேகம்தான் . எனவே உங்களின் இசை ரசனை இந்திய இசை இல்லாத மற்ற நாட்டு இசைக் கலவை செய்யும் இசை அமைப்பாளர்கள் மேல்தான் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது .

    இன்னும் விரசத்தை விட மாட்டேன் என்கிறீர்கள் . அதுவும் வாழ்க்கையின் அங்கம்தான்! கிராமங்களில் தெருக்கூத்து ,கரகாட்டம் எல்லாம் பார்த்திருக்க மாட்டீர்கள் . விரச பாடல்கள் அவ்வப்போது பாடப்படுவதை ஆணும் பெண்ணும் சேர்ந்தேதான் ரசிப்பார்கள். அதைதான் இளையராஜாவும் கொடுத்தார் . புதிய வார்ப்புகள் படத்தில் ஒரு தெருக்கூத்து பாடல் வரும் . கிராமத்து இசையை மக்கள் ரசித்த இசையை மிக அழகாக கொடுத்திருப்பார் . நவராத்திரியில் கூட அதே தெருக்கூத்துப் பாடல் திரை இசைக்காக அதன் அசல் மாற்றப்பட்டிருக்கும் . கிராமத்து கலைஞர்களிடம் கேட்டுப் பாருங்கள் . உண்மையைச் சொல்லுவார்கள்

    நாங்களும் இந்த மாதிரி சில செய்திகளை சொல்லும்போது உண்மை கசக்கும் .

    அடுத்த உங்கள் பதிவுக்கும் நான், விமல், வவ்வால், ரிம்போச்சே எல்லோரும் வருவோம் . ஆரோக்கியமாகவே வாதிடுவோம் . பொய்கள் சொல்லுங்கள் . நாங்கள் உண்மைகளை எடுத்துரைக்கிறோம்.


    ReplyDelete
  99. மிஸ்டர் பரத்

    // இளையராஜாவும் மக்கள் வயக்காட்டுல பாடுன பாட்டையும் கோவில் திருவிழா வில பாடின பாட்டையும் தன் அண்ணனோட கம்யுனிஸ்ட் பிரச்சார பாட்டையும் எதோ தன்னோட பாட்டு மாதிரி உருவி போட்டவர்தான். அப்ப அவரையும் இசை பிச்சைக்காரன்னு வச்சுக்கலாமா?//

    என்று சொல்லி இருக்கிறீர்கள் .

    வயல் வரப்புகளில் கோயில் திருவிழாக்களில் நமது தமிழ்ச் சமூகத்துக்கு மக்களின் பாரம்பரியத்தை கால காலமாக இசைத்து வரும் பாடல்களை புதுமை புகுத்தி எடுத்துச் சொல்வது 'காப்பி' என்று ஆகி விடுமா!? அந்த வயல் வெளி பாடல்கள் எல்லா ஜனங்களையும் போய்ச் சேரட்டும் என்று மக்களோடு மக்களாக ,மக்களின் சாதாரண கிராமத்து வாழ்க்கையை வாழ்ந்த இளையராஜா எடுத்து சொன்னால் அது 'காப்பி' ஆகி விடுமா? நமது மண்ணின் இசையை எடுத்து சொல்பவர் களவாணி அல்ல ! வெளி நாட்டு இசை எடுத்து வருபவரே உண்மையான களவாணி !

    இளையராஜா நாலு பேருக்கு இசை பிச்சை போடும் இசை வள்ளல் அவரை பார்த்து அவரை போலவே இசை அமைக்க முயன்றவர்கள்தான் ஏராளம் . அவர் ஒரு அமுத சுரபி . அள்ள அள்ள குறையாத இசை அட்ச்சயப் பாத்திரம். அதனால்தான் அவர் இசை இன்றும் நின்று நிலைக்கிறது . அவரைப் போய் இசை பிச்சைக்காரன் என்று அநாகரீகமாக உளறும் உமக்கு இளையராஜாவின் குரலில் 'அறியாத வயசு புரியாத மனசு' என்ற பாடலை போட்டுக் காட்ட வேண்டும்.





    ReplyDelete
    Replies
    1. சார்லஸ்,
      உங்கள் விமல்தான் இசை பிச்சைக்காரன் என்று எழுதினார்.அதையே நானும் காப்பி பேஸ்ட் செய்தேன். சொல்வதாக இருந்தால் அவரை அடக்குங்கள்.என்னிடம் பாய வேண்டாம். உங்களைப் போம்ற ஆட்களிடம் நடுநிலையை எதிர்பார்ப்பது ஆட்டுக்குட்டி முட்டையிடும் கதைதான் போல.

      Delete
  100. விமல் அவர்களே,

    //காரிகனை நாகரீகமாக ஒரு போடு போட்ட திரு.வவ்வால் அவர்களை வாழ்த்தி ஆரம்பிக்கிறேன்.//

    ஏகப்பட்ட பின்னூட்டங்கள், தொடர்ந்து படிக்காமல் விட்டதால் ஒட்டு மொத்தமாக படிச்சேன் ,தலை கிர்ருங்குது அவ்வ்!

    உங்க வாழ்த்துக்கு நன்றி,ஆனால் போடெல்லாம் போடலைங்க, காரிகன் சொன்னது போல மனசுக்கு பட்டதை எடுத்து வைத்துள்ளேன், காரிகனும் பெருந்தன்மையுடன் அங்கிகரிக்கிறார், இதுவே ஆரோக்கியமான கருத்தாடலுக்கு வழி வகுக்கும்.

    என்னைப்பொறுத்தவரையில் கருத்துக்கள் எதிரும்,புதிருமாக உரசிக்கொள்ளலாம்,கருத்தாளர்கள் அல்ல, ஒப்புதல் இல்லா கூற்றுக்கு எதிர்க்கூற்று சொல்வதால் எதிரிகள் அல்ல,அனைவரும் இணையத்தோழர்களே, இன்று கருத்து மோதலில் முட்டிக்கொண்டு நாளை இன்னொரு ஒத்த கருத்து உரையாடலில் கட்டிக்கொள்ளவும் பழக வேண்டும் என்பது எனது எளிய சித்தாந்தம்.

    மாற்று கருத்து சொன்னவர்களை எதிரிகளாக பார்க்கும் போக்கு சிலரிடம் நிலவுகிறது, அது போன்றவர்கள் அல்ல காரிககன் ,அமுதவன் ஆகியோர் என்பது எனது அவதானிப்பு.

    எனவே பீ ஹேப்பி டோண்ட் ஒர்ரி, அடுத்தும் தொடர்வோம்!

    ReplyDelete
  101. சார்லஸ் அவர்களே,

    முந்தைய பின்னூட்டங்கள் எல்லாம் படிச்சேன் அவ்வப்போது சூடாகிடுறிங்க போல தெரியுது,ஆனாலும் அசராமல் உரையாடும் உங்கள் குணம் பிடிச்சிருக்கு :-))

    //அடுத்த உங்கள் பதிவுக்கும் நான், விமல், வவ்வால், ரிம்போச்சே எல்லோரும் வருவோம் . ஆரோக்கியமாகவே வாதிடுவோம் . பொய்கள் சொல்லுங்கள் . நாங்கள் உண்மைகளை எடுத்துரைக்கிறோம்.
    //

    கண்டிப்பாக எல்லாரும் வரவேண்டும்.

    ஆனால் காரிகன் பொய் சொல்வதா சொல்லியிருப்பது சரியல்ல, ஒரு மாற்றுப்பார்வையை முன் வைக்கிறார், திரையிசையை புனிதமாக கருதினால் அதில் உள்ள சில ஆபாசங்கள் உறுத்தவே செய்யும்,ஆனால் திரையிசை அனைத்து தரப்பு மக்களுக்கான ஒரு கலப்பிசை எனப்பார்த்தால் எல்லாமே இருக்கும்,எனவே "ஸிருங்கார ரசம்" என ஆபாசம் புறந்தள்ளலாம்.

    எல்லாம் பார்ப்பவர் பார்வையில் தான்.

    இப்போ நீங்க ராசாவின் இசையில் உருவான ஆபாச பாடல்களை "இதெல்லாம் சகஜமப்பா" என சொன்ன்னால், அவரும் திரையிசை அமைப்பாளர்களில் ஒருவர் தான் ,அவர் மட்டுமே இசைனு சொல்லிக்கொள்ள ஏதும் இல்லை, ஆனால் அவர் இசை மகான் , இசை கடவுள் என சொன்னால் ஏன் இத்தனை ஆபாசம் இருக்குனு கேட்கத்தான் செய்வார்கள்,அதைத்தான் காரிகனும் செய்கிறார்.

    உண்மையில் இப்படி ஒரு கேள்வி கேட்டதின் மூலம் ராசா "சம்திங் ஸ்பெஷல்" அப்படிலாம் செய்யக்கூடாது என்ற அக்கரை தான் உள்ளது என புரிந்துக்கொள்ளனும்.

    ஆபாசம் இருந்தா என்னனு சொல்லும் எனது கருத்தில் என்ன உள்ளடக்கம் என்னவெனில் எத்தனையோ இசையமைப்பளர்கள் வந்து போனது போல ராசாவும் வந்தா ர், பல பாடல்கள் தந்தார் அவற்றில் ஆபாசமும் இருந்துச்சு என "லைட்டாக" எடுத்துக்கொள்கிறேன் ,அஃதே!

    இப்போ நீங்களும் ஆபாசம் எல்லாம் சகஜமப்பா என சொல்வதால்,என்னைப்போல கருத்தாக்கம் கொண்ட ஒருவர் தானே :-))

    ReplyDelete
  102. வவ்வால்,
    வாங்க வாங்க. உங்களுக்காகத்தான் காத்திருந்தேன். சரவெடியை பத்தவச்சுட்டு பறந்துட்டீங்க. சத்தம் தாங்கல. அதுக்குள்ள உட்கட்சி பூசல் ரேஞ்சுக்கு சிலருக்கு குதூகலம், கொண்டாட்டம்தான். இப்ப வழக்கம் போல உங்களையும் திட்ட ஆரம்பிச்சுருவாங்க.

    அருமையான அவதானிப்பு. நான் பெருந்தன்மையா அங்கீகாரம் செய்வதாக நீங்கள் சொல்வதெல்லாம் overstatement. யாரும் தனக்குப்பட்டதை சொல்வதில் தவறில்லையே. நான் கூட பல பேருடன் விவாத மோதல்கள் செய்திருக்கிறேன்.எனவே என் பார்வையில் எனக்கு எதிராக கருத்து சொல்பவர்கள் எனது எதிரிகள் அல்ல. உங்களின் புரிதல் இணையத்தில் பல அன்பர்களிடம் காண்பதரிது. பாராட்டுக்களும் நன்றிகளும்.

    நீங்கள் சொல்வதுபோல நான் ஒரு மாற்றுக் கருத்தை முன்வைக்கிறேன். வேறு கோணத்திலிருந்து இசையை விமர்சிக்கிறேன்.அதைக் கூட செய்யக்கூடாது என்றும் எல்லோருக்கும் இளையராஜாவை கண்டிப்பாக பிடிக்கவேண்டும் என்றும் ராஜா ரசிகர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு கருத்து கூற முற்படுவது மூர்கத்தனமானது.மூடத்தனமானதும் கூட. அவர்கள் சிலாகிக்கும் ராஜா பாடல்களை நானும் போற்றவேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வது அடி முட்டாள்தனம்.

    ஆபாச இசை பற்றி நிறையவே பேசியாயிற்று. அதை பலரும் செய்திருந்தாலும் அவைகள் மக்களிடம் எந்தவிதமான எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. எழந்த பலம் பாடல் வெகுவாக விமர்சிக்கப்பட்டது உண்மையே. திரு சால்ஸ் குறிப்பிடும் இதயக்கனி பாடல் ஒரு trendsetter பாடலே அல்ல. அதை மக்கள் அப்போதே கடந்துபோய்விட்டர்கள். ஆனால் இளையராஜா நிறுவியது வேறுவிதமான இசையமைப்பு முறை. விரசத்தை தொடர்ந்து செய்து, அது போன்ற ஒரு புதிய அத்தியாயத்தை அவர் தொடக்கி வைத்தார் என்பதே எனது குற்றச்சாட்டு.

    சால்ஸ் போன்ற வகையறாகளுக்கு எத்தனை தடவைகள் அழுத்தமாகச் சொன்னாலும் புரியப்போவதில்லை என்பது புலனாகிறது. It's futile arguing with people who will only listen to what they want to hear.


    ReplyDelete
  103. மிஸ்டர் பரத் ... காரிகனின் இந்தப் பதிவு மட்டும் நடுநிலையானது அல்ல . இதற்கு முந்தைய பதிவுகளில் யாரையும் குறைத்து மதிப்பிட்டிருக்க மாட்டார் .இளையராஜாவைப் பற்றி பேச வரும்போது நீங்கள் கூர்ந்து கவனித்துப் பாருங்கள் . அதிகமாய் குறைகள் மட்டும் எடுத்து சொல்லி இருப்பார் . இதில் என்னிடம் நடுநிலையைப் பற்றி பேச என்ன இருக்கிறது !? எல்லா இசை அமைப்பாளர்களிடம் உள்ள குறைகளை எடுத்து சொல்ல சொல்லுங்கள் . அவரும் நடுநிலையாளர் என்று ஏற்றுக்கொள்கிறேன் .

    வவ்வால் சார் ! நான் அடிக்கடி சூடாவதில்லை . அது ரௌத்திரம் . உண்மைகள் மறைக்கப்படும்போது வெளிப்படும் . மற்றப்படி காரிகனிடம் எனக்கென்ன கோபம் ? இசை அனுபவம் ஒரு இறை அனுபவம் . இசையை ரசிக்கும் எல்லா தமிழர்களின் வாழ்விலும் இசைஞானி கடக்காமல் இருக்க மாட்டார் . எல்லா இசைக் கலைஞர்களும் இளையராஜாவை வியப்புடன் பார்க்கும்போது காரிகன் விறைப்பாக இருப்பதன் அர்த்தம் வேறு ஒன்றும் இல்லை .மட்டம் தட்ட வேண்டும் . அவ்வளுவுதான் !எங்களை சூடேற்றி அவர் குளிர் காய்கிறார் .

    ReplyDelete
  104. காரிகன் அவர்களே ! நான் பயனற்ற அற்பமான வாதம் செய்வதாக சொல்லி இருக்கிறீர்கள் . உண்மைகளையோ உங்களுக்கு புரியாததை யோ எடுத்து சொல்லும் சுதந்திரம் எனக்கு உண்டு . வாதம் என்று வந்து விட்ட பிறகு அற்பம் என்ன சொற்பம் என்ன !?

    மற்ற இசைஞர்கள் செய்யாத குறைகள் இவர் செய்தார் என்பது உங்கள் வாதம் . மற்ற இசை அமைப்பாளர்கள் செய்யாத இசைப் புரட்சிகளை இளையராஜா செய்திருக்கிறார் என்று நாங்கள் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று நீங்கள் அடம் பிடிப்பது அற்பம் இல்லையா? நீங்கள் எவ்வளவு அழுத்தமாக சொன்னாலும் உண்மைகள் மறைக்கப்படும்போது உங்களுக்கு புரிய வைக்க நாங்கள் பாடுபட வேண்டியதிருக்கிறது .

    இசைஞானி இசை ஒரு அணுகுண்டு . முதுகு சொறியத்தான் லாயக்கு என்று நீங்கள் சொல்ல வரும்போது உங்கள் அறியாமையை எடுத்து சொல்ல வேண்டியது ரசிகனின் கடமை .

    ReplyDelete
  105. காரிகன் அவர்களே ! நான் பயனற்ற அற்பமான வாதம் செய்வதாக சொல்லி இருக்கிறீர்கள் . உண்மைகளையோ உங்களுக்கு புரியாததையோ எடுத்து சொல்லும் சுதந்திரம் எனக்கு உண்டு.வாதம் என்று வந்து விட்ட பிறகு அற்பம் என்ன சொற்பம் என்ன !?

    மற்ற இசைஞர்கள் செய்யாத குறைகள் இவர் செய்தார் என்பது உங்கள் வாதம் . மற்ற இசை அமைப்பாளர்கள் செய்யாத இசைப் புரட்சிகளை இளையராஜா செய்திருக்கிறார் என்று நாங்கள் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று நீங்கள் அடம் பிடிப்பது அற்பம் இல்லையா? நீங்கள் எவ்வளவு அழுத்தமாக சொன்னாலும் உண்மைகள் மறைக்கப்படும்போது உங்களுக்கு புரிய வைக்க நாங்கள் பாடுபட வேண்டியதிருக்கிறது .

    இசைஞானி இசை ஒரு அணுகுண்டு . முதுகு சொறியத்தான் லாயக்கு என்று நீங்கள் சொல்ல வரும்போது உங்கள் அறியாமையை எடுத்து சொல்ல வேண்டியது ரசிகனின் கடமை .

    பாடகர் மனோ அவர்கள் சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இளையராஜாவின் 'பாடு நிலாவே' பாடலைப் பற்றி அழகாக சிலாகித்துச் சொன்னார் . சரணத்தின் முடிவில் வழக்கமான நடையிலிருந்து விலகி ராகம் சிதையாமல் மீண்டும் பல்லவிக்கு வரும்போது அந்தப் பாதையை பிடிக்கும் அற்புதத்தை அழகாக பாடிக் காட்டினார் . 'இந்த மாதிரியான அற்புதம் இளையராஜா மட்டுமே செய்வார் . மற்றவர் பாடல்களில் பார்க்க முடியாது ' என்று ஒரு செய்தியும் கொடுத்தார் . அருகிலிருந்த ஜானகி அம்மாவும் ஆமோதித்தார்கள்.

    இப்படி எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம் .ஆனால் நீங்கள்தான் விரசம், சரசம் , ஆபாச இசை என்று குண்டுச் சட்டிக்குள்ளேயே கோலமிடுகிறீர்கள்.

    ReplyDelete
  106. சாரலஸ்,

    நீங்க சொல்வது ஒரு வகையில் சரினு பார்த்தால், பல வகையில் முட்டிக்குது, மற்ர இசையமைப்பாளர்கள் "இசைக்கடவுள்" ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுப்பதில்லை,எனவே கடவுள்னா ஒரு முழுமை வேண்டாமோ?

    raasa is not the one and only undisputed king of music,he is a just one among the M.D of tamil film world.

    //. சரணத்தின் முடிவில் வழக்கமான நடையிலிருந்து விலகி ராகம் சிதையாமல் மீண்டும் பல்லவிக்கு வரும்போது அந்தப் பாதையை பிடிக்கும் அற்புதத்தை அழகாக பாடிக் காட்டினார்//

    என்னாது ராகம் சிதையாமலா? அப்போ சுத்தமா அதாவது பியூர் கர்நாடிக்ல அந்த பாட்டு இருக்கா? ராகத்தின் சாயலில் தான் thirai இசை அமைக்கப்ப்டுகிறது,அப்புறம் என்ன சிதையாம :-))

    மேலும் நடை என்பது தாளக்கட்டை குறிப்பது ஒரே ராகத்துக்கு பல தாளக்கட்டில் பாடலாம், எனவே நடைய மாத்தி போய் வரதுலாம் ரன்னிங் பஸ்ல அப்போ அப்போ ஏறி இறங்குற இளவட்டம் போல எல்லாரும் செய்றது, நடைய மாத்து ..உன் நடைய மாத்துனு பாtடுலாம் உண்டுல :-))

    அவரது நோட்ஸ், கம்போசிஷன் ஸ்டைல் பத்தியும் கொஞ்சம் படித்துப்பார்த்துள்ளேன், இங்கே பின்னூட்டத்தில் பாலேஷ்னு ஒரு செனாய் வாத்தியக்காரர் சொன்னதை போட்டிருக்காங்க,அதுக்கே சொல்லலாம்னு பார்த்தேன் ,நேரமின்மையால் விட்டுட்டேன்.

    ReplyDelete
  107. சால்ஸ்,
    இ.ராஜாவை பலர் பலவிதமான பெயர்களில் அழைத்திருக்கிறார்கள்.ஆனால் உங்களின் அணுகுண்டு பட்டம் அபாரம். மிகவும் ரசித்தேன். அந்த அணுகுண்டு முதுகு சொறியத்தான் லாயக்கு என்று நான் சொல்லவில்லை.நீங்களே அப்படித்தான் நினைக்கிறீர்கள் போலிருக்கிறது.அவர் எந்த குண்டாக வேண்டுமானால் இருந்துவிட்டுப் போகட்டும்.

    நீங்கள் ஜூனியர் சீனியர் சூப்பர் சிங்கர் நிகழ்சிகளை விடாமல் பார்ப்பீர்கள் என்று நன்றாக தெரிகிறது. ஒரு முறை எஸ் பி பி இளையராஜாவைப் பற்றி இப்படி சிலாகித்துப் பேசினார் என்றீர்கள்.இப்போது மனோ அவரை புகழ்ந்ததை பெரிய தகவல் போல சொல்கிறீர்கள். படு வேடிக்கையாக இருக்கிறது. மனோ வை எஸ் பி பி க்கு மாற்றாக கொண்டுவந்ததே இளையராஜா என்பது அப்போது இருந்த பலருக்கு நன்றாகத் தெரியும். இதில் மனோ தனக்கு விலாசம் கொடுத்த இ.ராஜாவை புகழ்வதில் அதிசயம் என்ன இருக்கிறது? சொல்லப்போனால் அது அவரது கடமை. இதே மனோ எஸ் ஜானகி எஸ் பி பி ஹரிஹரன் ஸ்ரீநிவாஸ் போன்றவர்கள் ரகுமான் நிகழ்ச்சிக்குப் போகும் போது அவரையும் கூடத்தான் இதே போலே பாராட்டிப் பேசுகிறார்கள். அதையெல்லாம் கடைவிரிக்கலாமா? சரியான வறட்டு வாதம்.

    உங்களைப் போன்ற ராஜா ரசிகர்களை காயப்படுத்தவே நான் பதிவுகள் எழுதுகிறேன் என்று அடுத்த அதிரடி அணுகுண்டு(!)வீசுகிறீர்கள். என் நேரத்தை செலவழித்து உங்களை மனதில் வைத்து இதையெல்லாம் நான் எழுதுவதாக நீங்களே கற்பனை செய்து கொள்வது நீங்கள் இயல்பான மன நிலையில் இல்லை என்பதை காட்டுவதாக இருக்கிறது.

    இளையராஜாவின் இசை புரட்சிகளைப் பற்றி பத்தி பத்தியாக எழுதியாகிவிட்டது. நிறைய ராஜா ரசிகர்கள் அதை செய்துகொண்டிருக்கிறார்கள்.நானும் அதைப் போல எழுத வேண்டும் என்று நீங்கள் என்னை தயார் செய்வது ஒன்றுக்கும் ஆகாது. இளையராஜா என்ற மிகச் சிறந்த இசை அமைப்பாளர் தமிழ்த் திரையிசையின் சீரழிவிற்கு முதல் காராணமாக இருக்கிறார் என்ற புரிதலே எனக்குப் போதும். மற்ற விஷயங்களை எனக்குப் புரியவைக்க நீங்கள் ரொம்பவும் பாடு பட வேண்டாம் தோழரே. இதற்கு பதிலாக ஒரு பாடல் நிகழ்ச்சியில் சித்ரா இளையராஜாவைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா என்று மீண்டும் ஆரம்பிக்காதீர்கள். சலிப்பாக இருக்கிறது. பெரிய ஹோட்டல்களுக்குச் சென்று உப்புமா சாப்பிடும் ஆட்களுக்கு menu card எதற்கு?

    ReplyDelete
  108. வவ்வால் அவர்களே

    காரிகன் யார் என்றே எனக்கு தெரியாது.அவர் எழுத்தில் நிறைய தவறுகள் இருக்கிறது.அவரதும் ,அமுதவனதும் நோக்கம் ராஜாவை வசை பாடுவதே.அதற்காக அவர்கள் எடுக்கும் தலையங்கங்கள் பலவீனமானதாவே உள்ளது.
    யாரும் யாரையும் விமர்சிக்கலாம்.ஆனால் விமர்சனம் செய்பவருக்கு அந்த விசயத்தின் அடிப்படைகள் கொஞ்சமாவது தெரிய வேண்டாமா.?

    ஆபாசம் பற்றி எழுதுகிறார்.அதுவும் பிசு பிசுத்து விட்டது.தமிழ் இலக்கியத்தில் இல்லாத ஆபாசமா?
    அதற்காகவே ஜீவா ,அண்ணாத்துரை கம்பராமாயணத்தை இழிவு பட பேசிய போது சொன்ன விசயங்களை எழத நேர்ந்தது.
    கா.மூ.செரீப் ஆபாசப்பாடல் வரு இந்த படத்தில் எழுத மாட்டேன் என்று சொன்னது விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையிலேயே.இளையராஜா இசையில் அல்ல.அந்த பாடல் என்ன என்று கேட்டேன்.
    அதருக்கு ஏன் பதில் சொல்ல வேண்டும் என்கிறார் காரிகன்.
    அதனால் தான் இவரதும் அமுதவனதும் பாணியில் ..
    //எம்.எஸ்.வீ ரசிகர்களுக்கே இது தெரியுமோ தெரியவில்லை // அல்லது எம்.எஸ்.வீ ரசிகர்லே அறியாத செய்தி இது //

    என்று சொல்ல நேர்கிறது.



    அவரிடம் நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் தப்பித்தான் ஓடி இருக்கிறாரே தவிர நாணயமாகப் பதில் சொல்லவே இல்லை.நான் அவருக்கு எழுதிய சில விடையங்கள்.

    1.இங்கே தான் உங்களதும் அமுதவனதும் தவறும் இருக்கிறது.ராஜாவின் இசையை பலவிதமான கோணங்களில் பல இசைமேதைகள் பேசியாயிற்று.அதற்க்கு முன்பாக ரசிகர்களின் ஏகோபித்த அபிமானத்தையும் அவர் பெற்று விட்டார்.அதனால் தான் அவரது ரசிகர்கள் இன்றும் அவரைக் கொண்டாடுகிறார்கள்.

    நான் சொல்வது R.D.பரமன் ,சலீல் சௌத்ரி , நௌசாத் , அவர்கள் மட்டுமல்ல பாடகர்கள் [தமிழ் நாட்டில் நடக்கும் முகத் துதிகளை சேர்க்க வேண்டாம் ] அவர்கள் மட்டுமா பாலமுரளி கிருஷ்ணா , செம்மங்குடி , சேஷகோபாலன் போன்ற பலர் பேசி விட்டார்கள்.இவர்கள் எல்லாம் சங்கீதம் தெரிந்தவர்கள்.
    அதனால் தான் சொல்கிறேன் அவரது இசையை சரியில்லை என்று சொல்லும் நீங்கள் மற்றும் அமுதவன் தான் "எப்படி அவை சரியில்லை "என விளக்க வேண்டும்.இல்லையா ?

    inioru . com சவுந்தரின் " தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 9 ] : T.சௌந்தர் - கட்டுரையில்
    " .. எனக்கு ஆழமாகத் தெரியாத ராகங்கள் சார்ந்த பல விஷயங்களை துல்லியமாக எழுதி வருகிறீர்கள். "
    எழுதுகிறீர்களே அப்போ எப்படி விமர்சகராக முடிந்தது.இதையே தான் அமுதவனிடமும் கேட்கிறோம்.

    2.
    அது சரி காரிகன் நீங்கள் என்ன இசை விமர்சகரா.?திரு சவுந்தரின் தளத்தில் நீங்கள் தானே ராகங்கள் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லியுள்ளீர்கள்.

    அப்படிப்பட்ட நீங்கள் எப்படி பாடல்களைப் பற்றி விமர்சிக்க முடியும்.ராகங்கள் அடிப்படையில் தான் பாடல்கள் நமது சினிமாவில் இருக்கிறது.
    நீங்கள் ராஜா இசையமைத்த பாடல்களில் 10 பாடல்கள் தான் தேறும் என்று சொல்லும் உரிமை உண்டென்றால் நான் 2000 அல்லது 3000 என்று சொல்கிறேன்.ஒருவரின் ரசனையின் அடிப்படையில் ,அவர் மனம் போன போக்கில் எழுதுவது இசை விமர்சனமா ? இதற்க்கு என்ன அளவு அளவு கோல்.? இசையின் அடிப்படையான சில் ராகங்கள் தெரியாத நீங்கள் எப்படி?

    இந்திய இசையின் ராகங்கள் அடிப்படியில் ராஜா காட்டிய சாதனைகளை inioru .com இல் - சவுந்தரின் கட்டுரைகளில் அறிந்து கொண்டேன்.அங்கே பம்மிய நீங்கள் இங்கே ஏன் குதிக்கிறீர்கள்.?
    3.
    ஆபாசம் பற்றி லெக்சர் அடித்துள்ளீர்கள் .கடைசியாக் ஒரு செய்தி.

    பிரபலமான ஒரு கவிஞர் எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுத அழைக்கப்படுகிறார்.அவர் ஆபாசம் என்று வர்ணித்து , அப்படிப்பட்ட பாடல் இடம் பெரும் படத்தில் நான் எழுத மாட்டேன் என்று ஒதுங்கிய கவிஞர் கா.மு செரீப் என்ற பழம் பெரும் கவிஞர்.அவர் ஆபாசம் என்று கருதிய பாடல் என்னவென்று நீங்களும் அமுதவனும் சொல்லுங்கள் பாராக்கலாம்.அப்போ நான் சொல்கிறேன்.
    உங்கள் இருவர் பாணியில் ..
    //எம்.எஸ்.வீ ரசிகர்களுக்கே இது தெரியுமோ தெரியவில்லை // அல்லது எம்.எஸ்.வீ ரசிகர்லே அறியாத செய்தி இது //

    இங்கே வந்து பார்த்ததில் இசை பற்றி விவாதிப்பதில் அர்த்தமில்லை என்று படுகிறது.4.000, 5000 பாடல்களுக்கு இசையமைத்தவரின் பாடல்களில் 20 தான் சுமார் என்று காரிகன் எந்த ஆய்வோ ,ஆழமோ , ரசனையோ இல்லாமல் தன மனம் போன போக்கில் சொல்ல " அறிவு " ,உரிமை இருக்கும் என்றால் 50 பாடல்கள் தவிர்ந்த மற்ற பாடல்கள் சூப்பர் என்று சொன்னால் அவர் என்ன சொல்வார்?

    வீணான விவாதங்கள்.படீபினை ஒன்றுமில்லை.
    இந்தாமதிரி வீணாய்ப் போகும் விவாதங்களால் ஒன்றும் விளையப்போவதில்லை.

    ReplyDelete
  109. விமல் அவர்களே,
    நீங்கள் over react செய்வது நன்றாகவே தெரிகிறது. என் பதிவுகளில் நான் எனக்குப் பட்டதையே எழுத முடியும். என் பார்வையில் தெரியும் அறியும் விஷயங்களையே நான் எழுதுகிறேன். இங்கே வந்து நின்று கொண்டு நீ எப்படி எழுது என்று என் விரல்களை உங்கள் விருப்பதிற்கு வளைப்பது சர்வாதிகாரத்தனம். தவறுகளை சுட்டிக்காட்டுவது ஒன்று. நீ எப்படி இப்படி எழுதலாம் அதை இப்படி மாற்றிப்போடு என்று ஆணையிடுவது அகங்காரம். டி சவுந்தரை அடிக்கடி உதாரணம் காட்டுகிறீர்கள். அவர் ராகங்களில் ஊறியவர். அவரைப் போல நான் எதற்க்காக எழுத வேண்டும்?அவர் இளையராஜாவைத் தாண்டி இசையை வேறு விதமாக ஆராய்கிறார். ரகுமான் என்று வந்து விட்டால் கண்ணை மூடிக்கொண்டு காப்பி இசை அதெல்லாம் ஒரு பாடலா என்ற அளவுக்கு அவரை தூக்கி எறிகிறார். சரி அது அவருடைய சுதந்திரம். அதை கேள்வி கேட்பது முட்டாள்தனம். ஒவ்வொருவருக்கும் இதுபோன்ற இசையை தேர்வு செய்யும் சுதந்திரம், உரிமை இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இளையாராஜாவின் பாடல்களில் குப்பைகளே அதிகம். அதைத்தான் நான் விமர்சனம் செய்கிறேன். அதைச் செய்ய நீ யார் என்று என்னைக் கேட்டால் நான் உங்களை கேட்பதும் அதுவே.

    90 களில் இளையராஜாவின் இசையை மக்கள் வேறு வழியின்றிதான் கேட்டார்கள். இந்த உளவியல் உண்மையையும் உங்களால் ஜீரணிக்க முடியவில்லை."எனக்கு இளையராஜாவைப் பிடிக்கும். எனவே நீ அவரைப் பற்றி பேசாதே" என்பதே உங்கள் மறைமுக செய்தி. மன்னிக்கவும். உங்களுக்கு வேறு தளங்கள் இருகின்றன.இங்கே வந்தால் சில சுடும் உண்மைகளை ருசித்தே ஆகவேண்டும். மற்றபடி உங்களின் கேள்விக்கு என் பதிவுகளிலேயே நான் பதில் சொல்லியாகிவிட்டது. மீண்டும் படித்துப்பார்க்கவும் (முடிந்தால்). நீங்கள் ராஜாரசிக சிகாமணி என்பதால்தான் இத்தனை கொதிப்பு வருகிறது.இதே நான் ரகுமானின் பாடல்கள் எல்லாமே குப்பை என்று பதிவு எழுதினால் இதேபோல ரியாக்ட் செய்வீர்களா திரு விமல் அவர்களே? அதையும் ஏன் என்று சொல்லிவிடுங்களேன். என் கருத்தோடு உடன்படாதது வேறு. ஆனால் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் குதிப்பது வேறு. நீங்கள் அதைத்தான் செய்கிறீர்கள்.ஒருவர் எத்தனை காலத்துக்குத்தான் ராஜாவாக இருக்க முடியும்? காலம் முடிந்தால் காணாமல் போய்விடும் அதிக நேரம் வாழும் பூக்களைப் போலதானே நாமெல்லாம்?

    ReplyDelete
  110. விமல்,
    உங்களின் கா மு செரிப் பற்றிய கேள்வி சிறுபிள்ளைதனமாக இருக்கிறது. உங்களுக்கு ஒன்று தெரிந்தால் எல்லோருக்கும் அது தெரியவேண்டுமா என்ன? ரகுமான் பணம் கொடுத்து ஆஸ்கார் வாங்கினார் என்று சொல்லி அதற்காக ஆஸ்கார் கமிட்டியிடம் நன்றாக வாங்கிகட்டிகொண்டார் ஒரு பெரிய திரை ஜாம்பவான். அவர் யார் என்று தெரியுமா உங்களுக்கு?

    ReplyDelete
  111. ரிம்போச்சே9 September 2013 at 05:47

    // ரகுமான் பணம் கொடுத்து ஆஸ்கார் வாங்கினார் என்று சொல்லி அதற்காக ஆஸ்கார் கமிட்டியிடம் நன்றாக வாங்கிகட்டிகொண்டார் ஒரு பெரிய திரை ஜாம்பவான். //

    முதலில் ஆஸ்கர் விருதை ஒரு அளவுகோலாக வைத்து விவாதிப்பதே ஒரு நகைச்சுவை. அங்கு விருதுகள் தேர்ந்தெடுக்க நடத்தப்படும் கூத்துக்களை இணையத்தில் தேடி படித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  112. வவ்வால் சார் !

    நீங்க பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டில் ஆட்டுபவரா அல்லது தொட்டில் ஆட்டிவிட்டு பிள்ளையை கிள்ளுபவரா ?

    இளையராஜாவை இசைக்கே இறைவன் என்று நாங்கள் சொல்ல வரவில்லை . இசைக் கலையில் யாருக்கும் குறையாத வல்லுநர் என்றுதான் சொல்கிறோம் . காரிகன் இல்லை என்கிறார் . நாங்கள் உண்டு என்கிறோம் . நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள் ? அதனால்தான் அப்படி ஒரு கேள்வி.

    பாடகர் மனோ நல்ல இசைக் கலைஞர் . நோட்ஸ் எடுத்துப் பாடுவதில் வல்லவர் என்பது கேள்விப்பட்டதுதான் ! அவர் அந்தப் பாடலை பாடிக் காண்பித்து பார்முலாவில் வராத ஸ்டைலுக்கு சென்று திரும்பும் பாவனையை சிலாகித்து சொன்னார் என்று குறிப்பிட வந்தேன் . அது மிகவும் சுவையான இடம் என்பதை அவர் குறிப்பிட்டிருப்பார் என்றுதான் சொன்னேன் . நாங்கள் இசைஞானி இசையைப் பற்றிச் சொன்னால் காரிகனும் நீங்களும் ஒத்துக் கொள்வதில்லை . நல்ல இசைஞர்கள் சொன்னதை எடுத்துச் சொன்னால் அப்போதும் நன்றிக் கடனுக்காக சொல்லி இருப்பார்கள் என்று மறுத்தால் யார் சொல்லி உங்களை எல்லாம் புரிய வைப்பது?

    ReplyDelete
  113. காரிகன் என் பின்னூட்டத்தை கண்டு பயந்து விட்டீர்களோ ? நீக்கி விட்டீர்களே !

    ReplyDelete
  114. ரிம்போச்சே9 September 2013 at 10:22

    //இந்த உளவியல் உண்மையையும் உங்களால் ஜீரணிக்க முடியவில்லை."எனக்கு இளையராஜாவைப் பிடிக்கும். எனவே நீ அவரைப் பற்றி பேசாதே" என்பதே உங்கள் மறைமுக செய்தி. மன்னிக்கவும். உங்களுக்கு வேறு தளங்கள் இருகின்றன.இங்கே வந்தால் சில சுடும் உண்மைகளை ருசித்தே ஆகவேண்டும். மற்றபடி உங்களின் கேள்விக்கு என் பதிவுகளிலேயே நான் பதில் சொல்லியாகிவிட்டது. மீண்டும் படித்துப்பார்க்கவும் (முடிந்தால்). நீங்கள் ராஜாரசிக சிகாமணி என்பதால்தான் இத்தனை கொதிப்பு வருகிறது.//

    காரிகன் சார்,

    1. உங்களுக்கு இளையராஜாவின் இசை மீது கடுமையான விமர்சனங்கள் இருக்கலாம். அது உங்களின் உரிமை. அதை எப்போது பொது வெளியில் வைத்தீர்களோ அப்போதே அதைப் பற்றி பலர் கேள்வி எழுப்புவர். அது அவர்களின் உரிமைதானே. ஆனால் கேள்விக்கு பதில் சொல்ல முடியாதபோதெல்லாம் பின்னூட்டங்களை அழிப்பது என்ன மாதிரியான நேர்மை? ஆனால் திரும்பத் திரும்ப உங்களை எல்லோரும் நசுக்குவது போல் பரப்புரை செய்கிறீர்கள்.

    2. உங்களை கேள்விக்குள்ளாக்கி, சிந்தனையைத் தூண்டி மனமாற்றத்தை உருவாக்க முடியும் என்றெல்லாம் யாரும் எண்ணவில்லை. 'பொன்னியின் செல்வனை' வரலாறாக எண்ணத் துணியும் இக்கால கட்டத்தில் உங்களின் கருத்துக்கு மாற்றுக் கருத்துகளும் உண்டு என்பதை 'இங்கு' பதிவு செய்வது முக்கியம்.

    //இதே நான் ரகுமானின் பாடல்கள் எல்லாமே குப்பை என்று பதிவு எழுதினால் இதேபோல ரியாக்ட் செய்வீர்களா திரு விமல் அவர்களே?//

    இதற்கு ரஹ்மான் ரசிகர்களே பதில் சொல்லக் கடவது.

    பார்க்கத்தானே போகிறோம் சார். சாட்டையால் அடிக்கிறீர்களா இல்லை சாமரம் வீசுகிறீர்களா என்று.

    ReplyDelete
  115. தகதிமிதா!9 September 2013 at 10:33

    //,எனவே கடவுள்னா ஒரு முழுமை வேண்டாமோ?
    //

    விவாதத்தை திசை திருப்ப விரும்பவில்லை.

    வவ்வால் ஐயா,

    அ. கடவுள்களின் முழுமைத்தன்மை பற்றித் தாங்கள் அறியாததா? :)
    ஆ. சரி போகட்டும் மன்மதனும், இந்திரனும் கடவுள்கள் தானே?

    ReplyDelete
  116. தகதிமிதா!9 September 2013 at 11:07

    // ஆனால் அவர் இசை மகான் , இசை கடவுள் என சொன்னால் ஏன் இத்தனை ஆபாசம் இருக்குனு கேட்கத்தான் செய்வார்கள்,அதைத்தான் காரிகனும் செய்கிறார்.
    //

    பாஸ், அவர் மகான், கடவுள் என்றெல்லாம் அவரின் இசையை ரசிக்கும் ரசிகர்கள் விதந்தோதுவதில்லை. அவர்கள் ரசிப்பது அவரின் இசையை மாத்திரமே.

    ரசிகர்கள் பக்தர்களாகி போற்றிப் பாடுவதை கேள்விக்குள்ளாக்குங்கள். அதற்காக ஒட்டுமொத்தமாக அவரின் இசையைப் புறந் தள்ளுவது நேந்மையற்ற செயல்.

    //இப்போ நீங்க ராசாவின் இசையில் உருவான ஆபாச பாடல்களை "இதெல்லாம் சகஜமப்பா" என சொன்ன்னால், அவரும் திரையிசை அமைப்பாளர்களில் ஒருவர் தான் ,அவர் மட்டுமே இசைனு சொல்லிக்கொள்ள ஏதும் இல்லை, //

    இல்லை, சிறந்த இசையமைப்பாளர் என்பதற்கான அளவுகோலை இவர் இளையராஜாவுக்காக மாத்திரம் மாற்றி வைக்கிறார் அதை நீங்களும் ஆமோதிக்கிறீர்கள். இதில்தான் உள்ளார்ந்த அரசியல் வெளிப்படுகிறது.

    மற்ற இசையமைப்பாளர்கள் ஆபாசமான பாடலுக்கு மெட்டுப் போட்டால் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு இளையராஜாவை மாத்திரம் குறி வைத்துத் தாக்குவதை என்னவென்பது? அப்படிப்பட்ட பாடல்களைத் தன் தொழிலில் தவிர்ப்பதற்கு அவர் ஒன்றும் பக்திப் பாடல்களுக்கான இசையமைக்கும் வீரமணி போன்றோ, பித்துக்குளி முருகதாஸ் போன்றோ அறியப்பட்டவரில்லை. என் வரையில் அவருக்கான (இசை, பாடல் உருவாக்கும்) பொறுப்பு தயாரிப்பாளரை, விநியோகஸ்தரை, இயக்குநரை, நாயகனை, எடிட்டரை, ஒளிப்பதிவாளரை தாண்டி அவருக்கு இருந்ததாக நினைக்கவில்லை. அவர் ஆபாசப் பாடல்களுக்கு இசையமைத்ததால் அவரின் மிகச்சிறந்த பாடல்கள் எப்படி தரம் குறைந்தவை ஆகும்?

    இன்னொன்றையும் பார்க்கவேண்டும். 80களில் சிலுக்கு, ஜெயமாலினி, அனுராதா, டிஸ்கோ சாந்திகளின் குலுக்கு நடனத்தை வலுக்கட்டாயமாக ஒவ்வொரு படத்திலும் திணித்தனர். அவர்கள் ஆட இவர் என்ன பஜனைப்பாடலா போட்டிருக்க முடியும்?

    குலுக்கு நடனத்தை கூட இளையராஜா சொல்லித்தான் இயக்குநர்கள் செய்தார்கள் என்று சிலர் சொன்னாலும் சொல்லலாம்.

    சிருங்கார ரசத்திற்கும் சிறந்த பாடல்களை அளித்த அவர் என் வரையில் இன்னும் திறமையானவரே!

    ReplyDelete
  117. ரிம்போச்சே9 September 2013 at 11:11

    //இப்போ நீங்களும் ஆபாசம் எல்லாம் சகஜமப்பா என சொல்வதால்,என்னைப்போல கருத்தாக்கம் கொண்ட ஒருவர் தானே :-))//

    இல்லை. வாதத்தில் சாரமில்லையென்றால் வார்த்தை விளையாட்டுகள்தான் மிச்சம்.

    ReplyDelete
  118. வேட்டைக்காரன்9 September 2013 at 11:26

    //இளையராஜாவின் இசை புரட்சிகளைப் பற்றி பத்தி பத்தியாக எழுதியாகிவிட்டது. நிறைய ராஜா ரசிகர்கள் அதை செய்துகொண்டிருக்கிறார்கள்.நானும் அதைப் போல எழுத வேண்டும் என்று நீங்கள் என்னை தயார் செய்வது ஒன்றுக்கும் ஆகாது. //

    பாஸ், மற்ற இசையமைப்பாளர்களின் இசையைப் பற்றி ஏன் ஒருவரும் ஆய்வு ( ராஜாவின் இசையைப் போன்று அக்கு வேறு, ஆணி வேறாக) செய்து எழுதுவதில்லை? ராஜாவின் சிறப்பு பாமரனை குதூகலப்படுத்தும் (பிரபலமாகாதவையும்) பாடல்கள் பலவும் அதே நேரத்தில் இசை விற்பன்னர்கள் அவர்கள் கண்டு பாராட்டும் வண்ணம் பல நுணுக்கங்களை (like a hidden treasure) உள்ளடக்கி இருக்கிறது. இந்த சிறப்பியல்பை ஏன் MSV தொடங்கி, ரஹ்மான், ஆரிசு வரை மற்ற பலரிடம் வேறு யாரும் கண்டுணருவதில்லை? மற்ற இசையமைப்பாளர்களுக்கு வெறித்தனமான ரசிகர்கள் இல்லையா இல்லை அவர்களில் யாருக்குமே எள்ளளவும் இசை ஞானம் இல்லையா இல்லை அவர்களின் இசையில் அப்படி சிறப்பியல்புகள் எதுவும் இல்லையா? நானும் இணையத்தில் தேடிவிட்டேன். உங்களையும் கேட்டேன். ஒன்றும் தட்டுப்படவில்லையே.

    ReplyDelete
  119. ரிம்போச்சே9 September 2013 at 11:34

    //ஒருவர் எத்தனை காலத்துக்குத்தான் ராஜாவாக இருக்க முடியும்? காலம் முடிந்தால் காணாமல் போய்விடும் அதிக நேரம் வாழும் பூக்களைப் போலதானே நாமெல்லாம்?//

    ராஜாவின் peak creativity இப்போது போய்விட்டிருக்கலாம். உண்மைதான். அதற்காக அவரின் பாடல்கள் வாடிப்போகும் பூவாகுமோ? அவை கோஹினூர் வைரங்கள்.

    சச்சின் ஓய்வு பெறப்போகிறார் என்பதற்காக அவரின் சாதனைகள் ஒன்றுமே உருப்படியில்லை என்பீர்களா?

    ReplyDelete
  120. காரிகன் ,

    உங்கள் பின்னூட்டத்த்இற்ற்கு முன்னமே பதில் சொல்லி இருக்கனும், சார்லஸுக்கு மட்டும் அவசரமா பின்னூட்டம் இட்டு போயிட்டேன், மன்னிக்கவும் ,இப்போ உங்களுக்கு,

    //எனவே என் பார்வையில் எனக்கு எதிராக கருத்து சொல்பவர்கள் எனது எதிரிகள் அல்ல. உங்களின் புரிதல் இணையத்தில் பல அன்பர்களிடம் காண்பதரிது. பாராட்டுக்களும் நன்றிகளும்.//

    இதாங்க கருத்து சுதந்திரத்தின் அடி நாதம், வலைப்பதிவுகள் மரபுசார் ஊடகங்களுக்கு மாற்று என சொல்லப்படுவதால், வலைப்பதிவில் "கருத்துரையாடல்கள் பாரபச்சமற்று" இருக்க வேண்டும்,அதற்கு உங்களைப்போல எண்ணம் இருத்தலும் அவசியம்,நன்றி!

    //நீங்கள் சொல்வதுபோல நான் ஒரு மாற்றுக் கருத்தை முன்வைக்கிறேன். வேறு கோணத்திலிருந்து இசையை விமர்சிக்கிறேன்.அதைக் கூட செய்யக்கூடாது என்றும் எல்லோருக்கும் இளையராஜாவை கண்டிப்பாக பிடிக்கவேண்டும் என்றும் ராஜா ரசிகர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு கருத்து கூற முற்படுவது மூர்கத்தனமானது.மூடத்தனமானதும் கூட. அவர்கள் சிலாகிக்கும் ராஜா பாடல்களை நானும் போற்றவேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வது அடி முட்டாள்தனம்//

    முன்னால் அமெரிக்க சனாதிபதி சி(ஜி)யார்(ஜ்)ச்சு புச்சு(ஷ்),"எங்க கூட இல்லைனா எல்லாம் தீவிரவாதத்தினை ஆதரிப்பவர்கள்"னு சொன்னது போல,ராசாவின் இசையை ரசிக்கலைனா/விமர்சிச்சா இசை ஞான சூனியம்னு சொல்லுவது ரொம்பவே ஓவராத்தான் போயிட்டிருக்கு அவ்வ்!

    //ஆபாச இசை பற்றி நிறையவே பேசியாயிற்று. அதை பலரும் செய்திருந்தாலும் அவைகள் மக்களிடம் எந்தவிதமான எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை//

    ஒரு தொடர்ச்சிக்காக அதில் இருந்து ஆரம்பித்தேன், பலரும் நிறைய சொல்லிட்டாங்க.

    மத்தவங்களையும் கவனிச்சிட்டு வாரேன்!
    ------------------

    ReplyDelete
  121. விமல் அவர்களே,

    தெரியலைனா என்ன ,கருத்து ரீதியாக அணுகுவோம்.

    //ஆபாசம் பற்றி எழுதுகிறார்.அதுவும் பிசு பிசுத்து விட்டது.தமிழ் இலக்கியத்தில் இல்லாத ஆபாசமா?//

    அதையும் நான் சொல்லிட்டேன்,ஆனால் இசையின் பிதாமகன் என்ற பீடத்துல அமரனும்னா கொஞ்சம்"சுத்த பத்தமா" இருக்கனும்னு நினைப்பாங்க தானே :-))

    //கா.மூ.செரீப் ஆபாசப்பாடல் வரு இந்த படத்தில் எழுத மாட்டேன் என்று சொன்னது விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையிலேயே.இளையராஜா இசையில் அல்ல.அந்த பாடல் என்ன என்று கேட்டேன்.
    அதருக்கு ஏன் பதில் சொல்ல வேண்டும் என்கிறார் காரிகன்.//


    நீங்க கேட்டது ,பிகண்ட் தி ஸ்கீரின் சமாச்சாரம், உங்களுக்கு ஒன்னு தெரிஞ்சிருக்கு என்பதால் அதுவே உங்க இசை வாதத்திற்கான சான்றாவணம் ஆகிடாது, அப்படிப்பார்த்தால் அமுதவன் சாருக்கு ஆயிரத்துக்கு மேல திரைமறைவு சமாச்சாரங்கள் தெரியும், அதை சொல்லி தெரியுமானு கேட்டால் நாம எல்லாம் ஊர விட்டு தான் ஓடனும் :-))

    இதே கவி.காமு செரிப் "திருவிளையாடல்" படத்துல பாட்டும் நானே பாவமும் நானே பாடலை எழுதிட்டு என்பேரை போடாதிங்க ,வேற யாரு பேரையாவாது போட்டுக்குங்க, எங்க மார்க்கத்துக்கு விரோதமான பாடலை எழுதினது தெரிஞ்சா பிரச்சினை வரும்னு சொல்லிட்டாரம்,அது தெரியுமா? நாங்களும் கேட்பொம்ல :-))

    ஏ.ஆர்.ரெஹ்மான் இந்து/ மற்ற மதக்கடவுள் பெயர் வராதபடி தான் பாட்டு வரும்படி பார்த்துப்பாராம்,அதனால அவரை மதவெறியர்னு சொல்லி பாட்டே கேட்காம போயிடுவிங்களா அவ்வ்!

    செரிப் அவர் எழுதுற பாட்டு நல்லா வர தான் முயற்சி செய்திருக்கனும் ,படத்தில வர இன்னொரு பாட்டு ஆபாசம் அதனால் நான் பாட்டெழுத மாட்டேனு சொன்னது " தொழில்தர்மம்" அல்ல.

    நீங்க அதைப்புடிச்சிட்டு பார்த்திங்களா ,எப்பூடினு சொல்லிக்கிட்டு இருக்கிங்களே அவ்வ்!

    ---------------------

    //அப்படிப்பட்ட நீங்கள் எப்படி பாடல்களைப் பற்றி விமர்சிக்க முடியும்.ராகங்கள் அடிப்படையில் தான் பாடல்கள் நமது சினிமாவில் இருக்கிறது.//

    ராகங்களின் "அடிப்படையில்" ராகங்களையே வச்சு "சுருதி சுத்தமாக கர்நாடிக்" அல்ல திரையிசைப்பாடல்கள்.

    எனவே ரொம்ப ராகம் தெரியலைனாலும் சினிமா இசையை அலச முடியும்.

    //இசையின் அடிப்படையான சில் ராகங்கள் தெரியாத நீங்கள் எப்படி?//

    சரி முதலில் என்னிக்காவாது ராசா "தனக்கு கர்நாடிக் இசை தெரியும்னு சொல்லி இருக்காரா? இல்லை கத்துக்கிட்டேன்னு சொன்னாரா? உங்களுக்கு தான் பின்னணி சமாச்சாரமெல்லாம் தெரியுமே :-))

    ராசாவே "கேள்வி ஞானத்தின்" அடிப்படையில் தான் கர்நாடிக் ராகத்தினை கையாண்டு கொண்டுள்ளார்,அவரு என்னிக்கு எனக்கு கர்நாடிக் சங்கீதம் நல்லா தெரியும்னு சொல்கிறாரோ அன்னிக்கே இன்னார்லாம் பாராட்டினார்கள் என பால முரளிகிருஷ்ணா போல பெயர்களை சொன்னிங்களே அவர்களே முதல் ஆளாக வந்து "கலாய்ப்பாங்க" :-))

    //இந்தாமதிரி வீணாய்ப் போகும் விவாதங்களால் ஒன்றும் விளையப்போவதில்லை.//

    அதை எப்படி இவ்ளோ சீக்கிரமா கண்டுப்பிடிச்சிங்க :-))

    நீங்க வேண்டும்னா ,நெல்லு,உளுந்து,பயிருலாம் விளையாராப்போல ஒரு விவாதத்தினை செய்யலாமே ,விவசாயம் முன்னேறும்,உணவுப்பஞ்சம் தீரும் அவ்வ்!
    ---------------------

    ReplyDelete
  122. சார்லஸ் அவர்களே,

    //நீங்க பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டில் ஆட்டுபவரா அல்லது தொட்டில் ஆட்டிவிட்டு பிள்ளையை கிள்ளுபவரா ?//

    நான் எப்போ கிள்ளினேன், எப்போ தொட்டிலை ஆட்டினேன்,அவ்வ்,

    நான் ஒரு மிடில் மேன்(எப்பூடி நம்ம இங்லீசு) அதாவது நட்ட நடு செண்டர் ஆளு, எனவே நடுவாந்திரமாக பேசினால் ,அதுக்குனு இப்படிலாம சொல்வது அவ்வ்!

    //இளையராஜாவை இசைக்கே இறைவன் என்று நாங்கள் சொல்ல வரவில்லை//

    ரொம்ப நல்லவாரா இருக்கீங்களே!!!

    // இசைக் கலையில் யாருக்கும் குறையாத வல்லுநர் என்றுதான் சொல்கிறோம் .//

    இன்னாருக்கு குறைஞ்சவர்னு இங்கே யாரும் சொல்லலையே,அய்யா குடை பிடிச்சிட்டு போற பெரியவரே நீங்க எதுனா சொன்னிங்களா ? அவ்வ்!

    // அவர் அந்தப் பாடலை பாடிக் காண்பித்து பார்முலாவில் வராத ஸ்டைலுக்கு சென்று திரும்பும் பாவனையை சிலாகித்து சொன்னார் என்று குறிப்பிட வந்தேன் . //

    அந்த சீக்ரெட் ஃபார்முலா என்னவோ?

    அய்யா கர்நாடிக்லவே ஒரே ஸ்வரத்தினை வேற வேற கதி( நடை, தாளக்கட்டுல ) பாடுவாங்க, ஒரே ராகத்துல இருக்க கீர்த்தனையை வேற வேற ஸ்கேல்,கதில பாடி விரிவாக ஆலாபணை செய்வது தான் மெயின் பாடல்களில் செய்றதும் அப்படி செய்ய தெரிஞ்சா தான் இசை விற்பன்னர், நீங்க சினிமால ராகம் மாறாம வேற நடைக்கு போயிட்டு வந்தார் இசை மேதை, ஃபார்முலாவில் வராத ஒன்னுனு தூக்கிட்டு ஆடினா ஊருல இசை தெரிஞ்சவங்க மூக்கால சிரிப்பாங்க!

    //நல்ல இசைஞர்கள் சொன்னதை எடுத்துச் சொன்னால் அப்போதும் நன்றிக் கடனுக்காக சொல்லி இருப்பார்கள் என்று மறுத்தால் யார் சொல்லி உங்களை எல்லாம் புரிய வைப்பது? //

    இதெல்லாம் பொது வாழ்க்கையில சகஜமய்யா, பாராட்டி சொல்லலைனா , திரும்ப அழைப்பு வராது ,அதெல்லாம் இல்லை , எல்லாம் மனமாற பாராட்டினாங்க என்றால், அதுவும் ஒரு வகையான மூட நம்பிக்கைனு எடுத்துகலாம்.
    ----------------

    தகதிமிதா அவர்களே,

    //அ. கடவுள்களின் முழுமைத்தன்மை பற்றித் தாங்கள் அறியாததா? :)
    ஆ. சரி போகட்டும் மன்மதனும், இந்திரனும் கடவுள்கள் தானே?//

    நமிதாவுக்கு அப்புறம் நான் கேள்விப்படும் ரொம்ப்ப நல்ல பெயர் இதான் :-)),

    திசை திருப்ப விரும்பவில்லைனு சொல்லிட்டு எல்லாம் " டேக் டைவர்ஷன்" கேள்வியா இருக்கே அவ்வ்!

    கடவுள்களீன் முழுமைத்தன்மை எல்லாம் எனக்கு எப்படி தெரியும்,நான் சிலை செய்யும் போது கிட்ட இருந்து பார்த்ததே இல்லை அவ்வ்!

    மன்மதன் என ஒரு படம் வந்திருக்கு,இந்திரன் என வந்துச்சா என்று தெரியலை,வந்தாலும் வந்திருக்கும், எனவே அதுல நாயகனாக நடிச்சவங்க எல்லாம் "ரசிக சிகாமணிகளுக்கு" கடவுளாவும் இருக்கலாம், "தெய்வம் மனுஷ ஸொருபம்" னு சும்மாவா சொன்னாங்க :-))

    //பாஸ், அவர் மகான், கடவுள் என்றெல்லாம் அவரின் இசையை ரசிக்கும் ரசிகர்கள் விதந்தோதுவதில்லை. அவர்கள் ரசிப்பது அவரின் இசையை மாத்திரமே.

    ரசிகர்கள் பக்தர்களாகி போற்றிப் பாடுவதை கேள்விக்குள்ளாக்குங்கள். அதற்காக ஒட்டுமொத்தமாக அவரின் இசையைப் புறந் தள்ளுவது நேந்மையற்ற செயல். //

    விதந்தோம்புதலை தான் விமர்சிக்கிறார்கள்.
    அவரது இசையை ஒட்டு மொத்தமாக புறந்தள்ளவே இல்லை, ராசா தமிழ் திரை இசையுலகில் உள்ள திறமையான இசையமைப்பாளர்களில் "ஒருவர்" என்றே கூறுகிறோம்.

    //அப்படிப்பட்ட பாடல்களைத் தன் தொழிலில் தவிர்ப்பதற்கு அவர் ஒன்றும் பக்திப் பாடல்களுக்கான இசையமைக்கும் வீரமணி போன்றோ, பித்துக்குளி முருகதாஸ் போன்றோ அறியப்பட்டவரில்லை.//

    நான் ஆபாசத்தை முன்னிறுத்தி கேள்விக்கேட்கவே இல்லையே.

    அப்புறம் நீங்களே ஒரு பாயிண்ட் எடுத்துக்கொடுக்கிறிங்க, வீரமணி, பித்துக்குளி முருகதாஸ் போல இல்லைனு சொல்லுறிங்க,ஆனால் நான் ஆன்மீகவாதி எனவே நாத்திகரான பெரியாரின் வாழ்க்கை வரலாற்று படத்துக்கு இசை அமைக்க மாட்டேன்னும் சொன்னாரெ ஏனோ?

    //இன்னொன்றையும் பார்க்கவேண்டும். 80களில் சிலுக்கு, ஜெயமாலினி, அனுராதா, டிஸ்கோ சாந்திகளின் குலுக்கு நடனத்தை வலுக்கட்டாயமாக ஒவ்வொரு படத்திலும் திணித்தனர். அவர்கள் ஆட இவர் என்ன பஜனைப்பாடலா போட்டிருக்க முடியும்? //

    பாட்டு போடுறதுனா எப்படி வேண்டும்னாலும் போடலாம், ஆனால் குலுக்கு பாட்டுகளை மட்டுமா கணக்கில் வச்சு சொல்கிறார் காரிகன்.

    சிலுக்கு,ரஜினி காம்பினேஷனில் "பேசக்கூடாது வெறும் பேச்சில் இன்பம் இல்லைனு" கூடத்தான் நல்லவிதமாக பாட்டு போட்டிருக்கார் ,எனவே சிலுக்கு ,அனுராதா வந்தால் விரசமாக பாட்டுனு யாரு முடிவு செஞ்சாங்களோ?

    அப்புறம் நான் அந்த மாதிரி பாடல்களுக்குலாம் எதிரியும் அல்ல, நல்லா ரசிப்பேன் ஹி...ஹி!

    -------------------------

    ReplyDelete
  123. காரிகன் அவர்களே
    உங்களிடம் நாம் சில கேள்விகளை கேட்பது ஏன்றால் நீங்கள் ராஜா ரசிகர்களுக்கு இது கூடத் தெரியவில்லை என்று சொல்வதாலேயே தவிர எனக்கு எல்லாம் தெரியும் என்பதற்கு அல்ல.மற்றது நீங்களும் அமுதவனும் உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல புனைந்து எழுதுவதாலேயே தவிர வேறில்லை.

    வவ்வால் அவர்களே
    கா.மூ. செரீப் பற்றி எழுத நேர்ந்தது அதனால் தான்.அதுவும் ஆபாசம் என்ற சொல்லை வைத்து கட்டுரை அமைந்ததால் தான்.ராஜாவின் ரசிகர்களுக்கு இது கூடத் தெரியவில்லை என்ற நக்கலின் எதிர்வினை தான் அது.பழைய பாடல்களைப் பற்றி பெருமை பேசும் ஒருவருக்கு , ஆபாசம் குறித்த பழைய செய்தியை சொன்னேன்.

    இளையராஜ தான் ஆபாசம் என்ற ஒற்றை வாதம் சரியல்ல என்பதர்க்காகவே சொல்லபட்டது.

    //.. அப்படிப்பார்த்தால் அமுதவன் சாருக்கு ஆயிரத்துக்கு மேல திரைமறைவு சமாச்சாரங்கள் தெரியும், அதை சொல்லி தெரியுமானு கேட்டால் நாம எல்லாம் ஊர விட்டு தான் ஓடனும் ://

    தேவை என்றால் நீங்கள் ஓடுங்கள்.அவர் வதந்திகளைத் தானே பதிவாக்குகிறார்.அவருக்கும் காரிகனும் ராஜாவை சாவு மேளம் ,சின்ன மேளம் , பெரியமேளம் ,ஆபாச இசையமைப்பாளர் , porno இசையமைப்பாளன் என்று " விமர்சனம் " வைப்பது உங்கள் வவ்வால் கண்ணுக்கு தெரியவில்லை போலும்.

    அவர்களின் நோக்கமே ராஜாவை வசை பாடுவது தானே தவிர வேறில்லை என்பது அவர்கள் எழுத்தில் துல்லியமாக தெரிகிறது.ராஜ ரசிகர்களை சாடுகிறோம் என்ற போர்வையில் செய்வதெல்லாம் ராஜாவை வசை பாடுவத்ர்க்கே தவிர வேறில்லை.இந்த நியாயங்கள் உங்கள் கண்ணுக்கு புரியவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்.

    இவர்களை கேள்வி கேட்டால் திருவிளையாடல் தருமி போலவே பதில் சொல்கிறார்கள்.[ அவர்களுக்கு கேட்கத்தான் தெரியும் ]

    ராஜா இசை எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்ல காரிகனுக்கு உரிமை உண்டு.அதற்காக அது உண்மை ஆகி விடுமா ?.ஒரு விமர்சகன் என்றால் ராஜா இசையமைத்த பாடல்கள் சரியில்லை என்றால் இசை ரீதியாகத்தான் சொல்ல வேண்டும்.அது பற்றி விளக்க வேண்டும்.

    நீங்கள் சொல்வது போல எல்லோரயும் போல ஒரு இசயமைப்பாளனாக ராஜா இருந்தாலும் அவர்கள் செய்த சாதனை அதிகம் என்பதே ராஜா ரசிகர்களின் கருத்து.

    அமுதவனையும் ,காரிகனையும் போல விசு வனாதனையோ , மகாதேவனையோ ,மற்றும் பழைய இசையமைப்பலர்கலையோ தனிப்பட்ட ரீதியில் ராஜா ரசிகர்கள் இவ்வளவு கேவலமாக எழுதியதில்லை.

    இவர்களைப் போல ராமநாதன் சாவுமேளம் , மகாதேவன் கரகாட்ட மேளம் .விஸ்வநாதன் தகர டப்பா டோலக்கு என்று யாரும் ஒருவர் கூட் இணையத்தில் எழுதவில்லை.

    ராஜா ரசிகர்கள் எழுதுவதெல்லாம் ராஜாவை மற்றவர்களை விட சிறந்த இசையமைப்பாளர் என்றே தவிர. இந்த அளவுக்கு வன்மமும் , வக்க்ரத்துடநும் யாரும் பழைய இசியயமைப்பால்ர்களை வரை முறையின்றி எழுதவில்லை என்கிறேன் .அப்படி யாரும் எழுதியிருந்தால் அவர்களைச் சாடுபவனும் நானாகத் தான் இருப்பேன்.
    அப்படி யாரும் எழுதியிருந்தால் தயவு செய்து காட்டுங்கள்.அவர்களைச சாடுவோம்.ஹி...ஹி!

    ReplyDelete
  124. வவ்வால்,
    உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. இ.ராஜாவை விமர்சித்தால் ஞான சூன்யம் என்ற பட்டம் ரெடிமேடாக கிடைத்துவிடும் என்பது இணையம் அறிந்தது.(உலகம் என்று பெரிய வார்த்தை வேண்டாம்).சால்ஸ்,விமல்,தகதிமிதா,வேட்டைக்காரன்,ரிம்போச்சே எல்லாருமே ஒரு வித மாய வெறுப்பில் இருக்கிறார்கள்.எவ்வளவோ சொல்லியாகிவிட்டது. இல்லை.இது இப்படித்தான் என்று கூப்பாடு போடுவதை அவர்கள் நிறுத்தப்போவதில்லை. இளையராஜாவைப் பற்றி மூன்று பதிவுகள் எழுதியிருக்கிறேன்.முதல் இரண்டும் அவருடைய பொன்னான நல்லிசையைப் பற்றி (எனக்குப் பிடித்ததும் கூட). மூன்றாவது பதிவிலேயே அவரின் நலிந்த இசையை பற்றி குறிப்பிட்டுள்ளேன். அதற்கான காரணத்தையும் தெளிவாகவே விவரித்திருக்கிறேன்.அதில் ஆபாசம் ஒரு அம்சம்.அவ்வளவே.இவர்கள் தங்கள் வசதிக்கென சில வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு உக்கிர தாண்டவம் ஆடுகிறார்கள். நீங்களும்தான் பார்த்தீர்களே.விவாதங்கள் அர்த்தமற்றுப் போய்கொண்டிருப்பதாகப் படுகிறது. குழாயடி சண்டைக்கு பாதை போடுகிறார்கள். இசையின் அடிப்படியிலேயே இளையராஜாவின் பாடல்களை விமர்சிக்கவேண்டுமாம். அடேங்கப்பா.எத்தனை நேர்மை. இதே அளவுகோல் கொண்டா ரகுமானையும் ஹாரிசையும் இன்ன பிற தற்காலத்து இசைஞர்களையும் ராஜா ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள்? ரகுமான் என்றால் ஒரே போடு. ஹாரிஸ் என்றால் ஒரே வெட்டு என்று சகட்டுமேனிக்கு கறிக்கடை ரேஞ்சுக்கு கத்தி வீசுவார்கள். அது சரி என்றால் இதுவும் சரியே. இளையராஜா மிகச் சிறந்த இசை அமைப்பளர்களில் ஒருவர் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தே கிடையாது. ஆனால் அவரேதான் எல்லாம் என்றால் என் எழுத்து இப்படித்தான் இருக்கும். சூடு தாங்காவிட்டால் ஓரமாக போய்விடுங்கள் என்று சொல்லியும் கேட்பாரில்லை. அதுபோகட்டும். உங்கள் தளத்தில் எப்போது அடுத்த பதிவை காணலாம்?

    ReplyDelete
  125. வேட்டைக்காரன்9 September 2013 at 23:50

    //. உங்கள் தளத்தில் எப்போது அடுத்த பதிவை காணலாம்? //

    நீங்களும் அடுத்த இடுகைக்குப் போலாமே ஐயா.

    ReplyDelete
  126. அமெரிக்கா போருக்கு ஆள் சேர்ப்பது போல காரிகன் வவ்வாலை துணைக்கு அழைக்கிறார்.அது அவரவர் விருப்பம்.

    நாங்கள் வைத்த குற்ற சாட்டுக்களுக்கு நேர்மையான பதில் இதுவரை காரிகனின் எழுத்தில்கிடைக்கவில்லை.

    "அதுக்கென்ன எவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்க்கு தகுந்த பரிசைத் தாருங்கள் " என்பது போலத்தான் இருக்கிறது.
    அது மட்டுமல்ல " பாட்டெழுதி பெயர் வாங்கும் புலவர்களும் உண்டு . குற்றம் கண்டு பெயர் வாங்கும் புலவர்களும் உண்டு." தருமி.

    யார யாரை எல்லாம் சேர்த்துக் கொண்டு நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்பது தான் நமது நிலைப்பாடு.
    இளையராஜாவின் ஞானம் பற்றி எத்தனையோ மேதைகள் பேசியாயிற்று.இது போன்ற அர்த்தமற்ற ,சிறுபிள்ளைத்தனமான "விமர்சனம்" எனபது வருங்கால "பால்குடி"க்கும் தெரிந்து விடும்.

    மீண்டும் ,மீண்டும் சொல்கிறேன்.
    ராஜா ரசிகர்கள் எழுதுவதெல்லாம் ராஜாவை மற்றவர்களை விட சிறந்த இசையமைப்பாளர் என்றே தவிர. இந்த அளவுக்கு வன்மமும் , வக்க்ரத்துடநும் யாரும் பழைய இசியயமைப்பால்ர்களை இது வரை முறையின்றி எழுதவில்லை என்கிறேன்.

    ReplyDelete
  127. வவ்வால் ஐயா!

    நக்கல் நாயகரே! நீங்கள் நேர்மையாக 'நேராக ' இருப்பீர்கள் என நினைத்தால் தலைகீழாக தொங்கும் ...சாரி ..பேசும் மனிதர்தானா? இளையராஜாவை புகழ்வது போல் இகழ ஆ ...ரம்பித்து விட்டீர்கள் .
    அது சரி பேசும்போதே ஏதும் வாந்தி வருகிறதா? இடையிடையே 'அவ் ..அவ் ' என்று சத்தம் வருதே! ஓ .. வடிவேலு மாதிரி முயற்சி பண்ணுகிறீர்களா!? இளையராஜா பாட்டு கேளுங்க இந்த வியாதி சரியாயிடும் .

    ReplyDelete
  128. விமல் சார் !
    சரியாகச் சொன்னீர்கள். எந்த இளையராஜா ரசிகரும் அவருக்கு முந்தைய இசை முன்னோர்களை இழிவாக ..குறைவாக எழுதியதாக நானும் படித்ததில்லை . இளையராஜா தன் முன்னோர்களை குறையாக சொன்னதே இல்லை . பெருமையாகத்தான் சொல்லி இருக்கிறார் . இளையராஜாவின் உண்மை ரசிகர்களுக்கு அப்படிப்பட்ட வக்கிரப் புத்தியும் கேவலமான மனப்பாங்கும் இருக்காது .

    காரிகன் அமுதவன் இப்போது வவ்வால் மூவரும் பசுதோல் போர்த்திக் கொண்டு வரும் பதிவர் புலிகள் . காட்ட வேண்டிய நேரத்தில் குணத்தை கட்டி விடுவார்கள் . அவர்களின் வார்த்தை ஜாலங்களை பாருங்கள் . கிண்டலும் கேலியும் எகத்தாளமும் எவ்வளவு கொட்டிக் கிடக்குது என்று பாருங்கள் . செய்திகள் சொற்பமே ! இவர்களை போல நமக்கு எழுத வராது என நினைக்கிறார்களா!?
    அது மாதிரி காரிகனை கிண்டல் பண்ணி எழுதிய பின்னூட்டதைதான் அவர் அழித்து விட்டார் . ஆனால் வவ்வாலின் அநாகரீக கிண்டல் நிறைத்த பின்னூட்டத்தை அனுமதிக்கிறார் . அவர் அடுத்த பதிவுக்கு இதனை பின்னூட்டங்கள் வருமா என்பது சந்தேகமே !
    இப்போது அவருக்கு புரிந்திருக்கும் இளையராஜாவின் இசையின் வலிமையை!

    ReplyDelete

  129. திரு சால்ஸ்,
    தவறுதலாக அழிக்கப்பட்டுவிட்ட உங்கள் பின்னூட்டத்தை மீள் பதிவு செய்திருக்கிறேன். உங்களின் தரமான வார்த்தைகளை கொண்ட பின்னூட்டத்தை கண்டு களிப்பூருங்கள்.


    Charles said: "கொதிக்காதீர்கள் ...குதிக்காதீர்கள் என்று பஜனை பாடுகிறீர்களே காரிகன் . வார்த்தை சித்தர் என்பது சரிதான் போலும் ! இளையராஜாவின் இசை பாட அல்ல வசை பாடவே வந்துள்ளேன் என்பதை தெள்ள தெளிவாக நீங்களே ஒப்புக் கொண்டு விட்டீர்கள் . உங்கள் முகத் திரை கிழிந்தது .

    உங்களுக்கு பழைய இசை அமைப்பாளர்களின் இசை புரிகிறது . ஒ.கே . இப்போதுள்ள வெளி நாட்டு இசை காப்பி மன்னர்களின் இசை பிடிக்கிறது . அதுவும் ஒ. கே . இசைஞானியின் உன்னதமான இசை மட்டும் பிடிக்கவில்லை . ஏன்? (பிடிக்க வேண்டும் என்பது கட்டாயமா என்று காட்டுத்தனமாக கூச்சல் இடாதீர்கள் )

    /// என்னைப் பொறுத்தவரை இளையாராஜாவின் பாடல்களில் குப்பைகளே அதிகம். அதைத்தான் நான் விமர்சனம் செய்கிறேன். அதைச் செய்ய நீ யார் என்று என்னைக் கேட்டால் நான் உங்களை கேட்பதும் அதுவே. ///

    ஆமா.. மா ..உங்களின் தினசரி வேலைகளை சொல்லுங்கள் என்று யாராவது உங்களைக் கேட்டால் 'பாத்ரூம்' சமாச்சாரம்தான் முதலில் ஞாபகம் வருமோ!? பரந்து விரிந்த அழகான இசை உலகத்தில் குப்பைகளை மட்டும் கண் விரிய பார்க்கும் கலை ஞானி ! அப்படி என்றால் எல்லார் வீட்டு குப்பைகளையும் முகர வேண்டும் . தயாரா?

    /// 90 களில் இளையராஜாவின் இசையை மக்கள் வேறு வழியின்றிதான் கேட்டார்கள்.///

    அய்யோ பாவம் ! பிதாவே இவரை மன்னியும் ! இவர் பேசுவது இன்னதென்று அறியாமல் பேசுகிறார் ! 90 களில் ரேடியோவில் இளையராஜா பாட்டை மட்டும்தான் போட்டார்கள் என்று தெளியாமல் ..சாரி..தெரியாம பேசுகிறார்.


    /// நீங்கள் ராஜாரசிக சிகாமணி என்பதால்தான் இத்தனை கொதிப்பு வருகிறது.இதே நான் ரகுமானின் பாடல்கள் எல்லாமே குப்பை என்று பதிவு எழுதினால் இதேபோல ரியாக்ட் செய்வீர்களா///

    குப்பைகள் எப்போதும் குப்பைகள்தான் ..இதில் நல்ல குப்பை கெட்ட குப்பை உளதோ!? நீங்களே ஒப்புக் கொண்டு விட்டீர்கள் போலிருக்கிறது .அடுத்து எழுதப் போவதெல்லாம் குப்பைதானா?"


    இதற்குத்தான் இத்தனை ஆட்டம் போட்டார் இவர்.

    ReplyDelete
  130. வவ்வால் ஐயா ...எல்லாம் ரசிப்பீர்களோ!? நமீதாவையும் ரசிக்கிறீர்கள் ;தகதிமிதாவையும் ரசிக்கிறீர்களே ! சிலுக்குக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உங்களிடம் இளையராஜா இசை பற்றிய உண்மை விமர்சனம் எதிர்பார்ப்பது தவறுதான் !

    /// அய்யா கர்நாடிக்லவே ஒரே ஸ்வரத்தினை வேற வேற கதி( நடை, தாளக்கட்டுல ) பாடுவாங்க, ஒரே ராகத்துல இருக்க கீர்த்தனையை வேற வேற ஸ்கேல்,கதில பாடி விரிவாக ஆலாபணை செய்வது தான் மெயின் பாடல்களில் செய்றதும் அப்படி செய்ய தெரிஞ்சா தான் இசை விற்பன்னர், நீங்க சினிமால ராகம் மாறாம வேற நடைக்கு போயிட்டு வந்தார் இசை மேதை, ஃபார்முலாவில் வராத ஒன்னுனு தூக்கிட்டு ஆடினா ஊருல இசை தெரிஞ்சவங்க மூக்கால சிரிப்பாங்க! ///

    நான் என்ன சொல்ல வந்தேன் என்று உங்களுக்குப் புரியவில்லை . நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள் என்று எனக்கும் புரியவில்லை . இளையராஜா ரசிகருக்கு நான் சொன்னது புரிந்திருக்கும் . ஆனா ஒன்னு புரியுது . உங்க ஊருல மூக்கால சிரிப்பாங்க ரைட்டா?

    ReplyDelete
  131. ஆகா.. காரிகனை பயந்தாங்கொள்ளி என்று நினைத்தேன் ..ஆனால் என் பின்னூட்டத்தை மீண்டும் ஏற்றி விட்டாரே ! நன்றி காரிகன்

    ReplyDelete
  132. திரு சால்ஸ் வகையறாக்களுக்கு,
    உங்களுக்கு போதுமான இடம் கொடுத்தாகிவிட்டது. நிறையவே பேசிவிட்டீர்கள். உங்கள் எழுத்தில் தனி மனித தாக்குதலும் அநாகரீகமான வார்த்தைகளும் தலை காட்டத் தொடங்கிவிட்டதால் என் பதிவுகளுக்கு நீங்கள் உகந்தவற்களில்லை என்று தோன்றுகிறது. வீணான வாதங்களோடு உங்கள் இளையராஜா பஜனையை என் இடத்தில் பாடுவது முறையல்ல. இது நாலாந்தர ஆட்களுக்கான மைதானமல்ல என்பதை நான் உங்களுக்கு புரியவைக்க தவறியதால் ஏற்பட்ட விளைவு உங்களைப் போன்றவர்களின் கீழ்த்தரமான பின்னூட்டங்கள். இதுவும் என்னிடத்தில் இருக்கும் நியாயமான சுதந்திரச் சிந்தனையின் வெளிப்பாடே. ஊரோமா ஆத்துப்பக்கம் பாடலை விரும்பும் உங்களைப் போன்றவர்களுக்கு என் வந்தனம். கொஞ்சம் குறைப்பதை குறைத்துக்கொள்ளுங்கள். இனிமேல் உங்கள் பின்னூட்டங்கள் இடம் பெறுவது உங்களின் எழுத்தின் தரத்தை பொறுத்திருக்கிறது. (கீழ்த்தரமான ரசனை உள்ளவர்களுக்கு மேன்மையான சிந்தனைகளா வரும்?)

    ReplyDelete
  133. காரிகன்,
    யார் என்ன சொல்லியபோதும் தமிழ்த்திரை இசை குறித்து இணையத்தில் இப்படிப்பட்ட ஒரு கட்டுரைத்தொடர் யாரும் எழுதியதில்லை. முன்னோர்களிலிருந்து ஆரம்பித்து இன்றைய இசையமைப்பாளர்கள் வரைக்குமான அலசல், விமர்சனம், ரசனை, இசைஅனுபவம் என்ற எல்லாம் கலந்த கதம்பமாக உங்கள் தொடர் பதிவு அமைந்திருக்கிறது. இதற்காக நீங்கள் எத்தனை சிரமம் எடுத்திருப்பீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதையேதான் திரு வவ்வால் அவர்களும் சொல்லியிருக்கிறார்- 'உண்மையில் விரிவான அலசல். இப்படியான இசை அலசல் கட்டுரைகள் தமிழ்ப் பதிவுலகில் அரிதே' என்று. இப்படியொரு நல்ல கட்டுரையை எழுதிவரும் உங்களுக்கு மீண்டும் எனது பாராட்டுக்கள்.
    வவ்வால் கொஞ்சம் தாமதமாக வந்து என்னைப் பற்றியும் பேசியிருப்பதால் அவருக்கான பதிலாகவும் இதனை எடுத்துக்கொள்ளலாம்.

    ராஜாவை விமர்சிக்கவே கூடாது என்கிறார்கள். விமர்சித்தால் இசை தெரியுமா என்கிறார்கள். இசை தெரியாமல் எப்படி விமர்சனம் செய்யலாம் என்கிறார்கள். விமர்சனம் நேர்மையாக இல்லை என்கிறார்கள். நாங்கள் கேட்டதற்கு பதில் சொல்லிவிட்டு அப்பால போ என்கிறார்கள். நீங்கள் உங்கள் stand இதுதான் என்று சொல்லிவிட்டீர்கள். பலமுறை சொல்லிவிட்டீர்கள்.

    'அப்படியானால் எங்கள் stand இதுதான்' என்று மல்லுக்கு நிற்கிறார்கள். 'நான் இப்படித்தான் எழுதுவேன்; நீங்கள் நினைக்கிறமாதிரி என்னை எழுத கட்டாயப்படுத்த முடியாது. வேண்டுமானால் நீங்கள் ஒரு வலைப்பூ துவங்கி அல்லது உங்களுடைய வலைப்பூ இருந்தால் நீங்களும் எழுதலாமே' என்று நியாயமாகவும் சொல்லிப்பார்த்துவிட்டீர்கள். அவர்கள் செவிமடுப்பதாக இல்லை. அவர்களுடைய சில கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியவில்லையாம். என்னைப்பார்த்து வீசிய கேள்விகளுக்கு என்னாலும் பதில் சொல்லமுடியவில்லையாம். குதூகலித்துக்கொள்கிறார்கள். கொண்டாடுகிறார்கள். கொண்டாடிக்கொண்டு போகட்டும்.
    உங்கள் கட்டுரையை நான் வேறு கோணத்தில் பார்க்கிறேன். இணையத்தில் இளையராஜாவுக்கென்று இருக்கும் கூட்டம் பற்றித் தெரியும். இங்கே இணையத்தில் எந்தெந்த பிரமுகர்கள் கொண்டாடப்படுகிறார்கள் எந்தெந்தப் பிரமுகர்கள் இகழப்படுகிறார்கள் தாக்கப்படுகிறார்கள் என்பதெல்லாம் எல்லாருக்கும் தெரிந்த விஷயங்கள்தாம். இதுபற்றி எழுதப் பின்னூட்டப் பகுதிகள் போதாது.

    சில லட்சம் பேர் மட்டுமே புழங்கும் ஒரு மீடியாதான் இணையம் என்பது. அதிலும் தமிழ் இணையம் என்று வரும்போது சில ஆயிரம்பேர் மட்டுமே புழங்கும் ஒரு வெளி, அவ்வளவுதான். இந்த 'வெளியில்' இருக்கும் மெஜாரிடி ஆட்களுக்கு இளையராஜாவைப் பிடிக்கிறது. இது ஒரு cult மாதிரிதான்.
    ஸ்ரீஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆசிரமத்திற்குச் சென்றீர்களானால் அவரைத் தவிர இன்னொரு 'கடவுள்' இல்லை என்கிறார்கள். நித்தியானந்தா ஆசிரமம் சென்றால் நித்தியைத் தவிர இன்னொரு கடவுள் இல்லை என்கிறார்கள். பல கார்ப்பரேட் சாமியார்களின் ஆசிரமங்களிலும் இதே கதைதான். காரணம் அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டது இப்படித்தான். அவர்களுக்கு ஆன்மிகம் என்றால் அவர்கள் சார்ந்திருக்கும் ஆசிரமங்கள்தாம். ஆனால் பொதுமக்கள் இதுபற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. அவர்களுக்கான ஆன்மிகம் என்பது கோவில்களில் உள்ளது. திருப்பதியிலும், சபரிமலையிலும் வேளாங்கண்ணியிலும் மசூதிகளிலும் உள்ளது ஆன்மீகமும் பக்தியும். தமிழ்த்திரை இசையும் இப்படித்தான். நான் பலமுறை சொல்லியிருப்பது போல் தமிழ்ப் பாடல்கள் என்றால் சிவாஜி, எம்ஜிஆர், கண்ணதாசன், டிஎம்எஸ், பி.சுசிலா, சீர்காழி என்று பயணிப்பதே தமிழ் இசை. இவர்களைத் தாண்டி ரொம்ப தூரம் வந்தபிறகுதான் நாம் இடைப்பட்ட காலத்திற்கே வரவேண்டும்.ஏனெனில் தமிழ்த்திரை இசை என்பது ரொம்ப ரொம்பப் பெரியது. இதுபற்றியெல்லாம் நான் இணையத்திலேயே நிறைய பதிவுகள் எழுதியிருக்கிறேன். அதனால் அதையெல்லாம் இங்கே சொல்லிக்கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை.

    நீங்கள் என்னவோ சரியாகத்தான் இலக்கை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நடுவில் நிறுத்திவைத்துச் சிலபேர் தகராறு பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். கவலைப்படாமல் அவர்களைக் கடந்து சென்றுகொண்டே இருங்கள்.


    ReplyDelete
  134. நான் சொல்லவந்தது என்னவெனில் இப்படிச் சண்டைப் போடுகிறவர்கள் மொத்தம் நான்கு பேர்தாம். மற்றபடி பார்த்தால் ஆனந்தகுமார், யோகேஷ், கார்த்திகேயன், ஞானசம்பந்தன், விஷால், Enoke, வேணுகோபாலன், ஷியாம், பரத் என்று ஒன்பதுபேர் புதியதாக வந்து இணைந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் மனதார உங்கள் கட்டுரையைப் பாராட்டியிருக்கிறார்கள். 'இது புதிது இப்படி நாங்கள் படித்ததில்லை' என்று சொல்லியிருக்கிறார்கள். ஆக நமக்கு இவர்கள்தான் இலக்கு. இனிமேல் இவர்களுக்காக எழுதுங்கள்.

    ஆபாசப் பாடல்கள் பற்றி நீங்கள் எழுதப்போக இதில் திரு வவ்வால் சொல்லியிருக்கும் கருத்து அவருக்கேயுரிய பாணி. உங்களுடைய மையப்புள்ளிக்கு அவரும் வரத் தவறியிருக்கிறார். பல ஆபாசப் பாடல்கள் ஒரு trend போலவே படங்களில் உலா வர இளையராஜாதான் காரணம் என்பதுதான் உங்கள் குற்றச்சாட்டு. ஆபாசப்பாடல்கள் போடுவதில் ஒரு மன்னர் போலவே அவர் இருந்தார் என்பதைத்தான் நீங்கள் சொல்கிறீர்கள். உடனே விஸ்வநாதன் போடவில்லையா மகாதேவன் போடவில்லையா என்ற கேள்விகளைத் தூக்கிக்கொண்டு அடிக்க வருகிறார்கள். மகாதேவனும் விஸ்வநாதனும் மற்றவர்களும் ஆபாசப்பாடல்கள் போட்டார்கள் என்றால் அது ஜெயகாந்தன் கவிதை எழுதின மாதிரி. எப்போதோ ஒன்று. அல்லது சாண்டில்யன் சமூகக் கதை எழுதின மாதிரி. ரொம்பவும் rare. ராஜாவுடைய 'டோஸ்' அளவுக்கு அதிகமானது. பாரதிராஜா என்ன அவருடைய மொத்தப் படங்களிலும் வெள்ளுடை தேவதைகளை மட்டுமே வைத்தா படமெடுத்தார்? ஆனால் பாரதிராஜாவைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம் அந்த 'வெள்ளுடை தேவதைகளை' விமர்சகர்கள் கேலியாகவும் கிண்டலாகவும் குறிப்பிடுகிறார்களா இல்லையா? அதுபோலத்தான் இதுவும் ஒரு விமர்சனம்.........
    இளையராஜாவைப் பற்றி இங்கே சில முத்துக்கள் காணக்கிடைக்கின்றன.
    'இளையராஜாவை இசைக்கே இறைவன் என்று நாங்கள் சொல்லவில்லை. இசைக்கலையில் யாருக்கும் குறையாத வல்லுநர் என்றுதான் சொல்கிறோம்.'

    'அவர் மகான் கடவுள் என்றெல்லாம் அவரின் இசையை ரசிக்கும் ரசிகர்கள் விதந்தோதுவதில்லை. அவர்கள் ரசிப்பது அவரின் இசையை மாத்திரமே.'

    'ராஜாவின் peak creativity இப்போது போய்விட்டிருக்கலாம். உண்மைதான். அதற்காக அவரின் பாடல்கள் வாடிப்போகும் பூவாகுமா? அவை கோஹினூர் வைரங்கள்'

    'ராஜாதிராஜா நம்ம ராஜாதி ராஜாதி ராஜாதி ராஜாதி ராஜாதான்'(இன்னும் சில ராஜாதிராஜாதி விடுபட்டுப் போயிருந்தால் மன்னிக்கவும்)

    இத்தனையும் இருக்க திரு வவ்வால் சொல்லியிருப்பதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை.
    'raasa is not the one and only undisputed king of music,he is a just one among the M.D of tamil film world.'

    ReplyDelete
  135. இப்போது ரகுமானுக்கு வருவோம்.
    இளையராஜாவைப் 'போற்றும்' நண்பர்களால் ரகுமான் மிக மோசமாக விமர்சிக்கப்படுகிறார். ஒரு நண்பர் 'ஆஸ்கார் விருதை ஒரு அளவுகோலாக வைத்து விவாதிப்பதே ஒரு நகைச்சுவை(அடாடா, எது நகைச்சுவை என்பதை இவர் கண்டுபிடித்திருக்கிறார் பாருங்கள்) அங்கு விருதுகள் தேர்ந்தெடுக்கப்படும் கூத்துக்களை இணையத்தில் தேடிப் படித்துப் பாருங்கள்' என்கிறார்.

    இன்னமும் வெளிவராத, அங்கீகரிக்கப்படாத சிம்பனியை இவர்கள் அளவுகோலாக வைத்து இளையராஜாவைக் கொண்டாடலாமாம். இரண்டு கைகளிலும் இரண்டு ஆஸ்கார் பரிசுகளை ஏந்திக்கொண்டு தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த ரகுமான் சாதனையை அளவுகோலாக வைத்துக்கொள்ளக்கூடாதாம்.

    விருதுகளுக்குத் தேர்வு செய்வதில் 'கூத்துக்கள்' நடைபெறுவதெல்லாம் இன்றைய நிலையில் வெகு சாதாரணமே. ஏன் அதே கூத்துக்கள் அடியொட்டி வேறு இசையமைப்பாளர்களும் அதே ஆஸ்காரை வாங்கிக்காட்ட வேண்டியதுதானே? அல்லது அதைவிடவும் உன்னதமான வேறொரு விருதினை வாங்கித் தமிழனின் தலையை நிமிர்த்துவதுதானே? (எங்களுக்கு ரசிகனின் நெஞ்சத்தில் இடம்பிடித்தாலேயே..........போன்ற மொக்கைகள் வேண்டாம்)

    ReplyDelete
  136. சில ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருப்பதைப் போல ரகுமானின் மார்க்கெட் வேல்யூ என்பது அவ்வளவு சாதாரணமானதல்ல. பல பல கோடிகளை உள்ளடக்கியது. இன்றைக்கு ரகுமான் ஒரு படத்திற்கு என்ன வாங்குகிறார், அவருடைய இசை ஆல்பங்கள் உலக அளவில் எப்படி விற்கப்படுகிறது, அவருக்கு உலக அளவில் இருக்கும் ரசிக வட்டம் எத்தகையது என்பதையெல்லாம் நாம் இங்கே இந்த இடத்தில் சொல்லிக்கொண்டு அதை வைத்து தமிழின் இன்னொரு இசையமைப்பாளரை எடைபோடுதல் வேண்டாம். ஆனால் ரகுமான், அவ்வளவு எளிதாகத் தூக்கி எறிந்துவிடக்கூடியவரல்ல என்பதை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும்.

    வவ்வால் சொன்ன ஒரு வார்த்தைக்கு பதில் சொல்லவந்த ஒரு நண்பர் என்னைப்பற்றிச் சொல்லும்போது 'அவர் வதந்தியைத்தானே பதிவாக்குகிறார்' என்று சொல்லியிருக்கிறார்.
    எனக்கு மிகவும் சந்தோஷம். ஏனெனில் நான் பல ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கிறேன். தமிழகத்தின் அத்தனைப் பெரிய பத்திரிகைகளிலும் எழுதியிருக்கிறேன். ஆனாலும் நாம எழுதுவதைப்பற்றி பெரிய மனிதர்கள், பெரிய அறிவாளிகள் ஒன்றுமே சொல்வதில்லையே என்ற குறை எனக்கு நீண்ட நாட்களாக இருந்துவந்தது. இதோ இப்போது ஒரு மாபெரும் அறிஞரும், பத்து லட்சம் பிரதிகள் விற்பனை ஆகும் பத்திரிகையின் ஆசிரியருமான ஒருத்தர் என்னைப்பற்றிக் கருத்துச் சொல்லிவிட்டார். படு சந்தோஷம் போங்கள்.

    வாதங்கள் தொடர்ந்துகொண்டே போகின்றன. 'இந்த மாதிரி வீணாய்ப்போகும் விவாதங்களால் ஒன்றும் விளையப்போவதில்லை' என்றும் ஒரு நண்பர் சொல்லியிருக்கிறார். வேடிக்கைப் பாருங்கள், இந்த விவாதங்களை இத்தனை தூரத்திற்குக் கொண்டுவந்ததே அவர்கள்தான். அவர்கள் இப்படிச் சொல்கிறார்கள். அவருக்கும் வவ்வாலே பதில் சொல்லிவிட்டார். 'நீங்க வேணும்னா நெல்லு, உளுந்து, பயிருல்லாம் விளையறாப்போல ஒரு விவாதத்தினைச் செய்யலாமே. விவசாயம் முன்னேறும்- உணவுப்பஞ்சம் தீரும்' என்று.

    இந்த விவாதங்கள் எப்படியெல்லாம் எந்தத் திசையிலெல்லாம் போய்க் கொண்டிருக்கின்றன என்பதையும் சொல்லிவிடுகிறேன். நான் எனது வலைப்பூவில் கங்கை அமரன் தமது அண்ணன், விஸ்வநாதன் பாடல்களிலிருந்து காப்பி அடித்து நிறைய டியூன்கள் போட்டிருக்கிறார் என்று சொன்ன ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதற்கு நிறைய வாதப் பிரதிவாதங்கள் வந்திருந்தன. நானும் பதில்கள் எழுதிக்கொண்டிருந்தேன். ஒரு நண்பர், 'இளையராஜா இசையென்பது எங்களுக்கெல்லாம் அம்மா சமையல் என்பதுபோல. மற்றவர்களின் கையால் எத்தனை நல்ல சமையலைச் சாப்பிட்டாலும் அம்மா சமையலுக்கு ஈடாகுமா' என்ற அர்த்தத்தில் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். அதற்கு பதிலளித்த நான், 'அம்மா சமையலா ஆட்டுக்குட்டி சமையலா என்பது இங்கே பிரச்சினையில்லை. உங்க அம்மாவான இளையராஜா நிறைய பதார்த்தங்களைப் பக்கத்து வீட்டு விஸ்வநாதன் வீட்டிலிருந்து எடுத்துவந்து பரிமாறியிருக்கிறார் என்று உங்க சித்தியான கங்கை அமரன் (அம்மா இளையராஜா என்றால் கங்கை அமரன் சித்திதானே) சொல்கிறார்' என்று பதில் சொல்லியிருந்தேன். அவ்வளவுதான். அன்றிலிருந்து வருகிறது பாருங்கள் பின்னூட்டங்கள்.......அடா புடா அவனே இவனே என்று கெட்டவார்த்தை அர்ச்சனைகள்... எதையும் படிப்பதில்லை. முதல் வரியுடன் அத்தனையையும் டெலிட் செய்துவிடுகிறேன். இப்படி இருக்கிறது இணையம்.........
    எப்போது இத்தனைக் கோபப்படுகிறார்களோ அப்போதே அவர்களிடம் மேற்கொண்டு விவாதிக்க சரக்கு தீர்ந்துவிட்டது என்று அர்த்தம். அவர்களுடைய வெறித்தனமான கோபத்தை நாம் எதற்கு அங்கீகரிக்க வேண்டும்? கண்ணதாசன் சொன்னதுதான்...'போற்றுபவர் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன். ஏற்றதொரு கருத்தை என் எண்ணம் என்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன். அஞ்சேன்!'
    இது ஒரு புறமிருக்க...இனிமேலும் உங்கள் பின்னூட்டங்களில் இருப்பதுபோன்ற இதே வகையான விவாதங்கள் போரடிக்க ஆரம்பித்துவிட்டன. தயவுசெய்து 'Comments are closed' போர்டை எடுத்து மாட்டிவிட்டு உங்களுடைய மற்ற வேலைகளைப் பார்க்கப் புறப்படுங்கள். நேரம் கிடைக்கும்போது அடுத்த பதிவை எழுதுங்கள். நன்றி.

    ReplyDelete
  137. ரிம்போச்சே10 September 2013 at 10:32

    // இந்த 'வெளியில்' இருக்கும் மெஜாரிடி ஆட்களுக்கு இளையராஜாவைப் பிடிக்கிறது. இது ஒரு cult மாதிரிதான். //

    அடடா. என்ன ஒரு முத்து. மெஜாரிடி ஆட்களுக்குப் பிடிச்சிருந்தா அதுக்குப் பேரு cult இல்ல religion ஸாம்யோவ்.

    ReplyDelete
  138. ரிம்போச்சே10 September 2013 at 11:43

    //யார் என்ன சொல்லியபோதும் தமிழ்த்திரை இசை குறித்து இணையத்தில் இப்படிப்பட்ட ஒரு கட்டுரைத்தொடர் யாரும் எழுதியதில்லை. //

    அய்யா பெரியவரே,

    http://inioru.com/?p=37037

    http://inioru.com/?p=30361

    ReplyDelete
  139. தகதிமிதா!10 September 2013 at 11:50

    //சில ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருப்பதைப் போல ரகுமானின் மார்க்கெட் வேல்யூ என்பது அவ்வளவு சாதாரணமானதல்ல. பல பல கோடிகளை உள்ளடக்கியது. இன்றைக்கு ரகுமான் ஒரு படத்திற்கு என்ன வாங்குகிறார், அவருடைய இசை ஆல்பங்கள் உலக அளவில் எப்படி விற்கப்படுகிறது, அவருக்கு உலக அளவில் இருக்கும் ரசிக வட்டம் எத்தகையது என்பதையெல்லாம் நாம் இங்கே இந்த இடத்தில் சொல்லிக்கொண்டு அதை வைத்து தமிழின் இன்னொரு இசையமைப்பாளரை எடைபோடுதல் வேண்டாம். //

    அட ஆமாங்க. துப்பாக்கியும், தலைவாவும் சூப்பர் ஹிட் ஆயிடுச்சா. அதனால 'இளைய தளபதி'தான் இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர் என்று அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அமுதவன் அவர்களே

      நீங்கள் உலகப் புகழ் பெற்ற பத்திரிகைகளில் எல்லாம் எழுதியிருக்கின்றீர்கள் .தெரிந்து கொண்டோம்.நீங்கள் உங்கள் வலைப்பூவில் இளையராஜாவை பற்றி எழுதியதை எல்லாம் அந்த பத்திரிகைகளில் எழுதிப் பாருங்களேன்.பல லட்சம் பேர் படிக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கும்.அது தானே உங்கள் நோக்கம்.இசை பற்றி அறிய செய்திகள் யாருமே தெரிந்து கொள்ளாத விசயனகளைத் தெரிந்து கொள்ளும் அறிய வாய்ப்பு கிடைக்கும்.

      குறிப்பாக ஒன்றுமே தெரியாத ராஜா ரசிகர்கள் உங்கள் மேலான கருத்துக்கள் அறியும் அரிய வாய்ப்பைக் கொடுங்கள் பிளீஸ்.
      பெரிய மனிதர்கள், பெரிய அறிவாளிகள் எல்லாம் ராஜா பற்றி தெரியாத விசயங்களை அறிந்து கொள்வார்கள்.
      உங்கள் மதிப்பும் உலக அரங்கில் பரவும்.
      அது போகட்டும் ...
      ///..யார் என்ன சொல்லியபோதும் தமிழ்த்திரை இசை குறித்து இணையத்தில் இப்படிப்பட்ட ஒரு கட்டுரைத்தொடர் யாரும் எழுதியதில்லை. முன்னோர்களிலிருந்து ஆரம்பித்து இன்றைய இசையமைப்பாளர்கள் வரைக்குமான அலசல், விமர்சனம், ரசனை, இசைஅனுபவம்..//

      நண்பர் ரிம்போச்சே பரிந்துரைத்ததை தான் நானும் பரிந்துரைக்கிறேன்.படித்துப்பாருங்கள் உங்கள் ஞானக்கண் திறக்க வாய்ப்புண்டு.
      தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 10 ] : T.சௌந்தர்
      தமிழ்சினிமா இசையில் அகத்தூண்டுதல் : 6 (முற்றும்)
      :
      காரிகன் அவர்களுடன் கருத்துக்களில் முரண்பாடுகள் இருந்தாலும் தங்களை விட நேர்மை அவரிடம் உள்ளது.

      Delete
  140. அமுதவன் அவர்களே,
    உங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி. ராஜாரசிக சிகாமணிகள் தரக்குறைவாக உங்களை விமர்சிப்பது குறித்து எனக்கு மன வருத்தமே.அவர்களுக்கு வருவது அந்த தரமே.உள்ளத்தின் நிறைவைவே உதடுகள் பேசும்.உங்கள் கருத்துக்கள் பல செய்திகளை உணர்த்துகின்றன.

    நான் இளையராஜாவை இகழ்வதற்காகவே இந்தப் பதிவுகளை எழுதுவதாக அவர்கள் முனைப்புடன் மீசை முறுக்குவது இலவச நகைச்சுவை. ஆஸ்கார் ஒரு தமிழனுக்கு கிடைக்காதவரை அதை பெரிய விஷயமாக சொல்லிகொண்டிருந்தவர்கள் ரகுமான் இரண்டு ஆஸ்கார் வாங்கியதும் யு டர்ன் அடித்து இதெல்லாம் சும்மா என்று உதார் விடுவது அவர்களின் வயிற்றெரிச்சலை காட்டுகிறது. இல்லாத சிம்பனிக்கு இருக்கும் மவுசுகூட உண்மையாக்கிப்போன ஆஸ்காருக்கு இல்லை என்பது ஒரு முரண்.

    இளையராஜா ஒரு சிறந்த இசைஞர் இருந்தும் அவரால் கடைசி வரை அப்படியே நிலைக்க முடியவில்லை என்பதையே நான் விவரித்துக்கொண்டிருக்கிறேன். இதில் பலருக்கு உடன்படுவதில் ஏராளமான சங்கடங்கள் இருக்கின்றன. அவர்களின் அபிமானம் இதை புரிந்துகொள்வதை தடுக்கிறது. அடுத்து இவர்கள் டி சவுந்தரின் பதிவுகளை சுட்டிக்காட்டுவது ஒரு வினோதம். இவர்கள் அவர் பெயரை கேள்விப்படும் முன்னரே நான் வழக்கமாக அங்கே சென்று பின்னூட்டங்கள் இட்டு, வாதங்களை முன்வைத்தவன். அவரைப் போல நீ எழுத முடியுமா என்று வறட்டு வாதம் வேறு. அவர் பாணியில் அவர் எழுதுகிறார். என் பாணி இது. நான் காரிகனைப் போலத்தான் எழுதுவேன். 90களில் எல்லோருமே சுஜாதா போல எழுத விருப்பம் கொண்டு எழுதியதால் எந்தக் கட்டுரையும் கதையும் சுஜாதா எழுத்து போலவே இருந்து போரடித்தது.அவரவர் எழுத்து அவர்களுடைய விலாசம். சிறுபிள்ளைத்தனமான வாதங்கள் மல்லுக்கு நிற்கும் மட்டித்தனம் இவர்களுடைய DNA சமாச்சாரம் போலிருக்கிறது. அடுத்த பதிவு துவக்கப்பட்டு விட்டது. மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete
  141. தகதிமிதா!11 September 2013 at 10:02

    //அடுத்து இவர்கள் டி சவுந்தரின் பதிவுகளை சுட்டிக்காட்டுவது ஒரு வினோதம். இவர்கள் அவர் பெயரை கேள்விப்படும் முன்னரே நான் வழக்கமாக அங்கே சென்று பின்னூட்டங்கள் இட்டு, வாதங்களை முன்வைத்தவன். //

    சுட்டிகள் அமுதவனின் பார்வைக்கு ஐயா.

    //அடுத்த பதிவு துவக்கப்பட்டு விட்டது. மீண்டும் சந்திப்போம்.//

    சீக்கிரம் ஆகட்டும் ஐயா.

    // சிறுபிள்ளைத்தனமான வாதங்கள் மல்லுக்கு நிற்கும் மட்டித்தனம் இவர்களுடைய DNA சமாச்சாரம் போலிருக்கிறது. //

    No credit on this front. Happy to concede defeat.

    ReplyDelete
  142. அமுதவன் அவர்களும் காரிகனும் குதித்தாலும் கொதித்தாலும் இளையராஜாவின் உன்னத இசையின் வலிமையை சிறிதும் குறைத்து விட முடியாது . வார்த்தைகளை மாற்றி மாற்றி போட்டு ஏதாவது எழுதுகிறார்களே ஒழிய இசையில் என்ன குறை கண்டார்கள் என்று சிறிதளவு கூட சொல்லத் தெரியவில்லை . திரும்ப திரும்ப பேசியதையே பேசிக் கொண்டிருக்கிறார்கள் .

    பழைய இசை அமைப்பாளர்களின் பத்து பாடல்கள் போட்டு விட்டு ஆஹா ஓஹோ என்கிறார் காரிகன் . 'அப்படி போடு சபாசு . உன்னை மாதிரி இசை பதிவு எழுத சௌந்தர் கூட இல்லை' என்கிறார் அமுதவன் . பாராட்ட பத்து பேர் வந்து விட்டார்களாம் . எல்லோரும் ரகுமானின் அடிவருடிகள் . 92க்கு பிறகு பிறந்தவர்களாய் இருப்பார்கள் . இசையின் வலிமை புரியாதவர்களாய் இருப்பார்கள் .


    ///இளையராஜா ஒரு சிறந்த இசைஞர் இருந்தும் அவரால் கடைசி வரை அப்படியே நிலைக்க முடியவில்லை என்பதையே நான் விவரித்துக்கொண்டிருக்கிறேன்///


    இளையராஜா இன்னும் இசை அமைத்துக் கொண்டுதான் இருக்கிறார் காரிகன். ராஜ ராஜ சோழனின் போர் வாள் என்ற படத்தில் அவரே இசை .மிஷ்கின் படம் ஒன்றில் அவரே இசை . இன்னும் அவர் இசைக்கு ஓய்வில்லை காரிகன் .

    ஆஸ்கார் அவார்ட் வாங்கி விட்டால் உலக இசைஞர் ஆகிவிடுவாரா ரகுமான் !? ரகுமானுக்கு முன்னால் எத்தனையோ இசை ஜாம்பவான்கள் எல்லாம் இந்தியாவில் இருந்தார்களே . ஏன் அவர்களுக்கு கிடைக்கவில்லை ? அவர்களுக்கு 'அரசியல்' செய்ய தெரியவில்லை. எங்கே கொடுத்தால் எங்கிருந்து கிடைக்கும் என்பது தெரியவில்லை . ரகுமான் ஒரு நல்ல lobbyist. அவ்வளவுதான் !


    ReplyDelete
  143. விமல் அவர்களே,

    வாருங்கள்,வணக்கம்,

    //தேவை என்றால் நீங்கள் ஓடுங்கள்.அவர் வதந்திகளைத் தானே பதிவாக்குகிறார்.அவருக்கும் காரிகனும் ராஜாவை சாவு மேளம் ,சின்ன மேளம் , பெரியமேளம் ,ஆபாச இசையமைப்பாளர் , porno இசையமைப்பாளன் என்று " விமர்சனம் " வைப்பது உங்கள் வவ்வால் கண்ணுக்கு தெரியவில்லை போலும்.//

    முதல் பின்னூட்டத்திலும், அதன் பின்னர் வந்த பின்னூட்டத்திலும் இந்த ஆபாசம், சாவு மேளம் குறித்து சொல்லி எனது கருத்தினை பதிவு செய்துவிட்டேன், உங்களுக்கு இருப்பது "ஞானக்கண்" என்பதால் அதெல்லாம் பார்வையில் படக்காணோம் போல :-))

    அமுதவன் சார் வதந்திகளை பதிவாக்குவதாக சொல்வதெல்லாம் அபத்தத்தின் உச்சம், அவருக்கு நேரடியாகவே பல அனுபவங்கள் உண்டு, ஆனால் நம்மை போன்றோர் தான் யாரோ சொல்லக்கேட்டதை எல்லாம் உண்மை நம்பி வதந்திகளை சுமக்கிறோம்!

    அய்யா ஒருவரது கருத்தினை ஏற்க இயலாவிட்டால் மறுப்பு சொல்ல மட்டுமே நமக்கு உரிமை உண்டு, ஆனால் ஒருவரை மாற்று கருத்தே சொல்லக்கூடாது, எப்படி சொல்லலாம் என கேட்டு "மிரட்ட" யாருக்கும் உரிமை இல்லை, அப்படி செய்தால் அது சர்வாதிகாரம்,வாய்ப்புட்டு கட்டப்பஞ்சாயத்து ஆகும்,நான் எனது கருத்தினை முன் வைத்துவிட்டேன்,ஆனால் உங்களைப்போன்றவர்களோ காரிகன் போன்றோர் வாயே திறக்க கூடாது அப்படி திறந்தால் "ராசா புகழ் மட்டுமே" பாட வேண்டும் என்கிறீர்கள், ஜனநாயக சுதந்திர நாட்டில் இப்படியுமா ஒரு கட்டபஞ்சாயத்து எதேச்சதிகாரம் நடக்கும் ,அய்யகோ இதெல்லாம் பார்க்கக்கூடாது என நீதி தேவதை கண்ணை கட்டி வைத்தது இதற்கு தானா அவ்வ்!

    //அவர்களின் நோக்கமே ராஜாவை வசை பாடுவது தானே தவிர வேறில்லை என்பது அவர்கள் எழுத்தில் துல்லியமாக தெரிகிறது.ராஜ ரசிகர்களை சாடுகிறோம் என்ற போர்வையில் செய்வதெல்லாம் ராஜாவை வசை பாடுவத்ர்க்கே தவிர வேறில்லை.இந்த நியாயங்கள் உங்கள் கண்ணுக்கு புரியவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்.//

    வசையும் செய்யவில்லை பசையும் செய்யவில்லை, இப்பதிவு தொடராக வருகிறது முந்தையப்பதிவுகளில் ராசாவின் சிறப்பினையும் சொல்லி உள்ளார், இப்போ ராசா இசையின் இன்னொரு "பரிமாணத்தினை" அலசியுள்ளார் அவ்வளவே, தொடர்ந்து பாராட்டினை மட்டுமே கேட்க நீங்கள் ஆசைப்பட்டால் என்ன செய்வது, அதற்கு நீங்களே "ராசா ராசா தான் ரோசா ரோசா தான் என ஒரு பதிவு எழுதி "சுய இன்பம்" அடையலாமே :-))

    டிஸ்கி: சுய இன்பம் என நான் குறிப்பிட்டது நமக்கு பிடித்த மனநிறைவு தரக்கூடிய மகிழ்வான செயலை நாமே செய்து சுயமாக மகிழ்ச்சி அடைவதை, உ.ம்: கடையில் போடுற டீ நல்லா இல்லைனா வீட்டிலா நானே சூப்பரா ஒரு டீ போட்டு குடிச்சுட்டு ,ஆஹா என்ன சுவைனு என்னையே பாராட்டி மகிழ்ந்து கொள்வேன் :-))

    என்ன கொடுமை சார் இது ,ஒரு பின்னூட்டத்திற்குலாம் டிஸ்கிளைமர் போட வச்சிடுறாங்களே அவ்வ்!

    # //இவர்களை கேள்வி கேட்டால் திருவிளையாடல் தருமி போலவே பதில் சொல்கிறார்கள்.[ அவர்களுக்கு கேட்கத்தான் தெரியும் ]//
    நிறைய பதில் சொல்லி இருக்கிறார்கள் அமுதவன் மற்றும் காரிகன், இன்னும் கூட சொல்ல தயார் ,அந்தளவுக்கு சரக்கும் உள்ளவர்களே, ஆனால் அதெல்லாம் பதிலாக உங்கள் "ஞான பார்வையில்" படவில்லை என்றால் என்ன செய்வது, நீங்க எதிர்ப்பார்க்கும் "அந்த சிறப்பான பதில்" என்னனு நீங்களே எழுதிக்கொடுத்துட்டா, அதையே காரிகனும் வெளியிட்டு இப்படி பதில் சொல்ல சொல்லி கேட்டிருக்கார் விமல்னு சொல்லியே வெளியிடுவார் :-))

    # //ராஜா ரசிகர்கள் எழுதுவதெல்லாம் ராஜாவை மற்றவர்களை விட சிறந்த இசையமைப்பாளர் என்றே தவிர//

    மற்றவர்களை விட சிறந்த என சொன்னால் ,அது எப்படி? எனக்கேள்வி வருமா இல்லையா, அந்த அது எப்படிக்கு பதிலாக தான் விரிவாக அலசி பார்க்கிறார் காரிகன், அப்படி அலசும் போது கெட்டிச்சாயம் இல்லைனா "சாயம் வெளுக்கத்தானே செய்யும் :-))

    # //பழைய இசியயமைப்பால்ர்களை வரை முறையின்றி எழுதவில்லை என்கிறேன் .அப்படி யாரும் எழுதியிருந்தால் அவர்களைச் சாடுபவனும் நானாகத் தான் இருப்பேன்.
    அப்படி யாரும் எழுதியிருந்தால் தயவு செய்து காட்டுங்கள்.அவர்களைச சாடுவோம்.ஹி...ஹி!//

    பழைய இசையமைப்பாளர்கள் எல்லாம் இந்திப்பட பாடல்களை சுட்டு தான் இசை அமைச்சார்கள், இப்போ உள்ளவங்க யாருக்குமே இசை அமைக்க தெரியாது, எல்லாம் கம்பியூட்டர நம்பி இருக்க புரொகிராம் மெக்கானிக்குகள் என மானாவாரியா நிறைய எழுதி இருக்காங்க, இது வரையில் அதெல்லாம் உங்கள் ஞானத்தில் வரவேயில்லை போலும், இனிமேல் அதெல்லாம் உங்களுக்கு சுட்டிக்காட்டிவிடுகிறேன், சேர்ந்தே சாடுவோம், கம்பெனிக்கு ஒரு ஆளு கிடைச்சாச்சு ஹி..ஹி!
    ---------------------

    ReplyDelete
  144. காரிகன்,

    நன்றி!

    //உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. இ.ராஜாவை விமர்சித்தால் ஞான சூன்யம் என்ற பட்டம் ரெடிமேடாக கிடைத்துவிடும் என்பது இணையம் அறிந்தது//

    இதென்ன அரசியாலா ஆதரவு ,ஓட்டுலாம் போட, சரியான கருத்துக்கு ஆமோதிக்கிறோம், தவறெனில் மறுப்பு சொல்கிறோம், ஆனால் அதை என்னமோ அமெரிக்க சனாதிபதி போருக்கு ஆள் திரட்டுறாப்போல சொல்கிறார்கள் நம்ம ரசிகசிகா மணிகள் அவ்வ்!

    # // ரகுமான் என்றால் ஒரே போடு. ஹாரிஸ் என்றால் ஒரே வெட்டு என்று சகட்டுமேனிக்கு கறிக்கடை ரேஞ்சுக்கு கத்தி வீசுவார்கள்.//

    தனக்கு வந்தா ரத்தம்ம் ,அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சூசு :-))

    #//என் எழுத்து இப்படித்தான் இருக்கும். சூடு தாங்காவிட்டால் ஓரமாக போய்விடுங்கள் என்று சொல்லியும் கேட்பாரில்லை. //

    அப்படிலாம் சொல்லி வர்ர கூட்டத்தை வெரட்டிப்புடாதிங்க, வரட்டுமே,நல்லா வரட்டும் பேசட்டும், அப்போ தானே நாலு பேருக்கு உண்மை தெரியும், நியாயம் புரியும், நமக்கு உதவும் நன்மை பயக்கும் நண்பர்கள் ராசா ரசிகசிகாமணிகள், நன்றி சொல்வோம்!

    #//அதுபோகட்டும். உங்கள் தளத்தில் எப்போது அடுத்த பதிவை காணலாம்?//

    கொஞ்சம் எழுதிட்டு கிடப்பில் போட்டு வச்சிட்டேன், நம்ம இணைய இணைப்பு "சிலுக்கு" போல அபாயகரமா ஆடிக்கிட்டே இருக்கு, மேலும் டேப்லட் கணினியில் தட்டச்சு செய்ய தடவி தடவி இப்போ தான் கத்துக்கிட்டிருக்கேன் , பின்னூட்டமெல்லாம் ஒரு ஆர்வத்துல எப்படியோ தக்கி முக்கி போட்டிட்டு இருக்கேன். கூகிளண்டவர் மனசு வச்சால் பதிவு வரும்!

    # ரசிக சிகாமணிகளின் ஆர்வத்தை பார்த்தால் இப்பதிவு "200" அடிக்கும் போல இருக்கே, ஆர்வத்துக்கு அணைப்போடாதீர்கள் ,வண்டி ஓடும் வரை ஓடட்டும், 200 அடிக்க வாழ்த்துக்கள்!

    ------------------

    ReplyDelete
  145. சார்லஸ் அய்யா,

    வணக்கம்,

    //நக்கல் நாயகரே! நீங்கள் நேர்மையாக 'நேராக ' இருப்பீர்கள் என நினைத்தால் தலைகீழாக தொங்கும் ...சாரி ..பேசும் மனிதர்தானா? இளையராஜாவை புகழ்வது போல் இகழ ஆ ...ரம்பித்து விட்டீர்கள் . //

    "நக்கல் நாயகரே" காசு கொடுத்து வாங்கீனா கூட இப்படியான ஆகச்சிறந்த பட்டம் எனக்கு கிடைச்சிருக்காது ,மிக்க நன்றி!

    ஹி...ஹி எனக்கு தெரிஞ்சதெல்லாம் ,கறுமை, எறுமை ,நேர்மை தானுங்க,

    மனுச பொறப்பே தலைகீழா தானே, தலை கீழா பொறக்குறான் ,தலை கீழா நடக்குறான் வயறு என்னும் பள்ளத்தில் வாழ்க்கையை தொலைக்கிறான் ,ஞானத்தங்கமே ..ஏ..ஏ!

    அப்புறம் இதுல நான் மட்டுமென்ன தலை கீழ் ,வவ்வால் தலைகீழா தொங்கினாலும் நேராப்பாக்கும்ல :-))

    # //அது சரி பேசும்போதே ஏதும் வாந்தி வருகிறதா? இடையிடையே 'அவ் ..அவ் ' என்று சத்தம் வருதே! ஓ .. வடிவேலு மாதிரி முயற்சி பண்ணுகிறீர்களா!? இளையராஜா பாட்டு கேளுங்க இந்த வியாதி சரியாயிடும் . //

    பேசும் போது வெறும் காத்து தான் வருதுனு நினைச்சிட்டிருந்தேன் , வாந்தியே வருதா, அப்போ நல்ல முன்னேற்றம் தான் அவ்வ்!

    ஹி...ஹி வைகைப்புயல் ஓய்ந்தாலும் அதன் தாக்கம் மிச்சம் மீதி மக்களிடம்ம் ஒட்டிக்கிடக்கு,அதான் இப்படிலாம் அவ்வ்வ்!
    நீங்க சொன்னீங்களேனு நேத்து ராத்திரி ராசா பாட்டு ஒன்னு கேட்டேன் அந்த பாட்டு இதான் "நேத்து ராத்திரி யம்மா ...தூக்கம் போச்சுது அம்மா ..அச்சா அச்சா பச்சக்கிளி ஆவோஜி ..ஆவொஒஜி :-))

    இப்போ அவ்வ் போய் ஜிவ்வாகிடுச்சு :-))
    -----------------

    #//காரிகன் அமுதவன் இப்போது வவ்வால் மூவரும் பசுதோல் போர்த்திக் கொண்டு வரும் பதிவர் புலிகள் . காட்ட வேண்டிய நேரத்தில் குணத்தை கட்டி விடுவார்கள் //

    நல்ல வேளை பசுத்தோல் போர்த்திய புலினு சொன்னதோட விட்டிங்க ,நல்ல மனசுக்கு நன்றிங்க்கோ!

    பார்த்து புலி பிறாண்டிறப்போவுது :-))

    # //ஆனால் வவ்வாலின் அநாகரீக கிண்டல் நிறைத்த பின்னூட்டத்தை அனுமதிக்கிறார் . அவர் அடுத்த பதிவுக்கு இதனை பின்னூட்டங்கள் வருமா என்பது சந்தேகமே !//

    என்னது நான் அநாகரிமா பின்னூட்டம் போட்டேனா , அய்யகோ என்ன கொடுமை இது ,இப்படி அபாண்டமான அவச்சொல் சொல்லலாமா, நீதி தவறியது ,இமயங்கடந்து ஆரியம்வென்ற நெடுஞ்"சார்லஸ்" அவர்களின் செங்கோல் வளைந்தது அவ்வ்!

    சார் தங்களின் மேலான கவனத்திற்கு "அநாகரீகம்" என ஒரு படம் வந்துச்சு படம் பேரே நாகரீகமா இல்லைனு அந்தப்படமே பார்க்கலை, இத்தனைக்கும் " குடும்ப பிரச்சினைகளை' தெளிவாக விளக்கும் கருத்தாழம் மிக்க "கலைப்படைப்பாம்" அது, இதுல இருந்தே புரிஞ்சிருக்குமே நான் எந்த அளவுக்கு "நாகரீகத்துக்கு" முன்னுரிமை கொடுப்பேன்னு :-))

    # //வவ்வால் ஐயா ...எல்லாம் ரசிப்பீர்களோ!? நமீதாவையும் ரசிக்கிறீர்கள் ;தகதிமிதாவையும் ரசிக்கிறீர்களே ! //

    நல்லவற்றை ரசிக்க தெரியனும் அய்யா இல்லைனா 'ரசமட்டம்"னு சொல்லிடுவாங்கோ, ரசிப்பது ஒரு கலை அய்யா கலை (எம்.ஆர்.ராதா போல சொல்லிப்பார்த்தேன்)

    //சிலுக்குக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உங்களிடம் இளையராஜா இசை பற்றிய உண்மை விமர்சனம் எதிர்பார்ப்பது தவறுதான் !//

    ஹா..ஹா ஹி..ஹாஹா ஹி ...

    எதுக்கு சிரிச்சேன்னு பார்த்தீங்களா ,சிலுக்கு ஆடின பாட்ட ரசிச்சதுக்கே என்னை கிராதகன் போல பார்க்குறிங்களே ,சிலுக்கு ஆடுவதற்கு தோதா "பொன் மேனி உருகுதே என் ஆசை பெருகுதே" என ரசிச்சு பாட்டு போட்ட அந்த "இசையமைப்பாளரை" நீங்க என்னவெல்லாம் சொல்லி டவுசரை கிழிக்க போறீங்களோனு நினைச்சேன்,சிரிச்சேன் :-))

    அது எப்டிங்ணா , சிலுக்கு "குலுக்கு" டான்ஸ்( சொல் உபயம்,தகதிமிதா,நன்றி) ஆட பிரத்யோகமாக "இசை ஞானத்தை" பயன்ப்படுத்தி சிறப்பு சத்தமெல்லாம் கொடுத்து பாட்டு போட்டவரு உங்களுக்கு "இசை மஹா சன்னிதானம்" ஆனால் அந்த இசையை கேட்டு ரசிச்சா தரை டிக்கெட்டா ,என்ன கொடுமை சார் இது ? அவ்வ்!

    # //நான் என்ன சொல்ல வந்தேன் என்று உங்களுக்குப் புரியவில்லை . நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள் என்று எனக்கும் புரியவில்லை . இளையராஜா ரசிகருக்கு நான் சொன்னது புரிந்திருக்கும் . ஆனா ஒன்னு புரியுது . உங்க ஊருல மூக்கால சிரிப்பாங்க ரைட்டா?//

    நீங்க முன்னர் சொன்னது உங்களுக்கே புரியலையா ,சுத்தம்!

    நான் சொன்னது "இசை தெரிஞ்ச இளையராசா" ரசிகருக்கு புரிஞ்சிருக்கும் :-))

    நம்ப முடியாத "அற்புத செய்திகளை" கேட்டால் அப்படித்தான் 'அற்புதமாக மூக்கால் சிரிப்பாங்க" :-))

    ReplyDelete
  146. அமுதவன் சார்,

    வாங்க,வணக்கம்!

    உங்களது தெளிவான பின்னூட்டக்கருத்துக்கள் இடுகையினை மேலும் சிறப்பாக்கிட்டு இருக்கு,நான் ஒரு ஓரமாக அவ்வப்போது வந்து "கேமியோ" பின்னூட்டம் தான் போட்டிட்டு இருக்கேன் ,அதுக்கே நல்ல "கவனிப்பு" கொடுக்கிறார்கள் ரசிக சிகாமணிகள் அவ்வ்!

    #//உங்களுடைய மையப்புள்ளிக்கு அவரும் வரத் தவறியிருக்கிறார். பல ஆபாசப் பாடல்கள் ஒரு trend போலவே படங்களில் உலா வர இளையராஜாதான் காரணம் என்பதுதான் உங்கள் குற்றச்சாட்டு. ஆபாசப்பாடல்கள் போடுவதில் ஒரு மன்னர் போலவே அவர் இருந்தார் என்பதைத்தான் நீங்கள் சொல்கிறீர்கள். உடனே விஸ்வநாதன் போடவில்லையா மகாதேவன் போடவில்லையா என்ற கேள்விகளைத் தூக்கிக்கொண்டு அடிக்க வருகிறார்கள். மகாதேவனும் விஸ்வநாதனும் மற்றவர்களும் ஆபாசப்பாடல்கள் போட்டார்கள் என்றால் அது ஜெயகாந்தன் கவிதை எழுதின மாதிரி. எப்போதோ ஒன்று. அல்லது சாண்டில்யன் சமூகக் கதை எழுதின மாதிரி. ரொம்பவும் rare. ராஜாவுடைய 'டோஸ்' அளவுக்கு அதிகமானது. //

    நீங்க சொன்னாப்போல மையப்புள்ளியை நான் சரியா தொடவில்லை தான் போலும் , அப்படியே தொட்டிருந்தாலும் ,சிகாமணிகள் விட்டிருப்பாங்களா என்ன? ,இப்பவே பசுத்தோல் எல்லாம் போர்த்தி குளிருக்கு இதமாக இருக்கட்டும்னு "கவனிச்சிக்கிறாங்க" :-))

    உங்களுக்கும், காரிகனுக்கும் கூட பசுத்தோலை பொன்னாடையாக போர்த்தி இருக்கிறார் சார்லஸ், நன்றி சொல்வோம்!

    ராசா கொடுத்த "கவர்ச்சி இசை" கொஞ்சம் ஓவர் டோசாக போக காரணம், காலக்கட்டம் மற்றும் திரைப்பட &திரையிசை ரசனையும் கீழிறங்கியதும் ஒரு காரணமாக இருக்கலாம் என நான் நினைப்பதால் அதற்கு "பெனிபிட் ஆஃப் டவுட்" அடிப்படையில் விலக்கு அளித்து விட்டேன் :-))

    # //'இளையராஜாவை இசைக்கே இறைவன் என்று நாங்கள் சொல்லவில்லை. இசைக்கலையில் யாருக்கும் குறையாத வல்லுநர் என்றுதான் சொல்கிறோம்.'

    'அவர் மகான் கடவுள் என்றெல்லாம் அவரின் இசையை ரசிக்கும் ரசிகர்கள் விதந்தோதுவதில்லை. அவர்கள் ரசிப்பது அவரின் இசையை மாத்திரமே.'

    'ராஜாவின் peak creativity இப்போது போய்விட்டிருக்கலாம். உண்மைதான். அதற்காக அவரின் பாடல்கள் வாடிப்போகும் பூவாகுமா? அவை கோஹினூர் வைரங்கள்'//

    ஹி...ஹி இப்படிலாம் ஒப்புதல் வாக்குமூலம் தானாவா கொடுத்தாங்க, சொல்ல வச்சோம்ல :-))

    # //இத்தனையும் இருக்க திரு வவ்வால் சொல்லியிருப்பதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை.
    'raasa is not the one and only undisputed king of music,he is a just one among the M.D of tamil film world.'//

    இதத்தான் நான் உட்பட,நீங்களாகட்டும் காரிகனாகட்டும் சொல்லி இருக்கோம், ராசாவின் திரையிசை பங்களிப்பை நிராகரிக்கவே இல்லை ,அவரும் சிறப்பாக பங்களித்துள்ளார், ஆனால் அவர் மட்டுமே தமிழ் திரையிசையின் அடையாளம் அல்ல என்கிறோம். ஆனாலும் என்னமோ ராசாவின் டவுசரை கிழிக்கனு வெறிக்கொண்டு அலைவதாக ரசிக சிகாமணிகள் "மனப்பிராந்தியில்" சொல்லிக்கிட்டு இருக்காங்க.

    பதில் வாதம் வைக்க முடியலைனதும் , அவதூறாக , வதந்தி எழுத்தாளர், வாய்க்கா வரப்பு தகராறு என புனைவாக குற்றம் சுமத்த ஆரம்பித்துவிட்டார்கள், இதன் மூலம் அவர்களின் உண்மை முகம் தான் வெளியாகிறது என்பதால் வருத்தம் கொள்ளாதீர்கள், இதுவும் கடந்து போகும்!

    நன்றி!

    ReplyDelete
  147. லேசா ..லேசா ...ராசா ரசிகர்கள் இல்லாமல் "150" அடிப்பது லேசா ...லேசா

    வாழ்த்துக்கள் காரிகன்!

    ReplyDelete
  148. தொடர்ந்து சிறப்பான பதிவுகளை வழங்கி வந்தீர்கள்,ஆனால் இப்பதிவினை அருமையான பதிவு என சொல்ல முடியாத வகையில் உங்கள் திற்னாய்வு அமைந்துவிட்டது என்பதாக நினைக்கிறேன் -வவ்வால்
    இது தான் தலைகீழ் விகிதம் போலும்.

    //பதில் வாதம் வைக்க முடியலைனதும் , அவதூறாக , வதந்தி எழுத்தாளர், வாய்க்கா வரப்பு தகராறு என புனைவாக குற்றம் சுமத்த ஆரம்பித்துவிட்டார்கள்//
    - வவ்வால்

    இவர்களது பதிவுகளை தலையை நிமித்தி வாசியுங்கள்.

    ReplyDelete
  149. காரிகன்,
    உங்கள் தளம் களைகட்டுகிறது. இத்தனை எதிர்ப்பா என்று ஆச்சர்யம். நீங்கள் கூறும் கருத்துக்களை கேட்காகமலே சால்ஸ், விமல் கோஷ்டியினர் வாய்க்கு வந்ததை உளறிக்கொண்டு இருக்கிறார்கள். வௌவால் அவர்கள் சொல்வதுபோல மறுப்பு சொல்ல யாருக்கும் உரிமை உள்ளது. ஆனால் இப்படி எழுதாதே என்று மிரட்ட யாராலும் முடியாது.அறிவிலிகள். அதுவும் சால்ஸ் சிரிப்புக்கு எழுதுவது போலவே எழுதுகிறார்.அதில் கொஞ்சம்கூட நியாயமான வாதங்களை காணோம். ஆஸ்கார் வாங்கிவிட்டால் அவர் பெரிய ஆளா என்று அவர் கேட்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனம். சிம்பனி அமைக்காமலேயே ராஜாவை மாஸ்ட்ரோ என்று வாய்கூசாமல் அழைக்கும் இவர்கள் இப்படி பேசுவது வயித்தெரிச்சல் தவிர வேறொன்றுமில்லை. நீங்கள் நடத்துங்கள் உங்கள் கச்சேரியை.

    ReplyDelete
  150. வவ்வால்,
    வாழ்த்துக்கு நன்றி. நீங்கள் போட்ட முதல் பின்னூட்டத்தில் உங்கள் மறுப்பை சொல்லியிருப்பதைக் கண்டு இவரும் நம்ம ஆளு என்று உங்களை புகழ்ந்தவர்கள் இப்போது நீங்கள் மனதுக்குப் பட்டதை வெளிப்படையாக சொல்பவர் என்று தெரிந்ததும் இதோ பார்டா இன்னொரு ராஜா எதிரி என்று சிகப்பு மனிதர்களாக மாறுகிறார்கள். ஒரு பதிவை படித்துவிட்டு அதகளம் செய்யும் சில்லுவண்டுகள். அவர்களின் வார்த்தைகளே அவர்களை தனிமைப்படுத்திவிடுகிறது. திருவாளர் சால்ஸ் இப்போதுதான் புதிதாக பின்னூட்டமிட கற்றுக்கொண்டவர் போல ஏதேதோ எழுதி வைக்கப்போக அவருடைய சீரியசான செய்திகள் கூட பழைய ஆனந்த விகடன் அட்டைப்பட ஜோக் போல இருக்கின்றன. தொடருங்கள் சால்ஸ். நல்ல சேவை செய்கிறீர்கள். உங்கள் புண்ணியத்தில் இன்னும் கொஞ்சம் சிரித்துவிட்டுப் போகிறோம்.

    பரத் ,
    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. ஆஸ்கார் ரகுமானின் கைகளில் வந்து சேர்ந்தபோது இரண்டு பேருக்கு தமிழ்நாட்டில் தூக்கம் தொலைந்து போனது என்று ஒரு ஜோக் உண்டு. ஒருவர் உலகநாயகன் என்று தன்னையே அழைத்துக்கொள்ளும் "மஹா நடிகர் ". இன்னொருவர் .... பெயர் அவசியமில்லை என்று நினைக்கிறேன். அதுவரை ஆஸ்காரை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அதன் பின் சீ இதெல்லாம் ஒரு அவார்டா என்று நரி திராட்சை பழத்தை ஒதுக்கியது போல (no other choice) வெறுப்பை உமிழ்கிறார்கள்.

    ReplyDelete
  151. அமுதவன் பழக்கி எடுத்த தம்பிகள் ஆரம்பித்து விட்டார்கள்.நக்கல் நையாண்டி தவிர வேறென்ன தெரியும் ஐயாக்களுக்கு.
    உலக பத்திரிகைகளில் எழுத்து மாவீரர் ராஜாவை பற்றி அந்த பத்திரிகைகளில் எழுதும் படி கேட்கிறோம்.
    பரத்,ஜோகேஸ்,காரிகனின் நிழலாக கருத்து செயலபாதீர்கள் கொஞ்சம் சுய அறிவையும் பயன் படுத்துங்கள்.
    இந்த மாய்மாலங்கலைக் கேட்டு கேட்டு அலுத்து விட்டது.
    புதிசா ஏதாவது சொல்லுங்கப்பா .

    ReplyDelete
  152. இசை விமர்சகர் அய்யாவுக்கு,

    கீழ் காணும் இந்த பாடலை ”இசை” விமர்சனம் செய்தால் தன்யனாவேன்.

    https://soundcloud.com/shanmuganagar/drums-rolling-violins

    ReplyDelete
  153. ம் ...எல்லோருமாக சேர்ந்து ஒரு அற்புதமான இசைக் கலைஞனை ஆபாச இசைக் கலைஞராக சித்தரித்து விட்டீர்கள் . காரிகன் இளையராஜாவை porno music டைரக்டர் என்று ஏதோ நீலப் படத்திற்கு
    வாசித்தது போல் பதிவை திசை திருப்பி விட்டார் . அதை எல்லா இளையராஜா எதிர்ப்பாளர்களும் சேர்ந்து கொண்டு ஆமோதிப்பதைப் போல அழகாக அவருடன் நாயனம் வாசிக்கிறார்கள் .

    ரகுமானும் பம்பாய் படத்தில் ஒரு முதலிரவுக் காட்சிக்கு பாடல் ஒன்று போட்டிருப்பார் . அதை வைத்து ரகுமானையும் porno music director என்று நாங்கள் சொல்ல மாட்டோம். நாங்கள் இசையை ரசிப்பவர்கள் .நீங்கள் இசைக்கப்படும் வார்த்தைகளை ரசிப்பவர்கள். அதனால் இசைப்பவரும் அசிங்கமாக உங்கள் கண்களுக்கு காட்சி தருகிறார் என நினைக்கிறேன். காமாலை கண்கள் கொண்டவர்கள்தானே ! எல்லாவற்றையும் மஞ்சளாக ..அல்ல.. நீலமாக பார்க்கும் மனோபாவத்திற்கு மாறி விட்டீர்கள் .

    திரை உலகில் யார் அதிகமாக வசை பாடபபடுகிறார்களோ அவர்கள் வளர்ந்துவிட்டார்கள் வளர்ந்துகொண்டும் இருப்பார்கள் என்பது உலகறிந்த உண்மை . இளையராஜாவின் இசை அமுதை நீங்கள்
    எங்கும் மறைக்கவோ ஒழிக்கவோ அழிக்கவோ முடியாது . காற்று மண்டலத்தில் கலந்துவிட்டது . 'வெறும் வாய்ப் பேச்சில்' நீங்கள் அனைவரும் வீரர்களே !

    ReplyDelete
  154. வாங்க ஷண்முகா வாங்க ...ஞான சூனியங்களுக்குப் போய் இந்த இசை அமுதை அடையாளம் காட்டுகிறீர்களே! கொஞ்ச நேரம் இசை ஞானியின் உலகத்திற்குள் எனை அழைத்துச் சென்றமைக்கு நன்றி!

    ReplyDelete
  155. விமல் அவர்களே,

    முதலில் ஒரு போடு போட்டேன் என்றீர்கள், பின்னர் வவ்வால் கண்ணுக்கு தெரியலையா என்றீர்கள், இப்போ நான் சொன்னதை காபி& பேஸ்ட் போட்டுள்ளீர்கள், ஆக உங்களுக்கே தெரியுது காரிகன் சொன்னதிலும் நான் மறுப்பு சொல்லி இருக்கிறேன் , ஆகவே நான் குருட்டாம் போக்கில் காரிகனை ஆதரிக்கவில்லை என்பதை அனைவரும் உணர்ந்தால் சரி.

    எனக்கு சரியாக படாதவற்றை விமர்சித்தும், சரியென படுவதை ஆதரித்தும் கருத்து சொல்லி இருக்கிறேன், இதுவே நடு நிலையான கருத்துரையாடலுக்கு வழி வகுக்கும்.

    ஆனால் உங்களைப்போன்றவர்களோ , செல்லாது செல்லாது, ராசா யாரு இசை மஹா சன்னிதானம்ம் அவரை வாழ்த்தி தான் பேசனும், விமர்சிக்கலாமா, தப்பு ,தப்பு,வாயிலே போடுனு மிரட்டுறிங்க ,இதுல நேர்மை நியாயம்னு வேற சொல்லிக்கிறிங்க என்ன கொடுமை சாரே :-))

    # நான் பதிவுகளை புரிந்து வாசிக்கிறேன்,நீங்களோ மற்றவற்றை உள்வாங்காமல் ராசாவை விமர்சனம் செய்யப்படாது , மற்றபடி பதிவில் என்ன சொல்லி இருந்தாலும் கவலை இல்லைனு ,கண்ணை மூடிக்கிட்டு பேசிட்டு இருக்கீங்க, உங்க மன ஓட்டத்துக்கு ஒத்து வரலைனா , வதந்தி பரப்புராங்க ,இசை ஞான சூன்யம் ,வாய்க்க வரப்பு தகறாரு என்பது , ரொம்ப நல்ல பாலிசி அப்படியே மெயின்டெயின் செய்யுங்க ,நல்லா வருவீங்க,வருவீங்க :-))
    -----------------------

    காரிகன்,

    //முதல் பின்னூட்டத்தில் உங்கள் மறுப்பை சொல்லியிருப்பதைக் கண்டு இவரும் நம்ம ஆளு என்று உங்களை புகழ்ந்தவர்கள் இப்போது நீங்கள் மனதுக்குப் பட்டதை வெளிப்படையாக சொல்பவர் என்று தெரிந்ததும் இதோ பார்டா இன்னொரு ராஜா எதிரி என்று சிகப்பு மனிதர்களாக மாறுகிறார்கள். ஒரு பதிவை படித்துவிட்டு அதகளம் செய்யும் சில்லுவண்டுகள். அவர்களின் வார்த்தைகளே அவர்களை தனிமைப்படுத்திவிடுகிறது.//

    அஃதே, அஃதே!

    ஒரு பதிவில் ஒப்புமைக்கு உரியதை ஏற்றும், ஒப்ப இயலாதவற்றுக்கு மறுப்பு தெரிவிப்பது வழக்கமாக ,நடு நிலையுடன் விமர்சிப்பவர்கள் செய்வது. குதிரைக்கு முகப்ப்படாம் என்று இரு கண்கள் பக்கமும் மாட்டியிருப்பாங்க,அதனால் குதிரைகள் நேராக ஒரே பார்வைப்பார்த்து மட்டுமே ஓட முடியும்,அது போல ராசா என்ற முகப்படாம் மாட்டிக்கொண்ட இவர்களுக்கு வேறு மாற்று சிந்தனைகளை ஏற்கவோ ,விமர்சனங்களை ஏற்கவோ துணிவில்லை, இவர்களுக்கு வேண்டியதெல்லாம் பாராட்டு மழை மட்டுமே ,துளியும் விமர்சனங்கள் ஏற்க தயாரில்லை, விமர்சனங்கள் இல்லை எனில் கலைஞனின் படைப்புத்திறன் தானே மங்கிவிடும்.

    ராசாவின் படைப்புத்திறன் மங்க இது போன்ற புகழ் போதையும் ஒரு காரணம் எனலாம். ஆனால் ரசிக சிகாமணிகள் அதை எல்லாம் ஏற்க தயாரில்லை.உண்மை சுடவே செய்யும்!

    # நகைச்சுவை ரொம்ப அவசியம் , என்ன தான் ரசிக சிகாமணிகள் தீவிரமாக பேசினாலும் ஒரு கட்டத்துக்கு மேல "என்ன கைய புடிச்சி இழுத்தியா" வகை காமெடியா தான் ஆகிடுது :-))

    ReplyDelete
  156. திரு ஷண்முகா அவர்களே,
    வருகைக்கு நன்றி. நான் பாடல்களை பகுதி பகுதியாகப் பிரித்து ஆராய்பவன் அல்ல. நீங்கள் குறிப்பிட்டிருந்த அட மச்சமுள்ள மச்சான (என்ன ஒரு அபாரமான இலக்கியத் தமிழ் !) பாடலைக் கேட்க நேர்ந்தது. மன்னிக்கவும். அதில் வரும் drums இசையை நீங்கள் சிலாகிப்பது போல என்னால் முடியவில்லை. இந்தப் பாடலை நான் இளையராஜாவின் மோசமான பாடல்கள் லிஸ்டில் வைத்திருக்கிறேன். இதை விட இளமை இதோ இதோ, மேகம் கொட்டட்டும் பாடல்களில் அவரின் drums சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து. நானும் சில பாடல்களை உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன்.ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்,மான் கண்ட சொர்கங்கள், வான் நிலா நிலா அல்ல ... பிறகு night flight to venus என்ற BoneyM பாடல், இதை கேட்டபின் உருளும் drum என்னவென்பதை நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள்.(இது கூட ஒரு ஆரம்பநிலை பாடல்தான்.)

    ReplyDelete
  157. அய்யா இசை விமர்சகரே,

    நான் நல் இசையின் அபிமானி, பாகவதர் முதல் அனிருத் வரை யார் நல்ல பாடல் தந்தாலும் ரசிப்பவன், நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்களை நன்றாக ரசிப்பவனே, சி.ஆர்.சுப்புராமன், ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எம்.எஸ் .வி அய்யா போன்றோரின்(இன்னும் பல மகான்கள்)இசையையும், இளையராஜவின் இசையையும் அனு அனுவாக ரசிப்பவன். ஆனால் யாரையும் வெறுப்பவன் அல்ல. இந்த கட்டுரையில் உங்கள் கருத்துகள் தனி நபர் விமர்சனமாக இருக்கவே தான் இங்கே கருத்து பதிவு செய்தேன் அதுவும் 150 கருத்துகளுக்கு பின். உங்கள் ”இசை” அறிவை புரிந்து கொள்ளவே ஒரு பாடல் மாதிரி தந்தேன், அதுவும் நீங்கள் கட்டுரையில் ஆபாசம் என சொல்லி இருக்கும் சந்தர்பத்திருக்கு ஏற்றாபோல் போடப்பட்டுள்ள பாடல். முடிந்தால் கவனமாக அந்த பாடலை கண்களை மூடிக்கொண்டு, இளையராஜாவை மறந்துவிட்டு கேளுங்கள். இன்னொரு கேள்வி நிலாகாயுது, பொன்மேனி உருகுதே போன்ற பாடல்களுக்கு இசை அமைத்தவர் இந்த பாடலுக்கும் அதே மாதிரி இசை அமைக்காமல் இருந்தது ஏன்?

    BoneyM, ABBA,Lipps Inc , வகையறாக்களும் தெரியும் தமிழ் திரை இசை பற்றி களம் ஆகையால் தவிர்க விரும்புகிறேன். உங்களின் வேறு எந்த பதிவாவது இத்தனை பின்னூட்டங்கள் கண்டதுண்டா? பின்னூட்டங்களில் ஒருவர் சொல்லி இருப்பது போல
    //Krubhakaran 1 September 2013 10:43
    காய்த்த/காய்க்கும் மரம் கல்லடி படும்//

    உன்மைதானே?

    ReplyDelete
  158. ply
    Shanmuga12 September 2013 10:12

    இசை விமர்சகர் அய்யாவுக்கு,

    கீழ் காணும் இந்த பாடலை ”இசை” விமர்சனம் செய்தால் தன்யனாவேன்.

    https://soundcloud.com/shanmuganagar/drums-rolling-violins



    இந்த பின்னூட்டம் என்னுடையதே, Blogger Profile update செய்வதற்கு முன் எழுதியது.

    ReplyDelete
  159. திரு ஷண்முகநாதன்,
    மீண்டும் வருக.

    "நான் நல் இசையின் அபிமானி, பாகவதர் முதல் அனிருத் வரை யார் நல்ல பாடல் தந்தாலும் ரசிப்பவன், நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்களை நன்றாக ரசிப்பவனே, சி.ஆர்.சுப்புராமன், ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எம்.எஸ் .வி அய்யா போன்றோரின்(இன்னும் பல மகான்கள்)இசையையும், இளையராஜவின் இசையையும் அனு அனுவாக ரசிப்பவன்."

    இது நீங்கள் உங்களைப் பற்றி சொன்னது. ஆனால் உங்கள் profile பார்க்கும் போது சற்று சந்தேகமாக இருக்கிறது. இளையராஜாவை உங்கள் profile படமாக வைத்துக்கொண்டு நீங்கள் இப்படி சொல்வது முரண்பாடாக இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட பாடலை பற்றியே நான் பேசினேன். உங்களின் ஆரம்பமே நக்கல் கலந்த தொனியில் இருப்பதின் காரணம் நீங்கள் இ.ராஜாவின் அபிமானியாக இருப்பதே அன்றி வேறொன்றுமில்லை. எதற்க்காக இப்படி வெளிவேடம் போடுகிறீர்கள் என்று தெரியவில்லை. நான் எம் எஸ் வி யின் மூன்று பாடல்களை குறிப்பிட்டிருந்தேன். அதை பற்றி பேசாமல் boneym, abba, lipps,inc , என்று கோடு காட்டுகிறீர்கள். இத்தனை இசையை கேட்ட நீங்கள் ஒரு கேடு கெட்ட இளையராஜாவின் பாடலில் உள்ள மிக சாதாரன இசையை rolling drum என்று லிங்க் கொடுப்பது மதியீனம். என் இசை விமர்சனம் உங்களுக்கு இனிப்பாக இருக்காது என்பதற்காக நீங்கள் விரும்பும் இசையே சிறந்தது என்று கருத்து சொல்வது என்ன நியாயம் என்பதையும் நீங்களே சொல்லிவிடுங்கள்.

    இ. ராஜா விரகதாப முக்கல்கள் இல்லாமல் சில பாடல்கள் அமைத்தது ஏன் என்று என்னை கேட்பது என்ன லாஜிக் என்று புரியவில்லை. ஒருவேளை அவருக்கே அது அலுத்துப் போயிருக்கலாம். நான் எதற்காக கண்களை மூடிக்கொண்டு நான் கணக்கில் எடுத்துக்கொள்ளாத சில நாலாந்தர பாடல்களை ரசித்துக் கேட்கவேண்டும்? இத்தனை பின்னூட்டங்கள் வருவதின் பின்னணியை நானே ஆராயவில்லை. உங்களுக்கு ஏன் இந்த வீண் வேலை என்று குழப்பமாக இருக்கிறது. சி ஆர் சுப்புராமன், சுதர்சனம்,கே வி மகாதேவன், எ எம் ராஜா, எம் எஸ் வி-டி கே ஆர், சுப்பையா நாயுடு போன்ற பல இசை ஜாம்பவான்களின் இசையை கேட்டவர்கள் உங்களைப் போல இளையராஜாவுக்காக உண்மைகளை மறுக்கமாட்டார்கள். உங்களின் இளையராஜா ரசனையை என் மீது திணிக்கவேண்டாம் . அவரைத்தாண்டி இருக்கும் மேன்மையான இசையை நான் ரசிப்பவன். எனக்கு எந்த எல்லைகளும் கிடையாது. எனவே மற்றவர்களைப் போல நடிக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை.

    கடைசியாக என் பதிவு தனி மனித விமர்சனமாக இருப்பதால் பின்னூட்டமிட வந்ததாக கூறியிருக்கிறீர்கள்.அப்படியல்ல. நான் இளையராஜாவின் ஆரம்பகால பாடல்களை மிகவும் ரசிப்பவன். எனவே நான் அவரை கண்டபடி திட்டி விமர்சனம் செய்பவனில்லை. அவர் சற்று பாதை மாறி பயணம் செய்ததை குறிப்பிடும்போது அது உங்களுக்கு வேறுமாதிரியாகத் தெரிகிறது. அவ்வளவே. நீங்கள் ஆரம்பத்தில் சொல்லியபடி நான் நல்லிசையை நாடும் ஒரு இசை விரும்பி. எனக்கு இவர்தான் அவர்தான் என்ற கோட்பாடுகள் கிடையாது.எனவேதான் பாராட்டவும் முடிகிறது.விமர்சிக்கவும் முடிகிறது.

    ReplyDelete
  160. காரிகன்
    //எனவே நான் அவரை கண்டபடி திட்டி விமர்சனம் செய்பவனில்லை.//
    எப்படி உங்களால் இப்படி சொல்ல முடிகிறது.நீங்கள் அமுதவன் தளத்தில் இட்ட சில பின்னூட்டங்களை நீங்களே படித்து பாருங்க.

    இங்கே நீங்களும் அமுதவனும் பழம் பெரு இசையமைப்பாளர்களைப் பற்றி அடிக்கடி பேசுகிறீர்கள்.அவர்களைப் பற்றி ஒப்புக்குக்காவே பேசுவதாகவே கருதுகிறேன்.அல்லது தமிழ் சினிமா இசை குறித்து சரியான் விளக்கமின்மையும் தெரிகிறது.

    அவரவர் இசை ரசனை தான் இசையின் அளவீடு அல்லது "இசை விமர்சனம் "என்பது எவ்வளவு அயோக்கியத்தனம்.அத்துடன் பாமாரத்தனமும் கூட.
    இங்கே நடாத்தப்பட்ட " விவாதங்கள் "[?] எல்லாம் திண்ணை பேச்சாகவே தெரிகிறது.ஒரு முடிவும் வரப்போவதுமில்லை.

    இன்னுமொரு இளையராஜா வர முடியாது.இளையராஜா இந்த நூற்றாண்டின் அதிசயம்.இசையின் மந்திரச் சொல் இளையராஜா.விமல்.

    ReplyDelete
  161. இளையராஜா படம் profileல் வைத்திருந்தால் வேறு இசை கேட்க்க மாட்டேன் என அர்த்தமா? மான் கண்ட சொர்கங்கள் பாடல் நான் மிகவும் ரசித்த பாடல்களுள் ஒன்றே, முத்தான் முத்தல்லவோ(வேறாகவும் இருக்கலாம்) படத்தில் வரும் எனக்கொரு காதலி பாடல், நினைத்தாலே இனிக்கும் படப்பாடல்கள், பாலசந்தர்,ஸ்ரீதர் MSV கூட்டனி பாடல்கள்(அதற்காக மற்ற பாடல்கள் இல்லை என சொல்லவில்லை) என இசை பிதாமகனின் பாடல்கள் பல பல் என் விருப்ப பாடல்களில் உன்டு. என் விருப்ப பாடல்கள் பட்டியலிட இடமும் நேரமும் போதாது.

    இளையராஜா எனக்கு மிகவும் பிடித்த இசைஅமைப்பாளர் மற்றவர்களை விட.

    நக்கல் தொனி இசை பற்றி எல்லம் அறிந்தவர் போல எழுதுவதால்.

    உங்கள் ”நடுநிலை”யான கருத்துகளையும் விமர்சனங்களையும் தொடருங்கள். Predetermined உடன் விவாதிப்பதை விட, உங்கள் கருத்து பதிவுகள் மூலம் என் அறிவுக்கு ஏதேனும் புதிதாக கிடைத்தால் ஏற்று கொண்டு தன்யனாகிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  162. "உலகத்திலேயே பிற நாட்டு இசை பற்றிய புழக்கம் குறைவாக உள்ள பிரதேசம் தமிழகம் என்பேன். இவ்வளவு வசதி வாய்ப்புகள் வந்த பின்னும் சினிமா இசை தவிர வேறு இசைவகைகளைப் பற்றி தமிழர்கள் அதிகம் கவலைப்படுவதில்லை. இப்போதைய இளைய தலைமுறையையும் சேர்த்துத்தான். அதற்கு இரண்டு காரணங்களை என்னால் ஊகிக்கமுடிகிறது.

    ஒன்று, தமிழ் சினிமா இசையில், உலகத்தில் உள்ள எல்லா பண்பாடுகளின் இசை அம்சங்களும் காணப்படுகிறது. (பிச்சைகாரனின் தட்டைப்போல) ஏனென்றால் தமிழ் இசையமைப்பாளர்கள் உலகின் அத்தனை விதமான இசைவகைகளையும் தழுவியோ, திருடியோ, 'எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்கள் யாவும் கொணர்திங்கு சேர்ப்பீர்’ என்பதற்கிணங்க கொண்டுவந்து சேர்த்து விடுகிறார்கள்.



    இரண்டாவது, இந்த இளையராஜா, அவர் செயலாக இருந்த காலத்தில் வாழ்ந்தவர்களை எந்தப்பக்கமும் திரும்பவிடாமல் தன்னுடைய ஹார்மொனியப் பெட்டியில் ஒரு 15வருஷங்கள் செருகி வைத்திருந்தார். வருஷத்திற்கு 10லிருந்து 35 படங்கள் என்று கொண்டால் வருஷத்திற்கு 50லிருந்து 125 பாடல்கள். அவற்றைக் கேட்டுக்கேட்டு கிறங்கி கிடந்தே தமிழர்கள் காலத்தைக் கழித்துவிட்டார்கள். விட்டார்கள் என்ன கழித்து விட்டோம். ராஜா கிறுக்குத்தெளிய எனக்கும் நீண்டகாலம் தேவைப்பட்டது."

    வலைத்தளத்தில்நான் கண்ட ஒரு பக்கம். மிக சரியாக எழுதியிருக்கிறார் திரு மருதுபாண்டி.நான் இளையராஜா பற்றி கூறிய கருத்தை இவரும்ம் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. ஏனென்றால் அதுதான் உண்மை. ராஜா ரசிகர்கள் படிக்கவும்.




    http://www.hellotamilcinema.com/index.php?option=com_content&view=article&id=811:enigma-article-prabahar-20apr12&catid=42:isaimedai1&Itemid=500

    ReplyDelete
  163. "இளையராஜா எனக்கு மிகவும் பிடித்த இசைஅமைப்பாளர் மற்றவர்களை விட."

    திரு ஷண்முகா அவர்களே,

    இதைதான் எதிர்பார்த்தேன். நல்லது நீங்களே சொல்லிவிட்டீர்கள். உங்களின் பழைய பாடல் லிஸ்ட் என்று நீங்கள் மேலோட்டமாக சொல்வதிலேயே பாசாங்கு தெரிகிறது. நீங்கள் பழைய பாடல்களை விரும்புவது போல காட்டிகொள்கிறீர்கள் என்று புரிகிறது. எனவே என் நடுநிலைமை உங்களைப்போன்ற ராஜா ரசிகர்களுக்கு உகந்ததாக இருக்காதுதான். உங்கள் வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  164. திரு காரிகன் அவர்களுக்கு,
    நீங்கள் எப்படி நடுநிலை பற்றி பேசுகிறீர்கள் என்று யோசிக்கிறேன்.ராஜாவின் இரண்டு பாடல்களை பாராட்டிவிட்டு மற்ற பத்துப் பாடல்களை திட்டுவதுதான் உங்கள் நடுநிலையோ? கொஞ்சம் விளக்கவும்.

    ReplyDelete
  165. ராஜா ரசிக கலைஞர்களே (ராஜா இசை ரசித்தாலே கலைஞர்களாகதான் இருக்க முடியும் ) ... காரிகன் மாற்றி மாற்றி கதை விடுவதை பார்த்தீர்களா ..ஒரே பின்னூட்டத்தில் 'கேடு கெட்ட இளையராஜா ' என்கிறார். அடுத்து ' நான் அவரை கண்டபடி திட்டி விமர்சனம் செய்பவனில்லை' என்று பின் வாங்குகிறார் .

    தமிழ் திரை இசை பற்றி பேச வந்தவர் முன்னோர்களைப் பற்றியும் அவர்கள் இசை பற்றியும் சிலாகித்துச் சொல்லிவிட்டு , ' "உலகத்திலேயே பிற நாட்டு இசை பற்றிய புழக்கம் குறைவாக உள்ள பிரதேசம் தமிழகம் என்பேன். இவ்வளவு வசதி வாய்ப்புகள் வந்த பின்னும் சினிமா இசை தவிர வேறு இசைவகைகளைப் பற்றி தமிழர்கள் அதிகம் கவலைப்படுவதில்லை" என்று இளையராஜா இசை பற்றி பேச்சு வரும்போது உலக இசை பிதா மகன் போல பிதற்றுகிறார் . உலக வாயகர் என்று நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன் . அதை அவரும் நிரூபிகின்றார் .

    இவர் ஆங்கில இசையை கேட்டபடி ( புரியாமலேயே ) காலத்தை கழித்திருப்பார் . எல்லோரும் உலக இசையெல்லாம் கேட்டிருக்க வேண்டும் என்று ஆதங்கப்படுகிறார் . பூனை கண்ணை மூடிகிட்டு 'உலகம் இருட்டு' என்று சொன்ன மாதிரியல்லவா இருக்கிறது .

    15 வருடங்களாக இளையராஜா தமிழக மக்களை இசையால் கட்டிபோட்டவர் ( அவரும் கட்டுண்டவராம் )என்பதை அவரே ஒப்புக் கொண்டுவிட்டார். 15 வருடம் கழித்து அவர் இசை இவருக்கு பிடிக்காமல் போய் விட்டதாம். 'அந்நியன்' போலவே மாறி மாறி அவர் எழுதுவதை கவனியுங்கள் .

    இளையராஜாவின் இசை மேன்மையை புரியாதவரிடம் நாம் என்ன எடுத்துச் சொன்னாலும் 'விழலுக்கு இரைத்த நீர்தான் '!

    ReplyDelete
  166. திரு ஆதித்யன்,
    சில விபரங்களை நான் எனது பதிவுகளில் எழுத இருப்பதால் பின்னூட்டத்தில் அவைகளை தவிர்ப்பது நலமென்று கருதுகிறேன். இருந்தும் உங்களுக்கு பதில் சொல்கிறேன் சுருக்கமாக. நீங்கள் குறிப்பிடும் படி இளையராஜாவின் பாடல்களில் பத்தில் இரண்டு பாடல்களே சிறப்பானவை. அவைகளை பாராட்டாமல் இருக்க முடியாது. மற்றவைகள் வெகு சாதாரணமானவை. அலுப்பூட்டக்கூடியவை. எந்தவிதமான நவீன இசை அனுபவத்தையும் தர இயலாதவை. எம் எஸ் வி யின் பாடல்கள் எண்பதுகளில் போரடித்தது உண்மைதான். ஆனால் அவை சிறப்பாக இசைக்கப்பட்டவை. இளைஞர்களுக்கு பிடிபடாத இசையாக அது இருந்தது. இளையராஜாவின் அந்திம பாடல்களோ வரட்சியான தரமில்லாத இசையின் வெளிப்பாடாக இருந்தது.அவ்வகையான பாடல்களை அவர் ஒரு trend ஆகவே மாற்றியிருந்தார். 80 களின் இறுதியிலிருந்து 96 வரை இந்த வறட்டு இசையே அவருடைய அடையாளமாக இருந்தது. அவற்றை நான் விமர்சிக்கிறேன். இதை ஒரு ராஜா ரசிகர் கண்டிப்பாக செய்யமாட்டார். அவர் எழுதும் பதிவுகளில் இளையராஜாவின் எட்டாயிரம் பாடல்களும் அற்புதங்கள் என்ற புரட்டு இடம்பெறத் தவறாது. ஒரு இசைஞர் தான் அமைக்கும் எல்லா பாடல்களையும் சிறப்பாக செய்வது சாத்தியமா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். அப்படியானால் ஏன் இவர்கள் அந்த மகத்துவமில்லாத பாடல்களைப் பற்றி வாய் திறக்க மறுக்கிறார்கள்? அதை நான் செய்வதால் என்னை குற்றவாளியாக்குவது அவர்களுக்கு நியாயமானதே. மேலும் சுலபமானதும் கூட. எல்லாவற்றிக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. இரண்டையும் விவரித்தால் உங்களுக்கும் இதே நிலை ஏற்படுவதை நீங்களே பார்ப்பீர்கள். இப்போதைக்கு இது போதும் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  167. திருவாளர் சால்ஸ் அவர்களே,
    இதற்குப் பெயர்தான் பிதற்றுவது என்று சொல்வார்கள். நான் திரு. பிரபாகர் என்பவர் கூறிய கருத்தையே கொடேஷன் மார்க்குகளோடு குறிப்பிட்டிருந்தேன். அதைகூட சரியாக தெரிந்துகொள்ளாமல் உடனே என்னை பிடித்துக்கொண்டு குதிக்கிறீர்கள். சரி அதையாவது கண்டுகொள்ளவில்லை. கீழே ஒரு லிங்க் கொடுத்திருந்தேனே. அதை கூட கவனிக்கவில்லையா? இப்போதாவது அதை தட்டிப் பாருங்கள். இனிமேலாவது சற்று கவனமாக இருங்கள்.ஏனிந்த வீண் ஆர்ப்பாட்டம்?

    ReplyDelete
  168. http://www.lonewolfproductions.in/downloadbgm.jsp

    http://www.youtube.com/watch?v=NrIoKNcKzdc

    இந்த இரண்டு லிங்க்கும் சென்று பாருங்கள் சார், முதல் சுட்டிய்ல் Pure western classical music கேட்கலாம், இரண்டாவதில் சமீபத்தில் நடந்த ஒரு மெட்டமைப்பு நிகழ்ச்சி காணொளியும் உள்ளன.

    இரண்டும் ஒரே மனிதரிடம் இருந்து வெளி வந்த இசை தான்.

    ReplyDelete
    Replies
    1. பீட்சா செய்தவரே கொத்து பரோட்டாவும் போட்டிருக்கிறார் என்பதை புரிந்துகொண்டேன் நண்பரே. ஆனால் pure western classic என்பதெல்லாம் சற்று அதிகம்தான். படம் வந்தபிறகு இளையராஜாவை கண்டிப்பாக பலரும் பாராட்டக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

      Delete
  169. திரு காரிகன்,
    பதிலுக்கு நன்றி. எல்லாவற்றிக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன என்பதை நானும் ஏற்பவன்தான்.உங்களின் அடுத்த பதிவை எதிர்நோக்கி இருக்கிறேன்.

    ReplyDelete
  170. காரிகன் சார்,

    நீங்க சொன்னா என்ன பிரபாகர் சொன்னா என்ன ? அவரின் பிரதிபலிப்பு போல்தான் உங்கள் எண்ணமும்! ஆனால் பிரபாகர் நேர்மையாக ஒப்புக் கொள்கிறார் இளையராஜா இசையில் தான் 15 வருடங்களாக கட்டுண்டு கிடந்தேன் என்று. நீங்கள் ' மீசையில் மண் ஒட்டவில்லை ' என்கிறீர்கள் . அவர் குறிப்பிட்டு சொல்லி இருக்கும் உலக இசையை நானும் கேட்டேன் .

    இதே அளவு பிரமிப்பை இளையராஜா பாடல்களில் மட்டும் அல்ல, அவரின் How to name it, Nothing but wind போன்ற ஆல்பங்கள் ,பல திரைபடங்களில் இசைத்த பின்னணி இசை போன்றவற்றில் நானும் உணர்ந்திருக்கிறேன் . எனக்கு மட்டும் அல்ல இளையராஜா ரசிகர்கள் எல்லோரும் உணர்ந்த்திருப்பார்கள் . வார்த்தைகளில் அந்த அனுபவத்தை கொண்டு வருவது கடினமானது . ராகம் , தாளம், ஸ்வரங்களில் ஊறியவனே இசை கேட்க தகுதியானவன் என்பதில் நானும் வேறுபட்டவன்தான். இசை ரசிப்புக்கு தகுதி தேவையில்லை . ரசிக்க தெரிந்தவனும் இசை கலைஞனே ! அந்த வகையில் இளையராஜாவின் இசையை நாங்கள் எல்லாவிதமான சுவைகளிலும் கண்டு உணர்ந்திருக்கிறோம் . என்ன பெரிய உலக இசை ? இளையராஜா அதையும்தான் கொடுத்திருக்கிறார்.

    ReplyDelete
  171. enigma - sadness என்ற தனிப்பாடலைப் பற்றி காணொளி ஒன்று பிரபாகர் கொடுத்திருக்கிறார் . கூர்ந்து கேட்டால் அதன் தாளப் பின்னணி ரகுமான் இசையில் காதல் தேசம் படத்தில் வந்த 'உனைக் காணவில்லையே நேற்றோடு ' என்ற பாட்டுக்கு சரியாக பொருந்துகிறது . அதே போல் 'ஓசன்னா' பாட்டுக்கும் பொருந்தும் . சரிதானா என்று பாருங்கள் . உங்கள் கமெண்ட் என்ன காரிகன் ?

    ReplyDelete
  172. திரு சால்ஸ்,
    எனிக்மா வின் அந்த அதிரடி பீட் வெகு பிரசித்தி பெற்றது. அதைப் பின்பற்றி பல பாடல்கள் ஆங்கிலத்தில் வந்துள்ளன.தமிழில் ரகுமான் நீங்கள் கூறியபடி உன்னைக் காணவில்லையே நேற்றோடு பாடலில் அந்த பீட்டை பயன்படுத்தியிருந்தார். அதேபோல டெலிபோன் மணிபோல் பாடலின் பீட்டும் இன்னொரு ஆங்கில இசையில் வந்ததே. ரகுமான் இதுபோன்று மேற்கத்திய துள்ளும் தாளங்களை அதிகமாக கையாண்டவர்தான். சரியாக கணித்துள்ளீர்கள்.

    ReplyDelete
  173. திரு விமல்,
    உங்கள் பின்னூட்டத்தில் சற்று வார்த்தைகளின் மேல் கவனம் எடுத்து எழுதுவது நலம். ரகுமான் காப்பி அடித்தார் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஏன் இளையராஜா கூட இப்படி அங்கே இங்கே உருவியவர்தான். அதைச் சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறது. சரி. உங்களுக்கு ரகுமானைப் பிடிக்கவில்லை. அவர் ஆஸ்கார் வாங்கியது கூட பெரிய விஷயமில்லை என்று எண்ணுவது உங்கள் தனிப்பட்ட கருத்து. அதேபோல சிலருக்கு இளையராஜாவை பிடிக்காது என்ற சிம்பிள் லாஜிக் ஏன் புரியவில்லை? எல்லோருக்கும் எல்லாரையும் பிடிக்கவேண்டும் என்கிற விதி இல்லையே?

    ReplyDelete
  174. பீட்ஸா வும் பரோட்டாவும் நல்ல ஒப்பீடு, இரண்டுமே பலருக்கு விருப்ப உணவு (மேற்கத்திய மற்றும் தமிழக), இரண்டையும் நம்ம ஊர் சமையல்காரர் நன்றாக சமைக்கிறார்(மக்களுக்கு பிடித்தார் போல்) என்பதே இங்கே கவனிக்க வேண்டியது.

    ReplyDelete
  175. http://solvanam.com/?p=23134

    Bass Guitar music

    From Solvanam

    ReplyDelete
  176. திரு அனானிக்கு,
    சொல்வனம் சென்றேன் . அபராமான வார்த்தை ஜாலங்களோடு எழுதப்பட்ட நல்ல கட்டுரையை படித்த திருப்தி கிடைத்தது. எழுதியவர் இளையராஜா காலத்து ஆள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது அவருடைய தனிப்பட்ட விருப்பத்தின் வெளிப்பாடு.எம் எஸ் வி காலத்து நபர் சில எம் எஸ் வி பாடல்களை இதேபோல் வரி வரியாக சிலாகித்து எழுதினாலும் படிப்பவர்களுக்கு இதே அனுபவமே கிடைக்கும். ஆனால் அதைச் செய்பவர்கள் இணையத்தில் வெகு சிலரே இருக்கிறார்கள்.யாரும் தங்களுக்கு விருப்பமான பாடல்களை அழகாக ஆராய்ந்து எழுதக்கூடிய சுதந்திரம் இருக்கிறது. சில சமயங்களில் நம்மால் அங்கீகரிக்கப்படாதவர்களும் பாராட்டப்படாதவர்களும் உண்மையான மேதைகளாக இருக்கக்கூடிய முரண்பாடான நிஜம் நம்முடன் வாழ்கிறது.

    ReplyDelete
  177. http://solvanam.com/?p=19721

    About Karnan Songs

    From Solvanam

    ReplyDelete
  178. வவ்வால் அவர்களே!
    இளையராஜாவின் பாடு நிலாவே பாட்டைப் பற்றி மனோ அவர்கள் அனுபவித்து சொன்னதாக நான் எழுதியிருந்ததை நீங்கள் நக்கல் செய்திருந்தீர்கள் ...ஏதோ தாளக் கட்டு ..மேளக் கொட்டு என்று நையாண்டி வேறு! சொல்வனத்தில் ஒரு இசைக் கலைஞன் 'என்ன சத்தம் 'என்ற பாடலின் அற்புதம் பற்றி என்ன அழகாக சொல்லி இருக்கிறார் பாருங்கள் . விதி மீறி விளையாடினாலும் ராகம்,தாளம் ,அழகு சிதையாமல் பாடலை சாதாரண ரசிகனுக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் லாவகத்தை பாருங்கள் .

    /// ‘என்ன சத்தம்’ பாடலில் வருவதைப் போல, ஒரே பாடலில் D மற்றும் C ஆகிய இரண்டு மைனரும் வருவது மேற்கத்திய வரைமுறையில் சாத்தியம் அல்ல. ஏனெனில் சுத்த ரிஷபமும் அந்தர காந்தரமும் சேர்ந்து காணப்படும் பாடல்களில் மட்டுமே இம்மாதிரியான கார்ட் ப்ராக்ராஷனை சரிவர உபயோகிக்கலாம்; ஆனால் மேற்கத்திய முறையில் இவ்விரு ஸ்வரங்களும் சேர்ந்தே காணப்படும் ஸ்வர வரிசைகளைக் (அதாவது scales) காண இயலாது. மேற்கத்திய செவ்வியலின் வரைமுறையின்படி C மைனர், D மைனர் இரண்டும் ஒரே ஸ்கேலில் வரக்கூடாது என்பதற்கு, இந்த இரண்டு மைனர்களும் ஒரே ஸ்கேலில் வரும்போது அவை இசையினிமையைத் தருவதில்லை என்பதுதான் முக்கியமான காரணம். வழக்கமாக இசையமைப்பவர்களுக்கு ஒரு Guideline போல இவ்விதிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவ்விதிமுறைகளை மீறியும் இனிமையான இசையை வழங்க முடியும். அதற்கு அபாரமான கற்பனைத்திறனும், இசையாளுமையும் தேவை. இளையராஜா மேற்கத்திய செவ்வியல், கர்நாடக சங்கீதம் என்ற இரண்டு வடிவங்களின் பல விதிமுறைகளை மீறி, பல அபாரமான இசையனுபவங்களை வழங்கியிருக்கிறார்.

    ஆனால் வெறும் விதிமுறைகளைக் கொண்டு புத்தகத்தனமாக எடை போடும் சில அறிவுஜீவிகள் இளையராஜாவின் இசையமைப்பை முற்றாக நிராகரித்துச் செல்வதைப் பலமுறை கண்டிருக்கிறேன். அறிவியலாகட்டும், கலையாகட்டும் சட்டகத்துக்கு வெளியே சிந்திக்கும் சிந்தனையாளர்களே வழிகாட்டிகளாக இருந்திருக்கிறார்கள்; மனித சிந்தனைத் திறனை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றிருக்கிறார்கள். ஆனால் சமகாலத்தில் அவர்கள் கடுமையான விமர்சனத்தையே சந்தித்திருக்கிறார்கள். ஃபிலிப் க்ளாஸ், இளையராஜா போன்ற கலைஞர்கள் இந்த வகைக்குள் அடங்குபவர்கள். இசைப்பரிசோதனைகளைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் அதே வேளையில், வெகுஜன ரசிகனையும் அந்நியப்படுத்தாமல், தொடர்ந்து இசைப்படைப்புகளைத் தந்துகொண்டிருப்பது இளையராஜாவின் தனிப்பெரும் சாதனை.

    என்னைப் பொருத்தவரை ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கும் மேலாக இசையமைத்துவரும் இளையராஜாவுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரம், இப்போது இந்திய அரசாங்கம் அவருக்கு அளித்துள்ள பத்மபூஷன் விருது அல்ல. சிறிதும் இசைப்பயிற்சி இல்லாத சாதாரண ரசிகர்கள் கூட, அதிகம் கவனிப்புத் தேவைப்படாத எளிமையான இசை வடிவமான திரையிசை மூலம், சவாலான பல இசைப்பரிசோதனைகளையும், வடிவங்களையும் புரிந்துகொள்ள முடிந்ததுதான்; இதன் மூலம் அவர் நம் சமூகத்தின் சராசரி இசை சார்ந்த பொது அறிவை ஒட்டுமொத்தமாக மேம்படுத்தி இருக்கிறார் என்பதுதான்.///



    - See more at: http://solvanam.com/?p=7377#sthash.RmwUqQH5.dpuf

    ReplyDelete
  179. காரிகன்
    என்னுடைய பின்னூட்டத்தை பிரசுரித்து விட்டு அட்வைஸ் பண்ணவும் அப்போது தான் மற்றவர்களுக்கு நான் எழுதியது புரியும்.இந்த அதி மேதாவி தனம் ஒன்றுக்கும் உதவாது.

    // அதேபோல சிலருக்கு இளையராஜாவை பிடிக்காது என்ற சிம்பிள் லாஜிக் ஏன் புரியவில்லை?//
    இப்போது தான் உங்கள் உண்மையான சுயரூபம் தருகிறது.

    உங்களுக்கு இளையராஜாவை பிடிக்காது என்று சுத்தமாக சொல்லலாமே. பிறகேன் இந்த " விமர்சனம் " ?

    ReplyDelete
  180. திருவாளர் சால்ஸ், விமல் வகையறாக்களுக்கு,

    ஆர் வி என்பவர் எழுதும் திரெடில் கீழ்க்கண்ட பதிவைப் படிக்கவும்.இதில்தான் சாரதா என்பவர் பழைய படங்களைப் பற்றி அற்புதமாக பல விஷயங்களை சொல்லி வருகிறார். நம் தமிழ் இசை 76 இல் ஆரம்பிக்கவில்லை என்பதை உங்களுக்கு நினைவூட்டவே இந்த தொடர்பு.

    http://awardakodukkaranga.wordpress.com/2010/10/01/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E2%80%9325/#comments

    தட்டிப் பார்க்கவும் மனமிருந்தால். உங்கள் அலப்பல்களை சற்று துறந்துவிட்டு உண்மைகளை உணருங்கள்.

    ReplyDelete
  181. ஐய்யா போலிச் சாமியார்.
    எம்.எஸ்.வீ இளையராஜாவுடன் இணைந்து இசையமைத்ததை பெருமையாக நினைப்பவர்.குற்றம் கண்டு எம்.எஸ்வி பற்றி உம்மால் எழுதமுடியுமா.?

    ReplyDelete
  182. திரு அலெக்ஸ்,
    நான் இளையராஜாவின் இசையில்தான் குற்றம் காண்கிறேன். இளையராஜா என்ற தனிப்பட்ட மனிதர் மீதல்ல.அப்படி செய்ய விரும்பினால் அவர் பேசிய பேச்சுகளை வைத்து இன்னும் இரண்டு மூன்று பதிவுகள் எழுதலாமே? அதற்கும் நிறைய தகவல்கள் இருக்கின்றன. ஆனால் என் நோக்கம் அதுவன்று. அதுசரி நான் எதற்க்காக எல்லோர் மேலும் குற்றம் சுமத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? இளையராஜாவின் இசையை விமர்சித்ததாலா?

    ReplyDelete
  183. ரிம் போச்சே,
    நீங்கள் யாரென்று தெரியவில்லை. என்னுடைய இந்த பதிவிற்கு மட்டும் இந்த பெயரில் வருகிறீர்கள். நீங்கள் உங்கள் உண்மை பெயரை தெரிவிக்காமல் இருப்பது நன்றாகவே தெரிகிறது. கொஞ்சம் அடக்கி வாசித்தால் நலம். இளையராஜாவை ஆஹோ ஓஹோ என்று பாராட்டி எழுதினால் மட்டுமே நீங்கள் அங்கீகரிப்பீர்கள் என்றால் நீங்கள் சற்று வெளியில் செல்வது நலம். உங்களை நான் இந்த கோட்டுக்குள்ளே அனுமதிக்கமுடியாது. கீழ்த்தரமான உங்களைப் போன்ற ராஜா ரசிகசிகாமனிகள் என் பதிவில் ஆட்டம் போட நான் அனுமதிக்க முடியாது . இளையராஜாவின் ரசிகன் என்றே ஒரே தகுதி போதாது. இனிமேலும் இதுபோன்ற பின்நூட்ட்டங்கள் இடம் பெறாது. நீங்கள் உங்கள் இளையராஜா ரசிகர்களின் பதிவுகளில் ஆஜர் ஆவது நலம்.

    ReplyDelete
  184. ரிம்போச்சே18 September 2013 at 09:28

    சாரதா அவர்கள் அங்கே MSV பற்றிய statistical tid-bits கொடுத்து இருக்கிறார். வேறு ஏதாவது musci analysis or dissection நடந்திருக்கிறதா என்று நான் கேட்ட கேள்வியில் என்ன தவறு கண்டீர்கள்?

    நீங்கள் நேர்மையானவராக இருக்கும் பட்சத்தில் என்னுடைய பின்னூட்டத்தை அழிக்காமல் உங்கள் பதிலைப் போட்டிருக்க வேண்டும். என் பின்னூட்டத்தை அழித்துவிட்டு உங்கள் பதிலை போடுவதன் மூலம் மறைமுகமாக என் மீது சேற்றை வாரி இறைத்து அவதூறு செய்கிறீர்கள்.

    ReplyDelete
  185. ரிம் போச்சே சொன்னது


    "//இதில்தான் சாரதா என்பவர் பழைய படங்களைப் பற்றி அற்புதமாக பல விஷயங்களை சொல்லி வருகிறார்.//

    என்ன அற்புதமான விஷயங்கள்? இசை பற்றிய analysis or dissection-ஆ? "

    நான் அவர் பழைய படங்களைப் பற்றி அற்புதமாக சில விஷயங்களை சொல்லியிருக்கிறார் என்றுதான் எழுதியிருந்தேன். ஆனால் உங்கள் நையாண்டி நக்கல் நான் உங்கள் பின்னூட்டத்தை எடுத்துவிட்டதும் காணாமல் போய்விட்டது. இப்போது நியாயமாக சாந்தமாக நீங்கள் நேர்மையை பற்றி பேசுவது வேடிக்கை. எல்லோரையும் வீணே கிண்டலடிப்பது பண்பாடான செயலல்ல.

    "என் பின்னூட்டத்தை அழித்துவிட்டு உங்கள் பதிலை போடுவதன் மூலம் மறைமுகமாக என் மீது சேற்றை வாரி இறைத்து அவதூறு செய்கிறீர்கள்."


    உங்கள் மீது சேற்றை வாரி இறைத்து அவதூறு செய்ய நீங்கள் என்ன தமிழகத்தின் மிகப் பெரிய புள்ளியா? உங்களுக்கே இது சற்று ஓவராக தெரியவில்லை?

    ReplyDelete
  186. காரிகன் அவர்களே

    கிண்டலும் கேலியும் நீங்களும் அமுதவன் , வவ்வாலும் செய்யவில்லையா? அதையெல்லாம் அனுமதிக்கிறீர்கள் . இளையராஜா ரசிகர்களை மறுப்பதா ? விமர்சன கண்ணோட்டத்தோடு எதையும் பாருங்கள் . உங்களை தரக் குறைவான வார்த்தைகளால் தாக்கி இருந்தால் அந்த பின்னூட்டத்தை அழிக்கலாம் . மற்றபடி பதில் சொல்ல முடியாத அளவுக்கு அவர் உங்களை கேள்வியால் 'செக்' வைத்திருந்தார் என்றால் நீங்கள் தவிர்க்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.
    நாங்கள் தொடர்ந்து வாதாடுவோம். நீங்கள் தயாரா?

    ReplyDelete
  187. http://www.change.org/en-IN/petitions/the-home-secretary-ministry-of-home-affairs-nomination-for-the-padmavibushan-2014-of-melisai-mannar-ms-vishwanathan

    Manayangath Subramanian Viswanathan,(also known as M.S.V.), is a Music Director from South India. He is considered to be one of the versatile and significant composers in Kollywood,he is popularly known as "Mellisai Mannar" (Tamil for "the King of Light Music"). He has composed for a total of 700 films composing songs in Tamil, Hindi, Malayalam, Kannada, and Telugu languages.His major works over the past five decades have been in Tamil, Malayalam and Telugu films.We the fan's of MSV request the Government of India to honour this genius by nominating and awarding him for the 2014 Padma Vibushan

    ReplyDelete
  188. திரு சால்ஸ்,
    அநாகரீகமாக இருக்கும் சில பின்னூட்டங்களை மட்டுமே நான் வெளியிடுவதில்லை. விமல் கூறிய கருத்துக்களை மறுபதிப்பு செய்திருக்கிறேன். படிக்கவும். வீணாக சிலம்பு ஆடவேண்டாம்.

    திரு மகாதேவன் அவர்களே,

    உங்கள் தகவலுக்கு நன்றி. இது நான் ஏற்கனவே படித்ததுதான். எம் எஸ் வி போன்ற இசை இயமத்திற்கு இதுவரை சரியான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்பது பல இசை விரும்பிகளின் ஆதங்கம்.

    ReplyDelete
  189. காரிகன் ஐயா

    இருட்டடிப்பு செய்த எனது கருத்தை வெளியிட்டால் நலம்.

    ReplyDelete

  190. திரு விமல் சொன்னது :

    "காரிகன் வகையறாக்கள் இளையராஜாவை இரு புறமும் தாக்குபவர்கள்.அவர்களுக்கு இசை பற்றி ஏதும் தெரிவதுமில்லை.ராஜ நல்ல பாடல்கள் கொடுத்தார் என்று எழுதினால் , உடனே எம்.எஸ்.வீ யை உயர்த்துவார்கள்.
    பழையவர்கள் போல வருமா என்பார்கள். 4 படத்திற்கு இசையமைத்த ஏ.எம் ராஜாவை போல வருமா என்பார்கள்.

    அவர் அமைத்த சிம்பொனி என்றால் , "ஒஸ்கார் கனவு " ரகுமானைக் கொண்டு வருவார்கள்.ஆக இங்கே இசை எனபது ஒரு விஷயம் அல்ல.வசை தான் முக்கியம்.
    நாய்கள் நிலவைப் பார்த்து குறைக்கின்றன.நிலவோ நம்மை குழுமையாக மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது.

    ரிம்போச்சே,
    //நீங்கள் நேர்மையானவராக இருக்கும் பட்சத்தில் என்னுடைய பின்னூட்டத்தை அழிக்காமல் உங்கள் பதிலைப் போட்டிருக்க வேண்டும்.- //
    நல்ல சூடு போட்டீர்கள் போலே. அது தான் சங்கதி தெரியுதே !"

    நல்லது. இப்போது சற்று மன நிறைவு கொண்டீர்களா விமல் அவர்களே? நீங்கள் நாய்கள் என்று குறிப்பிட்டதை சற்று யோசியுங்கள்.

    ReplyDelete
  191. ரிம்போச்சே22 September 2013 at 03:09

    //ஆனால் உங்கள் நையாண்டி நக்கல் நான் உங்கள் பின்னூட்டத்தை எடுத்துவிட்டதும் காணாமல் போய்விட்டது. //

    **
    நம் தமிழ் இசை 76 இல் ஆரம்பிக்கவில்லை என்பதை உங்களுக்கு நினைவூட்டவே
    **

    காரிகன் சார் நக்கல் தொடங்கிய புள்ளி மேலே உள்ள வரி.

    ReplyDelete
  192. பிரதீபன்22 September 2013 at 10:08

    திருவாளர்கள்.ரிம்போச்சே,Alex,சால்ஸ்,அனானி,ஆதித்யன்,விமல் ,mahadevan, தகதிமிதா

    இசை குறித்து எந்த அறிவும் இல்லாதவர்கள் இளையராஜாவை இளக்காரமாக பேசவுவதும், அதை இசை குறித்து எந்த ஆர்வமும் இல்லாதவர்கள் ஒத்துக்கொள்வதையும் கேட்க சகிக்கவில்லை.

    ReplyDelete
  193. திரு பிரதீபன்,
    நீங்கள் சகித்துக்கொள்ளக்கூடிய அளவில் என்னால் பொய்கள் சொல்ல முடியாது. மேலும் உங்கள் அபிமானவரைப் பற்றி மட்டும் நான் எழுதாமல் இதை ஒரு நீண்ட தொடராக எழுதிக்கொண்டு வருகிறேன்.முடிந்தால் முந்தைய பதிவுகளை படிக்கவும். ஆனால் கண்டிப்பாக நீங்கள் அப்படிச் செய்யப்போவதில்லை என்று தெரிகிறது.எனவே உங்களின் நடுநிலை கேள்விக்குறியாகிறது.

    இளையராஜாவை விமர்சித்தால் அவர்களுக்கு இசை அறிவு கிடையாது என்று மட்டித்தனமாக, நியாயமில்லாமல் கருத்து வைக்கும் கூட்டத்தாரில் ராஜாவின் ரசிகர்கள் கரைகண்டவர்கள். அவர்களால் நான் வைக்கும் விமர்சனங்களிருந்து ராஜாவை பாதுகாக்க முடியாத காரணத்தினால் இவ்வாறு சுலபமாக பட்டம் சூட்டுகிறார்கள். இல்லாவிட்டால் அநாகரீக வார்த்தை சாடல்கள் உயிர் பெற்று வரும். இதை தவிர நேர்மையாக விமர்சனங்களை விவாதிக்கும் போக்கு உங்களிடத்தில் என்றைக்கும் இருந்ததில்லை.

    நான் எதற்காக உங்களைப் போன்ற சிலரை திருப்தி செய்வதற்காக எனக்கு விருப்பமில்லாத என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை புனைந்து சொல்ல வேண்டும்? உங்களின் சான்றிதழ் எனக்கு அவசியமில்லை. உங்களைப் போன்றவர்களுக்காகவே பல ராஜா ஹோட்டல்கள் இருக்கிறன. அங்கே உங்களுக்கு வேண்டிய உணவு வகைகள் கிடைக்கும்.

    ReplyDelete
  194. காரிகன்
    \\உங்களைப் போன்றவர்களுக்காகவே பல ராஜா ஹோட்டல்கள் இருக்கிறன. அங்கே உங்களுக்கு வேண்டிய உணவு வகைகள் கிடைக்கும்.\\

    அடடே, இப்படியெல்லாம் ஹோட்டல்கள் உள்ளனவா? அரிய செய்தி. இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.

    ReplyDelete
  195. adadaa 198 pinnuuttaangkaL eduththu pinnuthee!

    ReplyDelete
  196. அட இப்போ 200 not out,cheers.

    ReplyDelete